search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "clue"

    கோவை அருகே சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் குறித்து துப்பு கொடுத்தால் தக்க சன்மானம் வழங்கப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. #GirlHarassment
    கவுண்டம்பாளையம்:

    கோவையை அடுத்த துடியலூர் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி கடந்த 25-ந் தேதி மாயமானார். மறுநாள் காலை வீட்டருகே சிறுமி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரது கை, கால்கள் பனியனால் கட்டப்பட்டிருந்தது. பிரேத பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.

    இதனால் சிறுமியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். கொலையாளிகளை கைது செய்து, கடுமையான தண்டனை வழங்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என கூறி அரசு ஆஸ்பத்திரி முன்பு மறியல் செய்தனர். நேற்று துடியலூர் பஸ் நிலையம் முன்பு சாலை மறியல் செய்தவர்களுடன் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    சிறுமியின் பெற்றோர் போலீசில் கொடுத்த புகாரில் அதே பகுதியை சேர்ந்த 4 வாலிபர்கள் மீது சந்தேகம் தெரிவித்திருந்தனர். அந்த வாலிபர்கள் மற்றும் பிளஸ்-2 மாணவர் ஒருவர் உள்பட மொத்தம் 6 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



    இந்நிலையில் சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்றும், தகவல் தெரிவிப்பவர்கள் குறித்த விபரம் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்றும் காவல் துறை தெரிவித்துள்ளது.



    சிறுமி கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் பற்றிய தகவல் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண்களையும் காவல்துறை வெளியிட்டுள்ளது. #GirlHarassment
    குற்றச்செயல்களை கண்டுபிடிக்க போலீசார் ஏதேதோ வழிகளை பயன்படுத்தி வரும் நிலையில், அபுதாபி போலீசார் பூச்சிகளை கொண்டு குற்றவாளிகளை கண்டறிந்து வருகின்றனர். #AbuDhabi
    துபாய்:

    கொலை, கொள்ளை, கற்பழிப்பு, வழிப்பறி போன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடிப்பது பெரும் சவாலாக மாறிவிட்டது. நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி போலீசார் தங்களை கண்டுபிடிக்க இயலாத வகையில் குற்றவாளிகள் மிக சாதுர்யமாக செயல்படுகின்றனர்.

    ஆனால், அபுதாபி காவல்துறையினர், தடயம் இல்லாத வழக்குகளையும் அலசி ஆராய்ந்து நிஜ குற்றவாளிகளை பிடித்துவிடுகின்றனர். எப்படி என்கிறீர்களா...? அவர்கள் பூச்சிகளையும் ரகசிய உளவாளிகளாக மாற்றி, அதன்மூலம் ஆதாரங்களையும், தடயங்களையும் சேகரிக்கின்றனர். இது குறித்து அபுதாபி காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

    ‘‘குற்றச் சம்பவம் எப்போது நடந்தது?, எங்கு நடந்தது?, கொலையானவர் இறந்து எத்தனை மணிநேரம் இருக்கும்? என்பதை அடிப்படையாக வைத்தே, கொலையாளிகளை கண்டுபிடிக்க முடியும். ஆனால் ஒரு இடத்தில் கொலை செய்யப்பட்டு, மறு இடத்தில் உடல் வீசப்பட்டால் மேல் குறிப்பிட்டவற்றை சரியாக யூகிக்க முடியாது.

    உடற்கூறு ஆய்வுகள் குற்ற புலனாய்வு விசாரணையில் கை கொடுத்தாலும், குற்றவாளிகளை நெருங்குவதில் தாமதம் ஏற்படலாம். இல்லையேல் காவல்துறையின் நடவடிக்கைகளை அறிந்து கொண்டு குற்றவாளிகள் தப்பிக்கும் வாய்ப்புகளும் அதிகமாக உள்ளன. அதனால்தான் தற்போது பூச்சி உளவாளிகளை பயன்படுத்துகிறோம்.

    ஈக்களும், பூச்சிகளும் இறந்த உடல்களில் அமரக்கூடியவை. அதேசமயம் உடலை வீசிச்செல்ல வரும் கொலையாளிகளின் மீதும் உட்காரும். சில கொசுக்கள், கொலையாளிகளின் ரத்தத்தை உறிஞ்சுகின்றன.

    சில ஈக்களும், பூச்சிகளும் மனிதர்களின் உடல் திரவங்களை உறிஞ்சும் தன்மை கொண்டவை. அதனால் கொலையாளிகளின் தகவலும், கொலை செய்யப்பட்டவரின் தகவலும் பூச்சிகளின் வயிற்றில் சேமிக்கப்படுகின்றன.

    அதனால் குற்றச்சம்பவம் நடைபெற்ற பகுதிகளில் சுற்றித்திரியும் பூச்சிகளை பிடித்து பரிசோதித்தால், எத்தனை நபர்கள் வந்தனர், யார் யார் வந்தனர், எப்போது வந்தனர் போன்ற தகவல்களை கண்டுபிடித்துவிட முடியும்.



    பூச்சிகளும், கொசுக்களும் பலர் மீதும் அமர்வதால், நிரபராதிகளை குற்றவாளிகளாக கைது செய்துவிடுவோமோ? என்ற அச்சம் ஆரம்பத்தில் இருந்தது. ஆனால் கலீபா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள் இணைந்து பூச்சிகளை தீவிரமாக அலசி ஆராய்வதால் திரவம் மற்றும் ரத்தம் பூச்சிகளின் வயிற்றில் எப்போது சேமிக்கப்பட்டது? கொலை செய்யப்பட்ட நபருக்கும், சந்தேகப்படும் நபருக்கும் என்ன சம்பந்தம்? கொலை நடந்த நேரத்தில் சந்தேகப்படும் நபர் எங்கு இருந்தார்? உண்மை கண்டறியும் சோதனை என பல ஆய்வுகளை நிகழ்த்துவதால், முக்கிய குற்றவாளிகளும், குற்றவாளிகளுக்கு உதவியவர்களும் சிக்கிவிடுகிறார்கள்.

    இப்படி தடயங்களை சேமித்துக்கொடுக்கும் பூச்சிகள், உடற்கூறு ஆய்வு முடிவுகளையும் துல்லியமாக விளக்கிவிடுகின்றன. ஏனெனில் ‘புளோ பிளை’ எனப்படும் ஈக்கள்தான் இறந்த சடலத்தில் முதலில் அமரும் பூச்சியினம். இவை இறந்த சடலத்தின் மீது அமர்வதோடு, அங்கேயே முட்டைகளையும் ஈடுகின்றன.

    முட்டைகள் லார்வா எனப்படும் புழுக்களாக மாறி, அந்த சடலத்திலேயே வளர்வதால் இந்த பூச்சிகளை கொண்டு விவரமான உடற்கூறு ஆய்வுகளை எழுதிவிட முடியும். உடற்கூறு ஆய்வில் கிடைக்கும் அத்தனை விவரங்களையும், இறந்த உடலில் வளர்ந்த பூச்சிகளின் மூலம் பெறமுடியும்’’ என்கிறார், அபுதாபி காவல்துறையின் உயர் அதிகாரி.

    இதுவரை பூச்சி உளவாளிகளின் உதவியால் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகளில் துப்பு துலக்கி, குற்றவாளிகளை கண்டுபிடித்திருக்கிறார்கள் அபுதாபி காவல்துறையினர். இங்கு கொள்ளை, கொலை நடந்த இடங்களுக்கு மோப்ப நாய் வரவழைக்கப்படுவதை போன்றே அமீரகத்தில் பூச்சிகளை சேகரிக்கும் குழுவையும் வரவழைக்கிறார்கள். அவர்கள் சம்பந்தப்பட்ட இடத்தில் சுற்றித்திரியும் பூச்சிகளை பிடித்து ஆராய்ச்சி நடத்தி, தடயங்களை சேகரிக்கிறார்கள்.

    20 பூச்சிகளை பிடித்தால், அதில் ஒன்றில்தான் தடயத்திற்கான சாத்தியக்கூறுகள் இருக்குமாம். அதனால் கவனமாக பூச்சி உளவாளிகளை தேடிப்பிடிக்கிறார்கள். இவற்றை தகுந்த முறையில் ஆராய்வதற்காகவே அபுதாபி நகரம், அல் அய்ன் மற்றும் அல் தப்ரா ஆகிய மூன்று இடங்களில் நவீன ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முயற்சியினால், அமீரக காவல்துறையினருக்கு மட்டுமின்றி பூச்சிகளுக்கும் குற்றவாளிகள் பயப்படுகிறார்கள். #AbuDhabi
    ×