என் மலர்

    நீங்கள் தேடியது "பாஜக"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பாரதியஜனதா மீது கூறிய கருத்துக்கள் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
    • பேச்சு அடங்கிய வீடியோவை பாரதியஜனதா கட்சியினர் எக்ஸ் வலை தளத்தில் வெளியிட்டுள்ளனர்.

    கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. வாக இருந்து வருபவர் பி.ஆர். பாட்டீல். இவர் பாரதியஜனதா மீது கூறிய கருத்துக்கள் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

    அடுத்த பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி வெற்றி பெற அவர்கள் (பா.ஜனதா)ராமர் கோவில் மீது குண்டுகள் வீசி முஸ்லீம்கள் மீது பழி சுமத்துவார்கள் என குற்றம் சாட்டி உள்ளார். அவரது பேச்சு அடங்கிய வீடியோவை பாரதியஜனதா கட்சியினர் எக்ஸ் வலை தளத்தில் வெளியிட்டுள்ளனர்.

    இது கர்நாடகாவில் பரபரப்பாகி உள்ளது. இது தொடர்பாக பாரதியஜனதாவினர் கூறும் போது இந்து-முஸ்லீம் இடையே பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ பாட்டீல் கருத்து தெரிவித்து உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தமிழ்நாட்டில் இருந்து மதவாத சக்தியான பா.ஜ.க.வை வேரோடும், வேரடி மண்ணோடும் அகற்ற வேண்டும்.
    • பா.ஜ.க.வை விட்டு விலகுவது என்ற முடிவை அ.தி.மு.க. எடுத்தால் தமிழகத்தில் உள்ள அனைத்து திராவிட இயக்கங்களும் வரவேற்கும்.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

    என்னை பொறுத்தவரை திராவிட இயக்கங்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து தமிழ்நாட்டில் இருந்து மதவாத சக்தியான பா.ஜ.க.வை வேரோடும், வேரடி மண்ணோடும் அகற்ற வேண்டும்.

    பா.ஜ.க.வை விட்டு விலகுவது என்ற முடிவை அ.தி.மு.க. எடுத்தால் தமிழகத்தில் உள்ள அனைத்து திராவிட இயக்கங்களும் வரவேற்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வரும் பாராளுமன்ற தேர்தலில் எங்கள் கூட்டணி வெற்றி பெறும்.
    • கட்சியின் மூத்த தலைவர்கள் யாரும் புறக்கணிக்கப்படுவதில்லை.

    புதுச்சேரி:

    புதுவை மாநில பா.ஜனதா தலைவராக சாமிநாதன் கடந்த 2015-ம் ஆண்டு (டிசம்பர்) மாதம் நியமிக்கப்பட்டார்.

    பா.ஜனதா தலைவர் பதவி 3 ஆண்டு காலமாகும். 2019 பாராளுமன்ற தேர்தல், கொரோனா பரவல் காரணமாக சாமிநாதன் தொடர்ந்து பதவியில் நீடித்து வந்தார்.

    2021-ம் ஆண்டு சட்ட மன்ற தேர்தலுக்கு பிறகு சாமிநாதன் மாற்றப்படுவார் என்ற பேச்சு எழுந்தது. ஆனாலும், கடந்த 2 ஆண்டு காலமாக சாமிநாதனே பதவியில் நீடித்தார்.

    இந்த நிலையில் கடந்த 8 ஆண்டு காலம் பா.ஜனதா தலைவராக இருந்த சாமிநாதன் மாற்றப்பட்டார். புதிய தலைவராக செல்வகணபதி எம்.பி. தற்போது நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் அருண்சிங் வெளியிட்டுள்ளார்.

    அவர் விடுத்துள்ள அறிக்கையில், புதுவை மாநில பா.ஜனதா தலைவராக செல்வகணபதி எம்.பி.யை தேசிய தலைவர் நட்டா நியமித்துள்ளார். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது என குறிப்பிட்டுள்ளார். புதிய தலைவராக பொறுப்பேற்ற பா.ஜனதா மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி கூறியதாவது:-

    பா.ஜனதா, என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் புதுவை நல்ல வளர்ச்சியை நோக்கி செல்கிறது. வரும் பாராளுமன்ற தேர்தலில் எங்கள் கூட்டணி வெற்றி பெறும். பா.ஜனதா சார்பில் வேட்பாளரை நிறுத்த விரும்புகிறோம். கூட்டணி கட்சி வேட்பாளரை நிறுத்தினாலும் அவர் வெற்றிக்கு பாடுபடுவோம்.

    கட்சியின் மூத்த தலைவர்கள் யாரும் புறக்கணிக்கப்படுவதில்லை. அவர்களின் ஆலோசனையை பயன்படுத்துவோம். கூட்டணி முடிவுகளை தேசிய தலைவர்கள் எடுப்பார்கள். அவர்களின் முடிவை செயல்படுத்துவது எங்கள் கடமை.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    செல்வகணபதி எம்.பி. 19.4.1957-ல் பிறந்தவர். எம்.ஏ. எம்.எட். படித்துள்ளார். விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் நிறுவனர். விவேகானந்தரின் 150-வது பிறந்தநாள் விழா குழு தலைவர் பொறுப்பு வகித்து பல நிகழ்ச்சிகளை நடத்தினார். கலைமாமணி விருது வழங்கும் குழு உறுப்பினர், கைப்பந்து சங்க தலைவர், கம்பன் கழக பொருளாளர், லாஸ்பேட்டை திரவுபதி யம்மன் கோவில் செயலாளர், நரேந்திரா ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர் உட்பட பல பொறுப்புகளில் உள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 4 முன்னாள் அமைச்சர்கள் திருட்டுத்தனமாக டெல்லி சென்றுள்ளார்கள்.
    • வருகிற தேர்தலில் அடிமைகளையும், அதன் எஜமானர்களையும் விரட்டி அடிக்க வேண்டும்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த கெரகோடஹள்ளியில் தி.மு.க. ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்ட இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

    இன்று புதுப்பிரச்சினை காலையில் ஒருவர் கூட்டணி இல்லை என்கிறார். மாலையில் கூட்டணி என்கிறார். 4 முன்னாள் அமைச்சர்கள் திருட்டுத்தனமாக டெல்லி சென்றுள்ளார்கள்.

    அ.தி.மு.க. என்றால் அது அமித்ஷா.தி.மு.க. தான். இவர்கள் இருவரும் நாடகம் ஆடுகிறார்கள். தேர்தலின்போது இணைந்து வருவார்கள். ஒருவர் திருடர் மற்றொருவர் கொள்ளைக்காரர். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், கலைஞர் குடும்பம் தான் வாழ்கிறது என்று மோடி பேசுகிறார். ஆமா கலைஞரின் குடும்பம் தான், தி.மு.க. என்கிற குடும்பம் தான் பிழைக்கிறது. ஆனால் உங்களால் அதானி குடும்பம் தான் பிழைத்து வருகிறது. அதானியும், மோடியும் ஒன்றாக விமானத்தில் சென்றனர். இதுகுறித்து புகைப்படத்துடன் ராகுல் காந்தி விளக்க வேண்டும் என கேட்டார். ஆனால் ராகுல் காந்தியின் பதவி பறிக்கப்பட்டது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டு சென்று வெற்றி பெற்றார். இதுதான் இந்தியா கூட்டணிக்கான வெற்றி.

    வருகிற தேர்தலில் அடிமைகளையும், அதன் எஜமானர்களையும் விரட்டி அடிக்க வேண்டும். நம்முடைய கூட்டம் கொள்கை கூட்டம் என்பதை நிரூபிக்க வேண்டும். நமது முதலமைச்சர் செயல்படுத்திய திட்டங்களை வீடு வீடாக கொண்டு சேர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அ.தி.மு.க. கூட்டணி முறிவு தொடர்பாக பாரதிய ஜனதா தலைவர்கள் அண்ணாமலையிடம் பல்வேறு விளக்கங்களை கேட்க இருப்பதாக தெரிகிறது.
    • அண்ணாமலையின் நடவடிக்கைகள் காரணமாக பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் எழுச்சி பெற்றிருப்பதாகவே டெல்லி பா.ஜனதா தலைவர்கள் நம்புகிறார்கள்.

    சென்னை:

    பாரதிய ஜனதாவுடன் இனி கூட்டணி கிடையாது என்று அ.தி.மு.க. அதிரடியாக அறிவித்துள்ளது. இதனால் பாரதிய ஜனதா மூத்த தலைவர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

    பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகி தனி கூட்டணியை அமைக்கப் போவதாக கூறி இருப்பது தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றே அக்கட்சியின் முன்னணி நிர்வாகிகள் கருதுகிறார்கள்.

    அ.தி.மு.க.வுடனான கூட்டணி முறிவை டெல்லி மேலிட தலைவர்கள் மற்றும் தமிழகத்தில் உள்ள மூத்த தலைவர்களும் விரும்பவில்லை என்றே தகவல்கள் வெளியாகி உள்ளன.

    தமிழகத்தில் தனித்து நின்று வெற்றி பெறும் அளவுக்கு பாரதிய ஜனதா கட்சி இன்னும் வளர்ச்சி பெறாத நிலையில் பிரதான கூட்டணி கட்சியான அ.தி.மு.க. கூட்டணி வேண்டாம் என்று கூறிவிட்டு வெளியேறி இருப்பது தங்கள் கட்சியின் எதிர்கால நலனுக்கு உகந்தது இல்லை என்பதே பாரதிய ஜனதா நிர்வாகிகளின் எண்ணமாகவும் உள்ளது.

    இதைத்தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியின் டெல்லி தலைமை அண்ணாமலையை தொடர்பு கொண்டு பேசி உடனடியாக டெல்லிக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளது. இதனை ஏற்று கோவையில் இருந்து இன்று இரவு விமானம் மூலம் அண்ணாமலை டெல்லி விரைகிறார்.

    அங்கு பாரதிய ஜனதா கட்சியின் மேல்மட்ட தலைவர்களை அவர் சந்தித்து பேசுகிறார். அப்போது அ.தி.மு.க. கூட்டணியை முறித்துக் கொண்டு செல்லும் அளவுக்கு பிரச்சனையை வளரவிட்டது தொடர்பாக டெல்லி மேலிட தலைவர்கள் அண்ணாமலையிடம் பல்வேறு விவரங்களை கேட்க உள்ளனர்.

    தமிழகத்தில் அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் அ.தி.மு.க. வுடன் இணக்கமாக சென்று சில தொகுதிகளில் வெற்றி பெற்றுவிடலாம் என்று கணக்கு போட்டிருந்த பாரதிய ஜனதா மேலிட தலைவர்களுக்கு அ.தி.மு.க.வின் முடிவை ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை.

    இதனால் நிலைமை இவ்வளவு தூரத்துக்கு செல்லும் வரை வளர விடாமல் கூட்டணி கட்சியான அ.தி.மு.க.வை முன்கூட்டியே சமாதானப்படுத்தி இருக்கலாமோ என்கிற எண்ணமும் பாரதிய ஜனதா தலைவர்கள் மனதில் இப்போது ஏற்பட்டிருக்கிறது. இருப்பினும் பாராளுமன்ற தேர்தலுக்குள் எடப்பாடி பழனிசாமியை சமரசம் செய்து விடமுடியும் என்றே அவர்கள் நம்புவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதுதொடர்பாகவும், கூட்டணி இன்றி போட்டியிட்டால் எந்த மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்பது பற்றியும் அண்ணாமலையுடன் டெல்லி மேலிட பா.ஜனதா தலைவர்கள் விரிவாக ஆலோசனை நடத்த உள்ளனர். இன்று இரவு டெல்லியை சென்றடையும் அண்ணாமலை நாளை காலையில் டெல்லியில் மேலிட தலைவர்களை சந்தித்து பேச உள்ளார்.

    அப்போது அ.தி.மு.க. கூட்டணி முறிவு தொடர்பாக பாரதிய ஜனதா தலைவர்கள் அண்ணாமலையிடம் பல்வேறு விளக்கங்களை கேட்க இருப்பதாக தெரிகிறது.

    கூட்டணியை முறித்துக் கொண்டு செல்வதற்கு அண்ணாமலையே காரணம் என்று அ.தி.மு.க. சார்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள போதிலும் அண்ணாமலையின் நடவடிக்கைகள் காரணமாக பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் எழுச்சி பெற்றிருப்பதாகவே டெல்லி பா.ஜனதா தலைவர்கள் நம்புகிறார்கள்.

    இதனால் கூட்டணி முறிவு விவகாரத்தில் அவரை கடிந்து கொள்ள வாய்ப்பு இல்லை என்கிற தகவல்களும் வெளியாகி உள்ளன. கட்சியின் மாநில தலைவராக அண்ணாமலை சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், அதனால் எந்த சூழ்நிலையிலும் அவரை விட்டுக்கொடுப்பதற்கு டெல்லி மேலிடம் தயாராக இல்லை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இப்படி டெல்லி பா.ஜனதா மேலிட தலைவர்கள் அண்ணாமலைக்கு முழு ஆதரவு தெரிவித்து இருப்பதாகவே கூறப்படுகிறது.

    அதே நேரத்தில் அ.தி.மு.க.வை விட்டு விடவும் டெல்லி பா.ஜனதா தலைவர்களுக்கு விருப்பம் இல்லை. கூட்டணியில் செல்வாக்கு உள்ள கட்சியாக விளங்கும் அ.தி.மு.க.வுடனான உறவை முறித்து தனித்து போட்டியிடுவது என்பது தற்கொலைக்கு சமமானது என்பதையும் மேலிட தலைவர்கள் உணர்ந்திருப்பதாகவே கூறப்படுகிறது.

    எனவே எடப்பாடி பழனிசாமியை எப்படியாவது சமாதானப்படுத்தி பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற வேண்டும் என்பதிலும் டெல்லி தலைவர்கள் உறுதியாக உள்ளனர். இதற்கான திட்டத்தையும் அவர்கள் வகுத்துள்ளனர். அது வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தி கடைசி நேரத்தில் சீட் கிடைக்காமல் சில கட்சிகள் ஏமாற்றத்துடன் தவித்தன.
    • டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம், ஜான் பாண்டியனின் தமிழக முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சிகளை கூட்டணியில் தக்க வைப்பதற்கும் பேச்சு நடைபெறுகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி ஒரு அணியாக களத்தில் உள்ள நிலையில் அ.தி.மு.க. பா.ஜனதா கூட்டணியும் களத்தில் இருந்து வந்தது.

    இதனால் இந்த 2 கூட்டணிகளும் பாராளுமன்ற தேர்தலை எதிர் எதிராக சந்திக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

    இந்த நிலையில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அ.தி.மு.க. அதிரடியாக அறிவித்துள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவரான அண்ணாமலை அண்ணாவை பற்றி தெரிவித்த கருத்துக்கள் பா.ஜனதா-அ.தி.மு.க. உறவில் விரிசலை ஏற்படுத்தி இருந்த நிலையில் கூட்டணிக்கும் அது வேட்டு வைத்துள்ளது. பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணியை முறித்துக்கொள்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள அ.தி.மு.க. மற்ற கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அமைத்து பாராளுமன்ற தேர்தலை சந்திக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளது.

    இதைத் தொடர்ந்து பாரதிய ஜனதா அல்லாத புதிய கூட்டணியை உருவாக்க அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வியூகம் வகுத்துள்ளார். இதற்காக பாரதிய ஜனதா எதிர்ப்பு அரசியலை கையில் எடுத்துள்ள கட்சிகளுடன் அ.தி.மு.க. ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. இது தொடர்பாக இஸ்லாமிய கட்சிகளுடன் அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் பேசி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தி கடைசி நேரத்தில் சீட் கிடைக்காமல் சில கட்சிகள் ஏமாற்றத்துடன் தவித்தன.

    அதுபோன்ற கட்சிகளையும் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் சேர்ப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அ.தி.மு.க. கூட்டணியில் ஏற்கனவே அங்கம் வகித்துள்ள பா.ம.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் நேரத்தில்தான் கூட்டணி பற்றிய முடிவை எடுப்போம் என்றும் தற்போது எந்த கூட்டணியிலும் இல்லை என்றும் தெரிவித்துள்ளன. இந்த கட்சிகளிடம் பேச்சு நடத்தி அ.தி.மு.க. கூட்டணியில் மீண்டும் சேர்ப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    அதே நேரத்தில் டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம், ஜான் பாண்டியனின் தமிழக முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சிகளை கூட்டணியில் தக்க வைப்பதற்கும் பேச்சு நடைபெறுகிறது.

    இப்படி அ.தி.மு.க.வுடன் தோழமையுடன் இருக்கும் கட்சிகளையும், மேலும் சில கட்சிகளையும் சேர்த்து புதிய கூட்டணியை அமைக்க அ.தி.மு.க. காய் நகர்த்தி வருகிறது.

    தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியை வீழ்த்தி வெற்றி பெறுவதற்கு வலுவான மெகா கூட்டணி அமைக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

    இதன்படியே பாரதிய ஜனதா அல்லாத புதிய கூட்டணி அமையும் என்று அ.தி.மு.க. மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

    இது தொடர்பாக அவர் மேலும் கூறும்போது, பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேறி இருப்பதன் மூலம் வருகிற பாராளுமன்ற தேர்தலில் சிறுபான்மையின மக்களின் ஓட்டுகளை வாங்கி வெற்றி பெற முடியும் என்கிற நம்பிக்கை எங்களுக்கு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

    அ.தி.மு.க. தலைமையில் புதிய அணி அமையும் பட்சத்தில் பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் தனித்து போட்டியிடுமா? இல்லை தங்களோடு ஒத்துப்போகும் சிறிய கட்சிகளை சேர்த்துக் கொண்டு தனி அணி அமைக்குமா? என்கிற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழக பாராளுமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி இருக்கிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பா.ஜ.க.வுடனான கூட்டணியை அ.தி.மு.க முறித்து கொள்வதாக அறிவித்துள்ள முடிவு குறித்து தேசிய தலைமை தான் கருத்து கூறும்.
    • அ.தி.மு.கவினர் கூறிய கருத்துக்களும், அவர்களுடைய முடிவுகள் பற்றியும் கருத்து சொல்வதற்கு எங்களுக்கு அதிகாரம் இல்லை.

    கோவை:

    சென்னையில் நடைபெற்ற எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பின் பா.ஜ.க மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. வெளியேறுவதாக அக்கட்சி அதிகாரபூர்வமாக அறிவித்தது.

    இதனை அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடினார். இந்த நிலையில் கோவையில் நடைபெற்று வரும் பாதயாத்திரை பங்கேற்ற பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையிடம் இதுகுறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது, அவர், இந்த விவகாரம் குறித்து கட்சியின் தேசிய தலைமை கருத்து தெரிவிக்கும் என கூறி விட்டு சென்றார்.

    இதுகுறித்து பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவியும், தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    பா.ஜ.க.வுடனான கூட்டணியை அ.தி.மு.க முறித்து கொள்வதாக அறிவித்துள்ள முடிவு குறித்து தேசிய தலைமை தான் கருத்து கூறும்.

    தேசிய தலைமை அறிவிக்கும் வரை, நாங்கள் எந்தவித கருத்தையும் கூற முடியாது. இதுகுறித்து தேசிய தலைமை தகுந்த நேரத்தில் எங்களுக்கு அறிவுறுத்தல் தருவார்கள். அப்போது எங்களுடைய கருத்துக்களை தெரிவிக்கிறோம்.

    அ.தி.மு.கவினர் கூறிய கருத்துக்களும், அவர்களுடைய முடிவுகள் பற்றியும் கருத்து சொல்வதற்கு எங்களுக்கு அதிகாரம் இல்லை.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு பின்பற்றப்பட வேண்டும்.
    • சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் படி நிலுவையில் உள்ள தண்ணீரை கர்நாடகா திறக்க வேண்டும்.

    சென்னை:

    அமைச்சர் துரைமுருகன் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கர்நாடகாவில் அவர்கள் முழு அடைப்பு நடத்துவது பற்றி நான் ஒன்றும் சொல்ல தேவையில்லை. ஆனால் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து ஒவ்வொருவரும் ஆர்ப்பாட்டங்களும், பேரணிகளும் நடத்த ஆரம்பித்தால், சுப்ரீம் கோர்ட்டுக்கு என்று கொடுக்கப்பட்டிருக்கிற தனி அதிகாரம் என்ன ஆகும் என்பதை அரசியல் தெளிவு தெரிந்தவர்கள் உணர வேண்டும்.

    அதே நேரத்தில் சுப்ரீம் கோர்ட்டும் தங்களுடைய கருத்துக்கு எதிர்ப்பு வருவதை எப்படி கட்டுப்படுத்த வேண்டும் என்பதையும் சுப்ரீம் கோர்ட்டு தான் தீர்மானிக்க வேண்டும்.

    13.9.2023 முதல் 15 நாட்களுக்கு தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. அதை சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்தது. நாளையுடன் அந்த 15 நாள் கெடு முடிகிறது. இடையில் கர்நாடகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தாலும் நமக்கு தர வேண்டிய தண்ணீரை தந்து கொண்டிருக்கிறார்கள். ஆரம்பத்தில் 2500 கனஅடி, 3000 கனஅடி என்று வழங்கியவர்கள் படிப்படியாக இன்று காலை நிலவரப்படி 7 ஆயிரம் கனஅடி திறந்து விட்டுள்ளனர்.

    இன்னும் நமக்கு 11 ஆயிரம் கனஅடி தண்ணீர் வரவேண்டி இருக்கிறது. நாளைக்குள் இந்த தண்ணீர் வந்துவிடும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.

    காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் அடுத்த கூட்டம் ஆன்லைனில் இன்று நடக்கிறது. இந்த கூட்டத்தில் நமக்கு தேவையான 12,500 கனஅடி தண்ணீரை தர வேண்டும் என்று வற்புறுத்துவோம்.

    காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு பின்பற்றப்பட வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் படி நிலுவையில் உள்ள தண்ணீரை கர்நாடகா திறக்க வேண்டும்.

    பாஜக கூட்டணியில் இருக்கக் கூடாது என்பதை உணர்ந்துதான் அதிமுக முடிவு செய்துள்ளது. அதிமுக கூட்டணி முறிவு, அவர்கள் வீட்டில் நடப்பது, அதைப்பற்றி நாம் கருத்து கூற முடியாது.

    அதிமுக- பாஜக கூட்டணியில் இருக்க வேண்டுமா? இருக்கக்கூடாதா என்பதை அந்த கட்சி தலைவர்கள் உணர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்திய அளவில் பா.ஜனதா கடந்த 2014-ம் ஆண்டு மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.
    • வருகிற 2024 பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ஜனதா தலைமையில் மிகப்பெரிய மெகா கூட்டணி அமைத்து வெற்றி பெறுவோம்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் பா.ஜனதா மூத்த தலைவர் எச்.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

    பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகியதால் எங்களுக்கு நஷ்டம் இல்லை. அ.தி.மு.க.விற்கு தான் நஷ்டம். 1991-ல் இருந்து பா.ஜனதா தேசிய அளவில் தனித்து நின்று தனித்திறமையை நிரூபித்துள்ளது. பா.ஜனதாவாகிய நாங்கள் தி.மு.க.வுடனும் கூட்டணி வைத்துள்ளோம். அ.தி.மு.க.வுடனும் கூட்டணி வைத்துள்ளோம்.

    கூட்டணி என்பது வேறு. கொள்கை என்பது வேறு. தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, அண்ணாதுரையை பற்றி உண்மைக்கு மாறாக பேசவில்லை. கூட்டணி என்பது பொது எதிரியை வீழ்த்துவதற்காக ஓட்டுகள் சிதறாமல் இருப்பதற்காக அமைக்கப்படுவது.

    இந்திய அளவில் பா.ஜனதா கடந்த 2014-ம் ஆண்டு மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. 2014-ல் தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. இல்லாமல் தேசிய ஜனநாயக கூட்டணி 20 சதவீத வாக்குகளை பெற்றுள்ளோம்.

    அப்போதே தமிழகத்தில் பா.ஜனதா கால் ஊன்றி விட்டது. அப்போது நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் எங்களைவிட தி.மு.க. 2 சதவீதம் தான் அதிகமான வாக்குகளை பெற்றது. ஜெயலலிதா மறைந்ததற்கு பிறகு தமிழகத்தில் அ.தி.மு.க. நெல்லிக்காய் மூட்டை போல் சிதறி பிரிந்து இருந்தது. சிதறி பிரிந்து கிடந்த அ.தி.மு.க.வை ஒன்று சேர்த்தது பா.ஜனதா தான். அப்போது நானும் உடன் இருந்தேன்.

    பிரிந்து இருந்த அ.தி.மு.க. தலைவர்களை ஒன்று சேர்த்து எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் நாற்காலியில் அமர்த்தியது பா.ஜனதா. எடப்பாடி பழனிசாமி இப்போது நன்றி இல்லாமல் செயல்படுகிறார்.

    வருகிற 2024 பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ஜனதா தலைமையில் மிகப்பெரிய மெகா கூட்டணி அமைத்து வெற்றி பெறுவோம். தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் பா.ஜனதாவின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது தென்காசி மாவட்ட பா.ஜனதா முன்னாள் தலைவர் ராம ராஜா, மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட தலைவர் வன்னியராஜ் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சாமிநாதனின் பதவிக்காலம் கடந்த 2018-ம் ஆண்டு முடிவடைந்த நிலையில் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது.
    • பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில பா.ஜ.க. தலைவராக சாமிநாதன் கடந்த 2015-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். பா.ஜ.க. கட்சி விதிகளின்படி 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவார்.

    அந்த வகையில் சாமிநாதனின் பதவிக்காலம் கடந்த 2018-ம் ஆண்டு முடிவடைந்த நிலையில் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது.

    அதன்பின் 2020-ம் ஆண்டு மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து அவரது பதவிக்காலம் கடந்த ஜனவரி மாதத்துடன் நிறைவடைந்த நிலையில் மாநில தலைவர் பதவியை பிடிக்க கட்சி நிர்வாகிகள் பலரும் முயற்சித்து வந்தனர்.

    இந்தநிலையில் பா.ஜ.க.வின் புதுவை மாநில தலைவராக செல்வகணபதி எம்.பி. நேற்று நியமிக்கப்பட்டார். இதனை பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin