search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Balakrishnan"

    • இந்தியாவில் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இதுவாகும்.
    • இட ஒதுக்கீடு கொள்கையை நிராகரிக்கும் பா.ஜ.க.வோடு பா.ம.க. கூட்டு வைத்திருப்பது ஒவ்வாத சந்தர்ப்பவாத கூட்டணியாகும்.

    பழனி:

    திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி வேட்பாளரை ஆதரித்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பழனியில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    மக்கள் வாங்க முடியாத அளவுக்கு அனைத்து பொருட்களின் விலைவாசியும் அதிகரித்துள்ளது. வேலை இல்லா திண்டாட்டம் இந்தியா முழுவதும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வழி தவறி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    ஆனால் பா.ஜ.க. தனது தேர்தல் அறிக்கையில் இதைப்பற்றியெல்லாம் ஒன்றும் குறிப்பிடவில்லை. ஒரே நாடு ஒரே தேர்தல், பொது சிவில் சட்டம் ஆகியவை நாட்டுக்கு மிகுந்த ஆபத்தானது. நெல்லுக்கு நல்ல விலை விவசாயிகள் கேட்கிறார்கள். ஜி.எஸ்.டி. மறு சீரமைப்பு செய்யப்பட வேண்டும். இது குறித்து பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் எதுவும் சொல்லவில்லை. 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பை வழங்குவோம் என்றார்கள். அதனை நிறைவேற்றவில்லை.

    ஆனால் பா.ஜ.க. கடந்த ஆட்சியில் அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி விட்டதாக அண்ணாமலை கூசாமல் பொய் சொல்லி வருகிறார். தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியா கூட்டணி நாடு முழுவதும் மகத்தான வெற்றி பெறும்.

    பிரசாரத்துக்கு செல்லும் இடங்களில் எல்லாம் மோடி ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர மக்கள் ஆவலுடன் இருப்பதை பார்க்க முடிகிறது. இந்த தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றால் நாட்டின் அரசியல் சுதந்திரம் பாதுகாப்பாக இருக்காது.

    இந்தியாவில் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இதுவாகும். ஆனால் எடப்பாடி பழனிசாமி மோடி அரசைப்பற்றி எந்த விமர்சனமோ, கேள்வியோ கேட்பதில்லை. அந்த அளவுக்கு மோடியை கண்டு அச்சப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி முதல்வர் மு.க.ஸ்டாலினை பிரதமர் வேட்பாளராக நினைத்து அவரை மட்டுமே குறி வைத்து பேசி வருகிறார்.

    இட ஒதுக்கீடு கொள்கையை நிராகரிக்கும் பா.ஜ.க.வோடு பா.ம.க. கூட்டு வைத்திருப்பது ஒவ்வாத சந்தர்ப்பவாத கூட்டணியாகும். இதற்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள். ஜூன் 4-ந் தேதிக்கு பிறகு அ.தி.மு.க. காணாமல் போய் விடும். டி.டி.வி. தினகரன் பக்கம் தொண்டர்கள் வந்து விடுவார்கள் என அண்ணாமலை பேசுகிறார். அ.தி.மு.க. தலைவர் யார் என்பதை தீர்மானிக்கும் அதிகாரத்தை அண்ணாமலைக்கு அ.தி.மு.க.வே கொடுத்து விட்டது. ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, டி.டி.வி. தினகரன் உள்பட அனைவருமே அண்ணாமலைக்கு காவடி தூக்கியதன் விளைவு இன்றைக்கு அவர்களை ஏறி மிதிக்கிறார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ஹரிஷ் கல்யாண் நடிக்கும் திரைப்படம் ‘பார்க்கிங்’.
    • இப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.

    பொறியாளன், வில் அம்பு, பியார் பிரேமா காதல், தாராள பிரபு உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஹரிஷ் கல்யாண் இவர் தற்போது ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் 'பார்க்கிங்' படத்தில் நடிக்கிறார். திரில்லர் ட்ராமாவான 'பார்க்கிங்' திரைப்படத்தை 'பலூன்' பட இயக்குனர் கே.எஸ்.சினிஷ், சோல்ஜர்ஸ் ஃபேக்டரி சார்பில் தயாரிக்கிறார். மேலும் பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கிறது.


    இப்படத்தின் கதாநாயகியாக இந்துஜா நடிக்கிறார். மேலும் எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரன், பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்க, ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

    இந்நிலையில், இப்படத்தின் புதிய பாடலான 'செல்ல கல்லியே' பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.




    • காவிரியில் தண்ணீர் திறந்து விடக்கோரி டெல்டா மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும்.
    • பா.ஜ.க.வை விட்டு பிரிந்ததால் அ.தி.மு.க நல்ல கட்சி என சொல்ல மாட்டோம்.

    கோவை:

    கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    1992-ம் ஆண்டு நடந்த வாச்சாத்தி வழக்கை 30 ஆண்டுகளுக்கு மேலாக நடத்திய பெருமை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிக்கும், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்திற்கும் உண்டு.

    வனத்துறை, காவல் துறை, வருவாய் துறை அதிகாரிகளுக்கு தண்டனையை உறுதி செய்த உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை முழு மனதோடு வரவேற்கிறோம்.

    பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலையின் யாத்திரை நடைபயணம் அல்ல. அது இறுதி யாத்திரை என நான் ஏற்கனவே சொன்னது தான் தற்போது நடந்து கொண்டுள்ளது.

    பா.ஜ.கவை ஒவ்வொரு நாளும் சவக்குழிக்கு அனுப்பும் வேலையை அண்ணாமலை செய்து வருகிறார். அவர் அரசியல் முதிர்ச்சியற்ற தலைவர் என்பதை அவரது பேச்சே காட்டி வருகிறது.

    காவிரியில் தண்ணீர் திறந்து விடக்கோரி டெல்டா மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும்.

    பா.ஜ.க.வை வீழ்த்தும் போராட்டத்தில் நாங்கள் தி.மு.கவுடன் இணைந்துள்ளோம். நாங்கள் தி.மு.க. கூட்டணியிலேயே நீடிக்கிறோம்.

    தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் அ.தி.மு.க கூட்டணிக்கு செல்ல வாய்ப்பு இல்லை. இது கனவு உலகில் இருந்து கதை எழுதுவது போல உள்ளது.

    அ.தி.மு.க.-பா.ஜ.க. இடையேயான உறவு முறிந்துள்ளது. இனி என்னென்ன முறியும் என தெரியவில்லை.

    நாங்கள் பா.ஜ.க எதிர்ப்பு மட்டுமின்றி, அ.தி.மு.க எதிர்ப்பிலும் உறுதியாக இருக்கிறோம். பா.ஜ.க.வை விட்டு பிரிந்ததால் அ.தி.மு.க நல்ல கட்சி என சொல்ல மாட்டோம்.

    அ.தி.மு.க உடனான கூட்டணி முறிவால் பா.ஜ.க நிலைகுலைந்துள்ளது. இதனாலேயே அண்ணாமலை கூட்டணி குறித்து பேசவில்லை. கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலக அண்ணாமலை பேச்சு மட்டும் போதுமா? பா.ஜ.க.வின் கொள்கைகள் பற்றி கவலையில்லையா? அண்ணாமலை பேச்சுக்காக கூட்டணியை முறிப்பது சரியாக இருக்குமா?.

    நாங்கள் இந்தியா கூட்டணியில் கொள்கை ரீதியாக இணைந்து இருக்கிறோம். இந்தியா கூட்டணியில் பிரதமர் தேர்வு என்பது அரைமணி நேர வேலை தான். எனவே அது ஒரு பிரச்சினையே கிடையாது.

    தமிழகத்தில் மக்கள் செல்வாக்கு பெற்ற முதல் நிலை கூட்டணி தி.மு.க. கூட்டணி தான். கமல்ஹாசன் இந்தியா கூட்டணிக்கு வருவதை வேண்டாம் என சொல்லவில்லை.

    பாராளுமன்ற தேர்தலில், தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி தொகுதி உடன்பாடு அடிப்படையில் தொகுதிகளை கேட்போம். குறிப்பாக பாராளுமன்ற தேர்தலில் மதுரை, கோவை தொகுதிகளை கேட்டு பெற்று போட்டியிடுவோம். பா.ஜ.க.வை வீழ்த்த இந்தியா கூட்டணி ஒன்றாக இருக்கும். ஒவ்வொரு மாநிலத்திலும் அங்குள்ள நிலைமைக்கு ஏற்ப முடிவு எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு பெண்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது.
    • தமிழகத்தில் உள்ளாட்சிகளில் 50 சதவீதம் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது

    நாகர்கோவில்:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் நாகர்கோவிலில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தக்கலையில் பெண்ணுரிமை பாதுகாப்பு மாநாடு இன்று மாலை நடக்கிறது. பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் குழந்தைகள் திருமணம் அதிகரித்து வருகிறது. ஆணுக்கும், பெண்ணுக்கும் ஒரே நீதி கிடைக்க வேண்டும். இருவரும் சமமாக இருக்க வேண்டும். பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு பெண்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது. பெண்களுக்கான வேலை வாய்ப்புகள் மறுக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலமாக ஏராளமான பெண்கள் பயனடைந்து வந்தனர். தற்போது பா.ஜனதா அரசு அதற்கான நிதியை குறைத்துள்ளது. 100 நாள் வேலை திட்டத்தில் 30 நாட்கள் மட்டுமே வேலை நடந்து வருகிறது. 4000 கோடி ரூபாய் சம்பள பாக்கி உள்ளது. ஆண்கள் சேமிக்கும் சொத்தில் பெண்களுக்கும் உரிமை உண்டு என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது. இந்த தீர்ப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வரவேற்கிறது.

    புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், சுந்தரகாண்டம், ராமாயணம், மகாபாரத்தை படித்தால் சுகப்பிரசவம் நடக்கும் என்று கூறியுள்ளார். இது வேடிக்கையாக உள்ளது. அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சாசன சட்டத்தை மாற்றி வருகிறார்கள்.

    சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு சட்டத்தை 15 ஆண்டுகளாக கிடப்பில் போட்டுள்ளனர். தமிழகத்தில் உள்ளாட்சிகளில் 50 சதவீதம் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது பாராட்டத்தக்க ஒன்று தான்.

    ஆனால் மேயர் மற்றும் பேரூராட்சி தலைவர்களாக பெண்கள் இருந்தாலும் அவர்களை முன்னிலையில் வைத்து விட்டு ஆண்கள் தான் அதை செயல்படுத்தி வருகிறார்கள். தமிழகத்தில் குடும்ப வன்முறை, பாலியல் வன்முறை அதிகரித்து உள்ளது. 2020-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மாநில அளவில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது.

    தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். குழந்தைகள் திருமணத்தை தடுக்க 1986-ல் சட்டம் கொண்டுவரப்பட்டது. தற்போது சிதம்பரத்தில் தீட்சிகர் ஒருவர் குழந்தை திருமணம் விவகாரத்தில் கைது செய்யப்பட்டார்.

    அவருக்கு ஆதரவாக ஆளுநர் ரவி பேசியுள்ளது வேடிக்கையாக உள்ளது. தானும் குழந்தை திருமணம் செய்து கொண்டதாக பகிரங்கமாக பேசியுள்ளார். அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆளுநர் ரவி எல்லை தாண்டி பேசி வருகிறார்.

    தமிழகத்தில் பா.ஜனதாவின் அஜெண்டாவை உருவாக்குபவராக கவர்னர் செயல்பட்டு வருகிறார். தமிழகத்தில் ஆளுநர் ரவி ஆர்.எஸ். எஸ்.அமைப்பின் பிரகடனமாக செயல்படுகிறார்.

    பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தை பா.ஜனதா விமர்சித்து வருகிறது. இதன் மூலமாக அவர்களுக்குள் ஏற்பட்டுள்ள நடுக்கம் வெளியே தெரிய தொடங்கியுள்ளது. எதிர்க்கட்சிகள் ஒன்று சேரும்போது மாறுபட்ட கருத்துக்கள் இருக்கத்தான் செய்யும். தமிழகத்தில் கூட அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா உள்ளது. ஆனால் அண்ணாமலையை தலைவராக்கினால் கூட்டணி சேரமாட்டோம் என்று கூறியுள்ளார்கள்.

    விலைவாசி உயர்ந்துள்ளது. அதற்கு அடிப்படை காரணம் பா.ஜனதா அரசின் பொருளாதார கொள்கை தான். பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மத்திய அரசின் வரி உயர்வு காரணமாகும். மின் கட்டணத்தை தற்போது 25 சதவீதம் உயர்த்துவதாக கூறியுள்ளார்கள். மனிதர்களை இரவு நிம்மதியாக தூங்கவிடாமல் ஆப்பு வைக்கும் செயலில் இந்த அரசு ஈடுபட்டுள்ளது.

    தொழிலாளர் நலன் சார்ந்த பிரச்சினைகளுக்கு சட்ட திருத்தம் கொண்டு வந்ததும் பா.ஜனதா அரசு தான். தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான புகாரை விசாரிக்க வேண்டாம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூறவில்லை. செந்தில் பாலாஜி அமைச்சராக உள்ளார். அவரை விசாரிக்க சில விதிமுறைகள் உள்ளது. அதை மீறி அமலாக்கத்துறை செயல்பட்டுள்ளது. சம்மன் அனுப்பி அவரை விசாரித்து இருக்கலாம். அமலாக்கத் துறை மூலமாக எதிர்க்கட்சியினரை பா.ஜனதா மிரட்டி வருகிறது. இதை வன்மையாக கண்டிக்கிறோம். கள்ளச்சாராயம் விற்பனையை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது வாசுகி, மாவட்ட செயலாளர் செல்லசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. லீமாரோஸ் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு சிசிடிவி கேமரா ஆய்வின் மூலம் விசாரணை.
    • மீதி உள்ள வழக்குகளிலும் குற்றவாளிகளை நெருங்கி விட்டோம்.

    கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளதாவது: கோவை குனியமுத்தூர் பகுதியில் கடந்த 23 ம் தேதி மதியம் ரகு என்ற இந்து முன்னணி பொறுப்பாளர் வீட்டு முன் நிறுத்தப்பட்டிருந்த அவரது காரில் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டது.

    அதே நாள் குனியமுத்தூர் பகுதியில் பாஜக பிரமுகர் பரத் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இந்த இரண்டு சம்பவங்களுக்கும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஒவ்வொரு வழக்கிலும் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு நுண்ணறிவு சேகரிப்பு மற்றும் சிசிடிவி கேமரா ஆய்வின் மூலம் புலன் விசாரணை நடைபெற்றது.

    இந்த வழக்குகளில் மதுக்கரையைச் சேர்ந்த ஜேசுராஜ் (34), குனியமுத்தூரை சேர்ந்த இலியாஸ்(34) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் எஸ்.டி.பி.ஐ கட்சியில் பொறுப்பாளர்களாக உள்ளனர். விசாரணைக்கு பின் நீதிமன்ற காவலுக்கு இவர்கள் அனுப்பப்படுவர்.

    கோவை நகரில் இதுபோன்ற ஆறு வழக்குகளும், ஒரு பஸ் கண்ணாடி உடைப்பு வழக்கும் உள்ளது. மீதி உள்ள வழக்குகளிலும் முன்னேற்றம் உள்ளது. மற்ற குற்றவாளிகளை நெருங்கி விட்டோம். கூடிய விரைவில் அனைவரும் கைது செய்யப்படுவார்கள். மேலும் குற்றங்கள் நடக்காமல் இருக்க கண்காணிப்பு படைப்பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது வீடியோவில் தெரிகிறது.
    • வன்முறை கும்பல் கையில் தேசியக் கொடியை ஏந்தி, அவமதிப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

    மதுரையில் தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசி தாக்கி இழிவான அரசியலில் பாஜகவினர் ஈடுபட்டுள்ளார்கள். இது கடும் கண்டனத்துக்குரிய செயலாகும்.

    தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரரின் உடலுக்கு அரசு சார்பில் அஞ்சலி செலுத்தி விட்டு திரும்பிய இடத்தில் இந்த நிகழ்வு நடந்துள்ளது.

    தாக்குதல் நடந்த வீடியோக்களை பார்க்கும்போது எதுவுமே உணர்ச்சிவயப்பட்ட நிகழ்வுகள் அல்ல என்பதும், திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதும் தெரிகிறது.

    அதுவும் வன்முறையில் ஈடுபட்ட கும்பல் கையில் தேசியக் கொடியை ஏந்தி, கொடிக்கும் அவமதிப்பை ஏற்படுத்தியுள்ளார்கள்.

    அதிகார வெறியோடு கிடைப்பதில் எல்லாம் அரசியல் செய்யும் பாஜகவினர், ராணுவ வீரரின் உடலுக்கு மரியாதை செய்வதில் கூட தங்கள் அரசியல் லாபத்தை மனதில் கொண்டு செயல்பட்டுள்ளார்கள் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

    இதுவரை தாக்குதல் நடத்திய கும்பலை பாஜக தலைவர்கள் கண்டிக்கவில்லை. மாறாக, வன்முறையை மேலும் தூண்டும் விதமாக சமூக ஊடகப் பதிவுகளையே செய்து வருகிறார்கள்.

    எனவே, தமிழ்நாடு காவல்துறை இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

    பாஜகவினரின் அரசியல் நாகரீகமற்ற இந்த அராஜகமான வன்முறைச் செயலை பொதுமக்களும், ஜனநாயக சக்திகளும் கண்டிக்க முன்வர வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது,

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கமல்ஹாசனை மிரட்டுவதும், அவர் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டங்களில் வன்முறையை உருவாக்குவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று மார்க்சிஸ்டு கம்யூ.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனர் கமல்ஹாசன் மகாத்மா காந்தியை படுகொலை செய்த நாதுராம் கோட்சேவை பற்றி பேசியவை தவறானவையல்ல. தேச விடுதலைப்போராட்டத்தின் தந்தையான மகாத்மா காந்தியை கொடூரமாக கொலை செய்த நாதுராம் கோட்சேவை பற்றி பேசியவை தவறானவையல்ல. தேச விடுதலைப் போராட்டத்தின் தந்தையான மகாத்மா காந்தியை கொடூரமாக கொலை செய்த நாதுராம் கோட்சே ஒரு தீவிரவாதி என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

    கமல்ஹாசன் பேசியதற்கு மாற்றுக்கருத்து உள்ளவர்கள் தங்களது கருத்தினை வெளியிட உரிமை உண்டு.

    ஆனால், கமல்ஹாசனை மிரட்டுவதும், அவர் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டங்களில் வன்முறையை உருவாக்குவதும், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவரது நாக்கை அறுக்க வேண்டுமென கூறுவதும், மன்னார்குடி ஜீயர் கமல்ஹாசனை நடமாட விட மாட்டோம் என தெரிவித்திருப்பதும் கருத்து சுதந்திரத்திற்கு விரோதமானதாகும். இத்தகைய போக்கினை அனுமதிக்கக்கூடாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    தேர்தல் ஆணைய ஆதரவுடன் 4 தொகுதிகளிலும் தில்லுமுல்லு செய்ய ஆளுங்கட்சி திட்டமிடுகிறது என்று அரவக்குறிச்சி பிரசாரத்தில் பாலகிருஷ்ணன் பேசியுள்ளார்.

    கரூர்:

    அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜியை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், தொகுதிக்குட்பட்ட வேலம்பாடி, அண்ணாநகர் பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடந்த சில நாட்களுக்கு முன்பு தலைமை தேர்தல் அதிகாரி 46 வாக்குச் சாவடிகளில் தவறு நடந்துள்ளது. எனவே மறுவாக்குப்பதிவு நடைபெற வாய்ப்பு இருக்கிறது என ஊடகங்களை அழைத்து அவரே கூறினார். ஆனால் இரவு 11 மணிக்கு மேலே அகில இந்திய தேர்தல் ஆணையம் 13 வாக்குச்சாவடிகளுக்கு மட்டும் மறுவாக்குப்பதிவு என அறிவிக்கிறது. அப்படியானால் மீதமுள்ள வாக்குச்சாவடிகளில் நடந்த தவறு என்ன ஆனது.

    தேர்தல் ஆணையம் மீதான சந்தேகம் பற்றி நாங்கள் புகார் சொன்னால், தமிழக முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் தேர்தல் ஆணையத்துக்கு வக்காலத்து வாங்கி அவர்கள் செய்வது சரி என்கிறார்கள். எனவே தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சியின் அழுத்தத்திற்கு, உத்தரவுக்கு பணிந்து தான் இதுபோன்ற குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இதனால்தான் நாங்கள் சொல்கிறோம், தலைமை தேர்தல் ஆணையரை மாற்ற வேண்டும். அல்லது சிறப்பு பார்வையாளரை நியமித்து வாக்கு எண்ணிக்கையை முறையாக நடத்த வேண்டும்.

    இடைத்தேர்தலில் தி.மு.க. அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி மாற்றத்திற்கு வித்திட வாய்ப்பு இருக்கிறது. இதனால் எப்படியாவது ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்கிற அச்சத்துடன் தான் அ.தி.மு.க. உள்ளது. இதனால் 4 தொகுதிகளிலும் தில்லுமுல்லு செய்ய ஆளுங்கட்சி தயாராக இருக்கிறது. தேர்தல் முடிவு அ.தி.மு.க., பா.ஜ.க.வுக்கு எதிராகத்தான் இருக்கும். பிளஸ்-1, பிளஸ் -2 மாணவர்களுக்கு 6 பாடத்தில் இருந்து 5 பாடமாக குறைத்து, மொழிப்பாடத்தில் ஏதேனும் ஒன்றை எடுத்துக் கொள்ளலாம் என்ற அறிவிப்பு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இது உண்மையென்றால் அதிக மாணவர்கள் தமிழை புறக்கணிக்கும் நிலை ஏற்படும்.


    ஆனால் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அப்படிவராது என தெரிவித்துள்ளார். அது நம்பிக்கை அளித்தாலும் கூட எந்த சூழ்நிலையிலும் தமிழ் படிப்பை மாணவர்கள் கைவிடும் வகையில் தமிழக அரசு செயல்படுத்தக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழகத்தில் மே 23-ந் தேதிக்கு பிறகு அதிமுக அரசு முடிவுக்கு வந்துவிடும் என்று மார்க். கம்யூ. மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேசியுள்ளார்.

    ஓட்டப்பிடாரம்:

    ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தி.மு.க . வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து நேற்று மாலை புதியம்புத்தூரில் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணன் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். தொடர்ந்து தளமுத்துநகர், ஸ்பிக்நகர் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்தார். அப்போது புதியம்புத்தூரில் பேசியதாவது:-

    பாராளுமன்றம் தேர்தல் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் 22 தொகுதி காலியாக உள்ளது. தேர்தல் ஆணையம் 18 தொகுதிக்கு மட்டும் தான் தேர்தல் நடத்தியது. மீதி ஓட்டப்பிடாரம் உட்பட 4 தொகுதிக்கு தேர்தல் நடத்த மறுத்து விட்டார்கள். எடப்பாடி பழனிசாமி நிர்பந்தத்தின் காரணமாக தான் தேர்தல் ஆணையம் பாராளுமன்ற தேர்தலோடு அறிவிப்பு வெளியிடவில்லை. தேர்தலை நடத்தினால் வெற்றி பெற மாட்டோம் என எண்ணி தான் 4 தொகுதிகளிலும் தனியாக நடத்த வேண்டும் என்று சொன்னார்கள்.

    தமிழ்நாட்டின் 2 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தலை நடத்தவில்லை. ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தில் குற்றவாளி போல் கை கட்டிக்கொண்டு உள்ளாட்சித் தேர்தலை ஒத்தி வையுங்கள், நடத்த முடியாது என அதிகாரிகள் கூறுகிறார்கள். இன்னும் மூன்று மாத கால அவகாசம் கேட்கிறார்கள். எங்கு பார்த்தாலும் குடிநீர் தட்டுப்பாடு உள்ளாட்சித் தேர்தல் நடத்தி இருந்தால் அந்த குடிநீர் பிரச்சினை மக்கள் பிரதிநிதி மூலம் நடவடிக்கை எடுத்து இருப்பார்கள்.

    நடந்து முடிந்த 39 பாராளுமன்ற தேர்தலிலும், 18 இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க. படுதோல்வி அடைய வாக்காளர்கள் எழுதி வைத்து விட்டார்கள். 23-ந் தேதிக்கு பிறகு தமிழகத்தில் அ.தி.மு.க. அரசுக்கு முடிவு வந்துவிடும். தூத்துக்குடியில் 13 பேரை சுட்டுக்கொண்ட எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி நீடிக்க வேண்டுமா? முடிவு கட்டுங்கள் அ.தி.மு.க. ஆட்சிக்கு.

    ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்தால் தான் நியாயம் கிடைக்கும். கடந்த 30 ஆண்டுகளாக ஓட்டப்பிடாரத்தில் அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. இந்த தொகுதி மக்கள் ஆயத்த ஆடை தொழிலாளர்கள், தையல் தொழில் பயிற்சி, ஆயத்த ஆடை சந்தை கேட்டார்கள். ஆனால் கிடைக்கவில்லை. 30 ஆண்டுகாலம் புறக்கணிக்கப்பட்ட தொகுதியாக ஓட்டப்பிடாரம் இருந்து வருகிறது. தி.மு.க. வேட்பாளர் வெற்றிபெற்றால் புதியம் புத்தூரில் ஆயத்த ஆடை தொழிலாளர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் சிதம்பரம் நகரத்திலுள்ள மானாசந்து நகராட்சி நடுநிலைப்பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்தார். #LokSabhaElections2019
    சிதம்பரம்:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் சிதம்பரம் நகரத்திலுள்ள மானாசந்து நகராட்சி நடுநிலைப்பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்தார். வாக்குசாவடிக்கு வெளியே அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வாக்குச்சாவடிகளில் போதிய வெளிச்சமின்மை, வாக்குப்பதிவு எந்திரத்தை பொருத்துவதில் தாமதம் ஆகிய குறைபாடுகள் உள்ளது.

    தேர்தல் ஆணையம் எதிர்க்கட்சி வேட்பாளர், தலைவர்கள் வீடுகளில் சோதனை நடத்துவதில் காட்டும் அக்கறையை வாக்குச்சாவடிகளில் காட்டியிருந்தால் இதுபோன்ற குறைபாடுகள் ஏற்பட்டு இருக்காது. மதசார்பற்ற முற்போக்கு தலைமையிலான அணிகள் வெற்றி பெறும் நம்பிக்கை உள்ளது. மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #LokSabhaElections2019

    கணவரால் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட நடிகை சந்தியாவின் உடல் சொந்த ஊரில் இன்று அடக்கம் செய்யப்பட்டது. #Sandhya #Balakrishnan

    நாகர்கோவில்:

    பூதப்பாண்டி அருகே உள்ள ஞாலத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவி பிரசன்னகுமாரி. இந்த தம்பதியின் மகள் சந்தியா (வயது 35).

    தூத்துக்குடியை சேர்ந்தவர் சினிமா இயக்குனர் பாலகிருஷ்ணன் (51). இவருக்கும் சந்தியாவுக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு சென்னை ஜாபர்கான் பேட்டையில் கணவருடன் சந்தியா வசித்து வந்தார். சினிமாவிலும் சந்தியா துணை நடிகையாக நடித்து வந்தார்.

    இந்த நிலையில் சந்தியா திடீரென்று மாயமானார். இதுபற்றிய புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் அவரை கணவர் பாலகிருஷ்ணன் கொடூரமான முறையில் துண்டு, துண்டாக வெட்டி கொலை செய்தது தெரியவந்தது.

    மேலும் சந்தியாவின் உடல் பாகங்களை சென்னையின் பல இடங்களில் அவர் வீசி உள்ளார். மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு சந்தியாவை பாலகிருஷ்ணன் கொலை செய்தார். சந்தியாவின் 2 கால், ஒரு கை ஆகியவை பெருங்குடி குப்பைக் கிடங்கில் இருந்தும், இடுப்பு முதல் தொடை பகுதி வரை ஜாபர்கான்பேட்டை பாலத்தின் அடியில் இருந்தும் போலீசாரால் கைப்பற்றப்பட்டது. சந்தியாவின் தலை மற்றும் சில உடல் பாகங்கள் இதுவரை கிடைக்கவில்லை.


    சந்தியாவின் உடல் பாகங்களை சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் போலீசார் பாதுகாப்பாக வைத்திருந்தனர். மகள் சந்தியாவின் இறுதிச் சடங்கை செய்வதற்காக அவரது உடல் பாகங்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அவரது பெற்றோர் பள்ளிக்கரனை போலீசில் மனு கொடுத்தனர். இதைத் தொடர்ந்து நேற்று சந்தியாவின் உடல் பாகங்கள் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் சந்தியாவின் உடலை இன்று காலை 11.15 மணி அளவில் ஞாலத்தில் உள்ள வீட்டிற்கு கொண்டு வந்தனர். அவரது உடலை பார்த்து உறவினர்கள் கண்ணீர் வடித்தனர். அதன்பிறகு சந்தியாவின் உடல் ஞாலம் பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது. #Sandhya #Balakrishnan

    வேலூர் தொகுதியுடன் குடியாத்தம், ஆம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தலையும் நிறுத்த சதி செய்கின்றனர் என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். #kbalakrishna

    சென்னை:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ‘மாலை மலர்’ நிருபரிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் மத சார்பற்ற கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. நான் பிரசாரம் செய்யும் இடங்களில் மக்கள் எழுச்சியை காண முடிந்தது. தெருமுனை கூட்டம் போட்டால் கூட 2 ஆயிரம் பேர் கூடுகின்றனர்.

    இதற்கு மத்திய-மாநில அரசு மீதான வெறுப்பு தான் முக்கிய காரணமாகும்.

    பிரதமர் மோடி தமிழகத்துக்காக எந்தவித நன்மையும் செய்யவில்லை. ஒக்கி புயல், கஜா புயல், வர்தா புயல் எதற்கும் போதிய நிவாரண நிதியை ஒதுக்கவில்லை. புயல் சேதத்தையும் வந்து பார்வையிட வில்லை. விலைவாசி உயர்வால் பெண்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.


     


    மத்திய அரசை தட்டிக் கேட்கும் நிலையில் மாநில அரசு இல்லை. பிரதமர் மோடி சொல்வதை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அப்படியே கேட்கிறார்.

    இதனால் தான் தமிழக மக்களுக்கு மோடி மீது வெறுப்பு ஏற்பட்டுவிட்டது. தேர்தலுக்காக அவர் பிரசாரத்துக்கு வந்தாலும் மோடிக்கு ஆதரவான எண்ணம் வரவில்லை. அவர் அடிக்கடி பிரசாரத்துக்கு வருவது எங்களுக்கு நல்லது தான்.

    வேலூர் தொகுதியில் பணம் பிடிபட்டது தொடர்பாக பல்வேறு தகவல்கள் வருகிறது. எங்களுக்கு வரும் செய்தி என்னவென்றால், வேலூர் தொகுதியுடன் குடியாத்தம், ஆம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தலையும் நிறுத்த சதி நடப்பதாக அறிகிறோம். எங்களது வேண்டுகோள் தேர்தலை நிறுத்தக்கூடாது என்பது தான்.

    இவ்வாறு அவர் கூறினார். #kbalakrishna

    ×