search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Police department"

    • குற்ற நடவடிக்கைகளை தடுக்க பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
    • மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் குற்ற நடவடிக்கைகளை தடுக்க பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    மேலும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டினாலோ அல்லது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகன சாகசத்தில் (Racing)-ஈடுபட்டாலோ அவர்கள் மீது வழக்கு பதிந்து வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அவர்களின் ஓட்டுனர் உரிமமும் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    பொதுமக்களின் உயிருக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் இருசக்கர வாகன சாகசத்தில் ஈடுபட்டு அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு நபர்கள் சென்ற மாதம் மாவட்ட காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வரக்கூடிய பண்டிகை நாட்களை பாதுகாப்பான முறையில் கொண்டாடி மகிழ்ந்திட பெதுமக்கள் அனைவரையும் காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • பேரணிகளில் சில இடங்களில் காவல் கண்காணிப்பை மீறி வன்முறை நடந்தது
    • காசா மக்களுக்கு உதவி கேட்பதாக தெரியவில்லை என சுயெல்லா குற்றம் சாட்டினார்

    இங்கிலாந்தின் உள்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சர், இந்திய வம்சாவளியை சேர்ந்த சுயெல்லா பிரேவர்மேன் (Suella Braverman).

    இஸ்ரேல்-ஹமாஸ் போரில் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உட்பட மேற்கத்திய நாடுகள் இஸ்ரேல் ஆதரவு நிலையை எடுத்துள்ளன. ஆனால், இங்கிலாந்து மக்களில் பலர் ஹமாஸ் அமைப்பினரை ஆதரிக்கின்றனர்.

    ஹமாஸ் அமைப்பை ஆதரித்து இங்கிலாந்தில் பேரணிகள் நடந்தன. சில இடங்களில் வன்முறையும் நடந்தன. தொடர்ந்து, போராட்டங்கள் நடத்த அனுமதி கோரி ஹமாஸ் ஆதரவினர் காவல்துறையினரிடம் மனு அளித்து வருகின்றனர்.

    இந்நிலையில், போராட்டக்காரர்களை கட்டுப்படுத்துவதில் காவல்துறையினர் பாரபட்சம் பார்ப்பதாக அமைச்சர் சுயெல்லா பிரேவர்மேன் கருத்து தெரிவித்து கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார்.

    அதில் அவர் தெரிவித்ததாவது:

    யூதர்கள் நடத்தும் கவன ஈர்ப்பு பேரணிகள் காவல்துறைக்கு சவாலாக இல்லை. சமூக ஒழுங்கிற்கு சவால் விடும் வகையில் ஹமாஸ் அமைப்பினரை ஆதரிக்கும் பல லட்சக்கணக்கானவர்கள் சாலையில் இறங்கி வன்முறையில் ஈடுபடும் வகையில் நடந்து கொள்வது சிக்கலை உண்டாக்குகிறது. தொடக்கம் முதலே இந்த போராட்டங்கள் சட்ட சிக்கலை ஏற்படுத்தும் வகையில் உள்ளன. ஆங்காங்கே நடைபெறும் வன்முறைகளால் மட்டும் அல்ல; அவர்கள் கையில் கொண்டு செல்லும் பதாகைகள் மற்றும் ஆங்காங்கு அவர்கள் ஒட்டும் சுவரொட்டிகளிலும், அவர்கள் எழுப்பும் கோஷங்களிலும், தகாத வார்த்தைகள் மற்றும் அச்சுறுத்தும் வாசகங்கள் இடம் பெறுகின்றன. இதனை கண்டு கொள்ளாமல் விட முடியாது. இது காசா மக்களுக்கு மனிதாபிமான உதவி கேட்கும் கோஷங்கள் அல்ல. ஒரு குறிப்பிட்ட சிலர், தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்ட எழுப்பும் கோஷங்கள். காவல்துறை உயரதிகாரிகள் போராட்டக்காரர்களிடம் பாரபட்சமாக நடந்து கொள்வதாக கருத்து நிலவ தொடங்கியுள்ளது. தேச பற்றுடன் போராடுபவர்களிடம் கண்டிப்புடன் நடந்து கொள்ளும் காவல்துறையினர் சட்டத்தை மீறுபவர்களிடம் ஏன் அந்த கண்டிப்பு காட்டவில்லை? இது ஒரு இரட்டை நிலைப்பாடு. இது குறித்து காவல்துறை உயரதிகாரிகளிடம் பேசியுள்ளேன்.

    இவ்வாறு சுயெல்லா தெரிவித்தார்.

    இவரது கருத்து இடதுசாரிகளுக்கு எதிரானது என குற்றம் சாட்டி சுயெல்லாவை, பிரதமர் ரிஷி சுனக் பதவிநீக்கம் செய்ய வேண்டும் எனும் கோரிக்கைகள் இங்கிலாந்தில் பலமாக எழுந்துள்ளன.

    • இணைய மோசடி மூலம் இழந்த ரூ.3 லட்சத்தை அரியலூர் காவல் துறையினர் மீட்டு உரியவரிடம் மீண்டும் ஒப்படைத்தனர்
    • காவல் துறையினர் வழக்குப் பதிந்து, தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம், திருமானூரைச் சேர்ந்தவர் சூரியகலா (வயது 34). இவரது கணவர் ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். தற்போது தனது மகளுடன் அம்மன் சன்னதி வசித்து வரும் இவர், அஞ்சல் துறையில் உள்ள செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் பணம் செலுத்துவதற்காக ஆன்லைன் வாடிக்கையாளர் சேவை எண்ணை தேடியுள்ளார். அப்போது ஒருவர், சூரியகலா கைப்பேசிக்கு குறுஞ்செய்தி மூலமாக லிங்க் ஒன்றை அனுப்பி, அதன் மூலம் செயலியை பதிவிறக்கம் செய்ய வைத்துள்ளார்.பின்னர் அவர், சூரியகலா பதிவிட்ட வங்கி பயனர் ஐ.டி. பாஸ்வேர்டு எண்ணை தெரிந்துக் கொண்டு சூரியகலா கணக்கில் இருந்து ரூ.3 லட்சத்து 10 ஆயிரத்தை அபகரித்துக்கொண்டார்.

    இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதனை உணர்ந்த சூரியகலா அரியலூர் இணைய குற்ற காவல் நிலையத்தில் கடந்த 3.6.2023 அன்று புகார் அளித்தார். அதன்பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிந்து, இணைய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் வாணி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், சிவனேசன் (தொழில்நுட்பம்) ஆகியோர் கொண்ட போலீசர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் பணத்தை அபகரித்தவரின் வங்கி கணக்கை உடனே முடக்கம் செய்து, மனுதாரர் இழந்த ரூ.3 லட்சத்தை திரும்ப பெற்று, சம்மந்தப்பட்டவரை தேடி வருகின்றனர். இந்நிலையில், சூரியகலாவை மாவட்ட காவல் அலுவலகத்துக்கு வரவழைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா.பெரோஸ்கான் அப்துல்லா, அவரிடம் ரூ.3 லட்சம் பணத்தை ஒப்படைத்தார்.

    • போதைப் பொருள்களால் உடலுக்கு ஏற்படும் தீமைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
    • போதைப்பொருள்லிருந்து தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

    காங்கயம் :

    காங்கயம் காவல் துறை சாா்பில் போதைப் பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.காங்கயம்- தாராபுரம் சாலையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு காங்கயம் காவல் உதவி ஆய்வாளா் சந்திரன், பள்ளியின் தலைமை ஆசிரியா் சிவகுமாா் ஆகியோா் தலைமை வகித்தனா்.

    இதில் போதைப் பொருள்கள் ஒழிப்பு குறித்தும், போதைப் பொருள்களால் உடலுக்கு ஏற்படும் தீமைகள் குறித்தும், பாலியல் குற்றங்கள் குறித்தும், அதிலிருந்து தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள் குறித்தும் மாணவ, மாணவிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் காங்கயம் போலீசார், காங்கயம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

    • 16 நான்கு சக்கர வாகனங்கள், 17 இரு சக்கர வாகனங்கள் உள்ளன.
    • முன்பணமாக ரூ.1,000 செலுத்தி தங்களது பெயரை பதிவு செய்துகொள்ள வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்ட காவல் துறையில் கழிவு செய்யப்பட்ட 33 வாகனங்களுக்கான பொது ஏலம் ஜூன் 19 -ந் தேதி நடைபெறுகிறது. இதுதொடா்பாக திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு :- திருப்பூா் மாவட்ட காவல் துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 16 நான்கு சக்கர வாகனங்கள், 17 இரு சக்கர வாகனங்கள் என மொத்தம் 33 வாகனங்கள் உள்ளன. இந்த வாகனங்களுக்கான பொது ஏலம், திருப்பூா் நல்லிக்கவுண்டன் நகரில் (திருநகா்) உள்ள ஆயுதப்படை மைதானத்தில் ஜூன் 19 ந் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

    இந்த ஏலத்தில் பங்கேற்க விரும்புபவா்கள் நுழைவுக்கட்டணம் ரூ.100 மற்றும் முன்பணமாக இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.1,000, நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.2,000 செலுத்தி தங்களது பெயரை பதிவு செய்துகொள்ள வேண்டும். ஜூன் 18 ந் தேதி மாலை 5 மணி வரை பதிவுசெய்து ரசீது பெற்றுகொள்ளலாம்.

    ஏலம் எடுத்தவுடன் அதற்குண்டான முழுத்தொகை மற்றும் ஜிஎஸ்டி வரி இரு சக்கர வாகனங்களுக்கு 12 சதவீதம், நான்கு சக்கர வாகனங்களுக்கு 18 சதவீதம் ரொக்கமாக செலுத்த வேண்டும். மேலும் ஏல ரசீது எந்தப் பெயரில் பெறப்படுகிறதோ அவரே ஏலத்தில் பங்கேற்க வேண்டும். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு திருப்பூா் மாவட்ட ஆயுதப்படை அலுவலகத்தை 95668 88041, 86374 94589 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    காவல்துறையை நவீன மயமாக்கும் திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் லத்திகள், 26 ஆயிரம் விசில்கள் வாங்கப்படுகின்றன. ஒரு லத்தி ரூ.165 விலையில் வாங்க நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. #TNPoliceDepartment
    சென்னை:

    தமிழக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடும்போது லத்திகள் பயன்படுத்துகிறார்கள். இதேபோல் விசிலும் பயன்படுத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் லத்திகள், விசில்கள் பழையதாகி விட்டன. இதையடுத்து போலீசாருக்கு புதிதாக லத்திகள், விசில்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    காவல்துறையை நவீன மயமாக்கும் திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் லத்திகள், 26 ஆயிரம் விசில்கள் வாங்கப்படுகின்றன.

    ஒரு லத்தி ரூ.165 விலையில் வாங்க நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ரூ.17 லட்சம் செலவில் 10 ஆயிரத்து 326 லத்திகள் வாங்கப்படுகிறது.



    இதேபோல் ரூ.13 லட்சம் செலவில் 26 ஆயிரத்து 196 விசில்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    புதிய லத்திகள், விசில்கள் அனைத்தும் சட்டம்- ஒழுங்கு மற்றும் குற்றப் பிரிவு போலீசாருக்கு வழங்கப்படுகிறது.

    இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    புதிதாக வாங்கப்படும் லத்தி மற்றும் விசில்கள் மாநிலம் முழுவதும் உள்ள போலீசாருக்கு ஜூலை மாதம் முதல் வழங்கப்படும்.

    பொதுவாக பணியின்போது விசில்கள் பயன்படுத்துவது இல்லை. செல்போன்கள் வந்த பிறகு விசில் பயன்பாடு குறைந்து விட்டது. செல்போன் மூலம் சக போலீசாரை விரைவில் தொடர்பு கொண்டு வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #TNPoliceDepartment
    கோவை அருகே சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் குறித்து துப்பு கொடுத்தால் தக்க சன்மானம் வழங்கப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. #GirlHarassment
    கவுண்டம்பாளையம்:

    கோவையை அடுத்த துடியலூர் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி கடந்த 25-ந் தேதி மாயமானார். மறுநாள் காலை வீட்டருகே சிறுமி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரது கை, கால்கள் பனியனால் கட்டப்பட்டிருந்தது. பிரேத பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.

    இதனால் சிறுமியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். கொலையாளிகளை கைது செய்து, கடுமையான தண்டனை வழங்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என கூறி அரசு ஆஸ்பத்திரி முன்பு மறியல் செய்தனர். நேற்று துடியலூர் பஸ் நிலையம் முன்பு சாலை மறியல் செய்தவர்களுடன் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    சிறுமியின் பெற்றோர் போலீசில் கொடுத்த புகாரில் அதே பகுதியை சேர்ந்த 4 வாலிபர்கள் மீது சந்தேகம் தெரிவித்திருந்தனர். அந்த வாலிபர்கள் மற்றும் பிளஸ்-2 மாணவர் ஒருவர் உள்பட மொத்தம் 6 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



    இந்நிலையில் சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்றும், தகவல் தெரிவிப்பவர்கள் குறித்த விபரம் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்றும் காவல் துறை தெரிவித்துள்ளது.



    சிறுமி கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் பற்றிய தகவல் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண்களையும் காவல்துறை வெளியிட்டுள்ளது. #GirlHarassment
    தமிழக அரசு இன்று தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் காவல்துறைக்கு மட்டும் ரூ.8084.80 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. #TamilNaduBudget #TNBudget2019 #Budget2019 #OPS
    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் உள்ள அம்சங்கள் வருமாறு:-

    * காவல்துறையை நவீனமயமாக்கும் திட்டத்திற்கு ரூ.111.57 கோடி ஒதுக்கீடு

    * வரும் நிதி ஆண்டில் காவல்துறைக்கு மட்டும் ரூ.8084.80 கோடி ஒதுக்கீடு

    * தோட்டக்கலைத்துறை மேம்பாட்டிற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு

    * தோட்டக்கலை மற்றும் வேளாண் கல்லூரிகளில் மேம்பாட்டிற்கு ரூ.79.73 கோடி ஒதுக்கீடு

    * தனிநபர்களின் ஆண்டு வருமானம் தமிழகத்தில் ரூ.1,42,267 ரூபாயாக உயர்ந்துள்ளது



    * மேலும் 2 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் நுண்ணீர் பாசன திட்டம் செயல்படுத்தப்படும்- இதற்காக ரூ.1361 கோடி ஒதுக்கீடு

    * வரும் நிதியாண்டில் 20 ஆயிரம் பசுமை வீடுகள் கட்டித்தரப்படும்

    * சூரிய சக்தியால் இயங்கும் 2000 பம்பு செட்டுகள் மூலம் நீர்மேலாண்மை மேம்படும்

    * வரும் நிதியாண்டில் சுகாதாரத்துறைக்கு ரூ.12,563 கோடி ஒதுக்கீடு

    * 2018-19-ம் ஆண்டில் உற்பத்தி மதிப்பின் வளர்ச்சி விகிதம் 8.16 சதவீதமாக உயர்வு

    * வரும் நிதியாண்டில் 1,986 கிமீ நீளமுள்ள சாலைகளில் ரூ.1142 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. #TamilNaduBudget #TNBudget2019 #Budget2019 #OPS
    சென்னை காவல் துறையில் ‘ரோபோ’ போலீஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ‘ரோபோ’ போலீசின் செய்முறை நடவடிக்கைகளை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பார்வையிட்டார். #ChennaiPolice #Robot
    சென்னை:

    சென்னை காவல் துறைக்கு புத்தாண்டு வரவாக ‘ரோபோ’ போலீஸ் அறிமுகமாகி உள்ளது. அண்ணா பல்கலைக்கழக மாணவர்களும், அவர்களுக்கு துணையாக கம்ப்யூட்டர் ஞானமுள்ள 10 வயதுக்குட்பட்ட சிறுவர்களும் சேர்ந்து இந்த ‘ரோபோ’ போலீசை உருவாக்கியுள்ளனர்.

    நேற்று இந்த ‘ரோபோ’ போலீஸ் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டது. ‘ரோபோ’ போலீசின் செய்முறை நடவடிக்கைகளை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேரடியாக பார்வையிட்டார்.

    போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் அருண், இணை கமிஷனர் சுதாகர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் ‘ரோபோ’ போலீசின் செய்முறை நடவடிக்கைகளை பார்வையிட்டனர்.

    சென்னை சுவாமி சிவானந்தா சாலையில் போக்குவரத்து விதிமுறைகள் பற்றி பயிற்சி கொடுக்கும் சிறுவர்-சிறுமிகளுக்கான பூங்கா உள்ளது. சோதனை அடிப்படையில் இந்த ‘ரோபோ’ போலீஸ் சிறுவர்-சிறுமிகளுக்கான போக்குவரத்து பூங்காவில் முதன்முதலில் தனது பணியை தொடங்குகிறது.

    விரைவில் இந்த நிகழ்ச்சி தொடங்கும். சிறுவர்-சிறுமிகளுக்கு போக்குவரத்து விதிமுறைகளை சொல்லி கொடுக்கும் நிகழ்ச்சியில் ‘ரோபோ’ போலீஸ் தனது ஆரம்பகட்ட பணியை தொடங்குகிறது. இதில் எந்தளவுக்கு ‘ரோபோ’ போலீஸ் வெற்றிகரமாக செயல்படுகிறது என்பதை பொறுத்து, அடுத்தக்கட்டமாக போக்குவரத்து போலீசில் இந்த ‘ரோபோ’ போலீசுக்கு பணி கொடுக்கப்படும் என்று உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ‘ரோபோ’ போலீசை வடிவமைப்பதற்கு ரூ.4 லட்சம் வரை செலவாகி உள்ளதாக தெரிகிறது.
    இலங்கையில் புதிய மந்திரிசபை பதவியேற்றுக்கொண்டது. அதிபர் சிறிசேனா மந்திரி சபையின் தலைவர் என்ற முறையில் போலீஸ் துறையை தன்னிடமே வைத்துக்கொண்டார். #SriLankaCabinet #Sirisena
    கொழும்பு:

    இலங்கையில் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேயை கடந்த அக்டோபர் 26-ந்தேதி நீக்கிய அதிபர் சிறிசேனா, முன்னாள் அதிபர் ராஜபக்சேவை புதிய பிரதமராக நியமித்தார். இதனால் அரசியல் குழப்பம் ஏற்பட்டதுடன், அதிபரின் இந்த நடவடிக்கைகளுக்கு சுப்ரீம் கோர்ட்டும் முட்டுக்கட்டை போட்டது.

    இதைத்தொடர்ந்து ரணில் விக்ரமசிங்கேயை மீண்டும் அவர் கடந்த 16-ந்தேதி பிரதமராக நியமித்தார். இதன் தொடர்ச்சியாக 30 நபர் கொண்ட புதிய மந்திரி சபை நேற்று பதவியேற்றுக் கொண்டது. அதிபரின் செயலகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் மந்திரிகள் ஒவ்வொருவருக்கும் அதிபர் சிறிசேனா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.



    புதிய மந்திரி சபையில் ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி இடம் பெற்றுள்ள ஐக்கிய தேசிய முன்னணியை சேர்ந்த 29 பேர் இடம் பெற்று உள்ளனர். இதில் முக்கிய எம்.பி.க்களான மங்கள சமரவீராவுக்கு நிதித்துறையும், சகல ரத்னாயகவுக்கு துறைமுகத்துறையும் ஒதுக்கப்பட்டு உள்ளது.

    இலங்கையில் அதிகாரமிக்க துறையாக கருதப்படும் பாதுகாப்பு படை மற்றும் போலீஸ் துறையை ரணில் பரிந்துரைத்தவர்களுக்கு வழங்காத அதிபர் சிறிசேனா, மந்திரி சபையின் தலைவர் என்ற முறையில் அந்த துறையை தன்னிடமே வைத்துக்கொண்டார். இதன் மூலம் அதிபர், பிரதமர் இடையிலான மோதல் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றே தெரிகிறது. #SriLankaCabinet #Sirisena
    நெல்லை பல்கலைக் கழக மாணவர்கள் மீது தடியடி நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார். #MDMK #Vaiko
    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம் நடத்தியும், பல்கலைக்கழக நிர்வாகம் உடனடியாக மாணவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்திட முன் வரவில்லை.

    இதனைக் கண்டித்து மாணவர்கள் தீவிர முழக்கங்கள் எழுப்பிய பின்னரே, மாணவப் பிரதிநிதிகள் ஓரிருவரை மட்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளனர்.

    முற்றுகையிட்ட மாணவர்கள் பல்கலைக் கழகத்திற்குள் நுழைய முற்பட்ட போது அவர்களை சமாதானப்படுத்த முயலாமல், காவல் துறையினர் கண் மூடித்தனமாக தடியடி நடத்தியுள்ளனர்.

    இந்தத் தாக்குதலில் மாணவ- மாணவியர் பலருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவியர் சிலரை காவல்துறையைச் சேர்ந்த பெண் காவலர்களே முரட்டுத்தனமாக அடித்துத் தள்ளுகின்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. போர்க்களம் போல் நேற்று நடந்த இந்தக் காட்சிகளைப் பார்க்கும்போது மிகுந்த மன வேதனையைத் தருகிறது.

    மாணவர்கள் மீது காவல் துறையினர் கடுமையான தாக்குதலில் ஈடுபட்டதை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

    மாணவர்களின் உரிமைப் போராட்டத்தில் மிக மெத்தனமாகச் செயல்பட்ட பல்கலைக்கழக அதிகாரிகள் மற்றும் மாணவர்கள் மீது தடியடி நடத்திய காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.

    அமைதியான முறையில் போராடும் மாணவர்கள் மீது அரக்கத்தனமான தாக்குதல் தொடருமேயானால், எதிர் விளைவுகள் ஏற்படும் என்பதை உணரவேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #MDMK #Vaiko
    தமிழகத்தில் காவல் துறையினர் தங்கள் உயிரை பணயம் வைத்து பயங்கரவாதிகளின் நடமாட்டத்தினை கட்டுப்படுத்தி இருக்கிறார்கள் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டி உள்ளார். #EdappadiPalanisamy #ADMK #TNPolice
    சென்னை:

    கலைவாணர் அரங்கத்தில் காவலர் நிறைவாழ்வு பயிற்சி தொடக்க விழா இன்று நடந்தது. விழாவை தொடங்கி வைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    காவல் துறை எல்லா காலங்களிலும் சட்டம்- ஒழுங்கை பாதுகாப்பதிலும், குறிப்பாக, நெருக்கடியான தருணங்களில், சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவதிலும், பொது ஒழுங்கை சிறப்பாக பேணி பாதுகாக்கும் துறையாக விளங்கி வருகின்றது.

    ஒரு மாநிலத்தில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட வேண்டுமெனில் அங்கு அமைதி நிலவ வேண்டும். இப்பணியினைத்தான் நமது காவல் துறையினர் சிறப்பாக செய்து, தமிழ்நாட்டை ஒரு அமைதிப் பூங்காவாக திகழச் செய்கின்றனர் என்று இத்தருணத்தில் பெருமையுடன் கூறிக் கொள்ள விரும்புகிறேன்.

    காவல் துறையினர் தங்கள் உயிரை பணயம் வைத்து சமூக விரோதிகளை சண்டையிட்டு வீழ்த்தியிருக்கிறார்கள். பயங்கரவாதிகளின் நடமாட்டத்தினை தமிழ்நாட்டில் முழுவதுமாக கட்டுப்படுத்தி இருக்கிறார்கள்.

    சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பதை திறம்பட செய்து வந்தாலும், குற்றங்கள் நடைபெறாமல் தடுத்தல், குற்றங்களை கண்டுபிடித்தல், போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பு அளித்தல், முக்கியமான அமைப்புகளுக்கு பாதுகாப்பு வழங்குதல், இயற்கை சீற்றங்களை சமாளித்தல், பல்வேறு சமூக சட்ட விதிகளை செயல்படுத்துதல் போன்ற விரிவான பணிகளை நீங்கள் செய்து வருகின்றீர்கள்.

    நீங்கள் பணி செய்யும் போது, சில சமயங்களில், ஏச்சுக்கும் பேச்சுக்கும் உள்ளாவதை நாங்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் நீங்கள், ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்ற ஆன்றோரின் வாக்குப்படி அமைதியுடன் பணியாற்றி வருகிறீர்கள்.

    இதை மக்களும் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். சென்ற வருடம் பெய்த பெருமழையின் போது காவல் துறையினர் குழுக்களாக செயல்பட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல வகையில் உதவி புரிந்துள்ளனர்.

    சென்னை பெருமழையின் போது, சாலையில் தேங்கியிருந்த நீர் வடியும் பொருட்டு, ஒரு காவல் ஆய்வாளர் மழைநீர் வடிகாலில் இறங்கி அடைப்புகளை நீக்கியது, தாய் தந்தையை இழந்த ஒரு மாணவனை, தத்தெடுத்த ஒரு காவல் உதவி ஆணையர், 72 வயதான ஒரு முதியவர், பல ஆண்டுகளுக்குப் பிறகு அவரது பேரனைப் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்தல் போன்ற உங்களின் பல்வேறு மனித நேயப் பணிகளை பத்திரிகை மற்றும் சமூக வலைதளங்கள் மூலம், மக்களும், நாங்களும் பார்த்து பாராட்டிக் கொண்டு இருக்கின்றோம்.

    காவல் துறையினரும், அவர்தம் குடும்பத்தினரும் சில நேரங்களில் மனஅழுத்தத்திற்கு ஆளாக நேரிடுகிறது. காவல் துறையினர் சந்திக்கும் பிரச்சனைகளை இந்த அரசு நன்கு அறியும்.

    எனவே, காவல் துறையினரின் மனநலன் மற்றும் குடும்ப நலன் ஆகியவற்றை பேணி பாதுகாப்பதற்காக மிகுந்த பரிசீலனைக்குப் பின்பு, தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்டதே இந்த ஏற்றமிகு “காவலர் நிறைவாழ்வு பயிற்சி” திட்டம்.



    இந்த திட்டம் பெங்களூரில் உள்ள, உலகத்தரம் வாய்ந்த “நிம்ஹான்ஸ்” என அழைக்கப்படும் தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனத்துடன் இணைந்து தமிழ்நாடு அரசால், தமிழக காவல் துறையினர் மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் பயிற்சி ஆகும்.

    இந்தியாவிலேயே, ராணுவத்திலோ அல்லது துணை ராணுவத்திலோ கூட இம்மாதிரியான பயிற்சி இதுவரை அளிக்கப்படவில்லை. காவல் துறையின் உயர் அதிகாரி முதல் கடைநிலை காவலர் வரை அனைவருக்கும் இம்மாதிரியான பயிற்சி வழங்கவிருப்பது இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும் தான் என்பதை இங்கே பெருமையுடன் சுட்டிக்காட்ட விழைகிறேன்.

    அனைத்து மாவட்டம் மற்றும் காவல் பிரிவுகளிலும், சிறப்புப் பிரிவுகளிலும் பணியாற்றும் அனைத்து காவலர்களுக்கும், அவர்கள் குடும்பத்தினருக்கும் இந்த நிறைவாழ்வு பயிற்சி அளிக்கப்படும்.

    இதற்கென, காவல் துறையின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும், 358 முதன்மை பயிற்சியாளர்கள் உருவாக்கப்பட்டு, அவர்கள் அந்தந்த மாவட்டத்திலுள்ள காவல் துறையினருக்கு பயிற்சி அளிப்பார்கள்.

    அடுத்த ஒரு வருட காலத்திற்கு இந்த பயிற்சி அளிக்கப்படும். பின்னர், முதன்மைப் பயிற்சியாளர்கள் மூலம் 2 வருட காலங்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கப்படும். அதிக அளவு மன அழுத்தம் உள்ளோருக்கு, தனியாக நிறைவாழ்வு பயிற்சி அளிக்கப்படும்.

    இப்பயிற்சியானது தமிழ்நாடு காவல் துறையில் அனைத்து நிலைகளிலும் பணிபுரியும் சுமார் 1,20,000 காவல் அலுவலர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்துள்ள சுமார் 3,60,000 குடும்ப உறுப்பினர்களுக்கும் ஓர் ஆண்டுக்குள் வழங்கப்பட உள்ளது.

    காவல் துறையினரும் அவரது குடும்பத்தினரும் இந்த பயிற்சியினை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    இந்த நிறைவாழ்வு பயிற்சியின் வாயிலாக, தமிழக காவல் துறையினர் மற்றும் அவர்தம் குடும்பத்தினரின் மனநலன் மேம்படுத்தப்பட்டு, காவலர்கள் அவர்தம் பணிகளை மேலும் புத்துணர்ச்சியுடனும், சிறப்புடனும் செயல்பட வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை. இதேபோல் காவலர்களின் குடும்பங்களிலும் நல்ல அமைதியான சூழ்நிலை உருவாகும்.

    தனிமனித அமைதி, குடும்ப அமைதியாக மாறும்; குடும்ப அமைதி, மாநில அமைதியாக மாறும்; மாநில அமைதி, நாட்டு அமைதியாக மாறும்; ஒரு நாட்டின் அமைதி, உலக அமைதியாக மாறும்.

    இந்த நிறைவாழ்வு பயிற்சி உங்களுக்கு வாழ்விலும், பணியிலும், மன நிம்மதியையும், ஆரோக்கியத்தையும் வழங்கும் என நம்புகிறேன்.

    இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். #EdappadiPalanisamy #ADMK #TNPolice
    ×