search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Secret"

    • பிரதமர் மோடி கலந்து கொண்டு, மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார்.
    • திருச்சிக்கு வருகை தந்த பிரதமர் மோடியை ஓ.பன்னீர் செல்வம் சந்தித்து பேசினார்.

    திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 38-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார்.

    இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி, உயர்கல்வித் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் பல்கலைக்கழக துணைவேந்தர் ம.செல்வம், பதிவாளர் (பொறுப்பு) லெ.கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    திருச்சிக்கு வருகை தந்த பிரதமர் மோடியை ஓ.பன்னீர் செல்வம் சந்தித்து பேசினார்.

    பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஓ.பி.எஸ் கூறியதாவது:-

    பிரதமரிடம் அரசியல் பேசவில்லை, மரியாதை நிமித்தமாகவே சந்தித்தேன்.

    நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்றிய 10 ஆண்டு காலத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

    உலக நாடுகள் நம் இந்தியாவின் முன்னேற்றத்தை கண்டு பிரம்மித்து இருக்கிறது.

    பாஜகவுடன் இணைந்து பணியாற்ற நல்ல சூழல் உள்ளது.

    ஈபிஎஸ் குறித்த ரகசியத்தை தற்போது வெளியே சொல்ல இயலாது தெரிய வேண்டிய நேரத்தில் வெளியே வரும்.

    கொடநாடு சம்பவம் நடைபெற்ற போது, நாங்கள் ஈபிஎஸ் உடன் இல்லை.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உஷாராக இருக்கும் படி அமைச்சர்களை எச்சரித்து உள்ளார்.
    • தகவல் முன்கூட்டியே கசிந்து இருப்பதால் உள்ளுக்குள்ளேயும் கண்காணிப்பு உஷார்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    மத்திய விசாரணை அமைப்புகளின் அதிரடி சோதனைகளால் தமிழகத்தில் பல பிரபலங்கள் தூக்கத்தை தொலைத்து வருகிறார்கள். அமைச்சர் செந்தில் பாலாஜியில் தொடங்கி இப்போது அமைச்சர் எ.வ.வேலு வரை தொடரும் சோதனைகள் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உஷாராக இருக்கும் படி அமைச்சர்களை எச்சரித்து உள்ளார். சமீபத்தில் நடந்த அமைச்சரவை கூட்டத்திலும் மத்திய அரசு நம்மை வேவு பார்க்கிறது. வேட்டையாட துடிக்கிறது. ஒவ்வொரு நாளும் இரவில் நாளை ரெய்டு வரும். நாளை மறுநாள் வரும்... என்று தனக்கு தகவல்கள் வருவதாகவும் தெரிவித்து இருந்தார். நிஜத்திலும் விசாரணை அமைப்புகளின் ரகசிய திட்டங்கள் பற்றிய தகவல்கள் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு கசிந்து இருப்பதை இப்போது உறுதி செய்துள்ளார்கள். இதனால் அவர்கள் எதிர்பார்த்த பணம், ஆவணங்கள் சில இடங்களில் சிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அவர்கள் வரும் தகவல் முன்கூட்டியே கசிந்து இருப்பதால் உள்ளுக்குள்ளேயும் கண்காணிப்பு உஷார்ப டுத்தப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    ×