என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கணபதி கோவில்"

    • வேத காலத்தில் உலகம் முழுவதுமே கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டிருந்தது.
    • சுனை நீரைக் கொண்டு இங்கிருக்கும் தெய்வ விக்கிரகங்கள் அனைத்திற்கும் அபிஷேகம் செய்யப்படுகிறது.

    கர்நாடக மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற ஊரில் ஒன்று, சிருங்கேரி. இங்கு ஆதிசங்கரரால் நிறுவப்பட்ட, சைவ மத பீடம் இருக்கிறது. இந்த ஊரின் அருகில் 'கேசவே' என்ற திருத்தலம் அமைந்துள்ளது. இங்கு 'கமண்டல நதி கணபதி திருக்கோவில்' இருக்கிறது. உயிர்கள் அனைத்துக்கும் ஆதாரமாக, அவசியமாக இருக்கும் ஒரே பொருள், நீர். அந்த நீர் தொடர்ந்து சுரந்து கொண்டே இருக்கும் ஆலயமாக இந்த கமண்டல கணபதி கோவில் திகழ்கிறது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த ஆலயத்தில், விநாயகர் விக்கிரகத்தின் முன்பாக உள்ள ஒரு சிறிய துளையில் இருந்து தண்ணீர் பொங்கி வந்தபடியே இருக்கிறது.

    வேத காலத்தில் உலகம் முழுவதுமே கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டிருந்தது. அப்போது தாகத்தை தணிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் அனைத்து உயிர்களும் பரிதவித்தன. அப்போது அன்னை உமாதேவி இந்த கோவிலில் வீற்றிருக்கும் தன் மூத்த மைந்தனான கமண்டல கணபதி விக்ரகத்திற்கு அடியில், வற்றாத தண்ணீர் சுனையை ஏற்படுத்தி உலக உயிர்களின் தாகத்தை தீர்த்ததாக தல வரலாறு கூறுகிறது.

    சில நேரங்களில் பொங்கியும், சில நேரங்களில் சாதாரண அளவிலும் இந்த துளையிலிருந்து நீர் வந்து கொண்டே இருக்கிறது. இந்த சுனை நீரைக் கொண்டு இங்கிருக்கும் தெய்வ விக்கிரகங்கள் அனைத்திற்கும் அபிஷேகம் செய்யப்படுகிறது. இதனை புனித தீர்த்தமாக கருதி பக்தர்கள் குடுவைகளில் பிடித்துச்செல்கின்றனர். விநாயகரின் முன்பாக உற்பத்தியாகும் புனித நீர், அங்கிருந்து 14 கிலோமீட்டர் தூரம் ஓடி, சற்று தொலைவில் பாயும் துங்கா நதியில் கலக்கிறது.

    • மேலூர் ஜோதி நகரில் லட்சுமி கணபதி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • காப்புகட்டிய பக்தர்கள் கும்பத்தை சுமந்து கோபுரத்திற்கு கொண்டு சென்றனர்.

    மேலூர்

    மேலூர் ஜோதி நகரில் லட்சுமி கணபதி கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. 2-ந்தேதி விழா தொடங்கியது. விழாவை முன்னிட்டு கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி உள்பட பல்வேறு வழிபாடுகள் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து முதல் கால யாக பூைஜ, 2-ம் கால யாக சாலை பூஜை, 3-ம் கால யாக சாலை பூஜை நடைபெற்றது. பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் ஆன்மிக சொற்பொழிவு ஆற்றினார். காப்புகட்டிய பக்தர்கள் கும்பத்தை சுமந்து கோபுரத்திற்கு கொண்டு சென்றனர். யாக சாலையை சுற்றி வந்து திருப்புவனம் ராஜ.சொக்கலிங்கம் சிவாச்சாரியார்கள் தலைமையில் வேத மந்திரங்கள் முழங்க புனித தீர்த்தத்தை கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    அப்போது வாகனத்தில் கருடன் வட்டமிட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அதனைத்தொடர்ந்து பிள்ளையாருக்கு மஹா அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து கோவில் முன்பு ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழா ஏற்பாட்டினை ஜோதிநகர் மற்றும்கும்பாபிஷேக திருப்பணிக்குழு நிர்வாகிகள், இளைஞர்கள் மற்றும் ஜோதி நகர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    ×