என் மலர்
நீங்கள் தேடியது "Producers"
- தமிழ் சினிமா வெற்றிக்கு பின்னால் இருக்கும் தயாரிப்பாளர்களின் பங்களிப்பு அளப்பரியது.
- ஏ.வி.எம். சரவணன் மற்றும் ஆனந்தி பிலிம்ஸ் நடராஜன் பங்களிப்பு மிக முக்கியமானது.
ஏ.வி.எம். சரவணன் மற்றும் ஆனந்தி பிலிம்ஸ் நடராஜன் ஆகியோர் தமிழ் திரையுலகின் தூண்களாக விளங்கிய தயாரிப்பாளர்கள்
தமிழ் சினிமா என்பது உணர்ச்சிகள், கதைகள் மற்றும் பொழுதுபோக்கின் அற்புத கலவை. இதன் வெற்றிக்கு பின்னால் இருக்கும் தயாரிப்பாளர்களின் பங்களிப்பு அளப்பரியது. அவர்களில் ஏ.வி.எம். சரவணன் மற்றும் ஆனந்தி பிலிம்ஸ் நடராஜன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

சரவணன் ஏ.வி.எம். ஸ்டுடியோஸின் மூலம் தமிழ் சினிமாவை உலக அரங்குக்கு கொண்டு சென்றார் என்றால், நடராஜன் தனது தயாரிப்பு நிறுவனங்களான ஆனந்தி பிலிம்ஸ் மூலம் பல கிளாசிக் படங்களை வழங்கினார். இவர்களின் திரைப்பயணம், தமிழ் திரையுலகின் பொன்னான காலகட்டங்களை பிரதிபலிக்கிறது.
இக்கட்டுரையில் அவர்களின் வாழ்க்கை, திரையுலக சாதனைகள் மற்றும் பங்களிப்புகள் குறித்து பார்ப்போம்.
ஏ.வி.எம். சரவணன்:
தமிழ் சினிமாவின் பழம்பெரும் தயாரிப்பாளர்ஏ.வி.எம். சரவணன் (முழுப்பெயர் சரவணன் சூர்யா மணி) 1940ஆம் ஆண்டு பிறந்தார்.
தமிழ் திரையுலகின் முன்னோடியான ஏ.வி. மெய்யப்பன் அவர்களின் மகனான இவர், ஏ.வி.எம். புரொடக்ஷன்ஸ் என்ற புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனத்தை தனது சகோதரர் எம். பாலசுப்ரமணியனுடன் இணைந்து நடத்தினார்.
ஏ.வி.எம். ஸ்டுடியோஸ், தமிழ் சினிமாவின் முதல் ஸ்டுடியோக்களில் ஒன்றாக, 1947இல் தொடங்கப்பட்டது மற்றும் பல மொழிகளில் படங்களை தயாரித்துள்ளது.

சரவணனின் திரைப்பயணம் 1958 ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கியது, அப்போது அவர் 'மாமியார் மெச்சின மருமகள்' (1959) மற்றும் 'தெய்வப்பிரவி' (1960) போன்ற படங்களில் புரொடக்ஷன் எக்ஸிக்யூட்டிவாக பணியாற்றினார். பின்னர், அவர் தயாரிப்பாளராக உருவெடுத்து, ஏ.வி.எம். நிறுவனத்தை உச்சத்துக்கு கொண்டு சென்றார்.
அவரது தலைமையின் கீழ் தயாரிக்கப்பட்ட களத்தூர் கண்ணம்மா (1960), சம்சாரம் அது மின்சாரம் (1986), முந்தானை முடிச்சு (1983), சகலகலா வல்லவன் (1982), சிவாஜி தி பாஸ் (2007), அயன் (2009) ஆகிய படங்கள் மிகப்பெரும் வெற்றியை பெற்றன.
இது தவிர, ஏ.வி.எம். நிறுவனம் 170க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்துள்ளது, அவற்றில் பல கிளாசிக் ஹிட்கள்.சரவணன் ஒரு தயாரிப்பாளராக மட்டுமின்றி, இயக்குநர், எழுத்தாளர் மற்றும் திரைக்கதை ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
அவரது தலைமையில் ஏ.வி.எம். ஸ்டுடியோஸ், தமிழ் சினிமாவின் தொழில்நுட்ப வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தது. துரதிர்ஷ்டவசமாக, 2025 டிசம்பர் 4ஆம் தேதி, 86 வயதில் அவர் காலமானார், தமிழ் திரையுலகுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தினார். அவரது பாரம்பரியம், இன்றும் ஏ.வி.எம். நிறுவனத்தின் மூலம் தொடர்கிறது.

ஆனந்தி பிலிம்ஸ் நடராஜன்:
தஞ்சாவூர் மாவட்டத்தின் வலுத்தூர் கிராமத்தில் பிறந்தார் ஆனந்தி பிலிம்ஸ் நடராஜன். இவர், கே. பாலசந்தரின் நாடகக் குழுவில் பணியாற்றிய பின்னர், ஜெமினி பிலிம்ஸில் எக்ஸிக்யூட்டிவ் புரொட்யூசராக தொழிலைத் தொடங்கினார்.
பின்னர் நடராஜன், ஆனந்தி பிலிம்ஸ்என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். இந்நிறுவனத்தின் கீழ் அவர் தயாரித்த 'முள்ளும் மலரும்' (1978, ரஜினிகாந்த் நடித்தது), 'சின்ன கவுண்டர்' (1992, விஜயகாந்த்), 'ராஜா கைய வெச்சா' (1990, பிரபு), 'பங்காளி' (1992, சத்யராஜ்), 'பசும்பொன்' (1995, பிரபு) ஆகிய படங்கள் தமிழ் சினிமாவின் கிளாசிக் படங்களாகக் கருதப்படுகின்றன.
உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நடராஜன் இந்தாண்டு காலமானார். அவரது உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர். மரணம் அடைந்த தயாரிப்பாளர் நடராஜனுக்கு ஜோதி என்ற மனைவியும், செந்தில், விக்னேஷ் என்ற 2 மகன்களும் உள்ளனர்.

முடிவுரை:
ஏ.வி.எம். சரவணன் மற்றும் ஆனந்தி பிலிம்ஸ் நடராஜன் ஆகியோரின் திரைப்பயணம், தமிழ் சினிமாவின் வளர்ச்சியை எடுத்துக்காட்டுகிறது. சரவணன் ஸ்டுடியோக்களின் மூலம் தொழில்நுட்பத்தையும், நடராஜன் தனது படங்களின் மூலம் உணர்ச்சிகரமான கதைகளையும் வழங்கினர். அவர்களின் படைப்புகள் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றன. தமிழ் திரையுலகின் எதிர்காலத்துக்கு இவர்களின் பங்களிப்பு உத்வேகமாக அமையும்....
- பட்டுக்கூடு கிலோ 720 ரூபாய்க்கு விற்பனையானது.
- பட்டு நூல் விலை கிலோ 4,900 முதல் 5,000 ரூபாய் வரை விற்பனையாகிறது.
திருப்பூர் :
கோவை பாலசுந்தரம் ரோட்டில் பட்டு வளர்ச்சித்துறையின் பட்டுக்கூடு விற்பனை அங்காடி உள்ளது.கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் இருந்து பட்டு விவசாயிகள் பட்டுக்கூடுகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
கடந்த 2 ஆண்டுகளாகவே பட்டுக்கூடுக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது. இதனால் பட்டுக்கூடு உற்பத்தியாளர்கள் அதிகரித்துள்ளனர். தரமான பட்டுக்கூடு கிலோ 720 ரூபாய்க்கு விற்பனையானது. சுமாரான தரம் உள்ள கூடு கிலோ 350 ரூபாய்க்கு விற்பனையானது.
இது குறித்து திருப்பூர் மாவட்ட பட்டு வளர்ச்சித்துறை அதிகாரிகள் கூறுகையில், இந்தாண்டு துவக்கத்தில் இருந்தே பட்டுக்கூடுக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது. இப்போது வரை விலை குறையவில்லை.மார்க்கெட்டில் பட்டு நூல் விலை கிலோ 4,900 முதல் 5,000 ரூபாய் வரை விற்பனையாகிறது. அதனால் பட்டு நூலுக்கான தேவை அதிகரித்துள்ளது. பட்டுக்கூடு உற்பத்தியாளர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.சூலூர்,சுல்தான்பேட்டை, ஜல்லிப்பட்டி, தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் புதிதாக பலர் பட்டுக்கூடு உற்பத்தியை துவக்கியுள்ளனர் என்றனர்.
- மானிய நிதியாக ரூ.10 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டு உள்ளது.
- மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் வாழ்வாதாரம் மேம்பாட்டிற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ள சக்தி பவானி மகளிர் உழவர் உற்பத்தி யாளர் நிறுவனத்திற்கு வணிக விரிவாக்க மானிய நிதியாக கலெக்டர் கிருஷ்ண னுண்ணி ரூ.10 லட்சத்துக் கான காசோலையை வழங்கினார்.
அப்போது அவர் கூறியதாவது:
தமிழ்நாடு அரசு மற்றும் உலக வங்கி நிதி உதவியுடன் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் கிராம பகுதிகளில் வறுமை ஒழிப்பையும் தாண்டி தொழில் நிறு வனங்களை உருவாக்குதல்,
நிதி ஆதாரங்களை ஏற்படுத்தி தருதல் மூலமாக நிரந்தர வளர்ச்சி மற்றும் வளமான வாழ்வு பெற்று கிராமபுற மக்கள் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்துதலை நோக்கமாக கொண்டு செயல்படுத்தப்படுகிறது.
ஈரோடு மாவட்டத்தில் பவானி, பவானிசாகர், சென்னிமலை, சத்திய மங்கலம் மற்றும் தாளவாடி வட்டாரங்களில் 77 ஊராட்சி களில் இந்த திட்டம் செயல்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர் களை கொண்டு அமைக்கப்பட்டுள்ள சக்தி பவானி மகளிர் உழவர் உற்பத்தி யாளர் நிறுவனத்திற்கு வணிக விரிவாக்க மானிய நிதியாக ரூ.10 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டு உள்ளது.
இதன் மூலம் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் வாழ்வாதாரம் மேம்பாட்டிற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மாவட்ட செயல் அலுவலர் தாமோதரன், செயல் அலுவலர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர், வட்டார அணி த்தலைவர்கள், திட்ட நிர்வாகிகள், நிறுவன இயக்குநர்கள் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- நெல் விதைக்கு பாதுகாப்பான ஈரப்பதம் என்பது 13 சதவீதமாகும்.
- மதியம் 12 மணி முதல் மாலை 3 மணிவரை, விதையை உலர வைக்க கூடாது.
உடுமலை :
நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்கள் விதையை உலர வைப்பதில் தனி கவனம் செலுத்த வேண்டும் என கோவை மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் தெரிவித்தார். இது குறித்து கோவை மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் அறிக்கை வருமாறு:- ஆனைமலை தாலுகாவில் நெல் ரகங்களான கோ 51, ஏடிடீ -37, ஏடிடீ - 39, ஏடிடீ (ஆர்) 45, ஆர்.என்.ஆர்., 15048 போன்றவை விதைக்காக அதிகளவில் பயிரிடப்பட்டது. தற்போது, அறுவடை முடியும் நிலையில் உள்ளது. அறுவடை சமயத்தில் விதைகளின் ஈரப்பதம் அதிக அளவில் இருக்கும். அறுவடை செய்த விதைகளை சரியான முறையில் உலர வைப்பது அவசியம்.
விதை ஒரு உயிருள்ள இடுபொருளாகும். விதையின் ஈரப்பதத்தை, பாதுகாப்பான ஈரப்பதம் வரும் வரை உலர வைப்பதாகும். நெல் விதைக்கு பாதுகாப்பான ஈரப்பதம் என்பது 13 சதவீதமாகும். விதையை உலர வைப்பது, விதை உயிருடனும், நல்ல வீரியத்துடணும் சேமிக்க உதவும்.இல்லையேல், பூஞ்சாணங்களினாலும், நுண்ணுயிர் தாக்குதலினாலும் விதைகள் பாதிக்கப்பட்டு, முளைப்பு த்திறன் பெருமளவில் பாதிக்கப்படும். அறுவடை முடிந்தவுடன் விதையை உலர வைத்து பாதுகாப்பான ஈரப்பதத்தில் சேமிக்க வேண்டும். ஓரிரு மாதம் கழித்து உலர வைக்கும் போது அறுவடை சூட்டுடன் சேமித்து வைக்கும் போது விதைகள் வெட்டியாகி அடைகளாக மாறியிருக்கும். மேலும் நிறம் மங்கி முளைப்புத்திறனும் குறைந்து விடும்.
விதையை உலர வைக்கும் போது சில முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்வது அவசியம். ஈரமான சுகாதாரமற்ற களத்தில் விதையை உலர வைக்க கூடாது. களத்தில் ஒரே வயலில் இருந்து பெறப்பட்ட ஒரே பயிர், ஒரே ரகத்தைத்தான் ஒரே நேரத்தில் கையாள வேண்டும்.அதாவது மதியம் 12 மணி முதல் மாலை 3 மணிவரை, விதையை உலர வைக்க கூடாது. உச்சி வெயிலில் புற ஊதாக்கதிர்களின் தாக்கம் அதிகமாக இருக்கும். அது விதைகளின் முளைப்பு த்திறனை பாதிக்கும். விதையை அதிகமாகவும் உலர வைக்க கூடாது.ஏனெனில் அதிகமாக உலரும்போது விதை மண்ணில் வெடிப்பு ஏற்பட்டு கருச்சிதைவு ஏற்பட்டு முளைப்புத்திறன் பாதிக்கும்.
உளுந்து, பாசிப்பயிறு போன்ற பயறு வகை பயிர்களின் விதையை 9 சதவீத ஈரப்பதத்திற்கும், சோளம், கம்பு போன்ற பயிர்களின் விதையை 12 சதவீத ஈரப்பதத்திற்கும் உலர வைக்க வேண்டும்.எனவே விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்கள் விதையை உலர வைப்பதில் தனி அக்கறை செலுத்த வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
- தரிசு நிலங்களிலும், வரப்புகளிலும், ரோட்டோரங்களிலும் புளியமரங்கள் அதிக அளவு பராமரிக்கப்படுகிறது.
- புளி கிலோ 70 ரூபாய்க்கே கொள்முதல் செய்கின்றனர்.
உடுமலை :
உடுமலை சுற்றுப்பகுதிகளில் தரிசு நிலங்களிலும், வரப்புகளிலும், ரோட்டோரங்களிலும் புளியமரங்கள் அதிக அளவு பராமரிக்கப்படுகிறது. கோடை காலம் துவங்கியதும் புளியம் பழங்கள் அறுவடையை மேற்கொள்கின்றனர். ரோட்டோரத்திலுள்ள மரங்களில் நெடுஞ்சாலைத்துறை சார்பிலும் தரிசு நிலங்களிலுள்ள மரங்களில் புளியம்பழம் பறிக்க சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்தினரும் ஏலம் விடுகின்றனர்.
இவ்வாறு பறிக்கப்படும் புளியம்பழங்களில் இருந்த ஓடு மற்றும் விதைகளை பிரித்து சுத்தியலில் தட்டி மதிப்பு கூட்டி விற்பனை செய்கின்றனர்.தளி பகுதியில் இப்பணியில் நூற்றுக்கணக்கான பெண்கள் ஈடுபடுகின்றனர். இந்தாண்டு அறுவடை முடிந்துள்ள நிலையில் புளியின் விலை சரிந்துள்ளது.
இது குறித்து உற்பத்தியாளர்கள் கூறுகையில், வழக்கமாக, புளி கிலோவுக்கு 100 ரூபாய் வரை விலை கிடைக்கும். தற்போது 70 ரூபாய்க்கே கொள்முதல் செய்கின்றனர். பிற மாநில வரத்து அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் விலை குறைந்துள்ளது என்றனர்.
- தயாரிப்பாளர்களை நிர்ப்பந்திப்பதாக சர்ச்சைகள்.
- தயாரிப்பாளர் கஷ்டத்தை உணர்ந்து நடக்க வேண்டும்.
நடிகர், நடிகைகள் படப்பிடிப்புக்கு வரும்போது நிறைய உதவியாளர்களை அழைத்து வந்து அவர்களுக்கும் சம்பளம் கொடுக்க தயாரிப்பாளர்களை நிர்ப்பந்திப்பதாக சர்ச்சைகள் கிளம்பி உள்ளன.
இந்த நிலையில் தயாரிப்பாளர்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து நடிகை கீர்த்தி சனோன் கூறும்போது, "நடிகர் நடிகைகள் படப்பிடிப்புக்கு வரும்போது அவர்களுடன் எத்தனைபேர் இருக்க வேண்டும் என்று ஒரு வரைமுறை ஏற்படுத்த வேண்டும்.
அதிகம்பேரை அழைத்து வருவதால் தயாரிப்பாளருக்கு படப்பிடிப்பில் அதிகம் செலவு ஏற்படும். தயாரிப்பாளர் கஷ்டத்தை உணர்ந்து நடக்க வேண்டும்'' என்றார்.
நடிகை லட்சுமி மஞ்சு கூறும்போது, "ஹாலிவுட் செட்டில் நடிகர்களே அவர்களது இருக்கைகளை கொண்டு வந்து போட்டுக் கொள்வார்கள். நம்ம ஊரில் நடிகை அல்லது நடிகர் வந்தால் நாற்காலியை நகர்த்த கூட உதவியாளர் இருப்பார்.
ஹாலிவுட் நடிகர் நடிகைகள் பக்கத்தில் ஒரு மேக்கப் ஆர்டிஸ்ட், ஒரு ஹேர் டிரஸ்ஸர் மட்டும்தான் இருப்பார்கள். மிகக் குறைந்த பேருடன் வேலை நடக்கும். நம்ம ஊரில் ஒரு ஹேர் டிரஸ்ஸர் இருந்தால் அவருக்கு ஒரு அசிஸ்டன்ட், ஒரு மேக் அப் ஆர்டிஸ்ட் இருந்தால் அவருக்கு ஒரு அசிஸ்டன்ட் இருப்பார்கள். இப்படி வீண் செலவு எதற்கு என்பதுதான் கேள்வி. பெரிய நடிகர் நடிகைகள் ஒரு படை வைத்துக் கொள்வதை குறைத்துக் கொள்ள வேண்டும்''என்றார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளராக இருந்தவர் ஆனந்தி பிலிம்ஸ் வி.நடராஜன்.
- ‘முள்ளும் மலரும்', ‘உத்தம புருஷன்', ‘ராஜா கைய வச்சா',உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் ஆனந்தி பிலிம்ஸ் வி.நடராஜன். 'முள்ளும் மலரும்', 'உத்தம புருஷன்', 'ராஜா கைய வச்சா', 'பங்காளி', 'சின்னக்கவுண்டர்', 'பசும்பொன்' உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளார்.
உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நடராஜன், சென்னை மயிலாப்பூரில் இல்லத்தில் தொடர் ஓய்வில் இருந்து வந்தார். சினிமாவிலும் ஈடுபடாமல் இருந்து வந்தார்.இந்தநிலையில் நேற்று நள்ளிரவு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு அவர் மரணம் அடைந்தார்.
அவரது உடல், மயிலாப்பூர் இல்லத்தில் நேற்று அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அவரது உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர்.தமிழ் சினிமாவின் பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்து வெற்றி படங்களின் தயாரிப்பாளராக வலம் வந்த நடராஜன் மறைவுக்கு, நடிகர்-நடிகைகள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
மரணம் அடைந்த தயாரிப்பாளர் நடராஜனுக்கு ஜோதி என்ற மனைவியும், செந்தில், விக்னேஷ் என்ற 2 மகன்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- சித்தோடு ஆவின் பால் பண்ணை முன்பாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈரோடு மாவட்டத்திற்கு உட்பட்ட பவானி, சித்தோடு, கவுந்தப்பாடி உட்பட பல்வேறு ஊர்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
சித்தோடு:
சித்தோடு ஆவின் பால் பண்ணை முன்பாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கம் சார்பில் ஈரோடு மாவட்டம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் ராஜு தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒரு லிட்டர் பசும் பாலுக்கு விலை ரூ. 42 ஆகவும், எருமைப் பாலுக்கு ரூ. 51 ஆகவும் ஆவின் பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலையை உயர்வு வழங்கிட வேண்டும்.
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுபடி சங்கங்களில் பரிசோதிக்கப்பட்ட பாலின் தரம் மற்றும் அளவுகள் அடிப்படையில் பால் உற்பத்தியாளர்களுக்கு பால் பணம் பட்டுவாடா செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் கலந்து கொண்ட மாநில தலைவர் ராஜேந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:
2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பால் விலை உயர்த்தி வழங்கப்பட்டது.கொரோனா காலத்தில் போராட்டம் நடத்த எங்களால் முடியவில்லை.
எங்களின் கோரிக்கைகளை புதிய அரசிடம் வலியுறுத்தி உள்ளோம்.அதன் அடிப்படையில் பசும்பால் மற்றும் எருமைப்பால் ஆகியவற்றின் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும்.
பால் கொள்முதல் செய்யும் இடத்தில் சங்கங்களின் சங்க பணியாளர்கள் ஒப்புகை சீட்டு வழங்கி தான் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.
பால் கொள்முதல் செய்யும் பொழுது பாலின் தரம் அளவு ஆகியவை அளவீடு செய்யப்படுகிறது. ஆனால் பாலின் அளவு மற்றும் தரம் குறைவதாக காரணம் கூறி பால் பணம் குறைத்து தருகின்றனர்.
2016 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு படி சங்கங்களில் பரிசோதிக்கப்பட்ட பாலின் தரம் மற்றும் அளவுகள் அடிப்படையில் பால் உற்பத்தியாளர்களுக்கு பணம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தின் கவனர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈரோடு மாவட்டத்திற்கு உட்பட்ட பவானி, சித்தோடு, கவுந்தப்பாடி உட்பட பல்வேறு ஊர்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.









