search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மகளிர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் மானியம்
    X

    மகளிர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் மானியம்

    • மானிய நிதியாக ரூ.10 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டு உள்ளது.
    • மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் வாழ்வாதாரம் மேம்பாட்டிற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ள சக்தி பவானி மகளிர் உழவர் உற்பத்தி யாளர் நிறுவனத்திற்கு வணிக விரிவாக்க மானிய நிதியாக கலெக்டர் கிருஷ்ண னுண்ணி ரூ.10 லட்சத்துக் கான காசோலையை வழங்கினார்.

    அப்போது அவர் கூறியதாவது:

    தமிழ்நாடு அரசு மற்றும் உலக வங்கி நிதி உதவியுடன் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் கிராம பகுதிகளில் வறுமை ஒழிப்பையும் தாண்டி தொழில் நிறு வனங்களை உருவாக்குதல்,

    நிதி ஆதாரங்களை ஏற்படுத்தி தருதல் மூலமாக நிரந்தர வளர்ச்சி மற்றும் வளமான வாழ்வு பெற்று கிராமபுற மக்கள் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்துதலை நோக்கமாக கொண்டு செயல்படுத்தப்படுகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் பவானி, பவானிசாகர், சென்னிமலை, சத்திய மங்கலம் மற்றும் தாளவாடி வட்டாரங்களில் 77 ஊராட்சி களில் இந்த திட்டம் செயல்பட்டு வருகிறது.

    அதன் அடிப்படையில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர் களை கொண்டு அமைக்கப்பட்டுள்ள சக்தி பவானி மகளிர் உழவர் உற்பத்தி யாளர் நிறுவனத்திற்கு வணிக விரிவாக்க மானிய நிதியாக ரூ.10 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டு உள்ளது.

    இதன் மூலம் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் வாழ்வாதாரம் மேம்பாட்டிற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மாவட்ட செயல் அலுவலர் தாமோதரன், செயல் அலுவலர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர், வட்டார அணி த்தலைவர்கள், திட்ட நிர்வாகிகள், நிறுவன இயக்குநர்கள் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×