என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏவிஎம் சரவணன்"

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இவ்வளவு வேலையை விட்டு விட்டு இங்கு வந்திருக்கிறார்.
    • தேர்தல் நேரம் என்று சொன்னால் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணித்துளியும் விலைமதிக்க முடியாது.

    சினிமா தயாரிப்பாளர் ஏ.வி.எம்.சரவணன் படத்திறப்பு சென்னையில் நடந்தது. விழாவில் நடிகர் ரஜினி பேசியதாவது:-

    ஏ.வி.எம். நிறுவனத்தில் நான் 11 படம் நடித்து இருக்கிறேன். அதில் 9 படங்கள் எஸ்.பி.முத்துராமன் இயக்கிய படங்கள் ஆகும். ஒவ்வொரு படத்திலும் கதையை நாம் கேட்கவே வேண்டாம்.

    எந்த நடிகருக்கு எந்த மாதிரி படம் பண்ணனும், அவரது ரசிகர்கள் என்ன விரும்புகிறார்கள். அது வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என அனைத்தையும் ஆய்வு செய்து திரைக்கதை செய்து வைத்து விட்டு, நடிகர்களுக்கு அந்தந்த கதாபாத்திரத்துக்கு என்னென்ன பண்ணனும் என்பதை செய்து, இசை, படத்தொகுப்பு எல்லாவற்றிலும் அவரது கை இருக்கும். ஆனால் யாருக்கும் தெரியாது.

    மகாபாரத குருஷேத்திர யுத்தத்தில் கண்ணன் எந்த ஆயுதமும் ஏந்தாமல் ரதத்தில் உட்கார்ந்து எப்படி ஜெயித்தாரோ, அந்த மாதிரி அவர் அலுவலகத்தில் அமர்ந்து கொண்டே எல்லா படத்தையும் ஜெயிக்க வைத்தார். எல்லா படத்தையும் வெற்றிப்படமாக்கினார்.

    சினிமா மட்டுமல்லாமல் தனிப்பட்ட முறையிலும் ஏ.வி.எம்.சரவணன் எனக்கு நிறைய உதவி செய்துள்ளார். கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபம் இருக்கும் இடம் காலியாக இருந்த போது அதை ஏ.வி.எம்.சரவணன் பார்த்துள்ளார்.

    என்னிடம் அந்த இடத்தை ஏன் அப்படியே விட்டு விட்டீர்கள் என்று கேட்டார். காலி இடத்தை அப்படியே விடக்கூடாது. ஏதாவது கட்டணும் என்று சொல்லி அவரே பார்த்து டிசைன் பண்ணி அவரே ஆர்க்கிடெக்ட் செய்து கட்டியதுதான் ராகவேந்திரா மண்டபம்.

    எனது போயஸ்கார்டன் வீட்டுக்கு அவர் வந்தார். அதன் அருகில் காலி இடம் இருந்தது. அதை 15 மடங்கு விலை சொன்னார்கள். அதற்கு ஏ.வி.எம். சரவணன் அது என்ன விலை இருந்தாலும் சரி நீங்க வாங்கிடுங்க. அங்கு வேறு யாராவது வந்தால் உங்களுக்கு தொந்தரவாக இருக்கும் என்றார். இந்த மாதிரி எவ்வளவோ விஷயங்கள் இருக்கிறது.

    சிவாஜி படம் பண்ணிய போது என்னிடம் சொன்னார். நீங்க 1990 கால கட்டத்தில் இருந்து 2 வருடத்துக்கு ஒரு படம், 3 வருடத்துக்கு ஒரு படம் பண்ணுகிறீர்கள். வயது ஆக ஆக பிசியா இருக்கணும், சுறுசுறுப்பா இருக்கணும். அது உடம்புக்கும், மனதுக்கும் நல்லது. வருடத்துக்கு ஒரு படம் பண்ணுங்க என்றார். அதை இப்போதும் செய்து கொண்டிருக்கிறேன்.

    சினிமா உலகத்துக்கு வெளியேயும் ஏ.வி.எம். சரவணனுக்கு மரியாதை இருந்தது. ஏனென்றால் அவர் அப்படி வாழ்ந்தார். அவர் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்தவர் அல்ல. இருந்தாலும் எம்.ஜி.ஆர். அவரை ஷெரீப் ஆக்கி அழகு பார்த்தார். ஜெயலலிதா அவர் மீது அவ்வளவு மரியாதை வைத்திருந்தார். கலைஞரும் அவர் மீது நிறைய மரியாதை வைத்திருந்தார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இவ்வளவு வேலையை விட்டு விட்டு இங்கு வந்திருக்கிறார். தேர்தல் நேரம் என்று சொன்னால் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணித்துளியும் விலைமதிக்க முடியாது. அந்த மாதிரி இருந்தும் அதை விட்டுவிட்டு இங்கு வந்திருக்கிறார். இங்கு வந்திருப்பதால் அவருக்கு 100 ஓட்டுகள் அதிகமாக கிடைத்து விடாது.

    ஆனாலும் கூட அவர் இங்கு வந்திருப்பது ஏ.வி. எம்.சரவணன் எந்த மாதிரி வாழ்ந்திருக்கிறார் என்பதற்கு எடுத்துக்காட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் என்ன மாதிரி ஒரு அன்பும், பண்பும் கொண்டவர், உயர்ந்த உள்ளம் கொண்டவர் என்பதற்கு எடுத்துக்காட்டு.

    அசையாத சொத்துக்கு எப்போதுமே மதிப்பு அதிகம். நம் வாழ்க்கையில் நம்மை விரும்புகிறவர்கள், நமது நலனில் அக்கறை கொண்டவர்கள் ஒரு சில பேர்தான் இருப்பார்கள். அவர்கள் அசையாத சொத்துக்கள். எனக்கு அசையாத சொத்துக்களாக கே.பாலச்சந்தர், சோ, பஞ்சு அருணாசலம், ஆர்.எம்.வீரப்பன், சரவணன், கலைஞர் ஆகியோர் இருந்தனர்.

    காலத்தின் சட்டமோ என்னவோ, நாம் யார் மீது பிரியமாக இருக்கிறோமோ அவர்களை காலம் சீக்கிரமே கொண்டு சென்று விடுகிறது. ஒவ்வொருவரும் பிரியும் போது நமக்கு எவ்வளவு பணம், பேர், புகழ், குடும்பம் இருந்தாலும், அனாதையாக உணர்கிறோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கமல்ஹாசன் பேசியதாவது:-

    நான் சொல்ல வேண்டிய கதை 65 வருடத்து கதை. அதை எப்படி சொல்வதென்று தெரியவில்லை. சின்ன குழந்தையாக நான் ஏ.வி.எம். ஸ்டூடியோவுக்கு போனேன். அங்கிருந்த மாந்தோப்பில் மாம்பழத்தை கடித்து விட்டு சினிமா என்றால் என்ன என்று புரிந்து கொண்டேன்.

    என்னை அந்த வயதில் இருந்து பார்த்துக் கொண்டவர்கள். அவர்கள் ஒரு குழந்தையை கொஞ்சுவது போல்தான் எனது படத்தின் தலைப்பை வைத்தனர். ஏ.வி.எம்.சரவணனுக்கு பொருந்தும் விஷயங்கள் எனக்கும் பொருந்தும்.

    அவரும் சகலகலா வல்லவர்தான். தனக்கு இருக்கும் புகழை எல்லாம் அவர் மற்றவர்களுக்கு கொடுப்பார். அவரிடம் நான் தைரியமாக பேசுவேன். அவர் ஒரு முதலாளி என்று புரிவதற்கே எனக்கு நிறைய நாள் ஆகி விட்டது. அதிக பிரசங்கம் செய்யக்கூடாது என்று எனக்கு சொல்லிக் கொடுத்தவர் எஸ்.பி.முத்துராமன்.

    ஏ.வி.எம். குடும்பத்துடன் ஒட்டிக் கொள்வதில் எனக்கு பெரிய பெருமை. அந்த உரிமையை அவர்கள் கொடுத்ததற்காக நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன்.

    ஏ.வி.எம். நிறுவனத்தில் படித்தேன் என்பது எனக்கு பெருமை. நான் அங்கு படித்த விஷயங்கள்தான் எனக்கு இன்று வரை கை கொடுத்துக் கொண்டிருக்கிறது.

    இங்கு பள்ளிக்கூடம் கட்டி இருந்தால் நான் படித்தும் இருப்பேன். என்னை வேறு பள்ளிகளில் சேர்க்க யோசித்தார்கள். என்னுடைய குணாதிசயம் தெரிந்து என்னை எப்படி வழி நடத்த வேண்டும் என்று தெரிந்த பள்ளி ஏ.வி.எம். பள்ளி. சிறப்பாக கற்றுக் கொடுத்தார்கள். நான் தவறு செய்யும் போது சத்தமாக சொல்லாமல், நான் நல்லது செய்யும் போது என்னை தோளில் தூக்கி கொண்டாடியவர் ஏ.வி.எம்.சரவணன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தமிழ் சினிமா வெற்றிக்கு பின்னால் இருக்கும் தயாரிப்பாளர்களின் பங்களிப்பு அளப்பரியது.
    • ஏ.வி.எம். சரவணன் மற்றும் ஆனந்தி பிலிம்ஸ் நடராஜன் பங்களிப்பு மிக முக்கியமானது.

    ஏ.வி.எம். சரவணன் மற்றும் ஆனந்தி பிலிம்ஸ் நடராஜன் ஆகியோர் தமிழ் திரையுலகின் தூண்களாக விளங்கிய தயாரிப்பாளர்கள்

    தமிழ் சினிமா என்பது உணர்ச்சிகள், கதைகள் மற்றும் பொழுதுபோக்கின் அற்புத கலவை. இதன் வெற்றிக்கு பின்னால் இருக்கும் தயாரிப்பாளர்களின் பங்களிப்பு அளப்பரியது. அவர்களில் ஏ.வி.எம். சரவணன் மற்றும் ஆனந்தி பிலிம்ஸ் நடராஜன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

    சரவணன் ஏ.வி.எம். ஸ்டுடியோஸின் மூலம் தமிழ் சினிமாவை உலக அரங்குக்கு கொண்டு சென்றார் என்றால், நடராஜன் தனது தயாரிப்பு நிறுவனங்களான ஆனந்தி பிலிம்ஸ் மூலம் பல கிளாசிக் படங்களை வழங்கினார். இவர்களின் திரைப்பயணம், தமிழ் திரையுலகின் பொன்னான காலகட்டங்களை பிரதிபலிக்கிறது.

    இக்கட்டுரையில் அவர்களின் வாழ்க்கை, திரையுலக சாதனைகள் மற்றும் பங்களிப்புகள் குறித்து பார்ப்போம்.

    ஏ.வி.எம். சரவணன்:

    தமிழ் சினிமாவின் பழம்பெரும் தயாரிப்பாளர்ஏ.வி.எம். சரவணன் (முழுப்பெயர் சரவணன் சூர்யா மணி) 1940ஆம் ஆண்டு பிறந்தார்.

    தமிழ் திரையுலகின் முன்னோடியான ஏ.வி. மெய்யப்பன் அவர்களின் மகனான இவர், ஏ.வி.எம். புரொடக்ஷன்ஸ் என்ற புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனத்தை தனது சகோதரர் எம். பாலசுப்ரமணியனுடன் இணைந்து நடத்தினார்.

    ஏ.வி.எம். ஸ்டுடியோஸ், தமிழ் சினிமாவின் முதல் ஸ்டுடியோக்களில் ஒன்றாக, 1947இல் தொடங்கப்பட்டது மற்றும் பல மொழிகளில் படங்களை தயாரித்துள்ளது.

    சரவணனின் திரைப்பயணம் 1958 ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கியது, அப்போது அவர் 'மாமியார் மெச்சின மருமகள்' (1959) மற்றும் 'தெய்வப்பிரவி' (1960) போன்ற படங்களில் புரொடக்ஷன் எக்ஸிக்யூட்டிவாக பணியாற்றினார். பின்னர், அவர் தயாரிப்பாளராக உருவெடுத்து, ஏ.வி.எம். நிறுவனத்தை உச்சத்துக்கு கொண்டு சென்றார்.

    அவரது தலைமையின் கீழ் தயாரிக்கப்பட்ட களத்தூர் கண்ணம்மா (1960), சம்சாரம் அது மின்சாரம் (1986), முந்தானை முடிச்சு (1983), சகலகலா வல்லவன் (1982), சிவாஜி தி பாஸ் (2007), அயன் (2009) ஆகிய படங்கள் மிகப்பெரும் வெற்றியை பெற்றன.

    இது தவிர, ஏ.வி.எம். நிறுவனம் 170க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்துள்ளது, அவற்றில் பல கிளாசிக் ஹிட்கள்.சரவணன் ஒரு தயாரிப்பாளராக மட்டுமின்றி, இயக்குநர், எழுத்தாளர் மற்றும் திரைக்கதை ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

    அவரது தலைமையில் ஏ.வி.எம். ஸ்டுடியோஸ், தமிழ் சினிமாவின் தொழில்நுட்ப வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தது. துரதிர்ஷ்டவசமாக, 2025 டிசம்பர் 4ஆம் தேதி, 86 வயதில் அவர் காலமானார், தமிழ் திரையுலகுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தினார். அவரது பாரம்பரியம், இன்றும் ஏ.வி.எம். நிறுவனத்தின் மூலம் தொடர்கிறது.

    ஆனந்தி பிலிம்ஸ் நடராஜன்:

    தஞ்சாவூர் மாவட்டத்தின் வலுத்தூர் கிராமத்தில் பிறந்தார் ஆனந்தி பிலிம்ஸ் நடராஜன். இவர், கே. பாலசந்தரின் நாடகக் குழுவில் பணியாற்றிய பின்னர், ஜெமினி பிலிம்ஸில் எக்ஸிக்யூட்டிவ் புரொட்யூசராக தொழிலைத் தொடங்கினார்.

    பின்னர் நடராஜன், ஆனந்தி பிலிம்ஸ்என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். இந்நிறுவனத்தின் கீழ் அவர் தயாரித்த 'முள்ளும் மலரும்' (1978, ரஜினிகாந்த் நடித்தது), 'சின்ன கவுண்டர்' (1992, விஜயகாந்த்), 'ராஜா கைய வெச்சா' (1990, பிரபு), 'பங்காளி' (1992, சத்யராஜ்), 'பசும்பொன்' (1995, பிரபு) ஆகிய படங்கள் தமிழ் சினிமாவின் கிளாசிக் படங்களாகக் கருதப்படுகின்றன.

    உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நடராஜன் இந்தாண்டு காலமானார். அவரது உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர். மரணம் அடைந்த தயாரிப்பாளர் நடராஜனுக்கு ஜோதி என்ற மனைவியும், செந்தில், விக்னேஷ் என்ற 2 மகன்களும் உள்ளனர்.

    முடிவுரை:

    ஏ.வி.எம். சரவணன் மற்றும் ஆனந்தி பிலிம்ஸ் நடராஜன் ஆகியோரின் திரைப்பயணம், தமிழ் சினிமாவின் வளர்ச்சியை எடுத்துக்காட்டுகிறது. சரவணன் ஸ்டுடியோக்களின் மூலம் தொழில்நுட்பத்தையும், நடராஜன் தனது படங்களின் மூலம் உணர்ச்சிகரமான கதைகளையும் வழங்கினர். அவர்களின் படைப்புகள் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றன. தமிழ் திரையுலகின் எதிர்காலத்துக்கு இவர்களின் பங்களிப்பு உத்வேகமாக அமையும்....

    • ஏ.வி.எம். சரவணன் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் எம்.பி இரங்கல் தெரிவித்து வீடியோ வெளியிட்டிருந்தார்.
    • ஏவிஎம் சரவணன் 1958ஆம் ஆண்டு முதல் தலைமையேற்று பல வெற்றித் தமிழ் படங்களை தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    நேற்று காலை வயது மூப்பின் காரணமாக பழம்பெரும் திரைப்பட தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்தனர்.

    ஏ.வி.எம். சரவணன் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் எம்.பி இரங்கல் தெரிவித்து வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் ஏவிஎம் என்ற தோப்பில் நடப்பட்ட ஒரு சிறு மரம் நான் என்று கமல் பேசியிருந்தார்.

    இந்நிலையில் ஏவிஎம் சரவணன் குடும்பத்தினரை நேரில் சந்தித்து கமல்ஹாசன் ஆறுதல் கூறி உள்ளார்.

    ஏ.வி. மெய்யப்பன் தொடங்கிய பழம்பெரும் ஏவிஎம் தயாரிப்பு நிறுவனத்தை அவரது மகனான ஏவிஎம் சரவணன் 1958ஆம் ஆண்டு முதல் தலைமையேற்று பல வெற்றித் தமிழ் படங்களை தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • உயிரிழந்த சரவணனின் உடல் ஏ.வி.எம். ஸ்டுடியோவில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
    • ஏ.வி.எம். சரவணன் உடலுக்கு திரைப்பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர்

    இன்று காலை வயது மூப்பின் காரணமாக பழம்பெரும் திரைப்பட தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் உயிரிழந்தார். அவரது உடல் சென்னை வடபழனியில் உள்ள ஏ.வி.எம். ஸ்டுடியோவில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

    மறைந்த ஏ.வி.எம். சரவணன் உடலுக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர்.

    இந்நிலையில், ஏ.வி.எம். சரவணன் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் எம்.பி இரங்கல் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

    அந்த வீடியோவில், "ஏ.வி.எம். சரவணன் அவர்களுக்கும் எனக்கும் உள்ள உறவு அண்ணன் - தம்பி உறவு போன்றது. குகனுக்கு இருக்கும் சோகத்தில் எனக்கும் பங்கு இருப்பதாக நான் உரிமை கொண்டாடுகிறேன். நான் தனி மரம் அல்ல, AVM என்ற பெரும் தோப்பில் நடப்பட்ட ஒரு சிறு செடி இன்று வளர்ந்து வந்திருக்கிறேன். இந்த தோப்பில் பல ஆசான்கள் எனக்கு கற்றுக்கொடுத்திருக்கிறார்கள். உங்கள் பெயர் சொல்லும் பிள்ளைகளில் ஒருவனின் அஞ்சலி இது" என்று பேசியுள்ளார்.

    • உயிரிழந்த சரவணனின் உடல் ஏ.வி.எம். ஸ்டுடியோவில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
    • ஏ.வி.எம். சரவணன் உடலுக்கு திரைப்பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்

    இன்று காலை வயது மூப்பின் காரணமாக பழம்பெரும் திரைப்பட தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் உயிரிழந்தார். அவரது உடல் சென்னை வடபழனியில் உள்ள ஏ.வி.எம். ஸ்டுடியோவில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

    மறைந்த ஏ.வி.எம். சரவணன் உடலுக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், ஏ.வி.எம். சரவணன் உடலுக்குநடிகர்கள் சிவக்குமார் மற்றும் சூர்யா கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

    இதன் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சிவக்குமார், "என்னுடைய சொந்த பெயர் பழனிசாமி. அதை சிவகுமார் என மாற்றியது சரவணன் சார் தான். இதன் காரணமாக தான் எனது சூர்யாவுக்கு நான் சரவணன் என பெயர் வைத்தேன்" என்று தெரிவித்தார்.

    • உயிரிழந்த சரவணனின் உடல் ஏ.வி.எம். ஸ்டுடியோவில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
    • ஏ.வி.எம். சரவணன் உடலுக்கு திரைப்பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்

    பழம்பெரும் திரைப்பட தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் உடலுக்குநடிகர்கள் சிவக்குமார் மற்றும் சூர்யா கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

    வயது மூப்பின் காரணமாக இன்று காலை உயிரிழந்த சரவணனின் உடல் சென்னை வடபழனியில் உள்ள ஏ.வி.எம். ஸ்டுடியோவில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

    மறைந்த ஏ.வி.எம். சரவணன் உடலுக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

    • உயிரிழந்த சரவணனின் உடல் ஏ.வி.எம். ஸ்டுடியோவில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
    • ஏ.வி.எம். சரவணன் உடலுக்கு திரைப்பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    பழம்பெரும் திரைப்பட தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து சரவணனின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.

    வயது மூப்பின் காரணமாக இன்று காலை உயிரிழந்த சரவணனின் உடல் சென்னை வடபழனியில் உள்ள ஏ.வி.எம். ஸ்டுடியோவில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

    மறைந்த ஏ.வி.எம். சரவணன் உடலுக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

    • ஏ.வி.எம். சரவணன் மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருந்தினேன்.
    • ஏ.வி.எம். நிறுவனத்துக்கும் திராவிட இயக்கத்தின் திரைப்பயணத்துக்கும் நெடிய தொடர்புண்டு.

    சென்னை:

    ஏ.வி.எம். சரவணன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தமிழ்த் திரையுலகின் முதுபெரும் ஆளுமைகளில் ஒருவரும் வரலாற்றுப் புகழ்மிக்க ஏ.வி.எம். நிறுவனத்தின் முகமாகவும் திகழ்ந்த ஏ.வி.எம். சரவணன் மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருந்தினேன். தமிழ் திரையுலகின் பாதையை தீர்மானித்து உருவாக்கியதில் ஏ.வி.எம். நிறுவனத்தின் பங்கு எவ்வளவு முக்கியமானதோ, அதே அளவுக்கு ஏ.வி.எம். நிறுவனத்தின் பாதையை தீர்மானித்ததில் சரவணன் பங்கும் அளப்பரியது.

    புதல்வராகவும், திரைத்துறை ஆளுமையாகவும் "அப்பச்சி" என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட அவரது தந்தை ஏ.வி.எம்-க்குப் புகழ் சேர்த்தவர் சரவணன். பேரறிஞர் அண்ணாவின் "ஓர் இரவு", தலைவர் கலைஞரின் "பராசக்தி", முரசொலி மாறனின் "குலதெய்வம்" என ஏ.வி.எம். நிறுவனத்துக்கும் திராவிட இயக்கத்தின் திரைப்பயணத்துக்கும் நெடிய தொடர்புண்டு. அந்த பந்தம் குடும்பப் பாசமாகி, எங்கள் குடும்பத்துடன் நெருங்கிப் பழகியவர் ஏ.வி.எம்.சரவணன்.

    கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் ஏ.வி.எம்-ன் ஹெரிடேஜ் அருங்காட்சியகத்தை நான் பார்வையிடச் சென்றபோது, அந்த நினைவலைகளைப் பகிர்ந்து பாசமுடன் பழகினார். அமைதியும் எளிமையுமே பண்புநலமாகக் கொண்டு எல்லோரிடமும் அன்பொழுகப் பழகிய அவரது மறைவால் வாடும் ஏ.வி.எம் குடும்பத்தாருக்கும், திரையுலக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    இதேபோல பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் 'தமிழ்த் திரை உலகில் பல புதுமைகளை புகுத்துவதற்கு காரணமாக இருந்த ஏ.வி.எம்.சரவணன் ஏராளமான கலைஞர்கள் தமிழ்த் திரை உலகில் நுழைவதற்கு காரணமாக இருந்தவர் என்று புகழாரம் சூட்டி உள்ளார்.

    • சரவணனின் உடல் சென்னை வடபழனியில் உள்ள ஏ.வி.எம். ஸ்டுடியோவில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
    • திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    பழம்பெரும் திரைப்பட தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து சரவணனின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.

    வயது மூப்பின் காரணமாக இன்று காலை உயிரிழந்த சரவணனின் உடல் சென்னை வடபழனியில் உள்ள ஏ.வி.எம். ஸ்டுடியோவில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

    மறைந்த ஏ.வி.எம். சரவணன் உடலுக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

    • இந்தியத் திரைப்படக் கூட்டமைப்பின் தலைவராக இருந்தவர் ஏ.வி.எம். சரவணன்.
    • பல தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் வெப் தொடரையும் தயாரித்து உள்ளது.

    புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ஏ.வி.எம். நிறுவன உரிமையாளர் சரவணன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 86. அவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    மறைந்த ஏ.வி.எம். சரவணனின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வடபழனியில் உள்ள ஏ.வி.எம். ஸ்டுடியோவில் வைக்கப்பட்டுள்ளது.

    வயது மூப்புக்காரணமாக ஓய்வில் இருந்து வந்த இந்தியத் திரைப்படக் கூட்டமைப்பின் தலைவராக இருந்தவர் ஏ.வி.எம். சரவணன்.

    தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான, ஏ.வி.எம். புரொடக்சன்ஸ் இதுவரை 180-க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்து இருக்கிறது. மேலும் பல தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் வெப் தொடரையும் தயாரித்து உள்ளது.

    ×