search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Saravanan"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நடிகர் சரவணன் தனது இடத்தை மீட்டு தருமாறு அமைச்சர் தாமோ அன்பரசனிடம் கோரிக்கை மனு அளித்தார்.
    • இதையடுத்து சரவணனின் ஆதரவாளர்கள் போலீஸ் பாதுகாப்புடன் கடையை திறைந்து பொருட்களை அப்புறப்படுத்தினர்.

    90-களில் பல திரைப்படங்களில் நடித்து கதாநாயகனாக வலம் வந்தவர் நடிகர் சரவணன். கார்த்தியுடன் இவர் நடித்த 'பருத்திவீரன்' திரைப்படம் சினிமாவில் இவருக்கு மேலும் புகழை சேர்த்தது. நடிகர் சரவணன் கடந்த 2014-ஆம் ஆண்டு சென்னை, போரூர் அடுத்த மவுலிவாக்கத்தில் செண்பகராமன் என்பவரிடம் லேக் வியூ அடுக்கு மாடி குடியிருப்பில் இரண்டு வீடுகளை வாங்கியுள்ளார். அந்த வீடுகளுக்கு சொந்தமான கார் பார்க்கிங்கும் யு.டி.எஸ். என்று சொல்லப்படும் உபயோகிக்கும் இடம் 700 முதல் 800 சதுரடி இருந்துள்ளது.

    இந்த இடத்தை அந்த பகுதியில் இருக்கும் இராமமூர்த்தி என்பவர் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து அந்த இடத்தில் கடை அமைத்து அதற்கு மின் இணைப்பு வாங்கிக் கொண்டதாகவும் அதற்கான வரியையும் செலுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து அறிந்த சரவணன் அந்த இடத்தை மீட்டு தருமாறு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு போரூர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.


    சரவணன் -தாமோ அன்பரசன்

    ஆனால் அங்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் அமைச்சர் தாமோ அன்பரசனிடம் தனது இடத்தை மீட்டு தருமாறு கோரிக்கை மனு அளித்தார். இந்த மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்திருந்தார்.

    இந்தநிலையில் அமைச்சரின் உத்தரவை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட இரண்டு கடைகளையும் போலீசார் பாதுகாப்புடன் திறந்து உள்ளே இருந்த பொருட்களை அப்புறப்படுத்தி கடை நடிகர் சரவணனுக்கு உரிமையானது என்று நோட்டீஸ் ஒட்டினர். இதனைக் கண்டித்து இராமமூர்த்தி மற்றும் அவரது மனைவி ஜெபமணி, நடிகர் சரவணன் மற்றும் அவரது ஆதரவாளர்களை கடுமையாக பேசினர்.


    சூர்யா ஸ்ரீ

    இதையடுத்து சரவணின் முதல் மனைவி சூர்யா ஸ்ரீ , சரவணன் மீது முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார் அளித்துள்ளார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சூர்யாஸ்ரீ , ''காதலித்து தன்னை திருமணம் செய்து கொண்ட சரவணன், சில ஆண்டுகளுக்கு முன் மவுலிவாக்கத்தில் தான் சம்பாதித்த பணம் மற்றும் நகைகளை வைத்து வீடு வாங்கினார். வாங்கிய வீட்டை அவரது பெயரில் பதிவு செய்து கொண்டார்.

    பட வாய்ப்பு இல்லாத போது, தனது சம்பாத்தியத்தில் உட்கார்ந்து சாப்பிட்ட சரவணன் பிக்பாஸ் சென்று வந்த பிறகு கையில் பணம் வந்தவுடன், ஸ்ரீதேவி என்ற பெண்னுடன் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார். கடந்த சில நாட்களாக சரவணன் 30 அடியாட்களுடன் தனது வீட்டிற்கு வந்து, வீட்டை விட்டு வெளியேறுமாறு ஆபாசமாக பேசி மிரட்டுகிறார். இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு உரிய நியாயத்தை பெற்று தர வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நடிகர் சரவணன் கடந்த 2014-ஆம் ஆண்டு மவுலிவாக்கத்தில் லேக் வியூ அடுக்கு மாடி குடியிருப்பில் இரண்டு வீடுகளை வாங்கியுள்ளார்.
    • அந்த வீடுகளுக்கு சொந்தமான கார் பார்க்கிங் மட்டும் 700 முதல் 800 சதுரடி இருந்துள்ளது.

    90-களில் பல திரைப்படங்களில் நடித்து கதாநாயகனாக வலம் வந்தவர் நடிகர் சரவணன். கார்த்தியுடன் இவர் நடித்த 'பருத்திவீரன்' திரைப்படம் சினிமாவில் இவருக்கு மேலும் புகழை சேர்த்தது. நடிகர் சரவணன் கடந்த 2014-ஆம் ஆண்டு சென்னை, போரூர் அடுத்த மவுலிவாக்கத்தில் செண்பகராமன் என்பவரிடம் லேக் வியூ அடுக்கு மாடி குடியிருப்பில் இரண்டு வீடுகளை வாங்கியுள்ளார். அந்த வீடுகளுக்கு சொந்தமான கார் பார்க்கிங்கும் யு.டி.எஸ். என்று சொல்லப்படும் உபயோகிக்கும் இடம் 700 முதல் 800 சதுரடி இருந்துள்ளது.


    சரவணன் -தாமோ அன்பரசன்

    இந்த இடத்தை அந்த பகுதியில் இருக்கும் இராமமூர்த்தி என்பவர் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து அந்த இடத்தில் கடை அமைத்து அதற்கு மின் இணைப்பு வாங்கிக் கொண்டதாகவும் அதற்கான வரியையும் செலுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

    இது குறித்து அறிந்த சரவணன் அந்த இடத்தை மீட்டு தருமாறு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு போரூர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். ஆனால் அங்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் தற்போது காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டு அமைச்சர் தாமோ அன்பரசனிடம் தனது இடத்தை மீட்டு தருமாறு கோரிக்கை மனு அளித்துள்ளார். இந்த மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தி.மு.க.வை சேர்ந்த டாக்டர் சரவணன் அக்கட்சியில் இருந்து விலகி கடந்த ஆண்டு பா.ஜ.க.வில் இணைந்தார்.
    • மதுரை மாநகர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் டாக்டர் சரவணன் அக்கட்சியில் இருந்து விலகினார்.

    மதுரை:

    ஜம்மு காஷ்மீரில் வீரமரணம் அடைந்த மதுரை ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு சென்ற தமிழ்நாடு நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் கார் மீது பா.ஜ.க.வினர் நேற்று காலணியை வீசினர். இச்சம்பவம் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது

    இந்நிலையில், மதுரை மாநகர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் டாக்டர் சரவணன் தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் வீட்டிற்கு நேரில் சென்று தனது வருத்தத்தைத் தெரிவித்தார். அதன்பின், செய்தியாளர்களை சந்தித்த டாக்டர் சரவணன் பா.ஜ.க.வில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்தார். இதுதொடர்பாக டாக்டர் சரவணன் கூறியதாவது:

    எனக்கு வெறுப்பு அரசியல், மத அரசியல் ஒத்துவரவில்லை. எனது மனதில் உள்ள விஷயத்தை அமைச்சரிடம் தெரிவித்தேன். நான் பா.ஜ.க. கட்சியில் தொடரவில்லை. பா.ஜ.க.வில் நான் தொடரப்போவதில்லை. இன்று காலை ராஜினாமா கடிதத்தைக் கொடுப்பேன். சுயமரியாதையுடன் இருக்க வேண்டும். திமுகவில் இணைவது குறித்து இதுவரை முடிவு எடுக்கவில்லை. (திமுகவில் இணைவது) செய்தாலும் தப்பில்லை. திமுக தாய் வீடு தானே. 10-15 ஆண்டுகளாக நான் உழைத்த கட்சி திமுக என தெரிவித்தார்.

    திமுகவை சேர்ந்த டாக்டர் சரவணன் அக்கட்சியில் இருந்து கடந்த ஆண்டு விலகி பா.ஜ.க.வில் இணைந்தார். அவர் மதுரை மாநகர் மாவட்ட பா.ஜ.க. தலைவராக செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ராஜதுரை இயக்கத்தில் சஞ்ஜெய் - ஓவியா நடிப்பில் வெளியாகி இருக்கும் `ஓவியாவ விட்டா யாரு சீனி' படத்தின் விமர்சனம்.
    மனோஜ்குமார்-மீராகிருஷ்ணன் தம்பதியின் மகன் சஞ்ஜெய். தன் அப்பாவை போல மாத சம்பளத்துக்கு வேலை செய்ய விரும்பாமல் சுயமாக தொழில் செய்து பெரிய ஆளாக வேண்டும் என்று ஆசைப்படுகிறார். இவரும், பக்கத்து வீட்டுப்பெண்ணான ஓவியாவும் காதலிக்கிறார்கள்.

    இந்த நிலையில், பணம் சம்பாதிப்பற்கான வழியை காட்டுவதாக கூறி ஆசை வளர்க்கிறார் ராதாரவி. மண்ணுளி பாம்பு, சஞ்சீவி குச்சி, நாகரத்னம், நட்சத்திர ஆமை ஆகியவை மூலம் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் என்று சஞ்ஜெய்யின் தொழிலதிபராகும் ஆசையை தூண்டிவிடுகிறார்.



    ராதாரவி-சஞ்ஜெய் இருவரும் சொல்வதை நம்பி, மாவட்ட கலெக்டரான அருள்தாஸ், போலீஸ் அதிகாரி ரவிமரியா உள்ளிட்டோர் ஏமாறுகிறார்கள். இதற்கிடையே வியாபாரியான சரவணனும், ஓவியாவை ஒருதலையாக காதலிக்கிறார். அவருக்கு சஞ்ஜெய்-ஓவியாவின் காதல் தெரியவர சஞ்ஜெய்யை கொலை செய்ய எண்ணுகிறார். மறுபக்கம் ஏமாந்தவர்கள் சஞ்ஜெய்யை துரத்துகிறார்கள்.

    இவர்களிடம் இருந்து சஞ்ஜெய் எப்படி தப்புகிறார்? தொழிலதிபர் ஆனாரா? ஓவியாவுடன் சேர்ந்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.



    வேலை வெட்டி எதுவும் செய்யாமல் நண்பர்களுடன் சுற்றும் சஞ்ஜெய் ஓவியாவுடன் காதல்-டூயட், ரவுடிகளுடன் சண்டை என ஒரு கதாநாயகனுக்கு உரிய வேலைகளை சுறுசுறுப்பாக செய்திருக்கிறார். ஓவியா டைட்டிலில் ஆரம்பித்து, படம் முழுக்க வருகிறார். பாடல் காட்சிகளில் உள்ளாடை தெரியும்படி ஆடி, கவர்ச்சி விருந்து கொடுக்கிறார். டைட்டிலைப்போல் பாடல்களிலும் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

    படத்தின் கூடுதல் அம்சமாக ராதாரவியின் நகைச்சுவை கலந்த வில்லத்தனம் அமைந்திருக்கிறது. அவர் தொடர்பான காட்சிகளில், தியேட்டரில் கலகலப்பும், எதிர்பார்ப்பும் அதிகமாகின்றன. இன்னொரு வில்லனாக ரவிமரியா காமெடி செய்கிறார். கடைசி சண்டை காட்சியில், மிரட்டுகிறார். வியாபாரி சரவணன் திடீர் வில்லனாக மாறுவது, எதிர்பாராத திருப்பம். யானைப்பாகனாக செந்தில், சஞ்ஜெய்யின் தாத்தாவாக டி.பி.கஜேந்திரன் ஆகியோரும் சிரிக்க வைக்கிறார்கள்.



    மூடநம்பிக்கையை மூலதனமாக வைத்து மோசடி செய்யும் ஆசாமிகளை நம்ப வேண்டாம் என்ற கருத்தை காமெடி கலந்து சொல்லியிருக்கிறார், இயக்குனர் ராஜதுரை. படத்தின் முதல் பாதி மெதுவாகவும், இரண்டாம் பாதி விறுவிறுப்பாகவும் நகர்கிறது.

    ஸ்ரீகாந்த் தேவா இசையில் பாடல்கள் செம குத்து. ஈ.கே.நாகராஜின் ஒளிப்பதிவு ரசனை.

    மொத்தத்தில் `ஓவியாவ விட்டா யாரு சீனி' ஆசை.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    எம்.சரவணன் இயக்கத்தில் திரிஷா நடிப்பில் உருவாகும் ஆக்‌ஷன் படத்திற்கு அனிருத் இசையமைக்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Raangi #Trisha
    திரிஷா ’கடந்த ஆண்டு, தமிழில் ‘96’, மலையாளத்தில் ‘ஹே ஜூட்’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் என் சினிமா பயணத்தில் மிக முக்கியமானவை” என தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து, ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்ற அவர் ஆசை, ‘பேட்ட’ படத்தில் நிறைவேறியது. அதற்குப் பிறகு, கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதை ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

    ஏ.ஆர்.முருகதாஸ் கதை எழுதியுள்ள இந்த படத்தை, ‘எங்கேயும் எப்போதும்‘, ‘இவன் வேற மாதிரி’ ஆகிய படங்களை இயக்கிய எம்.சரவணன் இயக்கவிருக்கிறார். ‘ராங்கி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளது. ஆக்‌‌ஷன் அட்வென்சர் கதையில் உருவாகிவரும் இப்படத்திற்கு, அனிருத் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



    தவிர, சிம்ரனுடன் இணைந்து மற்றொரு அட்வென்சர் படத்தில் நடிக்கிறார், திரிஷா. சுமந்த் ராதாகிரு‌ஷணன் இயக்கவிருக்கும் இந்தபடத்தின் படப்பிடிப்பு, கேரளா, பிச்சாவரம், தாய்லாந்து எனப் பல்வேறு இடங்களில் நடக்கிறது. #Raangi #Trisha #Anirudh

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    எம்.சரவணன் இயக்கத்தில் திரிஷா நடிக்கும் புதிய படத்தின் பூஜை இன்று நடந்த நிலையில், படத்திற்கு ராங்கி என்று தலைப்பு வைத்துள்ளனர். #Raangi #Trisha
    ‘எங்கேயும் எப்போதும்‘ பட இயக்குநர் எம்.சரவணன் இயக்கத்தில் திரிஷா நடிப்பில் உருவாகும் புதிய படத்திற்கு ராங்கி என்று தலைப்பு வைத்துள்ளனர். ஏ.ஆர்.முருகதாஸ் எழுத்தில் உருவாகும் இந்த படத்தின் பூஜை சென்னையில் இன்று நடந்தது.

    ஆக்‌‌ஷனுக்கு முக்கியத்துவம் உள்ள கதையாக உருவாகும் இந்த படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்கிறார். தமிழில் ராங்கி என்றால் அடங்காத பெண் என்று பொருள். அந்த வகையில், தைரியமான ஒரு பெண் கதாபாத்திரத்தில் திரிஷா வருவார் என்பதில் சந்தேகமில்லை.


    திரிஷா தற்போது சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் ஆக்ஷன் த்ரில்லர் படத்தில் நடித்து வருகிறார். இதில் திரிஷாவின் அக்காவாக சிம்ரன் நடிக்கிறார். திரிஷா நடிப்பில் அடுத்ததாக கர்ஜனை, பரமபத விளையாட்டு, சதுரங்க வேட்டை 2 உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகி இருக்கின்றன. #Raangi #Trisha #MSaravanan #ARMurugadoss

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ரஜினிகாந்த் நடிக்கும் `தர்பார்' படத்தை இயக்கி வரும் ஏ.ஆர்.முருகதாஸ், சரவணன் இயக்கத்தில் திரிஷா நடிப்பில் உருவாகும் ஆக்‌ஷன் படத்திற்கான கதையை எழுதுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Trisha #Saravanan
    ‘எங்கேயும் எப்போதும்‘ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சரவணன் தொடர்ந்து ‘இவன் வேறமாதிரி’, ‘வலியவன்’ உள்ளிட்ட படங்களை இயக்கினார். பின்னர் கன்னடத்தில் புனித் ராஜ்குமார் நடித்த ‘சக்ரவியூகா’ படத்தை இயக்கினார். 

    இடையே விபத்து ஏற்பட்டதால் சில காலம் ஓய்வில் இருந்தார். தற்போது மீண்டும் இயக்குனர் பணிக்கு திரும்பி உள்ளார். முழுக்க முழுக்க நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ஆக்‌ஷன் படமொன்றை இயக்கவுள்ளார்.



    இதில் திரிஷா நாயகியாக நடிக்கிறார். தற்போது திரிஷாவுடன் நடிக்க உள்ளவர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த படம் ஆக்‌‌ஷனுக்கு முக்கியத்துவம் உள்ள கதையாக உருவாக இருக்கிறது. லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் கதையை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் எழுத, சரவணன் இயக்குவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சரவணன், ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. #Trisha #Saravanan #ARMurugadoss

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ரவி முருகையா இயக்கத்தில் விதார்த், ஜானவிகா நடிப்பில் உருவாகி இருக்கும் ஆயிரம் பொற்காசுகள் படம் கோடை விடுமுறையில் திரைக்கு வர இருக்கிறது. #AayiramPorkasugal #Vidharth
    ஈரமான ரோஜாவே, அலெக்சாண்டர் உள்பட பல வெற்றிப்படங்களை இயக்கியவர் கேயார். தயாரிப்பாளராகவும், வினியோகஸ்தராகவும் அனுபவம் கொண்ட கேயார் தனது கேஆர் இன்போடெயின்மெண்ட் சார்பில் அடுத்து வெளியிடும் படம் ஆயிரம் பொற்காசுகள். 

    அறிமுக இயக்குனர் ரவி முருகையா இயக்கத்தில் “மைனா” விதார்த், “பருத்தி வீரன்” சரவணன், ஜானவிகா ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கிறது. மேலும் இப்படத்தில் வெற்றிவேல் ராஜா, ஹலோ கந்தசாமி, ஜார்ஜ் மரியான், பாரதி கண்ணன், செம்மலர் அன்னம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.



    ஜோஹன் இசையமைக்க, பானுமுருகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் பற்றி கேயார் கூறும்போது ‘இது முழுக்க முழுக்க நகைச்சுவையை அடிப்படையாக கொண்ட கதை. தொடக்கம் முதல் கடைசி காட்சி வரை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும். கழிப்பறை தோண்ட சென்ற இடத்தில் விதார்த், சரவணன் கூட்டணிக்கு ஒரு புதையல் கிடைக்கிறது. அந்த செய்தி ஊர் முழுக்க பரவி ஊரே பங்கு கேட்கிறது.

    அதன் பிறகு என்ன ஆகிறது என்பதே கதை. கிராமத்து மக்களின் பசுமையான வாழ்வியலையும், அன்றாட நிகழ்வுகளையும் பிண்ணனியாக கொண்டு உருவாகியுள்ளது, குடும்ப பொழுதுபோக்கு படம் என்பதால் கோடை காலத்தில் வெளியிட உள்ளோம்’ என்றார். #AayiramPorkasugal #Vidharth

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ‘எங்கேயும் எப்போதும்‘ படத்தை இயக்கிய சரவணன் இயக்கத்தில் நடிகை திரிஷா ஆக்‌ஷன் ஹீரோயினாக நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Trisha #Saravanan
    ஜெய், அஞ்சலி, சர்வானந்த், அனன்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் ‘எங்கேயும் எப்போதும்‘. ஏ.ஆர்.முருகதாசின் உதவி இயக்குனர் எம்.சரவணன் இயக்கத்தில் உருவானது. 

    இந்த படத்தை தொடர்ந்து ‘இவன் வேறமாதிரி’, ‘வலியவன்’ ஆகிய படங்களை இயக்கினார். அந்த படங்கள் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. கன்னடத்தில் புனித் ராஜ்குமார் நடித்த ‘சக்ரவியூகா’ படத்தை இயக்கினார்.



    இடையே விபத்து ஏற்பட்டதால் சில காலம் ஓய்வில் இருந்தார். தற்போது மீண்டும் இயக்குனர் பணிக்கு திரும்பி உள்ளார். முழுக்க முழுக்க நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து கதை ஒன்றை எழுதி உள்ளார். அந்த கதையில் நடிக்க திரிஷா சம்மதம் தெரிவித்துள்ளார். தற்போது திரிஷாவுடன் நடிக்க உள்ளவர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த படம் ஆக்‌‌ஷனுக்கு முக்கியத்துவம் உள்ள கதையாக உருவாக இருக்கிறது. #Trisha #Saravanan

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    விஸ்வாசம் படப்பிடிப்பின் போது மயங்கி விழுந்து உயிரிழந்த குரூப் டான்சர் உடலை கொண்டு தமிழகம் கொண்டு வர நடிகர் அஜித் உதவி செய்ததாக டான்ஸ் யூனியனின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #AjithKumar #Viswasam
    சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ‘விஸ்வாசம்’. சத்யஜோதி நிறுவனம் தயாரித்துவரும் இப்படம், அடுத்த ஆண்டு (2019) பொங்கலுக்கு வெளியாகும் என அறிவித்திருக்கிறது படக்குழு. தற்போது இதன் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு புனேவில் நடைபெற்று வருகிறது.

    இதில் ஒரு பாடலுக்கான சில காட்சிகளை மட்டும் படமாக்கி வந்தனர். அஜித்துடன் குரூப் டான்ஸர்கள் நடனமாடும் காட்சியைப் படமாக்கிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென சரவணன் என்ற குரூப் டான்ஸர் மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

    ஆனால், சரவணன் சிகிச்சை அளிக்கப்படுவதற்கு முன்னதாகவே இறந்தார். சரவணன் உயிரிழந்தது தெரிந்தவுடன், பிரேதப் பரிசோதனை முடியும்வரை மருத்துவமனையிலே இருந்திருக்கிறார் அஜித். இதுகுறித்து டான்ஸ் யூனியனின் பொருளாளர் செந்தில்குமார் கூறும்போது, “எங்கள் சங்கத்தின் தலைவர் படப்பிடிப்பில் இருப்பதால், இதை நான் பேசுகிறேன். ஷூட்டிங் சென்ற இடத்தில் சரவணனுக்கு மாரடைப்பு ஏற்பட்டது.



    அஜித் சார் தான் தனது சொந்த செலவில் அவரது பிரேதத்தை சென்னைக்கு எடுத்து வர உதவினார். அவர் மட்டும் இல்லாவிட்டால், உடல் வந்து சேர 3 நாட்களுக்கு மேல் ஆகியிருக்கும் என்றார். #AjithKumar #Viswasam

    • Whatsapp