search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Varusabhisegam"

    • காலையில் கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை தொடங்கியது.
    • யாகசாலை பூஜையில் இருந்து புனிதநீர் எடுத்துச் செல்லப்பட்டு கோவில் கோபுர கலசத்திற்கு ஊற்றப்பட்டது.

    உடன்குடி:

    உடன்குடி அருகே உள்ள குலசேகரன்பட்டினம் உதயமார்தாண்ட விநாயகர் கோவிலில் வருசாபிஷேகம் நடைபெற்றது. இதை முன்னிட்டு காலையில் கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை தொடங்கியது. பின்பு யாகசாலை பூஜையில் இருந்து புனிதநீர் எடுத்துச் செல்லப்பட்டு கோவில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

    விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வெங்கடாசலம் செய்திருந்தார். இதில் மீனாட்சிசுந்தரம், சண்முகம், இல்லங்குடி உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ×