search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "natarajan"

    • சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் விளையாடி வருகிறார்
    • யார்க்கர் பந்துகளை துல்லியமாக வீசி விக்கெட் எடுப்பதால் யார்க்கர் கிங் நடராஜன் என பெயர் எடுத்துள்ளார்

    இந்தியன் பிரீமியர் லீக்கில் (IPL) சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் விளையாடி வருகிறார். யார்க்கர் பந்துகளை துல்லியமாக வீசி விக்கெட் எடுப்பதால் யார்க்கர் கிங் நடராஜன் என அவர் பெயர் எடுத்துள்ளார்.

    இந்நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் நடராஜன் அந்த அணிக்காக இதுவரை 50 விக்கெட்டுகள் எடுத்து அசத்தியுள்ளார்.

    நேற்று சென்னை அணியுடன் ஹைதராபாத் அணி மோதியது. அப்போட்டியில் தான் நடராஜன் இந்த சாதனையை படைத்துள்ளார்.

    இதற்கு முன்னதாக நடைபெற்ற ஹைதராபாத் - கொல்கத்தா அணிக்கு இடையிலான போட்டியில் தனது 50வது ஐபிஎல் விக்கெட்டை நடராஜன் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதனிடையே, நேற்றைய போட்டியில் ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் தனது 50-வது ஐ.பி.எல் விக்கெட்டை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

    • பிறந்தநாள் பார்ட்டியின் போது நடிகர் அஜித்துக்கு நடராஜன் கேக் ஊட்டினார்
    • முக்கிய நடிகர்களுடன் கிரிக்கெட் வீரர் நடராஜன் நல்ல நட்பில் இருந்து வருகிறார்.

    இந்தியன் பிரீமியர் லீக்கில் (IPL) சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் விளையாடி வருகிறார். நாளை ( 5- ந்தேதி)  சென்னை சூப்பர் கிங்ஸ் உடனான போட்டிக்காக அவர் ஐதராபாத்தில் உள்ளார்.

    இந்நிலையில் இன்று நடராஜன் தனது 33-வது பிறந்தநாளை பிரபல நடிகர் அஜித் குமாருடன் கேக் வெட்டி ஐதராபாத்தில் கொண்டாடினார்.

    பிறந்தநாள் பார்ட்டியின் போது நடிகர் அஜித்துக்கு நடராஜன் கேக் ஊட்டினார். இருவரும் மாறி, மாறி கேக் ஊட்டி மகிழ்ந்தனர். பிறந்தநாள் பார்ட்டியின் போது அஜித் - நடராஜன் இருவரும் வெள்ளை நிற உடையில் இருந்தனர்.



    அப்போது இலங்கையைச் சேர்ந்த பிரபல சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனும் உடனிருந்தார். இந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களுடன் கிரிக்கெட் வீரர் நடராஜன் நல்ல நட்பில் இருந்து வருகிறார். சமீபத்தில் சிவகார்த்திகேயன், யோகி பாபு ஆகியோருடன் கிரிக்கெட் விளையாடிய புகைப்படங்கள் வெளியாகின.

    தற்போது பிரபல நடிகர் அஜித், நடராஜனின் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்து கொண்டது ரசிகர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • விளையாடும் அனைத்து அணிகளுமே பலமானவை என்பதால் சவால் நிறைந்ததாகவே இருக்கும்.
    • இருப்பினும் நம் மண்ணில் நடப்பதால் இந்திய அணி கோப்பையை வெல்ல வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

    சேலம்:

    சேலம் சீலநாயக்கன் பட்டியில் நடைபெற்ற தனியார் விழாவில் கலந்து கொண்ட வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்தாண்டு உலகக் கோப்பையை இந்திய அணி வெல்லும். விளையாடும் அனைத்து அணிகளுமே பலமானவை என்பதால் சவால் நிறைந்ததாகவே இருக்கும். இருப்பினும் நம் மண்ணில் நடப்பதால் இந்திய அணி கோப்பையை வெல்ல வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

    அணியில் இளம் வீரர்கள் பலருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இளம் வீரர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    அதேவேளையில் இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த வீரர்கள் இடம்பெறாதது மற்றவர்களை போலவே எனக்கும் பெரும் வருத்தமாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • கிரிக்கெட் வீரர்கள் தோனி, சச்சின் தெண்டுல்கர், கபில்தேவ் வாழ்க்கை படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றன.
    • தற்போது கிரிக்கெட் வீரர் நடராஜன் வாழ்க்கை கதையில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக குறப்படுகிறது.

    விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் வாழ்க்கை படங்கள் இந்தியில் தொடர்ந்து தயாராகி வருகின்றன. கிரிக்கெட் வீரர்கள் தோனி, சச்சின் தெண்டுல்கர் வாழ்க்கை படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றன. கிரிக்கெட் வீரர் கபில்தேவ் வாழ்க்கை 83 என்ற பெயரில் வந்தது. இந்திய மகளிர் கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் மிதாலிராஜ் வாழ்க்கை கதையில் டாப்சி நடித்துள்ளார்.

     

    நடராஜன் - சிவகார்த்திகேயன்

    நடராஜன் - சிவகார்த்திகேயன்

    இந்நிலையில் பிரபல தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனின் வாழ்க்கை கதையை சினிமா படமாக எடுக்கும் முயற்சிகள் நடக்கின்றன. இதில் நடராஜன் கதாபாத்திரத்தில் நடிக்க சிவகார்த்திகேயனுடன் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சேலம் சின்னப்பம்பட்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த நடராஜன் தமிழ்நாடு பிரீமியர் லீக் மற்றும் ஐ.பி.எல் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பாராட்டு பெற்றார். ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணியிலும் இடம் பெற்றார். நடராஜன் ஆட்டத்தை ஏற்கனவே சிவகார்த்திகேயன் பாராட்டி உள்ளார். எனவே அவரது வாழ்க்கை கதையில் சிவகார்த்திகேயன் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அருண்ராஜா காமராஜ் இயக்கிய கனா படத்தில் சிவகார்த்திகேயன் கிரிக்கெட் பயிற்சியாளராக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    வாக்கு எண்ணிக்கை மையத்தில் அதிகாரி நுழைந்த விவகாரத்தில் தன்னை மாற்றியது தொடர்பாக, மதுரை மாவட்ட முன்னாள் ஆட்சியர் நடராஜன் ஐகோர்ட்டில் முறையீடு செய்துள்ளார். #HighCourt #EC #MaduraiConstituency
    சென்னை:

    மதுரை பாராளுமன்ற தொகுதியில் கடந்த 18-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மதுரை அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டு இருந்தன.

    இதற்கிடையே, வாக்கு எண்ணிக்கை மையத்தில் தாசில்தார் நுழைந்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. வாக்கு எண்ணிக்கை மையத்தில் அத்துமீறி நுழைந்த அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தின.

    வாக்கு எண்ணிக்கை மையத்தில் அதிகாரி நுழைந்தது குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக்கோரி மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    வழக்கு விசாரணையின்போது, மதுரை வாக்கு எண்ணிக்கை மையத்தில் சில பாதுகாப்பு குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. உதவி தேர்தல் அதிகாரி அறிவுறுத்தலின் பேரில் தாசில்தார் வாக்கு எண்ணும் மையத்திற்குள் சென்றார். தலைமை தேர்தல் அதிகாரி அனுப்பிய பரிந்துரை குறித்து முடிவெடுக்க 2 நாள் அவகாசம் வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

    இதற்கிடையே, வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதியின்றி பெண் அதிகாரி நுழைந்த விவகாரத்தில் மதுரை மாவட்ட தேர்தல் அதிகாரி நடராஜன் மற்றும் துணை தேர்தல் அதிகாரி, ஆட்சியரின் உதவியாளர், காவல் உதவி ஆணையர் ஆகியோரையும் மாற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை மையத்தில் அதிகாரி நுழைந்த விவகாரத்தில் தன்னை மாற்றியது தொடர்பாக, மதுரை மாவட்ட முன்னாள் ஆட்சியர் நடராஜன் ஐகோர்ட்டில் இன்று மேல் முறையீடு செய்துள்ளார். அந்த மனுவில், தனது விளக்கத்தை கேட்காமல் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார். #HighCourt #EC #MaduraiConstituency
    சதுரங்க வேட்டை மூலம் மிகவும் பிரபலமான நடிகர் நட்டி என்னும் நட்ராஜன், அஜித் தவறவிட்ட தலைப்பை தன் வசமாக்கி வைத்திருக்கிறார். #Natty #Ajith
    பிரபல ஒளிப்பதிவாளரான நட்டி நட்ராஜன், ‘சதுரங்க வேட்டை’ படம் மூலம் மிகவும் பிரபலமானார். இவரின் எதார்த்தமான நடிப்பு ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. பின்னர், ‘எங்கிட்ட மோதாதே’, ‘போங்கு’, ‘ரிச்சி’ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

    தற்போது நட்டி புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். அந்த படத்திற்கு ‘காட் பாதர்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது சென்னையில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் நடந்து வருகிறது.

    ‘காட் பாதர்’ என்ற தலைப்பு, அஜித் நடிப்பில் உருவான படத்திற்கு முதலில் வைக்கப்பட்டது. வரி விலக்கு காரணமாக அந்த திரைப்படம் ‘வரலாறு’ என்று பெயர் மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
    ×