என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "parking"
- புகைப்படம் மற்றும் வீடியோக்களை புகைப்பட கலைஞரான நிஷாந்த் ரத்னாகர் என்பவர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
- பதிவு வைரலான நிலையில் பயனர்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
நாடு முழுவதும் மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. குறிப்பாக இருசக்கர மின்சார வாகனங்கள் விற்பனை அதிகரித்து வரும் நிலையில், பெங்களூருவில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் மின்சார வாகனங்களுக்கு தனியாக நிறுத்தும் இடம் (பார்க்கிங்) என அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.
இதுகுறித்த புகைப்படம் மற்றும் வீடியோக்களை புகைப்பட கலைஞரான நிஷாந்த் ரத்னாகர் என்பவர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், எலக்ட்ரிக் வாகனங்கள் தொடர்பாக பெங்களூருவில் கோரமங்களாவில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் இந்த அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது.
பெரிய மல்டி லெவல் பார்க்கிங் இருக்கும் போது அவர்கள் மின்சார வாகனங்களை சூரிய ஒளியில் நிறுத்துமாறு செய்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த பதிவு வைரலான நிலையில் பயனர்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
There is some irrational fear psychosis in #NexusMall #Koramangala in #Bengaluru with regards to Electric Vehicles. While there is a big multi level parking (as seen on left), they make EVs to be parked in baking sunlight outside.
— Nishant Ratnakar (@nishantr) March 23, 2024
EV manufacturers kindly speak to them.#Ather pic.twitter.com/t8SGhtfcoh
- பிரதான நுழைவு வாயில் காந்தி இர்வீன் சாலையிலும் பின்புற நுழைவு வாயில் பூந்தமல்லி நெடுஞ்சாலையிலும் அமைய உள்ளது.
- வாகன நிறுத்துமிடம் எழும்பூர் தெற்கு ரெயில்வே பயணச்சீட்டு முன்பதிவு அலுவலகத்திற்குப் பக்கத்தில் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
எழும்பூர் ரெயில் நிலையம் பல்வேறு நவீன வசதிகளுடன் ரூ.734.91 கோடி மதிப்பில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
இதற்கான பணிகள் தற்போது தொடங்கப்பட்டு நடந்து வருகின்றன. மறு சீரமைப்பு பணியில் ரெயில் நிலையத்தின் பிரதான நுழைவு வாயில் காந்தி இர்வீன் சாலையிலும் பின்புற நுழைவு வாயில் பூந்தமல்லி நெடுஞ்சாலையிலும் அமைய உள்ளது.
மேலும் ரெயில் நிலைய கட்டிடங்கள், பலஅடுக்கு வாகன நிறுத்துமிடம், காந்தி-இர்வின் சாலை மற்றும் பூந்தமல்லி சாலை அருகே வணிக வளாகங்கள் அமைத்தல், புதிய பார்சல் அலுவலகம், நடை மேம்பாலம், பார்சல்களை கையாள நடைமேம்பாலம், புதிய ரெயில்வே குடியிருப்புகள் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
எழும்பூர் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே வாகன நிறுத்தும் இடம் உள்ளது. தற்போது அந்த பகுதியில் நடைபெற்று வரும் ரெயில்வே பணிகளால் மெட்ரோ ரெயில் நிலைய வாகன நிறுத்தும் இடம் நாளை முதல் இடமாற்றம் செய்யப்பட உள்ளது. இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டு உள்ள அறிவிப்பில், "எழும்பூர் ரெயில் நிலையம் மற்றும் எழும்பூர் மெட்ரோ ரெயில் நிலையம் ஆகியவற்றில் தெற்கு ரெயில்வேயின் பன்முக ஒருங்கிணைப்புப் பணிகள் நடை பெற்று வருகின்றன.
இதனால் எழும்பூர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் உள்ள வாகன நிறுத்துமிடம் எழும்பூர் தெற்கு ரெயில்வே பயணச்சீட்டு முன்பதிவு அலுவலகத்திற்குப் பக்கத்தில் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த இடமாற்றம் செய்யப்பட்ட வாகன நிறுத்துமிடத்தை அனைத்து பயணிகளும் நாளை(5-ந்தேதி) முதல் பயன்படுத்திக் கொள்ளலாம்" என்று கூறப்பட்டு உள்ளது.
- ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘பார்க்கிங்’.
- இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்தது.
இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவான திரைப்படம் 'பார்க்கிங்'.திரில்லர் ட்ராமாவான 'பார்க்கிங்' திரைப்படத்தை 'பலூன்' பட இயக்குனர் கே.எஸ்.சினிஷ், சோல்ஜர்ஸ் ஃபேக்டரி சார்பில் தயாரித்துள்ளார். மேலும் பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது.
இப்படத்தின் கதாநாயகியாக இந்துஜா நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரன், பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்க, ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்துள்ளார். சிறிய பட்ஜெட்டில் உருவான இப்படம் டிசம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்லாமல் வசூலையும் குவித்தது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் ஓடிடி ரிலீஸிற்காக ரசிகர்கள் காத்திருந்தனர்.
பார்க்கிங் போஸ்டர்
இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'பார்க்கிங்' திரைப்படம் டிசம்பர் 30-ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டரை வெளியிட்டு அறிவித்துள்ளது.
- எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரன், பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
- படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்க, ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
பொறியாளன், வில் அம்பு, பியார் பிரேமா காதல், தாராள பிரபு உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஹரிஷ் கல்யாண். இவர் தற்போது ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பார்க்கிங்' படத்தில் நடித்துள்ளார். திரில்லர் ட்ராமாவான 'பார்க்கிங்' திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கியுள்ளார்.
இப்படத்தின் கதாநாயகியாக இந்துஜா நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரன், பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்க, ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
Thankyou @iamharishkalyan anna for the token of love which is unexpected?. As Bracelet is my favorite accessory to wear, you have remembered that and gifted that to me is so overwhelming? Thank you for your delightful gift. And the immense love that makes me feel special..❤️ pic.twitter.com/6pHX76BxBp
— Ramkumar Balakrishnan (@ImRamkumar_B) December 15, 2023
இந்நிலையில், பார்க்கிங் படத்தை இயக்கிய ராம்குமாருக்கு அப்படத்தின் கதாநாயகன் ஹரிஷ் கல்யாண் பரிசு ஒன்றை வழங்கியுள்ளார். இதுதொடர்பாக ராம்குமார் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ப்ரேஸ்லெட் அணிவதில் எனக்கு மிகவும் பிடித்த அணிகலன் என்பதால், நீங்கள் அதை நினைவில் வைத்து எனக்கு பரிசளித்துள்ளீர்கள், உங்கள் மகிழ்ச்சிகரமான பரிசுக்கு நன்றி. மேலும் என்னை ஸ்பெஷலாக உணரவைக்கும் அபாரமான அன்பு... என கூறியுள்ளார்.
This is just the beginning of many more successes & love that you're going to receive Ram ❤️? https://t.co/G0fFcEXwfP
— Harish Kalyan (@iamharishkalyan) December 16, 2023
இதற்கு ஹரிஷ் கல்யாண் வெளியிட்டுள்ள பதிவில், இது ஆரம்பம் மட்டுமே. இன்னும் பல வெற்றிகள் மற்றும் அன்புகளை நீங்கள் பெறப்போகிறீர்கள் என கூறியுள்ளார்.
- நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் சமீபத்தில் ‘பார்க்கிங்’ திரைப்படம் வெளியானது.
- இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
'பியார் பிரேமா காதல்', 'இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும்', 'தாராள பிரபு', 'எல்.ஜி.எம்' போன்ற படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் ஹரிஷ் கல்யாண். தமிழ் திரையுலகின் சாக்லேட் பாய் லிஸ்டில் இடம்பெற்றுள்ள ஹரிஷ் கல்யாண் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'பார்க்கிங்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
ஹரிஷ் கல்யாண் பதிவு
இந்நிலையில், நடிகர் ஹரிஷ் கல்யாண், முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார். இதனை அவர் தனது சமூக வலைதளத்தில் புகைப்படத்தை பகிர்ந்து தெரிவித்துள்ளார். இவருக்கு ரசிகர்கள் பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
My humble contribution.
— Harish Kalyan (@iamharishkalyan) December 6, 2023
கை கோர்ப்போம் #Chennai ?#ChennaiFloodRelief #chennaifloods @CMOTamilnadu pic.twitter.com/CiqBV4SCsm
- ஹரிஷ் கல்யாண் புதிய படம் ஒன்றில் நடித்துள்ளார்.
- இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
பொறியாளன், வில் அம்பு, பியார் பிரேமா காதல், தாராள பிரபு உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஹரிஷ் கல்யாண் இவர் தற்போது ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பார்க்கிங்' படத்தில் நடித்துள்ளார். திரில்லர் ட்ராமாவான 'பார்க்கிங்' திரைப்படத்தை 'பலூன்' பட இயக்குனர் கே.எஸ்.சினிஷ், சோல்ஜர்ஸ் ஃபேக்டரி சார்பில் தயாரித்துள்ளார். மேலும் பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது.
இப்படத்தின் கதாநாயகியாக இந்துஜா நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரன், பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்க, ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், 'பார்க்கிங்' படம் பார்த்துள்ள நடிகர் கவுதம் கார்த்திக் படக்குழுவை பாராட்டி பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "நேற்று 'பார்க்கிங்' படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. உண்மையாக நான் மிகவும் படத்தை ரசித்தேன். ஹரிஷ் கல்யாண் மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் நடிப்பு சிறப்பாக இருந்தது. படக்குழுவினருக்கு வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.
Had the opportunity to watch #Parking movie yesterday, and I thoroughly enjoyed it!
— Gautham Karthik (@Gautham_Karthik) November 30, 2023
Well done to director @ImRamkumar_B for creating and executing such a wholesome entertainer.@iamharishkalyan bro and #MSBhaskar sir rocked their performances.
Congrats to the entire team for…
- ராம்குமார் பாலகிருஷ்ணன் புதிய படம் ஒன்றை இயக்கியுள்ளார்.
- இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.
ஹரிஷ் கல்யாண் நடிப்பில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'பார்க்கிங்' . திரில்லர் ட்ராமாவான 'பார்க்கிங்' திரைப்படத்தை 'பலூன்' பட இயக்குனர் கே.எஸ்.சினிஷ், சோல்ஜர்ஸ் ஃபேக்டரி சார்பில் தயாரித்துள்ளார். மேலும் பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது.
இப்படத்தின் கதாநாயகியாக இந்துஜா நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரன், பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்க, ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் போஸ்டர் மற்றும் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.
இந்நிலையில், 'பார்க்கிங்' படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. பார்க்கிங்கால் ஏற்படும் பிரச்சினையை விவரிக்கும் விதமாக உருவாகியுள்ள இந்த டிரைலரில் 'என்ன செஞ்சவங்கள திருப்பி எதாவது செய்யனும்ல' போன்ற வசனங்கள் இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர். 'பார்க்கிங்' திரைப்படம் டிசம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
- ஹரிஷ் கல்யாண் பல படங்களில் நடித்துள்ளார்.
- இவர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்துள்ளார்.
பொறியாளன், வில் அம்பு, பியார் பிரேமா காதல், தாராள பிரபு உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஹரிஷ் கல்யாண் இவர் தற்போது ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பார்க்கிங்' படத்தில் நடித்துள்ளார். திரில்லர் ட்ராமாவான 'பார்க்கிங்' திரைப்படத்தை 'பலூன்' பட இயக்குனர் கே.எஸ்.சினிஷ், சோல்ஜர்ஸ் ஃபேக்டரி சார்பில் தயாரித்துள்ளார். மேலும் பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது.
இப்படத்தின் கதாநாயகியாக இந்துஜா நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரன், பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்க, ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் போஸ்டர் மற்றும் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.
பார்க்கிங் போஸ்டர்
இந்நிலையில், 'பார்க்கிங்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் டிசம்பர் 1-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. இந்த போஸ்டரை ஹரிஷ் கல்யாண் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
- ஹரிஷ் கல்யாண் நடிக்கும் திரைப்படம் ‘பார்க்கிங்’.
- இப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.
பொறியாளன், வில் அம்பு, பியார் பிரேமா காதல், தாராள பிரபு உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஹரிஷ் கல்யாண் இவர் தற்போது ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் 'பார்க்கிங்' படத்தில் நடிக்கிறார். திரில்லர் ட்ராமாவான 'பார்க்கிங்' திரைப்படத்தை 'பலூன்' பட இயக்குனர் கே.எஸ்.சினிஷ், சோல்ஜர்ஸ் ஃபேக்டரி சார்பில் தயாரிக்கிறார். மேலும் பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கிறது.
இப்படத்தின் கதாநாயகியாக இந்துஜா நடிக்கிறார். மேலும் எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரன், பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்க, ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.
இந்நிலையில், இப்படத்தின் புதிய பாடலான 'செல்ல கல்லியே' பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
- கோரிப்பாளையத்தில் பல்லடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
- வாகன நிறுத்தம் அமைப்பதற்கான இடங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
மதுரை
மதுரை முக்கிய சுற்றுலா தலமாகவும், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இடமாகவும் உள்ளது. தமிழ்நாட்டில் 2-வது பெரிய மக்கள் தொகை கொண்ட நகரமாகவும் உள்ளது. இந்த நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரையில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் மதுரையின் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. மேலும் சாலைகளில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.
இந்த நிலையில் மதுரையின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு மாநகராட்சி சார்பிலும், போக்குவரத்து போலீசார் சார்பிலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கோரிப்பாளையம், கீழவாசல், தெற்குவாசல், காளவாசல், ஆரப்பாளையம், சிம்மக்கல், கீழமாசிவீதி, பெரியார் பஸ் நிலையம், பழங்காநத்தம், காமராஜர் சாலை, விளக்குத்தூண் ஆகிய நகரின் முக்கிய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.
இந்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக நடவடிக்கைகள் எடுப்பதற்கு மாநகராட்சி திட்டமிட்டு வருகிறது.
இந்த நிலையில் கோரிப்பாளையம் பகுதியில் அதிக வாகன போக்குவரத்து உள்ளதாலும், அரசு ஆஸ்பத்திரி உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்கள் சாலையோரங்களில் நிறுத்தப்படுவதாலும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.
இந்த நிலையில் அந்த பகுதியில் பல்லடுக்கு வாகனங்கள் நிறுத்தும் இடத்தை அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பல்லடுக்கு வாகன நிறுத்தத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததையடுத்து கோரிப்பாளையத்திலும் வாகன நிறுத்தும் இடம் அமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
இதற்காக டெண்டர் கோரப்பட்டுள்ளது. வாகன நிறுத்தம் அமைப்பதற்கான இடங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. விரைவில் உரிய இடம் தேர்வு செய்யப்பட்டு வாகனம் நிறுத்தும் இடம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் நகரில் ஏற்கனவே உள்ள 2 பல்லடுக்கு வாகன நிறுத்தம் இடங்களை நவீனப்படுத்தவும் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
இதனால் அரசு ஆஸ்பத்திரி, அண்ணா பஸ் நிலையம்,கோரிப்பாளையம் பகுதிகளில் சாலைகளில் வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க முடியும் என மாநகராட்சி எதிர்பார்க்கிறது. மேலும் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள காளவாசல், பை-பாஸ் ரோடு, மாசிவீதிகள், காமராஜர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் பல்லடுக்கு வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் அமைக்கப்பட்டால் வாகன ஓட்டிகளுக்கும், போக்குவரத்து போலீசாருக்கும் சிரமம் குறையும் என எதிர்பார்க்கலாம்.
- குளத்தை முறையாக பராமரிக்காததால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் கார், வேன், ஆட்டோ நிறுத்தும் இடமாக மாற்றியுள்ளனர்.
- பேரூராட்சியின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த குளத்தை முறையாக பராமரிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
நிலக்கோட்டை:
நிலக்கோட்ைட மினிபஸ்நிலையம் அருகே குமுந்தான்குளம் உள்ளது. இப்பகுதியில் பேரூராட்சி சார்பாக எம்.எல்.ஏ நிதியில் நாடகமேடை கட்டப்பட்டது. இந்தநிலையில் குளத்தை முறையாக பராமரிக்காததால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் கார், வேன், ஆட்டோ நிறுத்தும் இடமாக மாற்றியுள்ளனர்.
மேலும் போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகளில பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களையும் இங்கேயே நிறுத்தி விடுகின்றனர். சுற்றுவட்டார பகுதியில் உள்ளவர்கள் குளத்தில் குப்பைகளை கொட்டி செல்கின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் சிலர் குப்பைகளுக்கு தீ வைப்பதால் அவ்வழியாக செல்பவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது.
பேரூராட்சியின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த குளத்தை முறையாக பராமரிக்க வேண்டும். இதனை மீட்டு பூங்கா அமைத்து பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரும்பாலான பகுதிகளில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதனை மீட்க வேண்டும். இப்பகுதியில் உள்ள வாகனங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ராஜவீதி முதல் மணிக்கூண்டு வரை இருபுறமும் வாகனங்களை நிறுத்தக்கூடாது.
- புதிய திட்டம் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குனியமுத்தூர்,
கோவை டவுன்ஹால் பகுதியில் ஒப்பணக்கார வீதி , ராஜவீதி, வைசியாள் வீதி, தாமஸ் வீதி, பெரிய கடை வீதி, ரங்கே கவுண்டர் வீதி ஆகியவை உள்ளன. அந்த பகுதிக்கு வரும் வாகன ஓட்டிகள் ரோட்டின் இருபுறமும் மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி சென்றனர். இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.
டவுன்ஹால் பகுதியில் ஜவுளிக்கடை, நகைக்கடை, மளிகை, தானியம், காய்கறி ஆகியவற்றுக்கான மொத்த விற்பனை நிலையங்கள் உள்ளன. எனவே அனைவரும் இங்கு வாகனங்களில் வந்து செல்வது வழக்கம். அங்கு பொருட்களை வாங்கி விட்டு வெளியேற குறைந்தபட்சம் 5 மணி நேரம் பிடிக்கும். எனவே டவுன்ஹால் பகுதியில் போக்குவரத்து நெரிசல் தொடர்கதையாக இருந்து வந்தது.
இந்த நிலையில் மாலைமலர் நாளிதழில், ஒரு பக்கம் மட்டும் பார்க்கிங் செய்தால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கலாம் என்று தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டது. இது கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கவனத்துக்கு வந்தது.எனவே அவர் நேற்று டவுன்ஹால் பகுதிக்கு நேரடியாக வந்திருந்து ஆய்வு நடத்தினார்.
இதனை தொடர்ந்து அங்கு உடனடியாக ஒரு பக்க பார்க்கிங் முறை அமலுக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறுகையில் டவுன்ஹால் பகுதியில் ஒவ்வொரு மாதமும் வாகனங்களை நிறுத்தும் இடம், சுழற்சி முறையில் மாற்றப்படும் என்று தெரிவித்து உள்ளார்.
இதன்படி ஒப்பணக்கார வீதியில் வைசியாள் வீதி சந்திப்பு முதல் இடையர் வீதி சந்திப்பு வரை சாலையின் இரு புறமும் வாகனம் நிறுத்த அனுமதி இல்லை. இடையர் வீதி சந்திப்பு முதல் மில் ரோடு சந்திப்பு வரை சாலையின் இடது புறம் மட்டுமே வாகனங்களை நிறுத்த வேண்டும். ராஜவீதியில் ஒப்பணக்கார வீதி சந்திப்பு முதல் ரங்கே கவுண்டர் வீதி வரை, சாலையின் இரு புறமும் வாகனம் நிறுத்த அனுமதி இல்லை. ரங்கே கவுடா் வீதி முதல் தேர்நிலை திடல் வரை வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம்.
துணி வணிகர் சங்க பள்ளி தேர் திடல் முதல் கருப்பு கவுண்டர் வீதி வரை இடதுபுறம் வாகனங்களை நிறுத்த வேண்டும். ஆனால் கருப்பு கவுண்டர் வீதி சந்திப்பு முதல் சலிவன் வீதி வரை இருபுறமும் வாகனங்களை நிறுத்த அனுமதி இல்லை.
ராஜவீதி முதல் மணிக்கூண்டு வரை இருபுறமும் வாகனங்களை நிறுத்தக்கூடாது. கருப்பு கவுண்டர் வீதியில் ராஜவீதி சந்திப்பு முதல் வைசியாள் வீதி வரை வலது புறம் வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம்.
பெரிய கடை வீதியில் ரங்கே கவுடர் வீதி சந்திப்பு முதல் கருப்பு கவுண்டர் வீதி வரை இடதுபுறம் வாகனங்களை நிறுத்தலாம். வைசியாள் வீதியில் ரங்கே கவுண்டர் வீதி சந்திப்பில் பஸ் நிறுத்தம் எதிரே வலது புறம் நிறுத்த வேண்டும். கோவை டவுன்ஹால் பகுதியில் புதிதாக அமலுக்கு வந்து உள்ள வாகன நிறுத்த மாற்றத்திற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று மாநகர போலீசார் கேட்டுக்கொண்டு உள்ளனர்.
இந்த புதிய திட்டம் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதேபோல பல்வேறு அமைப்புகளும் டவுன்ஹால் வாகன நிறுத்த மாற்றம் பற்றிய அறிவிப்புக்கு பாராட்டு தெரிவித்து உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்