search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Madurai Constituency"

    • எடப்பாடி பழனிச்சாமி துணிச்சலுடன் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேறியது.
    • மதுரை மாவட்டத்திற்கு ரூ.10,000 கோடி மதிப்பிலான திட்டங்களை அ.தி.மு.க. அரசு தந்துள்ளது.

    மதுரை:

    மதுரை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் பா.சரவணன் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவுடன் இணைந்து பழங்காநத்தம், மாடக்குளம், சம்பட்டிபுரம், முடக்குச்சாலை, அண்ணா மெயின் வீதி, பெத்தானியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார். பழங்காநத்தம் நடைபெற்ற பிரசாரத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் கலந்து கொண்டார். ஏராளமான பெண்கள் டாக்டர் சரவணனுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்து ராட்சசகிரேன் மூலம் பிரமாண்ட மாலை அணிவித்தனர்.

    முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில், மதுரைக்கு 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டத்தை அ.தி.மு.க. கொண்டு வந்தது. மதுரை மாவட்டத்திற்கு ரூ.10,000 கோடி மதிப்பிலான திட்டங்களை அ.தி.மு.க. அரசு தந்துள்ளது. ஆகவே மக்கள் நல திட்டங்களை செயல்படுத்த டாக்டர் சரவணனை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் பேசுகையில், தி.மு.க. அரசு மீது ஊழியர்கள் ஆசிரியர்கள் அதிருப்தி, மகளிர் உதவித் தொகை தொகை வழங்குவதில் குளறுபடி, எடப்பாடி பழனிச்சாமி துணிச்சலுடன் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேறியது. தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் ஆகிய காரணங்களுக்காக மக்கள் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளை புறக்கணித்து அ.தி.மு.க.வை வெற்றி பெறச் செய்ய முடிவு விட்டார்கள்.

    வைகை நதிக்கரையில் இருந்து டாக்டர் சரவணன் என்ற பாராளுமன்ற உறுப்பினரை தேர்வு செய்து யமுனை நதிக்கரைக்கு அனுப்பி வையுங்கள் என பேசினார். அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணன் பேசுகையில், "உங்கள் வீட்டுப் பிள்ளையா நினைத்து என்னை வெற்றி பெறச் செய்தால் மதுரை மக்களவைத் தொகுதிக்கு தேவையான நலத்திட்டங்களை நிச்சயம் செயல்படுத்துவேன்" என உருக்கமான பேசினார்.

    • சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பாவிற்கும் அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
    • அழிவு பாதையில் இருந்து அ.தி.மு.க.வை காப்பாற்றிய பெருமை எடப்பாடி பழனிச்சாமியையே சேரும்.

    மதுரை:

    மதுரை பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் டாக்டர் சரவணன் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா உடன் இணைந்து தீவிர வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக ஆத்திக்குளம், சர்வேயர் காலனி, நாராயணபுரம். பேங்க் காலணி, அய்யர் பங்களா, திருப்பாலை, மேனேந்தல், நாகனாங்குளம் ஆகிய இடங்களில் இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார்.

    அப்போது டாக்டர் சரவணனுக்கும், சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பாவிற்கும் அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். வேட்பாளர் டாக்டர் பா.சரவணன் பேசுகையில், தி.மு.க.வின் 3 ஆண்டுகால ஆட்சியில் அனைத்து விலை வாசிகளும் கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு விரல் புரட்சி செய்து அ.தி.மு.க.வை வெற்றி பெற செய்ய வேண்டும். மதுரை மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்துவேன் என பேசினார்.

    பின்னர் ராஜன் செல்லாப்பா எம்.எல்.ஏ. கூறுகையில், அ.தி.மு.க.வோடு கூட்டணி வைத்து அ.தி.மு.க.வை அழிக்க வேண்டும் என பா.ஜ.க. எண்ணியதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். பா.ஜ.க.வோடு தொடர்ந்து கூட்டணி வைத்திருந்தால் அ.தி.மு.க.வை அழித்து இருப்பார்பார். அழிவு பாதையில் இருந்து அ.தி.மு.க.வை காப்பாற்றிய பெருமை எடப்பாடி பழனிச்சாமியையே சேரும். பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகியது நூற்றுக்கு நூறு சரியானது என மக்களும், அ.தி.மு.க. தொண்டர்களும் புரிந்து கொண்டுள்ளனர் என்றார்.

    • அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் மதுரை கிழக்கு தொகுதியில் மதுரை-நத்தம் சாலை ரூ.ஆயிரம் கோடியில் அமைக்கப்பட்டது.
    • பாண்டிகோவில் அருகே 50 கோடியில் உயர் மட்ட மேம்பாலம் அமைக்கப்பட்டது.

    மதுரை:

    மதுரை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணன், புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் ஆலாத்தூர், ஊமச்சிகுளம், சத்திரப்பட்டி, வெளிச்சநத்தம், ஆலங்குளம், பாசிங்காபுரம், வீரபாண்டி உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்கள் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    பிரசாரத்தின் போது வேட்பாளர் டாக்டர் சரவணன் பேசியதாவது:-

    அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் மதுரை கிழக்கு தொகுதியில் மதுரை-நத்தம் சாலை ரூ.ஆயிரம் கோடியில் அமைக்கப்பட்டது. மக்களின் நிர்வாக வசதிக்கா மதுரை கிழக்கு தொகுதியில் புதிய வட்டம் அமைக்கப்பட்டது. மூன்றுமாவடி முதல் ஆனையூர் வரை ரூ.50 கோடியில் சாலை அமைக்கப்பட்டது.

    பாண்டிகோவில் அருகே 50 கோடியில் உயர் மட்ட மேம்பாலம் அமைக்கப்பட்டது. இதுபோன்ற பல்வேறு திட்டங்கள் அ.தி.மு.க. ஆட்சியில் மதுரையில் செயல்படுத்தப்பட்டது. கடந்த 3 ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் மதுரையில் எந்த திட்டமும் கொண்டுவரவில்லை. கடந்த தேர்தலில் கூறிய வக்குறுதிகளை வெங்கடேசன் நிறைவேற்றவில்லை. எனவே வளர்ச்சி திட்டங்கள் கொண்டுவரை இரட்டை இலைக்கு வாக்களிக்குமாறு கேட்க்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பிரசாரத்தில் அனைத்து மக்கள் அரசியல் கட்சி நிறுவன தலைவர் ராஜேஸ்வரி பிரியா, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வக்கீல் ரமேஷ், மதுரை மேற்கு ஒன்றிய செயலாளர் வாசு என்று பெரியணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பொன்னம்பலம், எஸ்.எஸ். சரவணன், திருப்பரங்குன்றம் ஒன்றிய கழகச் செயலாளர் நிலையூர் முருகன், இலக்கிய அணி இணைச் செயலாளர் வில்லாபுரம் ரமேஷ், ஒத்தக்கடை கார்த்திகேயன், மாணவரணி உசிலை முத்துகிருஷ்ணன் பாசறை ராமர், மாமன்ற உறுப்பினர் முத்துமாரி ஜெயக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    மதுரை பாராளுமன்றத் தொகுதியில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசன் 4,42,935 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
    மதுரை:

    பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. தமிழகம் மற்றும் புதுவையில் தேர்தல் நடைபெற்ற 39 பாராளுமன்றத் தொகுதிகளில் திமுக கூட்டணி 38 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

    மதுரை தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசன் 4,42,935 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அடுத்த இடத்தில் அதிமுக வேட்பாளர் ராஜ் சத்தியன் 3,06,256 வாக்குகள் பெற்றார்.

    மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் அழகர் 84 ஆயிரத்து 656 வாக்குகளும், அமமுக வேட்பாளர் டேவிட் அண்ணாதுரை 85 ஆயிரத்து 046 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பாண்டியம்மாள் 42 ஆயிரத்து 576 வாக்குகளும் பெற்றனர். 
    மதுரை பாராளுமன்றத் தொகுதியில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசன் 90 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
    மதுரை:

    பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. தமிழகம் மற்றும் புதுவையில் தேர்தல் நடைபெற்ற 39 பாராளுமன்றத் தொகுதிகளில் திமுக கூட்டணி பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.

    மதுரை தொகுதியில் 11 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசன் 2,69,382 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார். அடுத்த இடத்தில் அதிமுக வேட்பாளர் ராஜ் சத்தியன் இருந்தார். அவர் 1,80,147 வாக்குகள் பெற்றிருந்தார்.

    மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் அழகர் 51 ஆயிரத்து 310 வாக்குகளும், அமமுக வேட்பாளர் டேவிட் அண்ணாதுரை 44 ஆயிரத்து 900 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பாண்டியம்மாள் 25 ஆயிரத்து 973 வாக்குகளும் பெற்றிருந்தனர்.
    வாக்கு எண்ணிக்கை மையத்தில் அதிகாரி நுழைந்த விவகாரத்தில் தன்னை மாற்றியது தொடர்பாக, மதுரை மாவட்ட முன்னாள் ஆட்சியர் நடராஜன் ஐகோர்ட்டில் முறையீடு செய்துள்ளார். #HighCourt #EC #MaduraiConstituency
    சென்னை:

    மதுரை பாராளுமன்ற தொகுதியில் கடந்த 18-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மதுரை அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டு இருந்தன.

    இதற்கிடையே, வாக்கு எண்ணிக்கை மையத்தில் தாசில்தார் நுழைந்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. வாக்கு எண்ணிக்கை மையத்தில் அத்துமீறி நுழைந்த அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தின.

    வாக்கு எண்ணிக்கை மையத்தில் அதிகாரி நுழைந்தது குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக்கோரி மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    வழக்கு விசாரணையின்போது, மதுரை வாக்கு எண்ணிக்கை மையத்தில் சில பாதுகாப்பு குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. உதவி தேர்தல் அதிகாரி அறிவுறுத்தலின் பேரில் தாசில்தார் வாக்கு எண்ணும் மையத்திற்குள் சென்றார். தலைமை தேர்தல் அதிகாரி அனுப்பிய பரிந்துரை குறித்து முடிவெடுக்க 2 நாள் அவகாசம் வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

    இதற்கிடையே, வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதியின்றி பெண் அதிகாரி நுழைந்த விவகாரத்தில் மதுரை மாவட்ட தேர்தல் அதிகாரி நடராஜன் மற்றும் துணை தேர்தல் அதிகாரி, ஆட்சியரின் உதவியாளர், காவல் உதவி ஆணையர் ஆகியோரையும் மாற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை மையத்தில் அதிகாரி நுழைந்த விவகாரத்தில் தன்னை மாற்றியது தொடர்பாக, மதுரை மாவட்ட முன்னாள் ஆட்சியர் நடராஜன் ஐகோர்ட்டில் இன்று மேல் முறையீடு செய்துள்ளார். அந்த மனுவில், தனது விளக்கத்தை கேட்காமல் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார். #HighCourt #EC #MaduraiConstituency
    வாக்கு எண்ணும் மையத்துக்குள் பெண் அதிகாரி நுழைந்த விவகாரத்தில் மதுரை மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான நடராஜன் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக ஐகோர்ட்டில் தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்தது. #HighCourt #EC #MaduraiConstituency
    சென்னை:

    நாடாளுமன்ற தேர்தலில் மதுரை தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போட்டியிட்டவர் வெங்கடேசன்.

    சென்னை ஐகோர்ட்டில் அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-

    மதுரை பாராளுமன்ற தொகுதியின் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் எல்லாம், மதுரை மருத்துவ கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த அறைகளுக்குள் பெண் தாசில்தார் சம்பூரணம் உள்பட 4 அதிகாரி கள் சட்டவிரோதமாக கடந்த 20-ந் தேதி சென்று சில ஆவணங்களை நகல் எடுத்துள்ளனர்.

    எனவே, இந்த சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்காத மாவட்ட கலெக்டரை உடனடியாக மாற்ற வேண்டும். ஓட்டுகள் எண்ணும் மையத்துக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படையை கொண்டு 3 அடுக்கு பாதுகாப்பு வழங்கவும், தாசில்தார் மையத்துக்குள் சென்றது குறித்து முதன்மை செயலாளர் பதவிக்கு குறையாக அதிகாரி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்தும் உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் தனது மனுவில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையம் சார்பில் நிரஞ்சன் ராஜகோபால், மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

    அவற்றின் விவரம் பின்வருமாறு:-

    மூத்த வக்கீல்:- தாசில்தார் உள்பட 3 பேரும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்குள் நுழையவில்லை என்று தேர்தல் கமிஷன் கூறுகிறது. இருந்தாலும், தேர்தல் தொடர்பான ஆவணங்கள் வைத்திருந்த அறைக்குள் அவர்கள் நுழைந்து ஆவணங்களை எடுத்துச் சென்றது தேர்தல் ஆணைய விதிகளை மீறிய செயலாகும். தாசில்தார் யாருடைய உத்தரவின் அடிப்படையில் அங்கு சென்றார்? என்பது குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைத்து உத்தரவிட வேண்டும்.

    தேர்தல் ஆணையம் வக்கீல்:- மாவட்ட கலெக்டரின் உதவியாளரான, உதவி தேர்தல் அதிகாரி அறிவுறுத்தலின் பேரில்தான் தாசில்தார் சம்பூரணம் வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு சென்றுள்ளார். அங்கிருந்த ஆவணங்களை எடுத்து வந்து நகல் எடுத்துள்ளார். மதுரை நாடாளுமன்ற தொகுதியில் வாக்கு எண்ணப்பட உள்ள மையத்தில் சில பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளது என்பது கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி பாலாஜி நடத்திய விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அனுப்பிய பரிந்துரை அடிப்படையில், இந்திய தேர்தல் ஆணையம் 2 நாட்களில் முடிவு எடுக்க உள்ளது.

    நீதிபதிகள்:- கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி அளித்த விசாரணை அறிக்கையில், தாசில்தார் சம்பூரணத்துடன் சென்றவர்களின் விவரங்கள் இல்லை. அவர்களிடம் விசாரணை நடத்தியதற்கான விவரங்களும் இல்லை. மாவட்ட கலெக்டரின் உதவியாளர் குறித்த விவரங்கள் அதில் இல்லை. இந்த விவகாரத்தில் மாவட்ட கலெக்டர் குறிப்பிட்ட நேரத்துக்குள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

    தேர்தல் ஆணையம் வக்கீல்:- தாசில்தார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    நீதிபதிகள்:- அப்படி என்றால், இந்த சம்பவத்துக்கு யாரெல்லாம் பொறுப்பு? கலெக்டரின் உதவியாளர் சொன்னதால் தாசில்தார் உள்ளிட்டோர் சென்றுள்ளனர். அப்படி இருக்கும்போது அந்த உதவியாளர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? தேர்தல் விதிகளின்படி மாவட்ட தேர்தல் அதிகாரியான, கலெக்டர் தினமும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் வைக்கப்பட்டுள்ள இடத்துக்கு சென்று பார்வையிட வேண்டும். அவ்வாறு மதுரை கலெக்டர் பார்வையிட்டாரா?

    தேர்தல் ஆணையம் வக்கீல்:- இந்த சம்பவம் குறித்து விசாரணை அறிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் ஆய்வு செய்து வருகிறது. இதன் மீது முடிவு எடுக்க 2 நாட்கள் கால அவகாசம் வேண்டும்.

    நீதிபதிகள்:- எந்த விவரங்களும் அறிக்கையில் இல்லாத நிலையில், எதை வைத்து இந்திய தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கப்போகிறது? எப்போதும் நேர்மையான நியாயமான தேர்தலை நடத்த நடவடிக்கை எடுப்பதாக சொல்கிறீர்கள். அதன்படிதானே இந்த விவகாரத்திலும் செயல்பட்டு இருக்க வேண்டும். மாவட்ட கலெக்டர் உதவியாளர் தானே தாசில்தார் உள்ளிட்டோரை அனுப்பி வைத்துள்ளார்? யாருடைய அறிவுறுத்தலின்படி, அவர்களை கலெக்டரின் உதவியாளர் அனுப்பிவைத்தார்? என்பது குறித்து அவரிடம் விசாரித்ததாக அறிக்கையில் எந்த விவரமும் இல்லையே? ஆவணங்களின் நகல் எதற்காக எடுக்கப்பட்டது? அவர்களது திட்டம் என்ன?

    தேர்தல் ஆணையம் வக்கீல்:- தமிழகத்தில் மின்னணு வாக்கு எந்திரங்கள் உள்ள அனைத்து மையங்களுக்கும் 3 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

    நீதிபதிகள்:- வாக்கு எண்ணும் மையத்துக்குள் யார் வேண்டுமானாலும் செல்ல முடிகிறது என்றால் அங்கு பாதுகாப்பே இல்லை என்றுதானே அர்த்தம்? மதுரை மையத்திற்குள் தாசில்தாருடன் சென்றவர்களை யார்? என்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டவர்கள் கேட்கவில்லை. அவர்கள் வருகிறார்கள், மையத்துக்குள் அனுமதிக்க வேண்டும் என்று பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருக்கு உத்தரவிட்டது யார்? அந்த மையத்துக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய உதவி போலீஸ் கமிஷனர் அப்போது பாதுகாப்பு பணியில் ஏன் இல்லை? பாதுகாப்பு பணிக்கு ‘வாட்ச்மேனை’ நியமித்து விட்டு அவர் தூங்கி விட்டார் என்று சொல்லலாமா?

    தேர்தல் ஆணையம் வக்கீல்:- இந்த விவகாரம் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு இதில் பங்கு எதுவும் இல்லை.

    நீதிபதிகள்:- அப்படி என்றால், தலைமை தேர்தல் அதிகாரியும், இந்திய தேர்தல் ஆணையமும் வெவ்வேறா? தாசில்தாரை பணியிடை நீக்கம் செய்ய கலெக்டருக்கு உத்தரவிட்ட தலைமை தேர்தல் அதிகாரி, மற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஏன் உத்தரவிட வில்லை?

    தேர்தல் ஆணையம் வக்கீல்:- மாநில தலைமை தேர்தல் அதிகாரி என்பவர் இந்திய தேர்தல் ஆணையத்தில் இருந்து விவரங்களை பெற்று தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு அனுப்பி வைப்பார். அவரது பணி என்பது ஒரு ‘போஸ்ட் மேன்’ (தபால்காரர்) மாதிரிதான். யார் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அவரால் முடியாது. தேர்தல் நடத்தும் மேற்பார்வையாளர், ஒருங்கிணைப்பாளர் பணியை தான் அவர் செய்ய முடியும்.

    நீதிபதிகள்:- போஸ்ட்மேன் போல் மட்டுமே செயல் படக்கூடிய அதிகாரம் படைத்த ஒரு அதிகாரியால் எப்படி தேர்தலை நேர்மையாக நடத்த முடியும்? தேர்தல் அறிவிப்பு வெளியான அடுத்த நொடி முதல், அரசு எந்திரம் அனைத்தும் தலைமை தேர்தல் அதிகாரி கட்டுப்பாட்டிற்கு வந்து விடுகிறது. அப்படி இருக்கும்போது, அவருக்கு அதிகாரம் இல்லை என்று எப்படி சொல்ல முடியும்? ஒரு தொகுதி தேர்தல் அதிகாரிக்கு உள்ள அதிகாரம் கூட மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு இல்லையா? தொகுதி தேர்தல் அதிகாரிகள் எது செய்தாலும் கண்டுகொள்ளாமல் தலைமை தேர்தல் அதிகாரி இருந்துவிடுவாரா?

    கண்ணுக்குமுன் ஆதாரங் கள் இருக்கும்போது ஆணையம் நடவடிக்கை எடுக்கும் வரை காத்துக்கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.

    இவ்வாறு விவாதம் நடந்தது.

    இதன்பின்னர் நீதிபதிகள் நேற்றிரவு 7 மணியளவில் பிறப்பித்த இடைக்கால உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    மதுரை மாவட்ட கலெக்டர் நடராஜன், மேற்கு மதுரை சட்டசபை தொகுதி தேர்தல் அதிகாரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர், போலீஸ் உதவி கமிஷனர் (குற்றப்பிரிவு) மோகன்தாஸ் ஆகியோர் தாசில்தார் சம்பூரணம், மாநகராட்சி ஊழியர்கள் சூர்யபிரகாசம், ராஜபிரகாஷ், சிவராமன் ஆகியோரை மின்னணு வாக்கு எந்திரங்கள் உள்ள மையத்துக்குள் அனுமதிக்க காரணமாக இருந்துள்ளனர். இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    இந்த அதிகாரிகளை எல்லாம் கூண்டோடு இடமாற்றம் செய்ய வேண்டும். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட இருந்தோம்.

    ஆனால், இந்த அதிகாரிகள் அனைவர் மீதும் சட்டப்படி துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும், கலெக்டர் உள்ளிட்டோரை இடமாற்றம் செய்து விட்டதாகவும் தேர்தல் ஆணையத்தின் வக்கீல் கூறினார். மேலும், மதுரை கலெக்டர் நடராஜனை அப்பதவியில் இருந்து மாற்றி விட்டு, அதற்கு பதில் எஸ்.நாகராஜனை கலெக்டராக நியமித்துள்ளதாகவும், அதேபோல, புதிய உதவி தேர்தல் அதிகாரியாக சாந்தகுமார் என்பவரை நியமித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

    இதை பதிவு செய்துகொள்கிறோம். அதே நேரம், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மதுரை முன்னாள் மாவட்ட கலெக்டர் நடராஜன் உள்ளிட்டோர் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் எடுக்க வேண்டும்.

    இவ்வாறு நீதிபதிகள் உத்தர விட்டுள்ளனர். 
    வாக்கு எண்ணிக்கை மையத்தில் அதிகாரி நுழைந்த விவகாரம் தொடர்பாக, மதுரை மாவட்ட ஆட்சியரை மாற்ற வேண்டும் என ஐகோர்ட் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. #HighCourt #EC #MaduraiConstituency
    சென்னை:

    மதுரை பாராளுமன்ற தொகுதியில் கடந்த 18-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மதுரை அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டு இருந்தன.

    இதற்கிடையே, வாக்கு எண்ணிக்கை மையத்தில் தாசில்தார் நுழைந்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. வாக்கு எண்ணிக்கை மையத்தில் அத்துமீறி நுழைந்த அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தின.

    வாக்கு எண்ணிக்கை மையத்தில் அதிகாரி நுழைந்தது குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக்கோரி மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மதுரை வாக்கு எண்ணிக்கை மையத்தில் சில பாதுகாப்பு குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. உதவி தேர்தல் அதிகாரி அறிவுறுத்தலின் பேரில் தாசில்தார் வாக்கு எண்ணும் மையத்திற்குள் சென்றார். தலைமை தேர்தல் அதிகாரி அனுப்பிய பரிந்துரை குறித்து முடிவெடுக்க 2 நாள் அவகாசம் வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.



    இந்நிலையில், வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதியின்றி பெண் அதிகாரி நுழைந்த விவகாரத்தில் மதுரை மாவட்ட தேர்தல் அதிகாரி நடராஜன் மற்றும் துணை தேர்தல் அதிகாரி, ஆட்சியரின் உதவியாளர், காவல் உதவி ஆணையர் ஆகியோரையும் மாற்ற வேண்டும்.

    உதவி காவல் ஆணையர் மற்றும் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும், வழக்கு தொடர்பாக தேர்தல் ஆணையம் பதிலளிக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அடுத்தகட்ட விசாரணை 30-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. #HighCourt #EC #MaduraiConstituency
    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த மதுரை வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பு குறைபாடுகள் இருந்தன என சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. #HighCourt #EC #MaduraiConstituency
    சென்னை:

    மதுரை பாராளுமன்ற தொகுதியில் கடந்த 18-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மதுரை அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டு இருந்தன.

    இதற்கிடையே, வாக்கு எண்ணிக்கை மையத்தில் தாசில்தார் நுழைந்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. வாக்கு எண்ணிக்கை மையத்தில் அத்துமீறி நுழைந்த அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தின.

    இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை மையத்தில் அதிகாரி நுழைந்தது குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக்கோரி மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மதுரை வாக்கு எண்ணிக்கை மையத்தில் சில பாதுகாப்பு குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. உதவி தேர்தல் அதிகாரி அறிவுறுத்தலின் பேரில் தாசில்தார் வாக்கு எண்ணும் மையத்திற்குள் சென்றார். தலைமை தேர்தல் அதிகாரி அனுப்பிய பரிந்துரை குறித்து முடிவெடுக்க 2 நாள் அவகாசம் வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. #HighCourt #EC #MaduraiConstituency
    மதுரை பாராளுமன்ற தொகுதியில் கடந்த தேர்தலை விட 2 சதவீதம் வாக்குப்பதிவு குறைந்தது. #LokSabhaElections2019
    மதுரை:

    17-வது பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகத்தில் நேற்று நடைபெற்றது. மதுரையில் நேற்று மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் மற்றும் கள்ளழகர் எதிர்சேவை இருந்ததால் வாக்குப்பதிவு தேதியை மாற்ற வேண்டும் என்று அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

    ஆனால் அவர்களது கோரிக்கையை ஏற்க மறுத்த தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவுக்கான நேரத்தை இரவு 8 மணி வரை நீடிப்பதாக அறிவித்தது.

    மதுரை பாராளுமன்றத் தொகுதியில் மதுரை கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, மத்தி, மேலூர் என 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன.

    மேலும் மதுரை மாவட்டத்தில் சோழவந்தான், உசிலம்பட்டி, திருப்பரங்குன்றம், திருமங்கலம் ஆகிய சட்டசபை தொகுதிகளும் உள்ளன. இந்த தொகுதிகள் தேனி, விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்டவை ஆகும்.

    வாக்குப்பதிவு தொடங்கியது முதலே மதுரை புறநகர் பகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக இருந்தது. ஆனால் தேரோட்டம் நடைபெற்ற மாசி வீதிகள் மற்றும் கள்ளழகர் எதிர்சேவை நடைபெற்ற பகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு மந்தமாகவே இருந்தது.

    மாலை 6 மணி அளவில் மதுரை பாராளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு 63 சதவீதமாக இருந்தது. இரவு 8 மணிக்கு வாக்குப் பதிவு முடிந்ததும் பதிவான வாக்குகள் 65.83 சதவீதமாக இருந்தது.

    அதாவது நீட்டிக்கப்பட்ட 2 மணி நேரத்தில் 2.83 சதவீத வாக்குகளே அதிகரித்து இருந்தது. கடந்த (2014) பாராளுமன்ற தேர்தலின்போது மதுரை பாராளுமன்ற தொகுதியில் 67.87 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.

    அதனை ஒப்பிடும்போது இந்த தேர்தலில் 2 சதவீத வாக்குகள் குறைவாகவே பதிவாகி உள்ளன. 2019-ம் ஆண்டு தேர்தலில் 77.47 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.

    அதனுடன் ஒப்பிடுகையில் 12 சதவீதம் குறைவு ஆகும். தேர்தல் வாக்குப் பதிவு குறித்து கலெக்டர் நடராஜன் கூறும்போது, கடந்த தேர்தலை விட 2 சதவீதம் குறைந்துள்ளது உண்மைதான்.

    இதனை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. திருவிழா, தேர்தல் என 2 முக்கிய நிகழ்வுகள் சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது என்றார்.

    சிவகங்கை பாராளுமன்றத் தொகுதியில் 70 சதவீதமும், விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் 72 சதவீதமும், ராமநாதபுரத்தில் 68.21 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளன. #LokSabhaElections2019
    மதுரை பாராளுமன்ற தொகுதியில் கடந்த தேர்தலை விட 2 சதவீதம் வாக்குப்பதிவு குறைந்தது. #Loksabhaelections2019
    மதுரை:

    17-வது பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகத்தில் நேற்று நடைபெற்றது. மதுரையில் நேற்று மீனாட்சி அம்மன் கோவில் சித்தரை தேரோட்டம் மற்றும் கள்ளழகர் எதிர்சேவை இருந்ததால் வாக்குப்பதிவு தேதியை மாற்ற வேண்டும் என்று அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

    ஆனால் அவர்களது கோரிக்கையை ஏற்க மறுத்த தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவுக்கான நேரத்தை இரவு 8 மணி வரை நீடிப்பதாக அறிவித்தது.

    மதுரை பாராளுமன்றத் தொகுதியில் மதுரை கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, மத்தி, மேலூர் என 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன.

    மேலும் மதுரை மாவட்டத்தில் சோழவந்தான், உசிலம்பட்டி, திருப்பரங்குன்றம், திருமங்கலம் ஆகிய சட்டசபை தொகுதிகளும் உள்ளன. இந்த தொகுதிகள் தேனி, விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்டவை ஆகும்.

    வாக்குப்பதிவு தொடங்கியது முதலே மதுரை புறநகர் பகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக இருந்தது. ஆனால் தேரோட்டம் நடைபெற்ற மாசி வீதிகள் மற்றும் கள்ளழகர் எதிர்சேவை நடைபெற்ற பகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு மந்தமாகவே இருந்தது.

    மாலை 6 மணி அளவில் மதுரை பாராளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு 63 சதவீதமாக இருந்தது. இரவு 8 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்ததும் பதிவான வாக்குகள் 65.83 சதவீதமாக இருந்தது.

    அதாவது நீட்டிக்கப்பட்ட 2 மணி நேரத்தில் 2.83 சதவீத வாக்குகளே அதிகரித்து இருந்தது. கடந்த (2014) பாராளுமன்ற தேர்தலின்போது மதுரை பாராளுமன்ற தொகுதியில் 67.87 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.

    அதனை ஒப்பிடும்போது இந்த தேர்தலில் 2 சதவீத வாக்குகள் குறைவாகவே பதிவாகி உள்ளன. 2019-ம் ஆண்டு தேர்தலில் 77.47 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.

    அதனுடன் ஒப்பிடுகையில் 12 சதவீதம் குறைவு ஆகும். தேர்தல் வாக்குப் பதிவு குறித்து கலெக்டர் நடராஜன் கூறும்போது, கடந்த தேர்தலை விட 2 சதவீதம் குறைந்துள்ளது உண்மைதான்.

    இதனை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. திருவிழா, தேர்தல் என 2 முக்கிய நிகழ்வுகள் சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது என்றார்.

    சிவகங்கை பாராளுமன்றத் தொகுதியில் 70 சதவீதமும், விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் 72 சதவீதமும், ராமநாதபுரத்தில் 68.21 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளன. #Loksabhaelections2019
    பாராளுமன்றத் தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 18ம் தேதி சித்திரைத் திருவிழா நடைபெறுவதால், மதுரை தொகுதியில் மட்டும் இரவு 8 மணி வரையில் வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. #MaduraiConstituency #LSPoll #CEO
    சென்னை:

    தமிழகத்தில் ஏப்ரல் 18-ம் தேதி ஒரே கட்டமாக பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. ஆனால் வாக்குப்பதிவு நடைபெறும் நாளான ஏப்ரல் 18-ம் தேதி மதுரையில் சித்திரைத் திருவிழா நடைபெறுவதால் வாக்குப்பதிவு வெகுவாகக் குறையும் என்று கூறி, தேர்தலை ஒத்திவைக்கும்படி அரசியல் கட்சிகள் வலியுறுத்தின. இது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கும் தொடரப்பட்டது. பின்னர் வழக்கு சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டுள்ளது.

    இந்நிலையில் தமிழகத்தில் வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்கும் வகையில், வாக்குப்பதிவு நேரத்தை நீட்டித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு உத்தரவிட்டுள்ளார்.



    மதுரையில் சித்திரை திருவிழா அன்று வாக்குப்பதிவு நடப்பதால், மதுரை பாராளுமன்றத் தொகுதியில் மட்டும் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவித்துள்ளார். எனவே மதுரை தொகுதியில் காலை 7 மணிக்குத் தொடங்கி, இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.

    மதுரை தவிர மற்ற தொகுதிகளிலும் வாக்குப்பதிவு ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது, காலை 7 மணி முதல் மாலை 5 மணிக்குப் பதில், மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். #MaduraiConstituency #LSPoll #CEO
    ×