search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "violent protests"

    • பேரணிகளில் சில இடங்களில் காவல் கண்காணிப்பை மீறி வன்முறை நடந்தது
    • காசா மக்களுக்கு உதவி கேட்பதாக தெரியவில்லை என சுயெல்லா குற்றம் சாட்டினார்

    இங்கிலாந்தின் உள்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சர், இந்திய வம்சாவளியை சேர்ந்த சுயெல்லா பிரேவர்மேன் (Suella Braverman).

    இஸ்ரேல்-ஹமாஸ் போரில் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உட்பட மேற்கத்திய நாடுகள் இஸ்ரேல் ஆதரவு நிலையை எடுத்துள்ளன. ஆனால், இங்கிலாந்து மக்களில் பலர் ஹமாஸ் அமைப்பினரை ஆதரிக்கின்றனர்.

    ஹமாஸ் அமைப்பை ஆதரித்து இங்கிலாந்தில் பேரணிகள் நடந்தன. சில இடங்களில் வன்முறையும் நடந்தன. தொடர்ந்து, போராட்டங்கள் நடத்த அனுமதி கோரி ஹமாஸ் ஆதரவினர் காவல்துறையினரிடம் மனு அளித்து வருகின்றனர்.

    இந்நிலையில், போராட்டக்காரர்களை கட்டுப்படுத்துவதில் காவல்துறையினர் பாரபட்சம் பார்ப்பதாக அமைச்சர் சுயெல்லா பிரேவர்மேன் கருத்து தெரிவித்து கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார்.

    அதில் அவர் தெரிவித்ததாவது:

    யூதர்கள் நடத்தும் கவன ஈர்ப்பு பேரணிகள் காவல்துறைக்கு சவாலாக இல்லை. சமூக ஒழுங்கிற்கு சவால் விடும் வகையில் ஹமாஸ் அமைப்பினரை ஆதரிக்கும் பல லட்சக்கணக்கானவர்கள் சாலையில் இறங்கி வன்முறையில் ஈடுபடும் வகையில் நடந்து கொள்வது சிக்கலை உண்டாக்குகிறது. தொடக்கம் முதலே இந்த போராட்டங்கள் சட்ட சிக்கலை ஏற்படுத்தும் வகையில் உள்ளன. ஆங்காங்கே நடைபெறும் வன்முறைகளால் மட்டும் அல்ல; அவர்கள் கையில் கொண்டு செல்லும் பதாகைகள் மற்றும் ஆங்காங்கு அவர்கள் ஒட்டும் சுவரொட்டிகளிலும், அவர்கள் எழுப்பும் கோஷங்களிலும், தகாத வார்த்தைகள் மற்றும் அச்சுறுத்தும் வாசகங்கள் இடம் பெறுகின்றன. இதனை கண்டு கொள்ளாமல் விட முடியாது. இது காசா மக்களுக்கு மனிதாபிமான உதவி கேட்கும் கோஷங்கள் அல்ல. ஒரு குறிப்பிட்ட சிலர், தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்ட எழுப்பும் கோஷங்கள். காவல்துறை உயரதிகாரிகள் போராட்டக்காரர்களிடம் பாரபட்சமாக நடந்து கொள்வதாக கருத்து நிலவ தொடங்கியுள்ளது. தேச பற்றுடன் போராடுபவர்களிடம் கண்டிப்புடன் நடந்து கொள்ளும் காவல்துறையினர் சட்டத்தை மீறுபவர்களிடம் ஏன் அந்த கண்டிப்பு காட்டவில்லை? இது ஒரு இரட்டை நிலைப்பாடு. இது குறித்து காவல்துறை உயரதிகாரிகளிடம் பேசியுள்ளேன்.

    இவ்வாறு சுயெல்லா தெரிவித்தார்.

    இவரது கருத்து இடதுசாரிகளுக்கு எதிரானது என குற்றம் சாட்டி சுயெல்லாவை, பிரதமர் ரிஷி சுனக் பதவிநீக்கம் செய்ய வேண்டும் எனும் கோரிக்கைகள் இங்கிலாந்தில் பலமாக எழுந்துள்ளன.

    ஈராக் நாட்டில் அத்தியாவசிய தேவைகளுக்காக மக்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக உருவெடுத்ததால் பஸ்ரா நகரில் இன்று மாலை முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. #Basracurfew #Basraprotests
    பாக்தாத்:

    ஈராக் நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள பஸ்ரா மாகாணத்தின் தலைநகர் பஸ்ராவில் உள்கட்டமைப்புகள் மிகவும் மோசமாக இருப்பதாகவும், அரசு சேவைகள் கிடைக்கப்பெறாமல் புறக்கணிக்கப்படுவதாகவும், ஊழல் மலிந்து விட்டதாகவும் கூறி அந்த நகரை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கடந்த மூன்றாம் தேதி போராட்டத்தில் குதித்தனர்.

    தொர்ந்து ஆறுநாட்களாக நடைபெற்றுவரும் இந்த போராட்டத்தின்போது பாதுகாப்பு படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வன்முறை வெடித்தது. இந்த மோதலில் பலர் உயிர் இழந்தனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் பஸ்ரா நகரில் அரசு அலுவலகங்கள், அரசியல் கட்சி அலுவலகங்கள் உள்ளிட்டவற்றுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்தனர். அரசு செய்தி சேனல் நிறுவனத்துக்கும் தீவைக்கப்பட்டது.

    அதுமட்டும் இன்றி நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்தை துண்டித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களை கலைக்க பாதுகாப்புபடை வீரர்கள் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதோடு, தடியடியும் நடத்தினர்.


    இந்த மோதலில் போராட்டக்காரர்கள் 3 பேர் உயிர் இழந்தனர். இதன் மூலம் அங்கு கடந்த திங்கட்கிழமை முதல் நடந்து வரும் வன்முறைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

    இந்நிலையில், போராட்டம் மேலும் தீவிரமடையாமல் தடுக்கும் வகையில் இன்று மாலை 4 மணியில் இருந்து பஸ்ரா நகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எனினும், இதை பொருட்படுத்தாத பஸ்ரா நகர மக்கள் தொடர்ந்து அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். #Basracurfew #Basraprotests
    ×