என் மலர்
நீங்கள் தேடியது "parking"
- சிறந்த தமிழ்படமாக பார்க்கிங் அறிவிக்கப்பட்டது.
- சிறந்த திரைக்கதைக்கான விருதையும் வென்றது.
71 வது தேசிய திரைப்பட விருதுகள் கடந்த ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான விருதை ஹரிஷ் கல்யாண் மற்றும் எம்.எஸ். பாஸ்கர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்த பார்க்கிங் திரைப்படம் வென்றது. இப்படத்தை ராம் குமார் பால கிருஷ்ணன் எழுதி இயக்கினார்.
சிறந்த துணை நடிகருக்கான விருதை பார்க்கிங் திரைப்படத்திற்காக எம்.எஸ் பாஸ்கர் வென்றார். சிறந்த திரைக்கதை ஆசிரியருக்கான விருதை ராம்குமார் பால கிருஷ்ணன் பார்க்கிங் திரைப்படத்திற்காக வென்றுள்ளார்.
விருது அறிவிக்கப்பட்டவர்களு இன்று ஜனாதிபதி மாளிகையில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு விருதுகள் வழங்கி கவுரவித்தார்.
இப்படத்தின் தயாரிப்பாளர் சினிஷ் மற்றும் இயக்குனர் ராம்குமார் பால கிருஷ்ணன் விருதுகளை பெற்றனர்.
- சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான விருதை ஹரிஷ் கல்யாண் மற்றும் எம்.எஸ் பாஸ்கர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்த பார்க்கிங் திரைப்படம் வென்றுள்ளது.
- இப்படத்தை ராம் குமார் பால கிருஷ்ணன் எழுதி இயக்கினார்.
71 வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான விருதை ஹரிஷ் கல்யாண் மற்றும் எம்.எஸ் பாஸ்கர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்த பார்க்கிங் திரைப்படம் வென்றுள்ளது.
இப்படத்தை ராம் குமார் பால கிருஷ்ணன் எழுதி இயக்கினார்.சிறந்த துணை நடிகருக்கான விருதை பார்க்கிங் திரைப்படத்திற்காக எம்.எஸ் பாஸ்கர் வென்றுள்ளார்.
சிறந்த திரைக்கதை ஆசிரியருக்கான விருதை ராம்குமார் பால கிருஷ்ணன் பார்க்கிங் திரைப்படத்திற்காக வென்றுள்ளார்.
இந்நிலையில், 3 தேசிய விருதுகளை வென்ற 'பார்க்கிங்' படக்குழுவினரை நேரில் அழைத்து கமல்ஹாசன் வாழ்த்தினார். மேலும் படக்குழு இதனை இன்று கேக் வெண்ட்டி கொண்டாடி படத்தில் நடித்த மற்றும் பங்குப்பெற்ற அனைவரையும் அழைத்து படக்குழு விருந்தளித்துள்ளது. அப்போது அவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.
- சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான விருதை பார்க்கிங் திரைப்படம் வென்றுள்ளது.
- சிறந்த துணை நடிகருக்கான விருதை பார்க்கிங் திரைப்படத்திற்காக எம்.எஸ் பாஸ்கர் வென்றுள்ளார்.
71 வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான விருதை ஹரிஷ் கல்யாண் மற்றும் எம்.எஸ் பாஸ்கர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்த பார்க்கிங் திரைப்படம் வென்றுள்ளது. இப்படத்தை ராம் குமார் பால கிருஷ்ணன் எழுதி இயக்கினார்.சிறந்த துணை நடிகருக்கான விருதை பார்க்கிங் திரைப்படத்திற்காக எம்.எஸ் பாஸ்கர் வென்றுள்ளார்.
சிறந்த திரைக்கதை ஆசிரியருக்கான விருதை ராம்குமார் பால கிருஷ்ணன் பார்க்கிங் திரைப்படத்திற்காக வென்றுள்ளார்.
இந்நிலையில், 3 தேசிய விருதுகளை வென்ற 'பார்க்கிங்' படக்குழுவினரை நேரில் அழைத்து கமல்ஹாசன் வாழ்த்தியுள்ளார்.
இது தொடர்பான புகைப்படங்களை ஹரிஸ் கல்யான் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், "விருதே வாழ்த்திய தருணம். ஒரு நண்பன் போல பேசினீர்கள் . அவருடனான உங்கள் நட்பை பற்றி பேசினீர்கள். உரையாடலா அல்லது யூனிவர்சிட்டி பாடமா. கற்றது பல.. கற்கவேண்டும் உங்களிடம் இருந்து பற்பல. மிகச்சிறந்த புத்தகத்தை படித்த ஒரு கர்வம் அங்கிருந்து விடை பெற்றபொழுது. எங்களை அழைத்து வாழ்த்தியதற்கு நன்றி" என்று தெரிவித்துள்ளார்.
- எம்.எஸ்.பாஸ்கருக்கு சிறந்த குணச்சித்திர நடிகருக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.
- 'பார்க்கிங்' படத்துக்கு 3 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
புதுடெல்லி:
இந்தியாவில் சிறந்த திரைப்படங்கள், சிறந்த நடிகர்கள், நடிகைகளுக்கு தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. சிறந்த திரைப்பட இயக்குனர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒலி வடிவமைப்பு, சிறந்த பின்னணி இசை போன்ற பல துறைகளுக்கும் தேசிய விருதுகள் வழங்கப்படுகினறன.
71-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் இன்று மாலை அறிவிக்கப்பட்டன. 2023-ம் ஆண்டு திரைப்பட தணிக்கை வாரியத்தால் சான்று அளிக்கப்பட்ட திரைப்படங்கள் விருதுக்கான தேர்வில் பங்கேற்றன. இந்தத் தேர்வு பட்டியலில் 332 படங்கள் பரிசீலிக்கப்பட்டன.
இந்நிலையில், 71-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன.
சிறந்த திரைப்படம் : '12த் பெயில்'
சிறந்த நடிகர்: ஷாருக் கான் (ஜவான்), விக்ராந்த் மாசி(12த் பெயில்)
35 ஆண்டாக சினிமாவில் கோலாச்சும் நடிகர் ஷாருக்கான் முதல் முறையாக சிறந்த நடிகர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சிறந்த நடிகை: ராணி முகர்ஜி (திருமதி சாட்டர்ஜி மற்றும் நார்வே)
சிறந்த தமிழ் படம்: பார்க்கிங்
சிறந்த குணச்சித்திர நடிகர்: எம்.எஸ்.பாஸ்கர் (பார்க்கிங்)
சிறந்த திரைக்கதை: ராம்குமார் பாலகிருஷ்ணன் (பார்க்கிங்)
சிறந்த மலையாள படம்: 'உள்ளொழுக்கு'
சிறந்த குணச்சித்திர நடிகை: ஊர்வசி
சிறந்த இசையமைப்பாளர்: ஜி.வி.பிரகாஷ்குமார் (வாத்தி)
சிறந்த குறும்படம்: 'லிட்டில் விங்ஸ்' (தமிழ்)
சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது: சரவண மருது சவுந்தரபாண்டின், மீனாட்சி சோமன் (லிட்டில் விங்ஸ்)
ஆவணப் படப்பிரிவில் 'தி டைம்லெஸ் தமிழ்நாடு' தேர்வானது.
சிறந்த இயக்குனர்: சுதீப்தோ சென் (தி கேரளா ஸ்டோரி)
சிறந்த ஒளிப்பதிவு பிரிவுக்கான விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த ஒலி அமைப்பு: அனிமல்
சிறந்த தயாரிப்பு: 2018 (மலையாளம்)
சிறந்த தெலுங்கு திரைப்படம்: 'பஹவந்த் கேசரி'
சிறந்த கன்னட திரைப்படம்: கண்டீலு
தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஜனாதிபதி விரைவில் விருது வழங்குவார்.
- 71 வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு
71 வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு
சிறந்த திரைப்படத்திற்கான விருதை ஹரிஷ் கல்யாண் மற்றும் எம்.எஸ் பாஸ்கர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்த பார்க்கிங் திரைப்படம் வென்றுள்ளது. இப்படத்தை ராம் குமார் பால கிருஷ்ணன் எழுதி இயக்கினார்.
சிறந்த துணை நடிகருக்கான விருதை பார்க்கிங் திரைப்படத்திற்காக எம்.எஸ் பாஸ்கர் வென்றுள்ளார்.
சிறந்த திரைக்கதை ஆசிரியருக்கான விருதை ராம்குமார் பால கிருஷ்ணன் பார்க்கிங் திரைப்படத்திற்காக வென்றுள்ளார்.
சிறந்த பாடலுக்கான விருதை வாத்தி பாடலுக்கு ஜி.வி பிரகாஷ் வென்றுள்ளார்.
- இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் IISER-ல் விஞ்ஞானியாக பணியாற்றி வந்தவர்
- குற்றம் சாட்டப்பட்ட மோன்டி தான் அபிஷேக்கை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.
பஞ்சாபில் மொஹாலியில் இயங்கி வரும் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் IISER-ல் விஞ்ஞானியாக பணியாற்றி வந்தவர் அபிஷேக் ஸ்வர்ண்கர் (40). ஜார்க்கண்டை சேர்ந்த இவர் பஞ்சாபின் மொஹாலியின் செக்டார் 66 இல் தனது பெற்றோருடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு தனது வீட்டுக்கு அருகே அவர் தனது பைக்கை நிறுத்திக் கொண்டிருந்தபோது அவரது பக்கத்து வீட்டுக்காரர் மோன்டி (26) அதை எதிர்த்தார்.
இதன் பிறகு, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் மோன்டி அபிஷேக்கை அடிக்கத் தொடங்கினார், இதனால் அவர் சாலையில் விழுந்தார்.
தரையில் விழுந்த அபிஷேக்கை மோன்டி தாக்கினார். அருகில் இருதவர்கள் அவரை கட்டுப்படுத்தினர். இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகி உள்ளது. வீடியோவில், அபிஷேக்கை சிறிது நேரம் எழுந்து நிற்பது காணப்பட்டது. ஆனால் பின்னர் அவர் மீண்டும் விழுந்தார்.
இதன் பின்னர் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட மோன்டி தான் அபிஷேக்கை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நடிகர் ஹரிஷ் கல்யாண் தற்போது 'பார்க்கிங்' படத்தில் நடிக்கிறார்.
- இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடைகிறது.
பொறியாளன், வில் அம்பு, பியார் பிரேமா காதல், தாராள பிரபு உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஹரிஷ் கல்யாண் இவர் தற்போது ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் 'பார்க்கிங்' படத்தில் நடிக்கிறார். திரில்லர் ட்ராமாவான 'பார்க்கிங்' திரைப்படத்தை 'பலூன்' பட இயக்குனர் கே.எஸ்.சினிஷ், சோல்ஜர்ஸ் ஃபேக்டரி சார்பில் தயாரிக்கிறார். மேலும் பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கிறது. ராம்குமார் பாலகிருஷ்ணன் முன்பு 'பலூன்' படத்தில் கே.எஸ்.சினிஷிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் கதாநாயகியாக இந்துஜா நடிக்கிறார். மேலும் எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரன், பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இதற்கு சாம் சிஎஸ் இசையமைக்க, ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் முழு படப்பிடிப்பும் சென்னையில் நடைபெற்று வரும் நிலையில், விரைவில் படப்பிடிப்பு நிறைவடைகிறது.

பார்க்கிங் போஸ்டர்
இந்நிலையில், இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் வெளியாகியுள்ளது. ஹரிஷ் கல்யாணின் இரண்டு முகங்களை பிரதிபலிக்கும் இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.
- இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் திரைப்படம் 'பார்க்கிங்'.
- இப்படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாக நடிக்கிறார்.
பொறியாளன், வில் அம்பு, பியார் பிரேமா காதல், தாராள பிரபு உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஹரிஷ் கல்யாண் இவர் தற்போது ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் 'பார்க்கிங்' படத்தில் நடிக்கிறார். திரில்லர் ட்ராமாவான 'பார்க்கிங்' திரைப்படத்தை 'பலூன்' பட இயக்குனர் கே.எஸ்.சினிஷ், சோல்ஜர்ஸ் ஃபேக்டரி சார்பில் தயாரிக்கிறார். மேலும் பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கிறது.

இப்படத்தின் கதாநாயகியாக இந்துஜா நடிக்கிறார். மேலும் எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரன், பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்க, ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் முழு படப்பிடிப்பும் சென்னையில் நடைபெற்று வரும் நிலையில், விரைவில் படப்பிடிப்பு நிறைவடைகிறது.

பார்க்கிங் போஸ்டர்
இதையடுத்து நேற்று இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள நடிகர் ஹரிஷ் கல்யாண், "இரண்டு குடும்பம். ஒரு பார்க்கிங். உலக பிரச்சினை" என்று பதிவிட்டுள்ளார்.
- இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் திரைப்படம் 'பார்க்கிங்'.
- இப்படத்தின் மூன்றாவது போஸ்டரை படக்குழு வெளியிடுள்ளது.
பொறியாளன், வில் அம்பு, பியார் பிரேமா காதல், தாராள பிரபு உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஹரிஷ் கல்யாண் இவர் தற்போது ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் 'பார்க்கிங்' படத்தில் நடிக்கிறார். திரில்லர் ட்ராமாவான 'பார்க்கிங்' திரைப்படத்தை 'பலூன்' பட இயக்குனர் கே.எஸ்.சினிஷ், சோல்ஜர்ஸ் ஃபேக்டரி சார்பில் தயாரிக்கிறார். மேலும் பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கிறது.

இப்படத்தின் கதாநாயகியாக இந்துஜா நடிக்கிறார். மேலும் எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரன், பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்க, ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் முழு படப்பிடிப்பும் சென்னையில் நடைபெற்று வரும் நிலையில், விரைவில் படப்பிடிப்பு நிறைவடைகிறது.

இந்நிலையில் பார்க்கிங் படத்தின் மூன்றாவது போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. தொடர் போஸ்டர்களை வெளியிட்டு படக்குழு ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது
- ராஜவீதி முதல் மணிக்கூண்டு வரை இருபுறமும் வாகனங்களை நிறுத்தக்கூடாது.
- புதிய திட்டம் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குனியமுத்தூர்,
கோவை டவுன்ஹால் பகுதியில் ஒப்பணக்கார வீதி , ராஜவீதி, வைசியாள் வீதி, தாமஸ் வீதி, பெரிய கடை வீதி, ரங்கே கவுண்டர் வீதி ஆகியவை உள்ளன. அந்த பகுதிக்கு வரும் வாகன ஓட்டிகள் ரோட்டின் இருபுறமும் மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி சென்றனர். இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.
டவுன்ஹால் பகுதியில் ஜவுளிக்கடை, நகைக்கடை, மளிகை, தானியம், காய்கறி ஆகியவற்றுக்கான மொத்த விற்பனை நிலையங்கள் உள்ளன. எனவே அனைவரும் இங்கு வாகனங்களில் வந்து செல்வது வழக்கம். அங்கு பொருட்களை வாங்கி விட்டு வெளியேற குறைந்தபட்சம் 5 மணி நேரம் பிடிக்கும். எனவே டவுன்ஹால் பகுதியில் போக்குவரத்து நெரிசல் தொடர்கதையாக இருந்து வந்தது.
இந்த நிலையில் மாலைமலர் நாளிதழில், ஒரு பக்கம் மட்டும் பார்க்கிங் செய்தால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கலாம் என்று தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டது. இது கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கவனத்துக்கு வந்தது.எனவே அவர் நேற்று டவுன்ஹால் பகுதிக்கு நேரடியாக வந்திருந்து ஆய்வு நடத்தினார்.
இதனை தொடர்ந்து அங்கு உடனடியாக ஒரு பக்க பார்க்கிங் முறை அமலுக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறுகையில் டவுன்ஹால் பகுதியில் ஒவ்வொரு மாதமும் வாகனங்களை நிறுத்தும் இடம், சுழற்சி முறையில் மாற்றப்படும் என்று தெரிவித்து உள்ளார்.
இதன்படி ஒப்பணக்கார வீதியில் வைசியாள் வீதி சந்திப்பு முதல் இடையர் வீதி சந்திப்பு வரை சாலையின் இரு புறமும் வாகனம் நிறுத்த அனுமதி இல்லை. இடையர் வீதி சந்திப்பு முதல் மில் ரோடு சந்திப்பு வரை சாலையின் இடது புறம் மட்டுமே வாகனங்களை நிறுத்த வேண்டும். ராஜவீதியில் ஒப்பணக்கார வீதி சந்திப்பு முதல் ரங்கே கவுண்டர் வீதி வரை, சாலையின் இரு புறமும் வாகனம் நிறுத்த அனுமதி இல்லை. ரங்கே கவுடா் வீதி முதல் தேர்நிலை திடல் வரை வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம்.
துணி வணிகர் சங்க பள்ளி தேர் திடல் முதல் கருப்பு கவுண்டர் வீதி வரை இடதுபுறம் வாகனங்களை நிறுத்த வேண்டும். ஆனால் கருப்பு கவுண்டர் வீதி சந்திப்பு முதல் சலிவன் வீதி வரை இருபுறமும் வாகனங்களை நிறுத்த அனுமதி இல்லை.
ராஜவீதி முதல் மணிக்கூண்டு வரை இருபுறமும் வாகனங்களை நிறுத்தக்கூடாது. கருப்பு கவுண்டர் வீதியில் ராஜவீதி சந்திப்பு முதல் வைசியாள் வீதி வரை வலது புறம் வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம்.
பெரிய கடை வீதியில் ரங்கே கவுடர் வீதி சந்திப்பு முதல் கருப்பு கவுண்டர் வீதி வரை இடதுபுறம் வாகனங்களை நிறுத்தலாம். வைசியாள் வீதியில் ரங்கே கவுண்டர் வீதி சந்திப்பில் பஸ் நிறுத்தம் எதிரே வலது புறம் நிறுத்த வேண்டும். கோவை டவுன்ஹால் பகுதியில் புதிதாக அமலுக்கு வந்து உள்ள வாகன நிறுத்த மாற்றத்திற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று மாநகர போலீசார் கேட்டுக்கொண்டு உள்ளனர்.
இந்த புதிய திட்டம் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதேபோல பல்வேறு அமைப்புகளும் டவுன்ஹால் வாகன நிறுத்த மாற்றம் பற்றிய அறிவிப்புக்கு பாராட்டு தெரிவித்து உள்ளனர்.
- குளத்தை முறையாக பராமரிக்காததால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் கார், வேன், ஆட்டோ நிறுத்தும் இடமாக மாற்றியுள்ளனர்.
- பேரூராட்சியின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த குளத்தை முறையாக பராமரிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
நிலக்கோட்டை:
நிலக்கோட்ைட மினிபஸ்நிலையம் அருகே குமுந்தான்குளம் உள்ளது. இப்பகுதியில் பேரூராட்சி சார்பாக எம்.எல்.ஏ நிதியில் நாடகமேடை கட்டப்பட்டது. இந்தநிலையில் குளத்தை முறையாக பராமரிக்காததால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் கார், வேன், ஆட்டோ நிறுத்தும் இடமாக மாற்றியுள்ளனர்.
மேலும் போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகளில பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களையும் இங்கேயே நிறுத்தி விடுகின்றனர். சுற்றுவட்டார பகுதியில் உள்ளவர்கள் குளத்தில் குப்பைகளை கொட்டி செல்கின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் சிலர் குப்பைகளுக்கு தீ வைப்பதால் அவ்வழியாக செல்பவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது.
பேரூராட்சியின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த குளத்தை முறையாக பராமரிக்க வேண்டும். இதனை மீட்டு பூங்கா அமைத்து பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரும்பாலான பகுதிகளில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதனை மீட்க வேண்டும். இப்பகுதியில் உள்ள வாகனங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கோரிப்பாளையத்தில் பல்லடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
- வாகன நிறுத்தம் அமைப்பதற்கான இடங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
மதுரை
மதுரை முக்கிய சுற்றுலா தலமாகவும், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இடமாகவும் உள்ளது. தமிழ்நாட்டில் 2-வது பெரிய மக்கள் தொகை கொண்ட நகரமாகவும் உள்ளது. இந்த நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரையில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் மதுரையின் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. மேலும் சாலைகளில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.
இந்த நிலையில் மதுரையின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு மாநகராட்சி சார்பிலும், போக்குவரத்து போலீசார் சார்பிலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கோரிப்பாளையம், கீழவாசல், தெற்குவாசல், காளவாசல், ஆரப்பாளையம், சிம்மக்கல், கீழமாசிவீதி, பெரியார் பஸ் நிலையம், பழங்காநத்தம், காமராஜர் சாலை, விளக்குத்தூண் ஆகிய நகரின் முக்கிய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.
இந்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக நடவடிக்கைகள் எடுப்பதற்கு மாநகராட்சி திட்டமிட்டு வருகிறது.
இந்த நிலையில் கோரிப்பாளையம் பகுதியில் அதிக வாகன போக்குவரத்து உள்ளதாலும், அரசு ஆஸ்பத்திரி உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்கள் சாலையோரங்களில் நிறுத்தப்படுவதாலும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.
இந்த நிலையில் அந்த பகுதியில் பல்லடுக்கு வாகனங்கள் நிறுத்தும் இடத்தை அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பல்லடுக்கு வாகன நிறுத்தத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததையடுத்து கோரிப்பாளையத்திலும் வாகன நிறுத்தும் இடம் அமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
இதற்காக டெண்டர் கோரப்பட்டுள்ளது. வாகன நிறுத்தம் அமைப்பதற்கான இடங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. விரைவில் உரிய இடம் தேர்வு செய்யப்பட்டு வாகனம் நிறுத்தும் இடம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் நகரில் ஏற்கனவே உள்ள 2 பல்லடுக்கு வாகன நிறுத்தம் இடங்களை நவீனப்படுத்தவும் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
இதனால் அரசு ஆஸ்பத்திரி, அண்ணா பஸ் நிலையம்,கோரிப்பாளையம் பகுதிகளில் சாலைகளில் வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க முடியும் என மாநகராட்சி எதிர்பார்க்கிறது. மேலும் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள காளவாசல், பை-பாஸ் ரோடு, மாசிவீதிகள், காமராஜர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் பல்லடுக்கு வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் அமைக்கப்பட்டால் வாகன ஓட்டிகளுக்கும், போக்குவரத்து போலீசாருக்கும் சிரமம் குறையும் என எதிர்பார்க்கலாம்.






