search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vinayagar temple"

    • பணிகள் முடியவுள்ள நிலையில் வருகிற 22-ந் தேதி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
    • கோவிலை திறப்பதற்காக வந்த அர்ச்சகர்கள் யாகசாலை சேதமடைந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    அருப்புக்கோட்டை:

    அருப்புக்கோட்டையில் 100 வருடங்கள் பழமையான விநாயகர் கோவில் உள்ளது. இந்த சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட இக்கோவிலில் கடந்த சில மாதங்களாக கும்பாபிஷேக சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்றன. அந்த பணிகள் முடியவுள்ள நிலையில் வருகிற 22-ந் தேதி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    இதையொட்டி கோவில் வளாகத்தில் யாகசாலைகள் அமைக்கப்பதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது. நேற்று விடுமுறை நாள் என்பதால் பணிகள் நடைபெறவில்லை.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவு அங்கு வந்த மர்ம நபர்கள் கோவிலுக்குள் அத்துமீறி நுழைந்து ஏற்கனவே கட்டப்பட்டிருந்த யாகசாலைகளை இடித்து சேதப்படுத்திவிட்டு சென்றனர். இன்று காலை கோவிலை திறப்பதற்காக வந்த அர்ச்சகர்கள் யாகசாலை சேதமடைந்தி ருப்பதை கண்டு அதிர்ச்சி யடைந்தனர். இதுகுறித்து அருப்புக்கோட்டை டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நாளை திங்கட்கிழமை 6 ம் ஆண்டு கும்பாபிஷேக விழா மற்றும் 108 சங்காபிஷேகம் நடைபெற உள்ளது
    • விழாவையொட்டி அனைவருக்கும் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    வெள்ளகோவில்.செப்.17-

    வெள்ளகோவில், எல்.கே.சி நகர் புற்றுக்கண் ஆனந்த விநாயகர் கோவிலில் நாளை திங்கட்கிழமை 6 ம் ஆண்டு கும்பாபிஷேக விழா மற்றும் 108 சங்காபிஷேகம் நடைபெற உள்ளது.

    வெள்ளகோவில், எல்.கே.சி நகரில் உள்ள புற்றுக்கண் ஆனந்த விநாயகர் கோவிலில் 6 ஆம் ஆண்டு கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இன்று காலை எல்.கே.சி நகர் பொதுமக்கள் கொடுமுடி சென்று தீர்த்தம் எடுத்து வந்து நாளை திங்கட்கிழமை காலை தீர்த்தாபிஷேகம், 108 சங்காபிஷேகம் நடைபெற உள்ளது.

    விழாவையொட்டி அனைவருக்கும் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை எல்.கே.சி நகர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

    • விழாவில் கணபதி ஹோமம், 108 தாமரை மகாலட்சுமி, 108 மூலிகை தன்வந்திரி ஆகியவை வைத்து ஹோம பூஜைகள் செய்யப்பட்டது.
    • விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூர் அவிநாசி ரோடு தண்ணீர் பந்தல் காலனியில் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ கன்னிமார் ,கருப்பராயன், ஸ்ரீ ஆதிபராசக்தி ஆகிய கோவில்கள் உள்ளது. இந்த கோவிலில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. முதலாம் ஆண்டு விழா நேற்று முதல் தொடர்ந்து நடைபெற்றது.

    விழாவில் கணபதி ஹோமம், 108 தாமரை மகாலட்சுமி, 108 மூலிகை தன்வந்திரி ஆகியவை வைத்து ஹோம பூஜைகள் செய்யப்பட்டது. மேலும் மூலவர் மூர்த்திகளுக்கு சிறப்பு அலங்கார பூஜை, பௌர்ணமி பூஜை உள்ளிட்டவை நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. 

    • தீர்த்தக்குளம் சிவகங்கை தீர்த்தம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
    • நான்காவது வெளிபிரகாரத்தில் விரிவான நந்தவனப்பகுதி உள்ளது.

    நடராஜர் என்று கூறும்போதே அடுத்து நினைவுக்கு வருவது சிதம்பரம் நடராஜர் கோவில். இது சோழ வம்சத்தின் அடையாளச்சின்னம்.

    அறத்துக்கும் ஆன்மீகத்துக்கும் நம் முன்னோர்கள் அளித்துச்சென்ற அங்கீகாரம். இது கோவில் மட்டுமல்ல, காலப்பெட்டகமும்கூட. வெவ்வேறு காலகட்டத்தில் பல ராஜ வம்சங்களால் இந்த கோவிலில் புதுப்பிப்பு செய்யப்பட்டும், புதிய கட்டமைப்புகள் சேர்க்கப்பட்டும் இருக்கிறது.

    கோவில் வளாகம் பல்வேறு அடுக்கடுக்கான தொகுதிகளை கொண்டு அமைந்திருப்பது அற்புதமான கட்டிடக்கலை அம்சமாக கருதப்படுகிறது.

    ராஜகோபுர வாயிலை தாண்டி கோவில் வளாகத்தில் நாம் கால் பதித்த உடனேயே பிரமிப்பு புராதன திராவிட கட்டிடக்கலையின் நகரின் மையப்பகுதியில் ஒரு பிரமாண்ட நீள்சதுர அமைப்பில் வீற்றிருக்கும் இந்த கோவிலின் ஒட்டுமொத்த வளாகமும் கோட்டைச்சுவர்கள் போன்று 10 மீ உயரம் கொண்ட கருங்கல் சுவர்களால் கட்டப்பட்டுள்ளது. அது அழகாக பிரிக்கப்பட்டு அடுத்தடுத்த பிரகாரங்களாக கீழிறங்கி கொண்டே செல்கிறது.

    நான்காவது வெளிபிரகாரத்தில் விரிவான நந்தவனப்பகுதி உள்ளது. இந்த பிரகாரத்தில் சிவகங்கை தீர்த்தம் எனும் புண்ணியதீர்த்தம், ஆயிரங்கால் மண்டபம், விநாயகர் கோவில், சிவகாம சுந்தரியம்மன் ஆலயம், நந்தி சிலை, நவக்கிரக சன்னதிகள், நடன சபை மற்றும் பல சிறு சன்னதிகள் அமைந்துள்ளன.

    மேலும் தூண்களோடு காணப்படும் ஒரு நடைக்கூட அமைப்பும் கோபுரத்தோடு இணைந்த மதில் சுவரையட்டியே காணப்படுகிறது. கிழக்கு கோபுர வாயிலை ஒட்டி வலப்புறத்தில் மற்றொரு வாசல் அமைப்பும் உள்ளது. இது திருவிழா ஊர்வலங்களின்போது உற்சவ மூர்த்திகள் வெளிவர பயன்படுத்தப்படுகிறது.

    நான்காவது பிரகாரத்தை அடுத்து கோயிலின் நடுநாயகமாக வீற்றிருக்கும் மூன்றாவது பிரகாரத்திற்குள் இறங்குவதற்கு கிழக்கும் மேற்கும் வாசல்கள் உள்ளன. இந்தப்படிகளின்வழி இறங்கி மூன்றாவது பிரகாரத்தில் நாம் நுழையும்போதே கருங்கல் அமைப்புகளின் பிரம்மாண்டம் மற்றும் இருள் கவிந்த பாதாளத்தின் குளிர்ச்சியோடு கோவில் நம்மை உள்வாங்கி கொள்கிறது.

    உயரமான தூண்கள் மற்றும் கருங்கல் சிற்ப அமைப்புகளோடு காட்சியளிக்கும் மூன்றாவது பிரகாரத்திலிருந்து அடுத்த இரண்டாவது பிரகாரத்திற்குள் நுழைய கிழக்குத்திசையில் ஒரு வாசல் மட்டுமே உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

    இரண்டாவது பிரகாரத்தில் தேர்போன்ற சன்னதி, தங்கவிமானம் மற்றும் திறந்தவெளி சுற்றுப்பிரகாரம் போன்றவற்றை காணலாம். மேலும் முதல் பிரகாரமான கருவறை இங்குதான் வீற்றிருக்கிறது.

    இதுவே சித்சபை என்றழைக்கப்படுகிறது. இதற்கு எதிரே கனகசபை மற்றும் நிருத்யசபை ஆகியவை அமைந்துள்ளன. இது தவிர மூன்றாவது பிரகாரத்தில்தேவ சபையும், நான்காவது பிரகாரத்தில் ஆயிரங்கால் மண்டபம் எனப்படும் ராஜ சபையும், ஐந்து சபைகள் நடராஜர் கோவிலின் முக்கிய அங்கங்களாக விளங்குகின்றன.

    நடராஜர் கோவிலின் கருவறை அற்புதமான கலையம்சம் நிரம்பிய கருங்கல் சிற்ப வேலைப்பாடுகளுடன் தங்கவிமானத்தோடு காட்சியளிக்கிறது. ஆதித்ய சோழனின் மகனான பராந்தக சோழன் இந்த தங்கவிமானக்கூரையை அமைத்ததாக தெரியவருகிறது.

    இதன் மூலம் 'பொன்வேய்ந்த சோழன்' எனும் பட்டப்பெயரும் அவருக்கு கிடைத்திருக்கிறது.

    கோவிலின் முக்கிய அங்கமாக விளங்கும் தீர்த்தக்குளம் சிவகங்கை தீர்த்தம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த குளத்தில் நீர் என்றுமே வற்றுவதில்லை. குளத்தை சுற்றிலும் கற்தூண்களால் தாங்கப்பட்டு அமைக்கப்பட்டிருக்கும் சுற்றுமண்டபப்பாதை கலைநுணுக்கத்துடன் காட்சியளிக்கிறது.

    கோவிலின் வடக்கு கோபுர வாயிலுக்கு அருகே அமைந்துள்ள சிவகாம சுந்தரி அம்மன் கோவில் ஒரு தனியான கோவில் வளாகமாக கலைநயம் மிக்க கற்சிற்ப அலங்கார நுணுக்கங்களோடு அமைந்துள்ளது.

    சிவராத்திரியின்போது நடராஜர் கோவிலில் நாட்டியாஞ்சலி எனும் நடன ஆராதனை நிகழ்ச்சி வெகு சிறப்பாக ஐந்து நாட்களுக்கு நடத்தப்படுகிறது. இது தவிர மார்கழி திருவாதிரை மற்றும் ஆனி திருமஞ்சனம் போன்ற விழாக்காலங்களில் தேர்த்திருவிழா மற்றும் தரிசனம் போன்ற விமரிசையான சடங்குகள் இக்கோயிலில் கொண்டாடப்படுகின்றன.

    • இந்த கோவில் விநாயகர் சிலை உயரமானதாக கருதப்படுகிறது.
    • விநாயகரின் பின்பகுதியில் ஸ்ரீ சக்கரம் அமைந்துள்ளது.

    நஞ்சையும், புஞ்சையும் கொஞ்சி விளையாடும் தஞ்சை தரணியின் மேற்கு நோக்கி சில கிலோ மீட்டர் சென்றால் பிள்ளையாருக்காக தோன்றிய ஒரு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் பெயர் பிள்ளையார்பட்டி.

    சோழர்களின் அழகிய ஆலயத்தோடு எழில்மிகு தோற்றத்துடன் அமைந்திருக்கிறது இங்குள்ள ஹரித்ரா விநாயகர் கோவில். பிள்ளையார்பட்டி கோவிலில் உள்ள ஹரித்ரா விநாயகர் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தவர். இந்த கோவிலில் உள்ள ஹரித்ரா விநாயகரை மாமன்னன் ராஜராஜ சோழன் பிரதிஷ்டை செய்ததாக கூறப்படுகிறது.

    தல வரலாறு

    ராஜராஜ சோழன் தனது வாழ்க்கையில் பல்வேறு சாதனைகளையும், சிறப்புகளையும் பெற்றிருந்தார். அதனை உலகுக்கு எடுத்து காட்டும் விதமாக அதிசயங்களே அசந்து போகும் அளவுக்கு அமைக்கப்பட்ட அற்புதமான ஆலயம் பெருவுடையார் கோவில் எனப்படும் தஞ்சை பெரிய கோவில்.

    பெரிய கோவிலை பிரதிஷ்டை செய்வதற்காக ராஜராஜ சோழன், புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசலில் உள்ள சிற்பக் கூடத்தில் இருந்து நந்தி மற்றும் விநாயகர் சிலைகளை யானை பூட்டிய தேரில் வைத்து எடுத்து வந்ததாக கூறப்படுகிறது.(காவிரியின் பிறப்பிடமாக இருக்கும் கர்நாடக மாநிலம் குடகில் இருந்து இந்த பிள்ளையாரை எடுத்து வந்ததாகவும் மற்றொரு கருத்து நிலவுகிறது.)

    தேர் அச்சு முறிந்தது

    அப்படி வரும் வழியில் விநாயகர் சிலை வைக்கப்பட்டிருந்த தேரின் அச்சு முறிந்து தேர் நின்று விட்டது. அப்போது வீரர்கள் முறிந்த தேர் அச்சை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். வீரர்கள் தேர் அச்சை சரி செய்த பின்னும் தேர் அந்த இடத்தில் இருந்து நகன்று செல்லவில்லை.

    இதனால் இந்த இடத்தில் தான் விநாயகர் கோவில் கொண்டு இருக்க விரும்புகிறார் என கருதிய ராஜராஜ சோழன், விநாயகர் சிலையை தஞ்சை பெரிய கோவிலுக்கு எடுத்து செல்ல வேண்டாம் என முடிவு செய்து அச்சு முறிந்து தேர் நின்ற இடத்தில் விநாயகரை பிரதிஷ்டை செய்து கோவில் எழுப்பினார்.

    பிள்ளையார்பட்டி

    இதுவே பிள்ளையார்பட்டி ஹரித்ரா விநாயகர் கோவில் ஆகும். இதனால் இந்த ஊர் பிள்ளையார்பட்டி என பெயர் பெற்றது. இந்த கோவிலில் உள்ள விநாயகரை வழிபட்டால் தீய வினைகள் அகலும் என்றும் கிரக தோஷங்களால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பக்தா்கள் தங்களை தற்காத்துக்கொள்ள முடியும் என்பதும் பக்தர்கள் நம்பிக்கை.

    மேலும் நோயற்ற வாழ்வை அளித்து ஆயுள் பலத்தை அளிக்கும் சக்தி இத்தலத்தில் உள்ள விநாயகருக்கு உண்டு என்பதால் இந்த கோவிலுக்கு பக்தர்கள் வந்து செல்ல தவறுவது இல்லை.

    சோழர் கால கட்டிட அமைப்பு

    தற்போது உள்ள இந்த கோவில் 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. சோழர் கால கட்டிட அமைப்பில் கோவில் அமைந்துள்ளது. 11 அடி உயரமும், 5 அடி அகலமும் உள்ள பிள்ளையாரை பீடத்தி்ல் அமர்த்தி அதன் மீது ஆலயத்தை கட்டியதாக கூறப்படுகிறது. அதற்கான அடையாளங்களும் உள்ளன.

    இந்த கோவிலில் பெரிய பிள்ளையாரை தரிசிக்க மிகவும் அடக்கமாக செல்ல வேண்டும் என்பதற்காக சிறிய நுழைவாசல் அமைக்கப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.

    கோவில் குடமுழுக்கு

    பல்வேறு சிறப்புகளை பெற்ற இந்த கோவிலில் குடமுழுக்கு வருகிற 9-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இதையொட்டி கோவிலில் பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. இந்த கோவிலில் பிள்ளையார் மட்டுமின்றி அய்யப்பன், சிவன், நவக்கிரக சன்னதிகளும் அமைந்துள்ளன.

    இந்த கோவிலில் சிவன், நவக்கிரகம், பைரவர் ஆகிய சன்னதிகள் ஒரே நேர்கோட்டில் அமைந்திருப்பது சிறப்பம்சம் ஆகும். இந்த கோவிலில் கார்த்திகை சோமவார வழிபாடு, பிரதோஷம், அஷ்டமி பூஜை, கிருத்திகை வழிபாடு ஆகியவை விமரிசையாக நடக்கும்.

    கடன் நிவர்த்தி விநாயகர்

    இந்த கோவிலில் உள்ள ஹரித்ரா விநாயகர் பக்தர்களால் கடன் நிவர்த்தி விநாயகர் என அன்போடு அழைக்கப்படுகிறார். காரணம் இங்கு நடைபெறும் சங்கடஹர சதுர்த்தி வழிபாட்டில் தொடர்ந்து 8 முறை கலந்து கொண்டு வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும். தீராத கடன் பிரச்சனைகள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    ராகு-கேது தோஷம், திருமண தடை நீங்கும். வினை தீர்ப்பான் விநாயகர் என்ற சொல்லுக்கு ஏற்ப பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றும் வல்லமை பெற்றவர் இக்கோவில் விநாயகர்.

    சிறப்பு வழிபாடு

    பிள்ளையார்பட்டி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி மற்றும் கார்த்திகை சோமவார வழிபாடு மிக விமர்சையாக நடைபெறும். மேலும் பிரதோஷ வழிபாடும் இக்கோவிலில் நடைபெறுவது தனி சிறப்பு. பிரதோஷ தினத்தன்று நந்தியெம்பெருமானுக்கு மஞ்சள், பால், திரவியப்பொடி, தயிர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்படும்.

    அஷ்டமி பூஜை அன்று கால பைரவருக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்படும். தற்போது இக்கோவிலில் புதிதாக அகஸ்தியர் சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. வியாழக்கிழமைதோறும் அகஸ்தியர் வழிபாடும் நடைபெறுகிறது.

    தலவிருட்சம்

    பிள்ளையார்பட்டி விநாயகர் கோவிலில் காலை 7.30 மணி முதல் 10 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையும் சாமி தரிசனம் செய்யலாம். கோவில் தலவிருட்சமாக வில்வமரம் அமைந்துள்ளது. இந்த மரம் சிவனின் நேர் எதிரில் அமைந்திருப்பது சிறப்பம்சமாகும்.

    இந்த கோவிலில் அய்யனார், நாகலம்மன், முருகன், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, சண்டிகேஸ்வரர் ஆகிய தெய்வங்கள் தனி சன்னதியில் உள்ளனர். விநாயகரின் பின்பகுதியில் ஸ்ரீ சக்கரம் அமைந்துள்ளது. வயிற்றுப்பகுதியில் ராகு-கேது அமைந்திருப்பது இத்திருத்தல மகிமையை எடுத்துக்காட்டும் விதமாக உள்ளது. ஹரித்ரா விநாயகருக்கு புளியோதரை, சர்க்கரை பொங்கல் படையலிட்டு வழிபடுவது கூடுதல் சிறப்புகளை தரும் என பக்தர்கள் தெரிவிக்கின்றனர். ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவில் ஹரித்ரா விநாயகர் மனம் உருகி வேண்டும் பக்தர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பார் என்பதில் எள்ளளவும் அய்யம் வேண்டாம் என்பதே பக்தர்களின் கூற்றாகும்.

    நந்தி வாகனத்தில் விநாயகர்

    இந்த கோவில் விநாயகர் சிலை உயரமானதாக கருதப்படுகிறது. இந்த விநாயகர் அருமையான சிற்ப வேலைபாடுகளுடன் செதுக்கப்பட்டுள்ளார். இத்தகைய சிலை அமைப்புகளை காண்பது அரிது என கூறப்படுகிறது. வழக்கமாக கோவில் கட்டி பிரதிஷ்டை செய்வது வழக்கம். ஆனால் இந்த கோவில் பிரதிஷ்டை செய்து இதன் பிறகு கோவில் கட்டப்பட்டது தனி சிறப்பு ஆகும். இக்கோவிலில் பிள்ளையாருக்கு வாகனமும் மாறுகிறது. முன்பகுதியில் மூஷிக வாகனத்துக்கு பதில் நந்தியே எழுந்தருளியிருக்கிறார்.

    கோவிலுக்கு செல்வது எப்படி?

    தஞ்சையில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு செல்ல தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் இருந்து பஸ் வசதி உள்ளது. வெளிமாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்கள் தஞ்சை புதிய பஸ் நிலையம் வந்து அங்கிருந்து ஆட்டோ, ஷேர் ஆட்டோ, மினி பஸ் மூலம் சென்று வரலாம்.

    சென்னையில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் பஸ் அல்லது ரெயில் மூலம் தஞ்சைக்கு வர வேண்டும். பின்னர் அங்கிருந்து தஞ்சை புதிய பஸ் நிலையத்துக்கு சென்று அங்கிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள பிள்ளையார்பட்டி பிள்ளையாரை தரிசிக்கலாம். தென்மாவட்டங்களில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் தஞ்சைக்கு வந்து அங்கிருந்து மேற்கண்ட வழித்தடம் வழியாக கோவிலை அடையலாம்.

    • கோவில்பட்டி செல்வ மங்கள விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை நடைபெற்றது.
    • விழாவில் சுற்று வட்டார மக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி சாய்சிட்டி நகரில் அமைந்துள்ள செல்வ மங்கள விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை நடைபெற்றது. இதனையொட்டி காலை 9 மணிக்கு செல்வ மங்கள விநாயகருக்கு மஞ்சள், பால், தயிர், தேன், சந்தனம் போன்ற 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை சுப்பிரமணியன் அய்யர் செய்தார். விழாவில் சுற்று வட்டார மக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல் பிரசாதமாக வழங்கப்பட்டது.

    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
    • இந்த கோவில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது.

    ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் ராமநாதபுரம் சமஸ்தான மற்றும் தேவஸ்தான தர்மகர்த்தா ராணி பிரம்ம ராஜேஸ்வரி நாச்சியாருக்கு பாத்தியப்பட்ட உப்பூர் வெயில் உகந்த விநாயகர் கோவில் உள்ளது. 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவிலில் உள்ள வெயில் உகந்த விநாயகரை ராமபிரான் சீதையை மீட்க இலங்கைக்கு செல்லும் வழியில் பூஜித்து சென்றதாக ராமாயண புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

    மிக பழமையான இந்த கோவிலில் விநாயகர் வேண்டியவருக்கு வேண்டிய வரத்தை அளிப்பதாக பக்தர்களின் நம்பிக்கை. மிகவும் பிரசித்திபெற்ற இக்கோவிலின் முன்புறம் மணி மண்டபம் சில லட்சங்கள் மதிப்பீட்டில் பிரமாண்டமாக கட்டி எழுப்பப்பட்டு மிகவும் பழமை வாய்ந்த இந்த கோவிலில் 30 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    விழா கடந்த 5-ந் தேதி முதல்கால யாக பூஜையுடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை 7.45 மணிக்கு 6-ம் கால யாக பூஜை தொடங்கி நடைபெற்றது. தொடர்ந்து காலை 9.45 மணிக்கு மகாபூர்ணகுதி நடைபெற்று 10.45 மணிக்கு மேல் கடம் புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெற்றது. புரோகிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க, கருடன் வானில் வட்டமிட காலை 11.20 மணிக்கு ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை தர்மகர்த்தா ராணி பிரம்மகிருஷ்ண ராஜேஸ்வரி நாச்சியார், ராமநாதபுரம் ராஜா நாகநாத சேதுபதி, தேவகோட்டை ஜமீன்தார் நாராயணன் செட்டியார், திவான் பழனிவேல் பாண்டியன், உப்பூர் முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணன், குமரய்யா அம்பலம், விழா கமிட்டியினர் முன்னிலையில் கோவிலின் ராஜகோபுரம், விமானம் மற்றும் உப சன்னதிகளின் கலசங்களிலும் ஒரே நேரத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக இந்த விழாவில் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்கள் திரளாக பங்கேற்றனர்.

    மாலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம், விநாயகர், சித்தி, புத்தி தெய்வங்களுடன் திருக்கல்யாண நிகழ்ச்சியும், சாமி வீதிஉலாவும் நடந்தது. தொடர்ந்து உலக நன்மைக்காக விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. விழா ஏற்பாட்டை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

    • இன்று திருக்கல்யாணமும், சுவாமி வீதி உலா நிகழ்ச்சியும் நடக்கிறது.
    • விநாயகருக்கு சிறப்பு அபிஷேகமும், தீபஆராதனையும் நடைபெற உள்ளது.

    ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் ராமநாதபுரம் சமஸ்தான மற்றும் தேவஸ்தான தர்மகர்த்தா ராணி பிரம்ம ராஜேஸ்வரி நாச்சியாருக்கு பாத்தியப்பட்ட உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவில் உள்ளது. 3000 ஆண்டுகள் பழமையான இக்கோவிலில் உள்ள வெயில் உகந்த விநாயகரை ராமபிரான் சீதையை மீட்க இலங்கைக்கு செல்லும் வழியில் பூஜித்து சென்றதாக ராமாயண புராணத்தில் கூறப்பட்டுள்ளது. மிக பழமையான இந்த கோவில் கும்பாபிஷேகம் இன்று(வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று 4-ம் கால யாக பூஜையும், பூர்ணகுதி, தீபாராதனையும், 5-ம் கால யாக பூஜையும் நடைபெற்றது. விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    இன்று கும்பாபிஷேகத்தை முன்னிட்டு காலை 7.45 மணிக்கு 6-ம் கால யாக பூஜையும், கோபூஜையும், நாடிசந்தானமும், காலை 9.45 மணிக்கு மகாபூர்ணகுதி, தீபாராதனையும், காலை 10.45-க்கு மேல் 11.45-க்குள் விநாயகருக்கு கும்பாபிஷேக விழாவும் நடைபெற உள்ளது. மதியம் 12 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

    மாலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம், விநாயகருக்கு சித்தி, புத்தி ஆகிய தெய்வங்களுடன் திருக்கல்யாணமும், சுவாமி வீதி உலா நிகழ்ச்சியும் நடக்கிறது. தொடர்ந்து உலக நன்மைக்காக விநாயகருக்கு சிறப்பு அபிஷேகமும், தீபஆராதனையும் நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தை காண சுற்று வட்டார பக்தர்களும், ராமநாதபுரம் மற்றும் வெளி மாவட்டத்தை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களும் கலந்து கொள்ள உள்ளனர். விழா ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

    • காலையில் கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை தொடங்கியது.
    • யாகசாலை பூஜையில் இருந்து புனிதநீர் எடுத்துச் செல்லப்பட்டு கோவில் கோபுர கலசத்திற்கு ஊற்றப்பட்டது.

    உடன்குடி:

    உடன்குடி அருகே உள்ள குலசேகரன்பட்டினம் உதயமார்தாண்ட விநாயகர் கோவிலில் வருசாபிஷேகம் நடைபெற்றது. இதை முன்னிட்டு காலையில் கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை தொடங்கியது. பின்பு யாகசாலை பூஜையில் இருந்து புனிதநீர் எடுத்துச் செல்லப்பட்டு கோவில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

    விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வெங்கடாசலம் செய்திருந்தார். இதில் மீனாட்சிசுந்தரம், சண்முகம், இல்லங்குடி உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனிப்பெயர்ச்சியானதை யொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.
    • பக்தர்களுக்கு சிறப்பு பரிகார பூஜை செய்யப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.

    உடுமலை :

    உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சனி பெயர்ச்சியையொட்டி சிறப்பு யாகசாலை பூஜை நடைபெற்றது.மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனிப்பெயர்ச்சியானதை யொட்டி உடுமலை திருப்பதி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.சித்தி புத்தி விநாயகர் கோவிலில் அதிகாலையில் கோ பூஜை மற்றும் ப்ரீதி யாகசாலை ஹோமமும் நடந்தது. தொடர்ந்து சனி பகவானுக்கு 108 பால்குடம் அபி ஷேகம், தீபாராதனை நடந்தது பக்தர்களுக்கு சிறப்பு பரிகார பூஜை செய்யப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.

    பிரசன்ன விநாயகர் கோவிலில் சனிப்பெயர்ச்சியை ஒட்டி சுவாமிக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பலவி தமான திரவியங்களால் சிறப்பு அபிஷேக பூஜை நடந்தது. சனி பகவானுக்கு சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை காட்டப்ப ட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சனிபக வானை வழிபட்ட னர்.

    • விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • சார்பு ஆய்வாளர் அய்யனார் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா கொன்னத்தான்பட்டி கிராமத்தில் முத்து விநாயகர் கோவில் புனர் நிர்மானம் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக 3 நாட்கள் நான்கு கால கணபதி, லட்சுமி ஹோமம் என பல்வேறு ஹோமங்கள் நடந்தன.

    பரிவார தெய்வங்களுக்கு மகா பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. சிவாச்சாரியார்கள் யாக வேள்வியில் இருந்து கடம் புறப்பாடாகி வேத மந்திரங்கள் முழங்க கும்பத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை பழனியப்ப தேவர், சோலை மணி தேசிகர் மற்றும் கிராம இளைஞர்கள், பொதுமக்கள், செய்திருந்தனர்.

    இதில் மகிபாலன்பட்டி, நெற்குப்பை உள்ளிட்ட 24½ கிராமத்தைச் சேர்ந்த நாட்டார்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் கோவில் நிர்வாகத்தின் சார்பில் அன்னதானம்-பிரசாதம் வழங்கப்பட்டது.

    நெற்குப்பை காவல் ஆய்வாளர் ரவீந்திரன், சார்பு ஆய்வாளர் அய்யனார் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • சங்கடகரசதுர்த்தி முன்னிட்டு செங்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
    • விநாயகருக்கு தேங்காய் மாலை அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு விஷேச தீபாராதனை நடைபெற்றது.

    செங்கோட்டை:

    சங்கடகரசதுர்த்தி முன்னிட்டு செங்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. செக்கடி விநாயகர் கோவிலில் மாலையில் சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடந்தது. தொடர்ந்து விநாயகருக்கு தேங்காய் மாலை அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு விஷேச தீபாராதனை நடைபெற்றது. ஏற்பாடுகளை கணேச பட்டர் செய்திருந்தார்.

    இதேபோல் வல்லம், இலஞ்சி, பிரானூர், புளியரை, புதூர், கேசவபுரம், கட்டளைகுடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிவபிள்ளையார் செல்வவிநாயகர் கோவில், சந்திவிநாயகர், ஸ்ரீமுக்தி விநாயகர், வீரகேரள விநாயகர் உள்ளிட்ட அனைத்து விநாயகர் கோவில்களிலும் சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. கலந்து கொண்ட பக்தர்களுக்கு அருள்பிரசாதம் வழங்கப்பட்டது.

    ×