search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nellai university"

    • மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் நாட்டுநலப் பணித்திட்ட அலுவலர்க ளுக்கான ஒருநாள் கருத்தரங்கம் செனட் அரங்கில் நடைபெற்றது.
    • கருத்தரங்கில் துணைவேந்தர் சந்திரசேகர் தேசிய மாணவர் படை போன்று நாட்டு நலப்பணித்திட்டமும், மாணவர்களின் ஆளுமை திறனை வளர்க்க பங்களிப்பது குறித்து எடுத்துரைத்தார்.

    நெல்லை:

    மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நாட்டுநலப் பணித்திட்ட அலுவலர்க ளுக்கான ஒருநாள் கருத்தரங்கம் செனட் அரங்கில் நடைபெற்றது.

    பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகர் தலைமை தாங்கி பேசினார். பல்கலைக்கழக பதிவாளர் அண்ணாதுரை வாழ்த்தி பேசினார். கருத்தரங்கில் துணைவேந்தர் சந்திரசேகர் பேசுகையில்,தேசிய மாண வர் படை போன்று நாட்டு நலப்பணித்திட்டமும், மாணவர்களின் ஆளுமை திறனை வளர்க்க பங்க ளிப்பது குறித்து எடுத்து ரைத்தார்.

    இதில் முன்னாள் நாட்டுநலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் செந்தாமரைக்கண்ணன், ராஜலிங்கம், ராஜரத்தினம் மற்றும் ஆறுமுகம் ஆகியோரை கவுரவித்து அவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.

    சிறப்பு விருந்தினராக இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை மண்டல இயக்குநர் சாமுவேல் செல்லையா கலந்து கொண்டு நாட்டு நலப்பணித்திட்டம் பற்றிய வரலாறு, அதன் பணிகள் குறித்தும், திட்ட அலுவலர்கள் அதனை எவ்வாறு சிறப்பாக செய்வது உள்ளிட்டவை குறித்தும் பேசினார்.

    மாநில நாட்டு நலப்பணித்திட்ட அலு வலர் செந்தில்குமார் கலந்துகொண்டு நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்களுக்கான பொறுப்புகள், கடமைகள் குறித்து பேசினார். முன்ன தாக லெனின் வரவேற்றார்.

    கருத்தரங்கில் தேசிய மற்றும் மாநில அளவிலான முகாம்கள் மற்றும் சென்னையில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் பங்கு பெற்ற நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களை பாராட்டி துணைவேந்தர் சந்திரசேகர் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார்.

    இதில் பல்கலைகழ கத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் பணியாற்றும் 180 நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வாசுகி நன்றி கூறினார்.

    ஏற்பாடுகளை பல்கலைக்கழக நாட்டுநலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் வெளியப்பன் செய்திருந்தார்.

    • நுழைவு சீட்டு கிடைக்கப்பெறாத மாண வர்கள் தேர்வாணையர் அலுவலகத்தை தேர்வு நாட்களில் அணுகி தேர்வு எழுதலாம்.
    • சிறப்பு துணைத்தேர்வுக்கு கால அட்டவணை தேர்விற்கு 5 நாட்களுக்கு முன்னர் வெளியிடப்படும்.

    நெல்லை:

    நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் ( பொறுப்பு) அண்ணாதுரை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நெல்லை மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் 2019-20-ம் கல்வி ஆண்டில் இளங்கலை, இளம் வணிகவியல் மற்றும் இளம் அறிவியல் பாடங்களின் அனைத்து பிரிவுகளிலும் சேர்ந்து பயின்ற மாணவர்கள் ஏப்ரல் 2022-ல் நடைபெற்ற 1 முதல் 5 -ம் பருவ தேர்வில் முழுமையாக தேர்ச்சி பெற்று 6 -ம் பருவத் தேர்வில் ஒரு பாடத்தில் மட்டும் தேர்ச்சி பெறாத மற்றும் 1 முதல் 5 பருவத்தேர்வு வரையிலான பாடங்களில் ஏதேனும் ஒரு பாடத்தில் மட்டும் தேர்ச்சி பெறாத மாணக்கர்களுக்கு (எழுத்து தேர்வு அல்லது செய்முறைத்தேர்வு ) சிறப்புத் துணைத்தேர்வுகள் அடுத்தமாதம் 14-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான தேர்வு

    மேலும் இறுதி பருவமாகிய ( இளநிலை எனில் 6-ம் பருவம், முதுநிலை எனில் 4-ம் பருவம் மற்றும் ஆய்வியல் நிறைஞர் எனில் 2-ம் பருவம்) ஏப்ரல் 2022 தேர்விற்கு தகுதியுடைய வருகைப்பதிவு இருந்தும், தேர்வுக்கட்டணம் செலுத்த பல்கலைக்கழகம் மூன்று கடைசி வாய்ப்புகள் வழங்கிய போதும், சில மாணக்கர்கள் தேர்வு கட்டணம் செலுத்தவில்லை. எனவே அந்த மாணவர்களின் நலன் கருதி உரிய கட்டணம் செலுத்தி சிறப்பு தேர்வு எழுத பல்கலைக்கழகம் அனுமதி வழங்கியுள்ளது. எனவே, அவ்வாறு உரிய கட்டணம் செலுத்தி காத்திருக்கும் மாணவர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இந்த சிறப்புதுணைத் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் 26-ந் தேதி ( இன்று) முதல் வருகிற 1-ந் தேதிக்குள் www.msuniv.ac.in என்ற பல்கலை கழக இணையதளத்தில் தேர்வு கட்டணமாகிய ரூ. 1,000 செலுத்தி

    மேற்கூறிய சிறப்பு துணைத்தேர்வுகள் அல்லது சிறப்பு தேர்வுகள் பல்கலை கழக வளாகத்தில் வைத்து மட்டுமே நடத்தப்படும். தேர்வு அனுமதிச்சீட்டை மாணவர்கள் இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    மேலும், இத்தேர்வுகளின் கால அட்டவணை தேர்விற்கு 5 நாட்களுக்கு முன்னர் வெளியிடப்படும்.

    எனவே,இந்த தேர்வு எழுத தகுதியுடைய மாணவர்கள் அந்தந்த தேதிகளுக்கான கால அட்டவணையை கடைபிடித்து தேர்வு எழுத கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    நுழைவு சீட்டு கிடைக்கப்பெறாத மாண வர்கள் தேர்வாணையர் அலுவலகத்தை தேர்வு நாட்களில் அணுகி தேர்வு எழுதலாம்.

    இவ்வாறு அதில் கூறி யுள்ளார்.

    நெல்லை பல்கலைக் கழக மாணவர்கள் மீது தடியடி நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார். #MDMK #Vaiko
    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம் நடத்தியும், பல்கலைக்கழக நிர்வாகம் உடனடியாக மாணவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்திட முன் வரவில்லை.

    இதனைக் கண்டித்து மாணவர்கள் தீவிர முழக்கங்கள் எழுப்பிய பின்னரே, மாணவப் பிரதிநிதிகள் ஓரிருவரை மட்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளனர்.

    முற்றுகையிட்ட மாணவர்கள் பல்கலைக் கழகத்திற்குள் நுழைய முற்பட்ட போது அவர்களை சமாதானப்படுத்த முயலாமல், காவல் துறையினர் கண் மூடித்தனமாக தடியடி நடத்தியுள்ளனர்.

    இந்தத் தாக்குதலில் மாணவ- மாணவியர் பலருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவியர் சிலரை காவல்துறையைச் சேர்ந்த பெண் காவலர்களே முரட்டுத்தனமாக அடித்துத் தள்ளுகின்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. போர்க்களம் போல் நேற்று நடந்த இந்தக் காட்சிகளைப் பார்க்கும்போது மிகுந்த மன வேதனையைத் தருகிறது.

    மாணவர்கள் மீது காவல் துறையினர் கடுமையான தாக்குதலில் ஈடுபட்டதை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

    மாணவர்களின் உரிமைப் போராட்டத்தில் மிக மெத்தனமாகச் செயல்பட்ட பல்கலைக்கழக அதிகாரிகள் மற்றும் மாணவர்கள் மீது தடியடி நடத்திய காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.

    அமைதியான முறையில் போராடும் மாணவர்கள் மீது அரக்கத்தனமான தாக்குதல் தொடருமேயானால், எதிர் விளைவுகள் ஏற்படும் என்பதை உணரவேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #MDMK #Vaiko
    ×