search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ganapati temple"

    • மேலூர் ஜோதி நகரில் லட்சுமி கணபதி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • காப்புகட்டிய பக்தர்கள் கும்பத்தை சுமந்து கோபுரத்திற்கு கொண்டு சென்றனர்.

    மேலூர்

    மேலூர் ஜோதி நகரில் லட்சுமி கணபதி கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. 2-ந்தேதி விழா தொடங்கியது. விழாவை முன்னிட்டு கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி உள்பட பல்வேறு வழிபாடுகள் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து முதல் கால யாக பூைஜ, 2-ம் கால யாக சாலை பூஜை, 3-ம் கால யாக சாலை பூஜை நடைபெற்றது. பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் ஆன்மிக சொற்பொழிவு ஆற்றினார். காப்புகட்டிய பக்தர்கள் கும்பத்தை சுமந்து கோபுரத்திற்கு கொண்டு சென்றனர். யாக சாலையை சுற்றி வந்து திருப்புவனம் ராஜ.சொக்கலிங்கம் சிவாச்சாரியார்கள் தலைமையில் வேத மந்திரங்கள் முழங்க புனித தீர்த்தத்தை கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    அப்போது வாகனத்தில் கருடன் வட்டமிட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அதனைத்தொடர்ந்து பிள்ளையாருக்கு மஹா அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து கோவில் முன்பு ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழா ஏற்பாட்டினை ஜோதிநகர் மற்றும்கும்பாபிஷேக திருப்பணிக்குழு நிர்வாகிகள், இளைஞர்கள் மற்றும் ஜோதி நகர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    கன்னியாகுமரி விவேகானந்தபுரம் விவேகானந்த கேந்திர வளாகத்தில் உள்ள ஏகாட்சர மகாகணபதி கோவிலில் முதலாம் ஆண்டு வருஷாபிஷேக விழா இன்று(வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
    கன்னியாகுமரி விவேகானந்தபுரம் விவேகானந்த கேந்திர வளாகத்தில் உள்ள ஏகாட்சர மகாகணபதி கோவிலில் முதலாம் ஆண்டு வருஷாபிஷேக விழா இன்று(வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி இன்று காலை 6.30 மணிக்கு விநாயகர் பூஜையும், கணபதி ஹோமமும் நடக்கிறது. பின்னர் வேதாகம பாராயணம் நடக்கிறது. காலை 8.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் ஏகாட்சர மகாகணபதிக்கு முதலாம் ஆண்டு வருஷாபிஷேக விழா நடக்கிறது. மதியம் 12 மணிக்கு அன்னதானம் நடக்கிறது.

    இரவு 7 மணிக்கு பலவண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மூஷிக வாகனத்தில் விநாயகர் எழுந்தருளி கேந்திர வளாகத்தில் மேள- தாளம் முழங்க வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. அப்போது பக்தர்கள் தேங்காய்-பழம் படைத்து வழிபடுவார்கள்.

    விழா ஏற்பாடுகளை விவேகானந்த கேந்திர துணைத்தலைவர்கள் பாலகிருஷ்ணன், நிவேதிதா, பொதுச்செயலாளர் பானுதாஸ், பொருளாளர் அனுமந்தராவ், கேந்திர மூத்த ஊழியர் கிருஷ்ண மூர்த்தி, தலைமை அலுவலக செயலாளர் ரகுநாதன் நாயர், கேந்திர நிர்வாக அதிகாரி அனந்தஸ்ரீபத்மநாபன், வளாக பொறுப்பாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் செய்து உள்ளனர். 
    ×