search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Logistics"

    • அதிகபட்ச மதிப்பீடு தொகை கோருபவர்களுக்கு மேற்படி தளவாட பொருட்கள் வழங்கப்படும்.
    • மரத்தினால் ஆன மேஜை 11, மரத்தினால் ஆன நாற்காலி 46, ஒயர் பின்னிய மர நாற்காலி 15, மரத்தினால் ஆன மேடை 13 உள்பட 24 வகையான பொருட்கள் மொத்தம் 202 ஆகும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டத்தில் இயங்கும் நீதிமன்றங்களிடமிருந்து பெறப்பட்ட பழுதடைந்த மரம் மற்றும் இரும்பினால் ஆன அலுவலக தளவாட பொருட்கள் (நாற்காலி, மேஜை, பீரோ போன்றவைகள்) பொது ஏலத்தில் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அந்த பழுதடைந்த அலுவலக தளவாட பொருட்களின் விபர பட்டியல் இதனடியில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்படி பழுதடைந்துள்ள அலுவலக தளவாட பொருட்களின் விவரப்பட்டியலுடன் நேரில் சரிபார்த்து ஏலம் எடுக்க விரும்புவோர் இன்றிலிருந்து 15 தினங்களுக்குள் நீதிமன்ற அலுவலக நாட்களில் முதன்மை நிர்வாக அலுவலரிடம் பதிவு செய்து கொண்டு மேற்படி தளவாட பொருட்களை காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை பார்வையிட்டு பின்பு அதன் மதிப்பீட்டு பட்டியலை தனிக்கவரில் சீல் வைத்து முதன்மை மாவட்ட நீதிபதி, தஞ்சாவூர் என்ற முகவரிக்கு தபால் மூலமாக வரும் 12.12.2022-க்குள் அனுப்பி வைக்கும்படி தெரிவிக்கப்படுகிறது.

    மேலும், 12.12.2022-ம் தேதிக்கு பின்வரும் இப்பொருள் தொடர்பான வேறு ஏதேனும் கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

    அதிகபட்ச மதிப்பீடு தொகை கோருபவர்களுக்கு மேற்படி தளவாட பொருட்கள் வழங்கப்படும்.

    மேற்படி அலுவலக தளவாட பொருட்களுக்கு அதிக மதிப்பீடு கேட்பு செய்த நபர் உடனடியாக அந்த தொகையை செலுத்தி அவர் செலவிலேயே பொருட்களை எடுத்து க்கொள்ள வேண்டும்.

    மரத்தினால் ஆன மேஜை 11, மரத்தினால் ஆன நாற்காலி 46, ஒயர் பின்னிய மர நாற்காலி 15, மரத்தினால் ஆன மேடை 13 உள்பட 24 வகையான பொருட்கள் மொத்தம் 202 ஆகும். இந்த தளவாடப் பொருட்கள் பொது ஏலம் விடப்படுகிறது.

    மேற்கண்ட தகவலை முதன்மை மாவட்ட நீதிபதி மதுசூதனன் தெரிவித்துள்ளார்.

    • காட்டுமன்னார்கோவில் பகுதியில் 12 செ.மீ. மழையில் காட்டாற்று வெள்ளத்தில் தளவாடபொருட்கள் அடித்து செல்லப்பட்டன.
    • இந்த தொடர் மழையால் வீராணம் ஏரி நிரம்பியது.

    தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்த நிலையில் கடலூர் மற்றும் கடலூரை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த தொடர் மழையால் வீராணம் ஏரி நிரம்பியது. மேலும் காட்டுமன்னா ர்கோவில், ஸ்ரீமுஷ்ணம் அதைசுற்றியுள்ள பகுதிகளில்கனமழை பெய்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 12 சென்டிமீட்டர் மழை பெய்தது. இதனால் அங்குள்ள ஆற்று ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஸ்ரீமுஷ்ணம் புலியூர் அருகே ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டப்பட்டு வருகிறது. நேற்று பெய்த மழையினால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் பாலத்தின் வேலை நின்றது. இந்த பாலம் ஸ்ரீமுஷ்ணத்திலிருந்து விருத்தாச்சலத்தை இணைக்கும் பாலமாக உள்ளது. 

    மேலும் இந்த பாலம் வேலைக்காக அங்கு வைக்கப்பட்டிருந்த பல்வேறு பொருள்கள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டது. ரெட்டியார்பேட்டை, வெள்ளிக் கரணை, நாச்சியார் பாளையம் உள்ளிட்ட 10 கிராம மக்கள் இந்த பாலத்தை சுமார் 8 கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளி கல்லூரி மற்றும் அலுவலக வேலைக்கு செல்பவர்கள் உரிய நேரத்தில் செல்ல முடியாமல் பாதிப்படைந்தனர். இதனால் மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது

    ×