search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "abudhabi"

    • இந்தியா சார்பில் மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் புரி கலந்து கொள்கிறார்.
    • பல்வேறு நாடுகளின் எரிசக்தித்துறை அமைச்சர்கள் இதில் பங்கேற்கின்றனர்.

    அபுதாபி தேசிய கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுவனம், உலகின் முன்னணி உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்த நிறுவனம் சார்பில் சர்வதேச பெட்ரோலிய கண்காட்சி மற்றும் மாநாடு இன்று தொடங்குகிறது.

    இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த எரிசக்தித்துறை அமைச்சர்கள் மற்றும் சர்வதேச எரிசக்தி நிறுவனங்களின் தலைவர்கள், உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

    இந்த கண்காட்சியில் கலந்து கொள்ளுமாறு இந்தியாவுக்கு, ஐக்கிய அரபு அமீரக அரசு அழைப்பு விடுத்துள்ளது. அந்நாட்டின் எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்புத்துறை அமைச்சர் சுஹைல் முகமது ஃபராஜ் அல் மஸ்ரூயி விடுத்த அழைப்பை ஏற்று இந்தியா சார்பில் மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி இன்று ஐக்கிய அரபு அமீரக நாட்டிற்கு பயணம் மேற்கொள்கிறார்.

    தமது பயணத்தின் போது அபுதாபி சர்வதேச பெட்ரோலிய கண்காட்சியில் ​​இந்திய பெட்ரோலியம் தொழில் கூட்டமைப்பு மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு இணைந்து அமைத்துள்ள அரங்கையும் அவர் திறந்து வைக்கிறார். மேலும் இந்த கண்காட்சியில் பங்கேற்கும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த எரி சக்தித்துறை அமைச்சர்கள், எரிசக்தி நிறுவனங்களின் தலைவர்களையும் அவர் சந்திப்பார்.

    மேலும் ஐக்கிய அரபு அமீரகம்-இந்தியா இடையேயான எரிசக்தித்துறை ஒத்துழைப்பை வலுப்படுத்த அந்நாட்டு அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் புரி விரிவான ஆலோசனை நடத்துவார் என்று  மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விமான நிலையத்தில் தரை இறக்குவதற்கு பதில் அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிராண்ட் பகுதியில் தரை இறக்கினார்.
    • விமானி லேசான காயங்களுடன் உயிர்தப்பியதாக மீட்பு படையினர் தெரிவித்தனர்.

    ஐக்கிய அரபு நாட்டின் அபுதாபிக்கு சிறிய ரக கிளைடர் விமானம் ஒன்று சென்றது. ஒற்றை என்ஜின் கொண்ட இந்த விமானம் தரை இறங்கும்போது என்ஜினில் திடீர் கோளாறு ஏற்பட்டது. எனவே விமானி விமானத்தை தலைநகரில் உள்ள தனியார் விமான நிலையத்தில் தரை இறக்குவதற்கு பதில் அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிராண்ட் பகுதியில் தரை இறக்கினார்.

    அப்போது விமானம் அங்குள்ள வாகன நிறுத்த பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தின் இறக்கை பகுதி சேதமானது.

    இந்த விபத்தில் விமானி லேசான காயங்களுடன் உயிர்தப்பியதாக மீட்பு படையினர் தெரிவித்தனர். விமானத்தில் வேறு யாரும் பயணிகள் இருந்தார்களா? என்ற தகவலை அவர்கள் வெளியிடவில்லை.

    தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே விமானம் விபத்துக்குள்ளானதாக விமான நிலைய ஆணையம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக யாரும் வதந்தி பரப்ப கூடாது எனவும் அவர்கள் எச்சரித்து உள்ளனர்.

    துபாயில் இதற்கு முன்பு கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம் விமான விபத்து ஏற்பட்டதில் 4 பேர் பலியானார்கள்

    அபுதாபியில் நேற்று நடைபெற்ற முதலாவது டி-20 போட்டியின் பரபரப்பான ஆட்டத்தில் நியூசிலாந்தை 2 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி பெற்றது. #PAKvNZ
    அபுதாபி:

    பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடர் அபுதாபியில் நடைபெறுகிறது. நேற்று நடைபெற்ற முதலாவது டி-20 போட்டியில் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதின.

    டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் மொகமது ஹபீஸ் 45 ரன்னும், சர்ப்ராஸ் அகமது 34 ரன்னும் அடித்து அவுட்டாகினர். மற்ற வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை. இறுதியில், பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 148 ரன்கள் எடுத்தது.



    இதைத்தொடர்ந்து, 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. காலின் மன்ரோ பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவருக்கு ராஸ் டெய்லர் ஓரளவு ஒத்துழைப்பு கொடுத்தார். அவர் 42 ரன்னில் அவுட்டாகாமல் இருந்தார்.

    கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது. ஒருபுறம் ராஸ் டெய்லர் நின்றாலும், அந்த ஓவரில் 2 பவுண்டரி உள்பட 14 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 

    இதையடுத்து, 2 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது பாகிஸ்தான். இந்த வெற்றியை தொடர்ந்து, பாகிஸ்தான் 1-0 என முன்னிலை வகிக்கிறது. #PAKvNZ
    குற்றச்செயல்களை கண்டுபிடிக்க போலீசார் ஏதேதோ வழிகளை பயன்படுத்தி வரும் நிலையில், அபுதாபி போலீசார் பூச்சிகளை கொண்டு குற்றவாளிகளை கண்டறிந்து வருகின்றனர். #AbuDhabi
    துபாய்:

    கொலை, கொள்ளை, கற்பழிப்பு, வழிப்பறி போன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடிப்பது பெரும் சவாலாக மாறிவிட்டது. நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி போலீசார் தங்களை கண்டுபிடிக்க இயலாத வகையில் குற்றவாளிகள் மிக சாதுர்யமாக செயல்படுகின்றனர்.

    ஆனால், அபுதாபி காவல்துறையினர், தடயம் இல்லாத வழக்குகளையும் அலசி ஆராய்ந்து நிஜ குற்றவாளிகளை பிடித்துவிடுகின்றனர். எப்படி என்கிறீர்களா...? அவர்கள் பூச்சிகளையும் ரகசிய உளவாளிகளாக மாற்றி, அதன்மூலம் ஆதாரங்களையும், தடயங்களையும் சேகரிக்கின்றனர். இது குறித்து அபுதாபி காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

    ‘‘குற்றச் சம்பவம் எப்போது நடந்தது?, எங்கு நடந்தது?, கொலையானவர் இறந்து எத்தனை மணிநேரம் இருக்கும்? என்பதை அடிப்படையாக வைத்தே, கொலையாளிகளை கண்டுபிடிக்க முடியும். ஆனால் ஒரு இடத்தில் கொலை செய்யப்பட்டு, மறு இடத்தில் உடல் வீசப்பட்டால் மேல் குறிப்பிட்டவற்றை சரியாக யூகிக்க முடியாது.

    உடற்கூறு ஆய்வுகள் குற்ற புலனாய்வு விசாரணையில் கை கொடுத்தாலும், குற்றவாளிகளை நெருங்குவதில் தாமதம் ஏற்படலாம். இல்லையேல் காவல்துறையின் நடவடிக்கைகளை அறிந்து கொண்டு குற்றவாளிகள் தப்பிக்கும் வாய்ப்புகளும் அதிகமாக உள்ளன. அதனால்தான் தற்போது பூச்சி உளவாளிகளை பயன்படுத்துகிறோம்.

    ஈக்களும், பூச்சிகளும் இறந்த உடல்களில் அமரக்கூடியவை. அதேசமயம் உடலை வீசிச்செல்ல வரும் கொலையாளிகளின் மீதும் உட்காரும். சில கொசுக்கள், கொலையாளிகளின் ரத்தத்தை உறிஞ்சுகின்றன.

    சில ஈக்களும், பூச்சிகளும் மனிதர்களின் உடல் திரவங்களை உறிஞ்சும் தன்மை கொண்டவை. அதனால் கொலையாளிகளின் தகவலும், கொலை செய்யப்பட்டவரின் தகவலும் பூச்சிகளின் வயிற்றில் சேமிக்கப்படுகின்றன.

    அதனால் குற்றச்சம்பவம் நடைபெற்ற பகுதிகளில் சுற்றித்திரியும் பூச்சிகளை பிடித்து பரிசோதித்தால், எத்தனை நபர்கள் வந்தனர், யார் யார் வந்தனர், எப்போது வந்தனர் போன்ற தகவல்களை கண்டுபிடித்துவிட முடியும்.



    பூச்சிகளும், கொசுக்களும் பலர் மீதும் அமர்வதால், நிரபராதிகளை குற்றவாளிகளாக கைது செய்துவிடுவோமோ? என்ற அச்சம் ஆரம்பத்தில் இருந்தது. ஆனால் கலீபா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள் இணைந்து பூச்சிகளை தீவிரமாக அலசி ஆராய்வதால் திரவம் மற்றும் ரத்தம் பூச்சிகளின் வயிற்றில் எப்போது சேமிக்கப்பட்டது? கொலை செய்யப்பட்ட நபருக்கும், சந்தேகப்படும் நபருக்கும் என்ன சம்பந்தம்? கொலை நடந்த நேரத்தில் சந்தேகப்படும் நபர் எங்கு இருந்தார்? உண்மை கண்டறியும் சோதனை என பல ஆய்வுகளை நிகழ்த்துவதால், முக்கிய குற்றவாளிகளும், குற்றவாளிகளுக்கு உதவியவர்களும் சிக்கிவிடுகிறார்கள்.

    இப்படி தடயங்களை சேமித்துக்கொடுக்கும் பூச்சிகள், உடற்கூறு ஆய்வு முடிவுகளையும் துல்லியமாக விளக்கிவிடுகின்றன. ஏனெனில் ‘புளோ பிளை’ எனப்படும் ஈக்கள்தான் இறந்த சடலத்தில் முதலில் அமரும் பூச்சியினம். இவை இறந்த சடலத்தின் மீது அமர்வதோடு, அங்கேயே முட்டைகளையும் ஈடுகின்றன.

    முட்டைகள் லார்வா எனப்படும் புழுக்களாக மாறி, அந்த சடலத்திலேயே வளர்வதால் இந்த பூச்சிகளை கொண்டு விவரமான உடற்கூறு ஆய்வுகளை எழுதிவிட முடியும். உடற்கூறு ஆய்வில் கிடைக்கும் அத்தனை விவரங்களையும், இறந்த உடலில் வளர்ந்த பூச்சிகளின் மூலம் பெறமுடியும்’’ என்கிறார், அபுதாபி காவல்துறையின் உயர் அதிகாரி.

    இதுவரை பூச்சி உளவாளிகளின் உதவியால் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகளில் துப்பு துலக்கி, குற்றவாளிகளை கண்டுபிடித்திருக்கிறார்கள் அபுதாபி காவல்துறையினர். இங்கு கொள்ளை, கொலை நடந்த இடங்களுக்கு மோப்ப நாய் வரவழைக்கப்படுவதை போன்றே அமீரகத்தில் பூச்சிகளை சேகரிக்கும் குழுவையும் வரவழைக்கிறார்கள். அவர்கள் சம்பந்தப்பட்ட இடத்தில் சுற்றித்திரியும் பூச்சிகளை பிடித்து ஆராய்ச்சி நடத்தி, தடயங்களை சேகரிக்கிறார்கள்.

    20 பூச்சிகளை பிடித்தால், அதில் ஒன்றில்தான் தடயத்திற்கான சாத்தியக்கூறுகள் இருக்குமாம். அதனால் கவனமாக பூச்சி உளவாளிகளை தேடிப்பிடிக்கிறார்கள். இவற்றை தகுந்த முறையில் ஆராய்வதற்காகவே அபுதாபி நகரம், அல் அய்ன் மற்றும் அல் தப்ரா ஆகிய மூன்று இடங்களில் நவீன ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முயற்சியினால், அமீரக காவல்துறையினருக்கு மட்டுமின்றி பூச்சிகளுக்கும் குற்றவாளிகள் பயப்படுகிறார்கள். #AbuDhabi
    ×