search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "public auction"

    • தமிழக அரசின் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், பருத்தி மற்றும் தேங்காய் கொப்பரை விற்பனைக்கான பொது ஏலம் நடைபெற்றது.

    எடப்பாடி - நெடுங்குளம் பிரதான சாலையில், வெள்ளரி வெள்ளி பகுதியில் செயல்பட்டு வரும் தமிழக அரசின் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், பருத்தி மற்றும் தேங்காய் கொப்பரை விற்பனைக்கான பொது ஏலம் நடைபெற்றது. இப்போது ஏலத்தில்112 மூட்டை பருத்தி விற்பனையானது. பொது ஏலத்தில் ஒரு குவிண்டால் பருத்தி ரூபாய் 5,000 முதல் 7,109 வரை விற்பனையானது. இதேபோல் பொது ஏலத்தில் முதல் தர தேங்காய் பருப்பு குவிண்டால் ஒன்று ரூ.7,631 முதல் ரூ.7900 வரையிலும், இரண்டாம் தர தேங்காய் பருப்புகள் குவிண்டால் ஒன்று ரூ.5,825 முதல் ரூ.6731 வரை விலை போனது. நாள் முழுவதும் நடைபெற்ற பொது ஏலத்தின் மூலம் ரூ.2.5 லட்சம் மதிப்பிலான வணிகம் நடைபெற்றது.

    • போலீசாரால் பயன்ப டுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 2 சக்கரம், 4 சக்கர வாகனங்கள் என 11 போலீஸ் வாகனங்கள் வருகிற 18-ந் தேதி காலை 10 மணிக்கு நாமக்கல் ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலத்தில் விடப்படுகிறது.
    • ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் 18-ந் தேதி காலை 8 மணி முதல் 9.45 மணிக்குள் முன்பணமாக 5000 ரூபாய் நாமக்கல் ஆயுதப்படை மைதானத்தில் செலுத்த வேண்டும்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாமக்கல் மாவட்டத்தில் போலீசாரால் பயன்ப டுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 2 சக்கரம், 4 சக்கர வாகனங்கள் என 11 போலீஸ் வாகனங்கள் வருகிற 18-ந் தேதி காலை 10 மணிக்கு நாமக்கல் ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலத்தில் விடப்படுகிறது. ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் 18-ந் தேதி காலை 8 மணி முதல் 9.45 மணிக்குள் முன்பணமாக 5000 ரூபாய் நாமக்கல் ஆயுதப்படை மைதானத்தில் செலுத்த வேண்டும். முன் பணத்தொகை செலுத்தும் நபர் மட்டுமே ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். வாகனத்தை ஏலம் எடுத்தவுடன் ஏலத்தொகை, ஜி.எஸ்.டி. முழுவதையும் செலுத்தி வாகனத்தை பெற்றுக் கொள்ள வேண்டும். ஆதார் கார்டு அல்லது ஓட்டுனர் உரிமம் 2 நகல்கள் எடுத்து வர வேண்டும். ஏல வாகனங்களை அக்டோபர் 17-ந் தேதி காலை 10:30 மணி முதல் பார்வையிடலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • ஏலத்தின் போது வாகனங்களின் உரிமையாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
    • முன்பணம் ஏலம் முடிந்த பின்னர் திரும்ப வழங்கப்படும்.

    திருவாரூர்:

    குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 103 வாகனங்கள் ஏலம் என உதவி ஆணையர் (கலால்) அழகர்சாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 1979 மற்றும் மதுவிலக்கு-ஆயத்தீர்வை விதிகளின்படி பல்வேறு குற்ற வழக்குகளில் பயன்படுத்தப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட 103 வாகனங்களை பொது ஏலம் மூலம் விற்பனை செய்து அரசுக்கு ஆதாயம் செய்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி பொது ஏலமானது திருவாரூர் மாவட்ட கலெக்டர் தலைமையில் திருவாரூர் போலீஸ் சூப்பிரண்டு, திருவாரூர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு (மதுவிலக்கு அமல்பிரிவு), தஞ்சாவூர் அரசு தானியங்கி பணிமனையின் பொறியாளர் ஆகியோர் முன்னிலையில் திருவாரூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வருகிற 30-ந்தேதி காலை 10 மணியளவில் பொது ஏலம் நடைபெறவுள்ளது.

    பொது ஏலத்தின் போது வாகனங்களின் உரிமையாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். வாகன உரிமையாளர்கள் ஏலம் கோராதபட்சத்தில் பொது ஏலம் விடப்படும்.

    ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் அவர்களது ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஓட்டுனர் உரிமத்துடன் முன்பணத்தொகையாக ரூ.1000 வருகிற 30-ந்தேதி அன்று காலை 10 மணியளவில் நேரில் செலுத்த வேண்டும்.

    வாகனங்களை பொது ஏல அடிப்படையில் ஏலம் எடுத்து கொள்ளலாம்.

    அவ்வாறு ஏலம் எடுக்காத நிலையில் ஏலத்தில் கலந்து கொள்ள செலுத்தப்பட்ட முன்பணம் ஏலம் முடிந்த பின்னர் திரும்ப வழங்கப்படும்.

    அதிக விலை கோருபவர்களுக்கு வாகனங்கள் ஏலம் விடப்படும் என்பதால் விருப்பமுடைய பொதுமக்கள் அனைவரும் ஏலத்தில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பொது ஏலம் வருகிற 31-ந்தேதி காலை 10 மணியளவில் ஏலம் விடப்பட உள்ளது.
    • பதிவு செய்தவர்கள் மட்டும் இந்த ஏலத்தில் கலந்து கொள்ளலாம்.

    மதுரை

    மதுரை மண்டல துணைப்பதிவு துறைத்தலைவர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அம்பாசிட்டர் கார் (வாகன எண்.TN64G0159)பொது ஏலம் வருகிற 31-ந்தேதி காலை 10 மணியளவில் ஏலம் விடப்பட உள்ளது. இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் மதுரை மண்டல துணைப்பதிவு துறைத்தலைவர் அலுவலகத்தில் தங்களது ஆதார், ரேஷன், பேன் கார்டு நகலுடன் காப்புத் தொகையாக ரூ.5 ஆயிரம் செலுத்தி நாளை (28-ந்தேதி) மாலை 6 மணிக்குள் பெயரை பதிவு செய்து ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். பதிவு செய்தவர்கள் மட்டும் இந்த ஏலத்தில் கலந்து கொள்ளலாம்.

    வாகனம் ஏலம் எடுக்கவில்லையெனில் காப்புத்தொகை திருப்பி அளிக்கப்படும். ஏலத்தில் அதிகபட்ச தொகைக்கு கோரும் நபருக்கு வாகனம் விற்பனை செய்யப்படும். மேலும் உறுதி செய்யப்பட்ட வாகன ஏலத்தொகையினை அரசு நிர்ணயம் செய்துள்ள 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரியுடன் சேர்த்து ரொக்கமாக செலுத்தி வாகனத்தினை பெற்றுக்கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு துணைப்பதிவுத்துறை தலைவர் அலுவலகம், மதுரை மண்டல ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக கட்டிடம், டி.என்.ஏ.யு. நகர், ராஜகம்பீரம், ஒத்தக்கடை, திருமோகூர் சாலை, மதுரை என்ற முகவரியிலோ அல்லது 0452 2422517 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

    • பொது விநியோக திட்டப் பொருட்கள் கள்ளத்தனமாக கடத்த பயன்படுத்தப்பட்ட போது, அத்தியாவசியப் பண்டங்கள் சட்டம் 1955-ன் கீழ் பதியபட்ட வழக்குகளில் வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
    • இவ்வாறு கைப்பற்றப் பட்ட 93 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா வெளி யிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: சேலம் மாவட்டத்தில் பொது விநியோக திட்டப் பொருட்கள் கள்ளத்தனமாக கடத்த பயன்படுத்தப்பட்ட போது, அத்தியாவசியப் பண்டங்கள் சட்டம் 1955-ன் கீழ் பதியபட்ட வழக்குகளில் வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

    இவ்வாறு கைப்பற்றப் பட்ட 93 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால் வாகன உரிமை யாளர்கள் வாகன அபராதத் தொகையினை செலுத்தி வாகனத்தை பெற்றுக் கொள்ள முன்வரவில்லை.

    இதனால் இந்த 93 வாகனங்கள் வருகின்ற 25-ந் தேதி காலை 11 மணிக்கு சேலம் மாவட்ட வழங்கல் அலுவலர் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் முன்னிலையில் சேலம் மேற்கு வட்டம், சர்கார் கொல்லப்பட்டி மருத்துவ கல்லூரி எதிரில் அமைந்துள்ள சேலம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை காவல் ஆய்வாளர் அலுவல கத்தில் நடைபெறும் பொது ஏலத்தில் விடப்படுகிறது.

    வாகனங்களை பார்வையிட சேலம் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை காவல் ஆய்வாளரை தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • 16 நான்கு சக்கர வாகனங்கள், 17 இரு சக்கர வாகனங்கள் உள்ளன.
    • முன்பணமாக ரூ.1,000 செலுத்தி தங்களது பெயரை பதிவு செய்துகொள்ள வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்ட காவல் துறையில் கழிவு செய்யப்பட்ட 33 வாகனங்களுக்கான பொது ஏலம் ஜூன் 19 -ந் தேதி நடைபெறுகிறது. இதுதொடா்பாக திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு :- திருப்பூா் மாவட்ட காவல் துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 16 நான்கு சக்கர வாகனங்கள், 17 இரு சக்கர வாகனங்கள் என மொத்தம் 33 வாகனங்கள் உள்ளன. இந்த வாகனங்களுக்கான பொது ஏலம், திருப்பூா் நல்லிக்கவுண்டன் நகரில் (திருநகா்) உள்ள ஆயுதப்படை மைதானத்தில் ஜூன் 19 ந் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

    இந்த ஏலத்தில் பங்கேற்க விரும்புபவா்கள் நுழைவுக்கட்டணம் ரூ.100 மற்றும் முன்பணமாக இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.1,000, நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.2,000 செலுத்தி தங்களது பெயரை பதிவு செய்துகொள்ள வேண்டும். ஜூன் 18 ந் தேதி மாலை 5 மணி வரை பதிவுசெய்து ரசீது பெற்றுகொள்ளலாம்.

    ஏலம் எடுத்தவுடன் அதற்குண்டான முழுத்தொகை மற்றும் ஜிஎஸ்டி வரி இரு சக்கர வாகனங்களுக்கு 12 சதவீதம், நான்கு சக்கர வாகனங்களுக்கு 18 சதவீதம் ரொக்கமாக செலுத்த வேண்டும். மேலும் ஏல ரசீது எந்தப் பெயரில் பெறப்படுகிறதோ அவரே ஏலத்தில் பங்கேற்க வேண்டும். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு திருப்பூா் மாவட்ட ஆயுதப்படை அலுவலகத்தை 95668 88041, 86374 94589 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 422 வாகனங்கள் போலீசாரால் கைப்பற்றப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • அரசின் விதிமுறை களுக்கு உட்பட்டு வருகிற 24-ந்தேதி இந்த வாகனங்கள் பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நெல்லை மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் உரிமம் கோரப்படாத 422 வாகனங்களில் 415 மோட்டார் சைக்கிள்களும், 7 நான்கு சக்கர வாகனங்களும் போலீ சாரால் கைப்பற்றப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் முன்னீர்பள்ளம் போலீஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    அரசின் விதிமுறை களுக்கு உட்பட்டு வருகிற 24-ந்தேதி இந்த வாகனங்கள் பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப் படுகிறது. ஏலத்தில் கலந்து கொள்வோர் முன்பணமாக ரூ.5 ஆயிரம் நெல்லை மாவட்ட ஆயுதப்படை வாகன பிரிவு அலுவலகத்தில் வருகிற 23-ந்தேதிக்குள் செலுத்தி டோக்கன் பெற்றுக்கொள்ள வேண்டும். வாகனத்தை வாங்குவோர் முன்னதாகவே அதனை பார்வையிட்டு செல்லலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • உரிமை கோரப்படாத நிலையில் இருந்து வந்த 515 இருசக்கர மோட்டார் வாகனங்கள், பொது ஏலம் விடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
    • சுமார் 150 வாகனங்கள் முதல் நாளில் ஏலம் விடப்பட்டன.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் ஆலங்குளம் காவல் உட்கோட்ட எல்கைக்குட்பட்ட பகுதிகளில் உரிமை கோரப்படாத நிலையில் இருந்து வந்த 515 இருசக்கர மோட்டார் வாகனங்கள், பொது ஏலம் விடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    அதன்படி ஏலம் மூன்று நாட்கள் நடைபெறும். பொது ஏலமானது நேற்று காலை 10 மணி அளவில் ஆலங்குளம், வீர கேரளம் புதூர் தாசில்தார்கள் மற்றும் ஏ.டி.எஸ்.பி.தன்ராஜ் கணேஷ் தலைமையில் பாவூர்சத்திரத்தில் தொடங்கியது. இதில் முதல் நாளில் ஏற்கனவே வாகனங்களை நேரில், மேலும் தங்களின் பெயர், முகவரி அடங்கிய ஆதார் அட்டையுடன் ரூ.3 ஆயிரம் முன்பணம் செலுத்தி பதிவு செய்து டோக்கன் பெற்றுக் கொண்டவர்கள் வாகனத்தை ஏலம் எடுக்க கலந்து கொண்டனர்.

    சுமார் 150 வாகனங்கள் முதல் நாளில் ஏலம் விடப்பட்டன. தொடர்ந்து இன்றும், நாளையும் வாகன ஏலம் நடைபெற உள்ளது.

    • பொது ஏலம் விட்டு அரசு கணக்கில் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
    • விபத்து, திருட்டு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 60 வாகனங்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன

    பல்லடம் :

    பல்லடம் மற்றும் காமநாயக்கன்பாளையம் காவல் நிலையங்களில் உரிமம் கோரப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ள 60 இருசக்கர வாகனங்கள் பொது ஏலம் விடப்படுவதாக பல்லடம் வட்டாட்சியா் நந்தகோபால் தெரிவித்தாா்.

    இது குறித்து அவா் கூறுகையில், பல்லடம் மற்றும் காமநாயக்கன்பாளையம் காவல் நிலைய வளாகத்தில் 2021 செப்டம்பா் 16ந் தேதி முதல் விபத்து, திருட்டு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 60 வாகனங்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

    பல்லடம் காவல் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 21 வாகனங்கள் மற்றும் காமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 39 வாகனங்கள் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் 60 வாகனங்களுக்கு உரிமையாளா்கள் யாரும் உரிமம் கோராததால், வாகனங்கள் சேதமடைந்து அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்பதால், அந்த வாகனங்களை பொது ஏலம் விட்டு அரசு கணக்கில் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.  

    • வருகிற 30-ந் தேதி மற்றும் 31 -ந் தேதி ஆகிய 2 நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சங்கரன்கோவில் பழைய தாலுகா போலீஸ் நிலைய வளாகத்தில் வைத்து ஏலம் விடப்படுகிறது.
    • வாகனத்தை ஏலம் எடுத்தவர்கள் ஏலம் எடுத்த நாளான 30-ந்தேதி அல்லது 31-ந்தேதி ஏலத்தெகையுடன் ஜி.எஸ்.டி. தொகையினையும் உடனடியாக செலுத்தி வாகனத்தை எடுத்துச்செல்ல வேண்டும்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் புளியங்குடி காவல் உட்கோட்ட எல்கைக்கு உட்பட்ட பகுதிகளில் உரிமை கோரப்படாத நிலையில் இருந்து வரும் 293 இரு சக்கர மோட்டார் வாகனங்கள், 1 மூன்று சக்கர வாகனம், 4 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 298 வாகனங்களுக்கு பொது ஏலம் விடப்பட உள்ளது.

    வருகிற 30-ந் தேதி மற்றும் 31 -ந் தேதி ஆகிய 2 நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சங்கரன்கோவில் பழைய தாலுகா போலீஸ் நிலைய வளாகத்தில் வைத்து ஏலம் விடப்படுகிறது.

    இதில் கலந்து கொண்டு வாகனங்களை ஏலம் எடுக்க விரும்புபவர்கள் அந்த வாகனங்களை சங்கரன்கோவில் பழைய தாலுகா போலீஸ் நிலைய வளாகத்தில் 23 -ந் தேதி முதல் 27 -ந் தேதி வரையிலான நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை நேரில் பார்வையிடலாம்.

    மேலும் தங்களின் பெயர், முகவரி அடங்கிய ஆதார் அட்டையுடன் ரூ. 1000 முன்பணம் செலுத்தி பதிவு செய்து டோக்கன் பெற்றுக் கொள்ள வேண்டும்.

    டோக்கன் பெற்றவர்கள் மட்டுமே ஏலத்தில் பங்கேற்க முடியும். வாகனத்தை ஏலம் எடுத்தவர்கள் ஏலம் எடுத்த நாளான 30-ந்தேதி அல்லது 31-ந்தேதி ஏலத்தெகையுடன் ஜி.எஸ்.டி. தொகையினையும் உடனடியாக செலுத்தி வாகனத்தை எடுத்துச்செல்ல வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • அதிகபட்ச மதிப்பீடு தொகை கோருபவர்களுக்கு மேற்படி தளவாட பொருட்கள் வழங்கப்படும்.
    • மரத்தினால் ஆன மேஜை 11, மரத்தினால் ஆன நாற்காலி 46, ஒயர் பின்னிய மர நாற்காலி 15, மரத்தினால் ஆன மேடை 13 உள்பட 24 வகையான பொருட்கள் மொத்தம் 202 ஆகும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டத்தில் இயங்கும் நீதிமன்றங்களிடமிருந்து பெறப்பட்ட பழுதடைந்த மரம் மற்றும் இரும்பினால் ஆன அலுவலக தளவாட பொருட்கள் (நாற்காலி, மேஜை, பீரோ போன்றவைகள்) பொது ஏலத்தில் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அந்த பழுதடைந்த அலுவலக தளவாட பொருட்களின் விபர பட்டியல் இதனடியில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்படி பழுதடைந்துள்ள அலுவலக தளவாட பொருட்களின் விவரப்பட்டியலுடன் நேரில் சரிபார்த்து ஏலம் எடுக்க விரும்புவோர் இன்றிலிருந்து 15 தினங்களுக்குள் நீதிமன்ற அலுவலக நாட்களில் முதன்மை நிர்வாக அலுவலரிடம் பதிவு செய்து கொண்டு மேற்படி தளவாட பொருட்களை காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை பார்வையிட்டு பின்பு அதன் மதிப்பீட்டு பட்டியலை தனிக்கவரில் சீல் வைத்து முதன்மை மாவட்ட நீதிபதி, தஞ்சாவூர் என்ற முகவரிக்கு தபால் மூலமாக வரும் 12.12.2022-க்குள் அனுப்பி வைக்கும்படி தெரிவிக்கப்படுகிறது.

    மேலும், 12.12.2022-ம் தேதிக்கு பின்வரும் இப்பொருள் தொடர்பான வேறு ஏதேனும் கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

    அதிகபட்ச மதிப்பீடு தொகை கோருபவர்களுக்கு மேற்படி தளவாட பொருட்கள் வழங்கப்படும்.

    மேற்படி அலுவலக தளவாட பொருட்களுக்கு அதிக மதிப்பீடு கேட்பு செய்த நபர் உடனடியாக அந்த தொகையை செலுத்தி அவர் செலவிலேயே பொருட்களை எடுத்து க்கொள்ள வேண்டும்.

    மரத்தினால் ஆன மேஜை 11, மரத்தினால் ஆன நாற்காலி 46, ஒயர் பின்னிய மர நாற்காலி 15, மரத்தினால் ஆன மேடை 13 உள்பட 24 வகையான பொருட்கள் மொத்தம் 202 ஆகும். இந்த தளவாடப் பொருட்கள் பொது ஏலம் விடப்படுகிறது.

    மேற்கண்ட தகவலை முதன்மை மாவட்ட நீதிபதி மதுசூதனன் தெரிவித்துள்ளார்.

    ×