search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    காட்டு யானைகள் தாக்கியதில் வாலிபர் படுகாயம், பசு பலி- பொதுமக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை
    X

    காட்டு யானைகள் தாக்கியதில் வாலிபர் படுகாயம், பசு பலி- பொதுமக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை

    • பார்சம்பேட்டை ரெயில்வே மேம்பாலத்தில் ஏறி 2 யானைகளும் ஜோடியாக ஒய்யார நடைபோட்டு சென்றன.
    • பொதுமக்கள் யாரும் யானைகள் அருகே செல்ல வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    ஜோலார்பேட்டை:

    கிருஷ்ணகிரி வனபகுதியில் சுற்றி திரிந்த காட்டு யானைகள் ஒருவரை மிதித்து கொன்றது. அந்த யானைகள் ஆந்திர வனப்பகுதிக்கு சென்றன.

    ஆந்திராவில் இந்த யானைகள் மேலும் 5 பேரை மிதித்து கொன்றன.

    ஜோடியாக வந்த காட்டுயானைகள் திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி ஜோலார்பேட்டை கிராம பகுதிகளில் அட்டகாசம் செய்து வருகிறது.

    யானைகள் நேற்று தண்ணீர் பந்தல் கிராமத்தை ஒட்டி செல்லும் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை கடந்தன. அந்த நேரத்தில் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து வாகனங்களை நிறுத்தினர்.

    பைக்கில் வந்த வாலிபர் வாகனத்தை திடீரென நிறுத்த முடியவில்லை. அவர் யானைகளை மிக அருகில் சென்றார்.

    அவரை யானைகள் தாக்க முயன்றன. அவர் யானைகளிடமிருந்து நூலிலையில் தப்பி சென்றார்.

    நெடுஞ்சாலையைக் கடந்த காட்டு யானைகள் ஆத்தூர் கிராமத்திற்கு சென்றன. அங்குள்ள கரும்பு தோட்டத்தில் பதுங்கி நின்றன.

    கரும்பு தோட்டத்தில் பதுங்கி இருந்த யானைகளை விரட்ட கிருஷ்ணகிரி தர்மபுரி மாவட்டத்திலிருந்து வனத்துறையினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் பட்டாசுகளை வெடித்து யானைகளை அங்கிருந்து வனப் பகுதிகளுக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    ஆவேசமாக யானைகள் ஓடியது. பூசாரி ஊர் கிராமத்தை ஒட்டிய நிலத்தில் மாசிலாமணி என்பவரது பசுமாடு ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது. யானைகள் பசுமாடு மீது மோதியது. நிலைகுலைந்து விழுந்த பசுமாட்டினை யானைகள் காலால் மிதித்தன.

    இதில் உடல் நசுங்கி பசுமாடு சம்பவ இடத்திலேயே பசு இறந்தது. அங்கிருந்த காட்டு யானைகள் சோமநாயக்கன் பட்டி வழியாக திரியாலம் ஏரிக்குள் சென்றது.

    நேற்று இரவு ஜோலார்பேட்டை அருகே உள்ள பார்சம்பேட்டை ரெயில்வே மேம்பாலத்தில் ஏறி 2 யானைகளும் ஜோடியாக ஒய்யார நடைபோட்டு சென்றன.

    சின்ன கம்மியம்பட்டு கிராமத்திற்குள் சென்றன. அங்கிருந்த வாலிபர்கள் மற்றும் பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் காட்டு யானைகளை கூச்சலிட்டு விரட்டினர்.

    அப்போது யானைகள் அவர்களை நோக்கி திரும்பி வந்து விரட்டியது. அந்த நேரத்தில் லோகேஷ் (வயது 28) என்ற வாலிபர் தவறி கீழே விழுந்தார்.

    அவரை காட்டு யானை தனது துதிக்கையால் தூக்கி வீசி விட்டு திரும்பி சென்றன.

    இதில் படுகாயம் அடைந்த லோகேஷை மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து காட்டு யானைகள் இன்று அதிகாலை ஏலகிரி மலை அடிவாரத்திற்கு சென்றன.

    இதனை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

    யானைகள் ஏலகிரி மலையில் ஏற வாய்ப்பு இல்லை. மலை ஓரமாக சென்று கொண்டிருக்கிறது. பொதுமக்கள் யாரும் யானைகள் அருகே செல்ல வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×