search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CPM"

    • தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கு திண்டுக்கல், மதுரை என 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
    • கடந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மதுரை, கோவையில் போட்டியிட்டு வெற்றி பெற்றது.

    சென்னை:

    தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு திண்டுக்கல், மதுரை ஆகிய இரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மதுரை மற்றும் கோவையில் போட்டியிட்டு வெற்றி பெற்று இருந்தது.

    இந்த முறை கோவை தொகுதியை தி.மு.க. தனக்கு வைத்துக்கொண்டு அதற்கு பதில் திண்டுக்கல் தொகுதியைக் கொடுத்துள்ளது.

    திண்டுக்கல் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 35 ஆண்டுக்கு பிறகு தி.மு.க. கூட்டணியுடன் இணைந்து மீண்டும் போட்டியிட உள்ளது.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டனர்.

    அதன்படி, திண்டுக்கல் தொகுதியில் மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம், மதுரையில் சு.வெங்கடேசன் மீண்டும் போட்டியிடுகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மதுக்கூர் ராமலிங்கம் சிறந்த எழுத்தாளர், சிறந்த பேச்சாளர் என்பதால் திண்டுக்கல் தொகுதி மக்களை அதிகம் கவர வாய்ப்புள்ளது.
    • மதுக்கூர் ராமலிங்கத்தை திண்டுக்கல் தொகுதியில் வேட்பாளராக நிறுத்த பிரகாசமாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    சென்னை:

    தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிக்கு திண்டுக்கல், மதுரை ஆகிய இரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மதுரை மற்றும் கோவையில் போட்டியிட்டு வெற்றி பெற்று இருந்தது.

    இந்த முறை கோவை தொகுதியை தி.மு.க. தனக்கு வைத்துக்கொண்டு அதற்கு பதில் திண்டுக்கல் தொகுதியை கொடுத்து இருக்கிறது.

    திண்டுக்கல் தொகுதியில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி 35 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு.க. கூட்டணியுடன் இணைந்து மீண்டும் போட்டியிட உள்ளது. 1977-ம் ஆண்டு அந்த தொகுதியில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்டது. அப்போது அ.தி.மு.க. வேட்பாளரிடம் கம்யூனிஸ்டு வேட்பாளர் தோல்வியை தழுவினார்.

    1989-ம் ஆண்டு மீண்டும் போட்டியிட்ட போது மீண்டும் தி.மு.க. கூட்டணியில் களம் இறங்கிய கம்யூனிஸ்டுக்கு தோல்வியே கிடைத்தது. கடந்த 2014-ம் ஆண்டு அந்த தொகுதியில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு போட்டியிட்டு 1.81 சதவீத வாக்குகளே பெற்றது.

    இந்த நிலையில் தற்போது தி.மு.க. கூட்டணியில் 4-வது முறையாக திண்டுக்கல் தொகுதியில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி போட்டியிட உள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பிரமாண்டமான வெற்றி பெற்று இருந்தார்.

    எனவே இந்த தடவை மிக எளிதான வெற்றியை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி பெற முடியும் என்று தி.மு.க. கூட்டணி தலைவர்கள் நம்புகிறார்கள். அதற்கு ஏற்ப வேட்பாளர்களை தேர்வு செய்ய மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

    திண்டுக்கல் தொகுதியில் இதுவரை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி வெற்றி பெற்றது இல்லை. ஆனால் திண்டுக்கல் சட்டசபை தொகுதியில் 7 தடவை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. எனவே இந்த தடவை நிச்சயம் வெற்றியை அறுவடை செய்ய முடியும் என்ற நம்பிக்கையில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் உள்ளனர்.

    இதற்காக 3 பேர் பெயரை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் வேட்பாளராக தேர்வு செய்து ஆய்வு நடத்தி வருகிறார்கள். மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் என்.பாண்டிக்கு வாய்ப்பு கொடுக்கலாமா? என்று ஆலோசிக்கப்பட்டது.

    இதற்கிடையே தீக்கதிர் பத்திரிகை ஆசிரியர் மதுக்கூர் ராமலிங்கத்தை வேட்பாளராக நிறுத்தலாமா? என்று பரிசீலனை செய்யப்படுகிறது. மதுக்கூர் ராமலிங்கம் சிறந்த எழுத்தாளர், சிறந்த பேச்சாளர் என்பதால் திண்டுக்கல் தொகுதி மக்களை அதிகம் கவர வாய்ப்புள்ளது. எனவே மதுக்கூர் ராமலிங்கத்தை திண்டுக்கல் தொகுதியில் வேட்பாளராக நிறுத்த பிரகாசமாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    மதுரை தொகுதியில் தற்போது சு.வெங்கடேசன் எம்.பி.யாக உள்ளார். அவரையே மீண்டும் மதுரை வேட்பாளராக நிறுத்தலாமா? என்று மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மூத்த தலைவர்கள் ஆலோசித்து வருகிறார்கள்.

    கடந்த 5 ஆண்டுகளில் சு.வெங்கடேசன் எம்.பி. மதுரை தொகுதிக்கு மிக சிறப்பான சேவை செய்திருப்பதாக தி.மு.க. தலைவர்கள் பாராட்டுகிறார்கள். குறிப்பாக முக்கிய பிரச்சனைகளை உடனுக்குடன் வெளியில் தெரிவித்து அடித்தட்டு மக்களிடம் கொண்டு சேர்ப்பதாக சு.வெங்கடேசனுக்கு நல்ல பெயர் உள்ளது.

    அவரையே மீண்டும் களம் இறக்குமாறு தி.மு.க. தரப்பில் கூறப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

    • பணம் கொடுக்கல் வாங்கலில் இளையராஜா தன்னை ஜாதிப்பெயர் சொல்லி திட்டியதாக குணசேகரன் சின்னமனூர் போலீசில் புகார் அளித்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து இளையராஜா மற்றும் அவரது உறவினரான புரட்சிகர கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் செல்வேந்திரன் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் தேவாரம் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் குணசேகரன். இவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தேனி மாவட்ட செயலாளர் இளையராஜா என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை இருந்து வந்துள்ளது.

    இதனால் இவர்களுக்கு இடையே அடிக்கடி வாய் தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்றும் பணம் கொடுக்கல் வாங்கலில் இளையராஜா தன்னை ஜாதிப்பெயர் சொல்லி திட்டியதாக குணசேகரன் சின்னமனூர் போலீசில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இளையராஜா மற்றும் அவரது உறவினரான புரட்சிகர கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் செல்வேந்திரன் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பகிரங்கமாக பகிர்ந்து கொள்ள முடியாத அளவுக்கு பேசிய அரசியலின் மர்மம் என்ன? என சிபிஎம் கேள்வி
    • அண்ணாமலை ஆளுநருக்கு வக்காலத்து வாங்குவது எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல் உள்ளது.

    சென்னை:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக ஆளுநரை ரஜினிகாந்த் சந்தித்துள்ளார். அவர் யாரை வேண்டுமானாலும் சந்தித்து பேச உரிமையுள்ளது. அத்தகைய சந்திப்பை சிபிஐ (எம்) கேள்வியெழுப்பவில்லை. அதேசமயம், "நாங்கள் அரசியல் பேசினோம்; ஆனால் அதை உங்களிடம் பகிர்ந்து கொள்ள முடியாது" என ரஜினிகாந்த் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். "பகிரங்கமாக பகிர்ந்து கொள்ள முடியாத" அளவுக்கு பேசிய அரசியலின் மர்மம் என்ன? ஆளுநர் அரசியல்வாதியாகவும், ஆளுநர் மாளிகையை அரசியல் கட்சி அலுவலகமாகவும் மாற்றுவது அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என்பதையே சிபிஐ (எம்) கேள்விக்குள்ளாக்கியது.

    இக்கேள்விக்கு ஆளுநரோ, ஆளுநர் அலுவலகமோ பதில் அளித்திருக்க வேண்டுமே தவிர, முந்திரிக்கொட்டையைப் போல் முந்திக்கொண்டு அண்ணாமலை பேட்டியளிக்க எந்த அவசியமுமில்லை. அண்ணாமலை ஒன்றும் ஆளுநரின் செயலாளரோ, செய்தி தொடர்பாளரோ அல்ல; அப்படியிருக்கும் போது வரிந்துகட்டிக் கொண்டு அண்ணாமலை ஆளுநருக்கு வக்காலத்து வாங்குவது "எங்கப்பன் குதிருக்குள் இல்லை" என்பது போல் உள்ளது.

    மாநில அரசின் உரிமைகளை பறிப்பது, மத்திய அரசின் கொள்கைகளை நேரடியாக தமிழ்நாட்டில் நுழைப்பது, மாநில அரசுக்கு தெரியாமலேயே பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை நடத்துவது, மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை ஏற்க மறுத்து தமிழ்நாட்டிற்கு ஏற்ற ஒரு கல்விக்கொள்கையை உருவாக்க தமிழக அரசு ஆலோசனைக்குழு அமைத்திருக்கிற நிலையில், புதிய கல்விக்கொள்கையை நிறைவேற்றுவதற்கு பல்கலைக்கழக துணை வேந்தர்கள், பேராசிரியர்கள் கூட்டத்தை நடத்துவது போன்ற காரியங்களை தமிழக ஆளுநர் செய்து வருகிறார்.

    ஆளுநர் என்ற எல்லையைத் தாண்டி ஆர்.எஸ்.எஸ்.சினுடைய கொள்கைகளையும், கோட்பாடுகளையும் மேடைகளில் பிரச்சாரம் செய்து வருகிறார். அவரின் இத்தகைய நடவடிக்கைகள் ஏற்கனவே கடும் விமர்சனத்தை தமிழகத்திலேயே உருவாக்கியுள்ளன. இந்த சூழலில் ஆளுநர், ரஜினிகாந்திடம் பகிர்ந்து கொள்ள முடியாத அரசியல் பேசியது அரசியல் சட்ட நெறிமுறைகளுக்கு உட்பட்டது அல்ல என்பது சாதாரண குடிமகனுக்கும் தெரிந்ததாகும். ஆனால், ஐ.பி.எஸ். அண்ணாமலைக்கு இந்த அடிப்படை விசயம் புரியாமல் போனது ஏன்? .

    தேர்தல் பத்திரங்கள் வழியாகவும், கார்ப்பரேட் கம்பெனிகளில் சுரண்டல்களில் பங்குபெற்றதன் வழியாகவும் பல்லாயிரம் கோடிகளை சுருட்டி அதைவைத்து தமிழ்நாட்டில் பாஜகவுக்கு உயிரூட்ட அண்ணாமலை மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் படுதோல்வியடைந்துள்ளன. இந்நிலையில் ஆளுநர் அலுவலகத்தை தங்கள் கட்சி அலுவலகமாக மாற்றுகிற முயற்சியும் பகிரங்கமானதன் விளைவே அண்ணாமலையின் ஆதங்கத்திற்கு காரணமாகும்.

    பாஜகவைப் போல மன்னிப்பு கடிதம் சுமந்த பாரம்பரியத்தில் வந்தவர்கள் அல்ல கம்யூனிஸ்ட்டுகள், சுதந்திரப்போராட்டத்திற்கு துரோகமிழைத்த பாஜகவின் தலைவராக இருந்து கொண்டு 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நேரத்தில் பேசுவதற்கு விசயமில்லாத சூழ்நிலையில், ஆளுநருக்கு வக்காலத்து வாங்கி கம்யூனிஸ்ட்டுகள் மீது அண்ணாமலை தாக்குதல் தொடுத்துள்ளார்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எந்த காலத்திலும் யாருக்கும் 'பி' டீம் ஆக இருந்ததில்லை. ஆனால், ஆர்.எஸ்.எஸ். தோன்றிய காலம் முதல் ஆங்கிலேயர்களுக்கு 'பீ' டீம் ஆகவும், ஆட்சிக்கு வந்த பிறகு கார்ப்பரேட்டுகளின் 'பீ' டீம் ஆகவும் செயல்படுவதற்காக மட்டுமே அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறது பாஜக. அதன் தலைவராக இருக்கும் அண்ணாமலைக்கு கம்யூனிஸ்ட்டுகளை விமர்சிப்பதற்கு எவ்வித அருகதையும் இல்லை. மக்கள் செல்வாக்கை பெற முடியாமல் புறக்கடை வழியாக ஆளுநர் மூலம் அரசியல் செய்ய முயற்சிக்கும் பாஜகவின் எண்ணம் பகல் கனவாகவே முடியும்.

    இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் கூறி உள்ளார்.

    • நாட்டில் உள்ள இளைஞர்கள் பாஜக அலுவலகத்தை பாதுகாக்கும் காவலர்கள் அல்ல.
    • இளைஞர்களின் சக்தி இந்த நாட்டிற்கு சேவை செய்ய விரும்புகிறது.

    அக்னிபாத் திட்டத்தில் பணியாற்றும் வீரர்களுக்கு பணி நிறைவுக்கு பிறகு, பாஜக அலுவலகங்களில் பாதுகாவலர்கள் பணிக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்று, அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய் வர்கியா தெரிவித்திருந்தார்.

    அவரது இந்த கருத்து சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதையடுத்து கைலாஷ் விஜய் வர்கியாவுக்கு, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்பட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

    கைலாஷ் விஜய் வர்கியாவின் இந்த கருத்து பாஜகவின் உண்மையான மனநிலையை அம்பலப்படுத்துகிறது என திரிணாமுல் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குணால் கோஷ் தெரிவித்துள்ளார். நாட்டில் உள்ள இளைஞர்கள் பாஜக அலுவலகத்தை பாதுகாக்கும் காவலர்கள் அல்ல என்றும், மோடி அரசை போல் அல்லாமல் இளைஞர்களின் சக்தி இந்த நாட்டிற்கு சேவை செய்ய விரும்புகிறது என்றும் திரிணாமுல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

    விஜயவர்கியா, தேசத்தின் இளம் ஆர்வமுள்ள ராணுவ வீரர்களை அவமதித்துள்ளதாகவும், நாட்டைக் காக்கும் ஆயுதப் படைகளின் வீரத்தை சிறுமைப்படுத்தி விட்டதாகவும் மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் மத்தியக் குழு உறுப்பினர் சுஜன் சக்ரவர்த்தி, தெரிவித்து உள்ளார். விஜயவர்கியாவின் கருத்து குறித்து பாஜக உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

    அக்னி வீரர்கள் பாஜக அலுவலங்களில் வாட்ச்மேனாக மாறும் நிலை குறித்து அஞ்சுவதாக மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. இதைப்போல் விஜயவர்கியாவின் கருத்திற்கு டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால், பாஜக எம்.பி. வருண்காந்தி உள்ளிட்டோரும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

    ஆனால் தனது கருத்துகளை காங்கிரஸ் கட்சி திரித்து கூறுவதாக கைலாஷ் விஜய் வர்கியா குற்றம் சாட்டியுள்ளார். ராணுவ பணிகளை முடித்தபின் எந்த துறையிலும் அக்னி வீரர்களை பணியில் அமர்த்த முடியும் என்பதையே தான் கூறியதாகவும் அவர் விளக்கம் அளித்து உள்ளார்.

    மதுரை பாராளுமன்றத் தொகுதியில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசன் 90 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
    மதுரை:

    பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. தமிழகம் மற்றும் புதுவையில் தேர்தல் நடைபெற்ற 39 பாராளுமன்றத் தொகுதிகளில் திமுக கூட்டணி பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.

    மதுரை தொகுதியில் 11 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசன் 2,69,382 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார். அடுத்த இடத்தில் அதிமுக வேட்பாளர் ராஜ் சத்தியன் இருந்தார். அவர் 1,80,147 வாக்குகள் பெற்றிருந்தார்.

    மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் அழகர் 51 ஆயிரத்து 310 வாக்குகளும், அமமுக வேட்பாளர் டேவிட் அண்ணாதுரை 44 ஆயிரத்து 900 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பாண்டியம்மாள் 25 ஆயிரத்து 973 வாக்குகளும் பெற்றிருந்தனர்.
    பாராளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் 2 தொகுதிகளின் வேட்பாளர்களும் இன்று அறிவிக்கப்பட்டனர். #LSPolls #CPM #DMK
    சென்னை:

    தமிழகம் மற்றும் புதுவையில் பாராளுமன்றத் தேர்தலுக்கான திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளும், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சிக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டது. மீதமுள்ள 20 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது.

    இந்நிலையில், திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மதியம் வெளியிட்டார். அப்போது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ராமநாதபுரம் தொகுதியில் நவாஸ் கனி போட்டியிடுவார் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அறிவித்துள்ளது.

    நவாஸ்கனி

    இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.



    அப்போது, திமுக கூட்டணியில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கோவை தொகுதியில் பி.ஆர்.நடராஜன் மற்றும் மதுரையில் எழுத்தாளர் சு.வெங்கடேசன் போட்டியிடுவார் என அறிவித்தார்.  #LSPolls #CPM #DMK
    பாராளுமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக, சென்னை அண்ணா அறிவாலயத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியுடன் இன்று தி.மு.க. முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. #LSPolls #DMKAlliance
    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலுக்காக தி.மு.க. அமைத்துள்ள கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

    தி.மு.க.வுடன் காங்கிரஸ் கட்சி நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து 10 தொகுதிகள் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.

    அடுத்த கட்டமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியுடன் இன்று தி.மு.க. பேச்சுவார்த்தை நடத்தியது. இதற்காக சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு இன்று காலை 10.30 மணிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ. சவுந்தரராஜன், மத்திய குழு உறுப்பினர் சம்பத் ஆகியோர் வந்தனர்.

    இவர்களை தி.மு.க. தலைமை நிலைய செயலாளர்கள் பூச்சி முருகன், துறைமுகம் காஜா ஆகியோர் வரவேற்று அழைத்து சென்றனர்.

    அறிவாலயத்தில் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை குழுவில் இடம்பெற்றுள்ள தி.மு.க. பொருளாளர் துரைமுருகன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணை பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி, முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, எ.வ.வேலு, கே.என்.நேரு ஆகியோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.



    இந்த பேச்சுவார்த்தையின்போது, திருப்பூர், கன்னியாகுமரி தொகுதிகளில் போட்டியிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு விரும்புவதாக தெரிவித்தனர். இந்த தொகுதியை ஒதுக்க முடியாவிட்டால் மதுரை, கோவை தொகுதிகளை ஒதுக்குமாறு கோரிக்கை வைத்தனர். இந்த முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிந்ததும் வெளியே வந்த மார்க்சிஸ்ட்  மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இன்று நடந்த முதற்கட்ட பேச்சுவார்த்தை திருப்தியாக இருந்ததாகவும், மற்ற கூட்டணி கட்சிகளுடன் கலந்து பேசிவிட்டு, தங்களுக்கு உரிய தொகுதிகளை திமுக தலைமை அறிவிக்கும் என்றும் கூறினார்.

    இன்று பிற்பகல் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அறிவாலயம் வந்து கூட்டணி பேச்சு நடத்துகிறார். மாலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் அறிவாலயம் வந்து தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அறிவாலய நிர்வாகிகள் தெரிவித்தனர். #LSPolls #DMKAlliance
    16-வது மக்களவையின் கடைசி அலுவல் தினமும் நேற்று என்பதால் உறுப்பினர்கள் அனைவரும் உணர்வுப்பூர்வமாக காணப்பட்டனர். அவர்கள் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துகள் கூறி பிரியா விடை பெற்றனர். #LokSabhaadjourns #RajyaSabhaadjourns
    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. 16-வது மக்களவையின் கடைசி அலுவல் தினமும் நேற்று என்பதால் உறுப்பினர்கள் அனைவரும் உணர்வுப்பூர்வமாக காணப்பட்டனர். அவர்கள் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துகள் கூறி பிரியா விடை பெற்றனர்.

    இதையொட்டி கட்சி தலைவர்கள் உரையாற்றினர். இதில் சமாஜ்வாடி தலைவரும், உத்தரபிரதேசத்தின் முன்னாள் முதல்-மந்திரியுமான முலாயம் சிங் யாதவ் பேசும்போது, 16-வது மக்களவையில் இடம்பெற்றிருக்கும் அனைத்து உறுப்பினர்களும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என வாழ்த்தினார்.

    மேலும் அனைவரையும் அரவணைத்து செல்லும் மோடியே மீண்டும் பிரதமராக வேண்டும் எனவும் மகிழ்ச்சியுடன் வாழ்த்து கூறினார். இதை பிரதமர் மோடி இருகரம் கூப்பி ஏற்றுக்கொண்டார். அப்போது பா.ஜனதா உறுப்பினர்கள் ஜெய் ஸ்ரீராம் எனக்கூறி கோஷமிட்டனர்.

    இதைப்போல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைவர் கருணாகரன் பேசும்போது, சபாநாயகர் சுமித்ரா மகாஜனை பாராட்டினார். கடந்த 5 ஆண்டுகளாக புன்சிரிப்புடன் சபையை நடத்தியதாக கூறிய அவர், சில நேரங்களில் கோபப்பட்டாலும் தனது சிரிப்பை வெளிக்காட்ட தவறவில்லை எனவும் தெரிவித்தார்.

    தெலுங்குதேசம் கட்சி தலைவர் ஜிதேந்தர் ரெட்டி தனது உரையில், பா.ஜனதாவை விமர்சித்தார். ‘உங்கள் (பா.ஜனதா) ஆட்சியின் தொடக்கத்தில் உங்கள் நண்பன் யார்? எதிரி யார்? என்பதை நீங்கள் அறியவில்லை’ என்று தெரிவித்தார். கடந்த 2014-ம் ஆண்டு பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து இருந்த தெலுங்குதேசம், பின்னர் அந்த கூட்டணியில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது. #LokSabhaadjourns  #RajyaSabhaadjourns
    கேரளாவில் கடந்த 2008-ம் ஆண்டு பா.ஜ.க. கட்சியில் இணைந்ததற்காக ஆட்டோ ஓட்டுனர் கொல்லப்பட்ட வழக்கில், மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. #Kerala
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கன்னூர் மாவட்டம் தலச்சேரி பகுதியில் ஆட்டோ ஓட்டுனராக இருந்தவர் சித்தாரிபரம்பில் மகேஷ். இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இருந்துவந்தார். இதையடுத்து சில கருத்து வேறுபாடுகள் காரணமாக இவர் 2008-ம் ஆண்டு அக்கட்சியில் இருந்து விலகி, பா.ஜ.க.வில் இணைந்தார்.

    இதனால் ஆத்திரமடைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், அவர் தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்தனர். 2008-ம் ஆண்டு நடைபெற்ற இந்த கொலை வழக்கு தலச்சேரி நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.

    இந்த வழக்கு தொடர்பான விசாரணையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 11 பேரை குற்றவாளிகள் என ஏற்கனவே நீதிமன்றம் அறிவித்திருந்தது.

    இந்நிலையில், குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தலச்சேரி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. #Kerala
    இந்தியா மேம்படவும், மக்கள் வளம் பெறவும் மத்தியில் பா.ஜ.க. அரசும், மாநிலத்தில் பினாமி அரசும் அகற்றப்பட வேண்டும் என்று சீதாராம் யெச்சூரி கூறியுள்ளார். #SitaramYechury #BJP

    திருச்சி:

    தமிழ்நாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மாநிலம் தழுவிய அளவில் ‘போராடுவோம் தமிழகமே’ என்ற தலைப்பில் பிரசார பயணம் மேற்கொண்டனர்.

    இந்த பயணம் திருச்சியில் நிறைவடைந்தது. அதைத்தொடர்ந்து இரவு திருச்சி தென்னூர் உழவர்சந்தை திடலில் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மத்திய கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட செயலாளர் ஆர்.ராஜா வரவேற்று பேசினார்.

    இதில் சிறப்பு அழைப்பாளராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    நாட்டுக்கு தேவை தலைவர்கள் அல்ல, நல்ல கொள்கைதான். அடுத்து வருகிற தேர்தலில் மோடி வருவாரா? அல்லது எந்த தலைவர் வருவார் என யோசிக்காமல் எந்த கொள்கையை அரியணை ஏற்ற வேண்டும் என்பதைத்தான் மக்கள் சிந்திக்க வேண்டும்.

    ஜி.எஸ்.டி. வரி முறையை அமல்படுத்தியதால் சிறு, குறு தொழில்கள் பாழ்பட்டு விட்டது. கோடிக்கணக்கானவர்களின் வேலைவாய்ப்பு பறிக்கப்பட்டு விட்டது. இதை மாற்ற மத்திய அரசை ஆட்சியில் இருந்து அகற்றி விட்டு, மாற்றுக்கொள்கையுடையவர்களை ஆட்சியில் அமர்த்த வேண்டும்.

    தமிழகத்தில் 18 எம்.எல். ஏ.க்கள் தகுதி நீக்கம் செல்லுமா? செல்லாதா? என்பதில் 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை அளித்துள்ளனர். இறுதி தீர்ப்பு அடிப்படையில் தான் தமிழகத்தில் உள்ள ஆட்சி நீடிக்குமா? நீடிக்காதா? என சொல்ல முடியும். தமிழக அரசை ‘ரிமோட்’ மூலம் மோடி இயக்குகிறார்.

     


    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது காவல் துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தி 13 பேரை கொன்றிருக்கிறார்கள். காவலர்கள் கையாண்ட துப்பாக்கி சைலன்சர் வகை துப்பாக்கி ஆகும். அதாவது சுட்டால் சத்தம் வராது. போராட்ட பதற்றத்தில் இருந்து கூட்டத்தை கலைப்பதற்காக துப்பாக்கிச்சூடு நடத்தப்படவில்லை. சாதாரண மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்துவது என்பது, உயர்மட்ட உத்தரவு இல்லாமல் நடந்திருக்காது.

    துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு முன்னால் ஒரு எச்சரிக்கைகூட விடப்படவில்லை. ஒரு வேளை இதில் மத்திய ஆட்சியாளருக்கு தொடர்பு இருக்குமேயானால், உச்சநீதி மன்ற நீதிபதிகள் மூலம் ஆழமாக விசாரணை நடத்தப்பட்டால் மட்டுமே உண்மையை கண்டறிய முடியும்.

    வங்கிகளின் வாராக்கடன் தொகையான ரூ.11.5 லட்சம் கோடியானது பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் வாங்கியது தான். அந்த தொகையை வட்டியுடன் திரும்ப பெற்றாலே நாட்டில் கல்வி, ஆரோக்கியம் மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்கமுடியும். இந்தியாவில் வலுவான போராட்டம் மூலமாக தான் மாற்றத்தை உருவாக்க முடியும்.

    இந்தியா மேம்படவும், மக்கள் வளம்பெறவும் பாரதிய ஜனதா அரசும், மாநில பினாமி அரசும் அகற்றப்பட வேண்டும். சாதீய கொடுமைகளுக்கு எதிராக போராட்டங்களை வலுப்படுத்த அனைவரும் ஓரணியில் திகழ வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேசுகையில், தமிழகத்தில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து வருகிற ஜூலை 2-ந்தேதி ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும். மறுநாள் ஜூலை 3-ந்தேதி சேலத்தில் பெண்கள் சிறப்பு மாநாடு நடத்தப்படும் என்றார்.

    கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர் வாசுகி ஆகியோரும் பேசினர். கூட்டத்தில் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ. சவுந்தரராஜன், திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் ஜெயசீலன் உள்பட பலர் கலந்து கொண்டனர். #SitaramYechury #BJP

    ×