search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Budget 2019"

    தமிழக சட்டசபையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதையடுத்து, 14-ம் தேதி வரை கூட்டத் தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. #TamilNaduBudget #TNBudget2019 #Budget2019 #OPS
    சென்னை:

    தமிழக சட்டசபை இன்று காலை 10 மணிக்கு கூடியது. அப்போது துணை முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 2019-20ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். பட்ஜெட் உரையில், பல்வேறு புதிய திட்டங்கள் மற்றும் துறைவாரியான நிதி ஒதுக்கீடுகளும், புதிய அறிவிப்புகளும் இடம்பெற்றன.

    காலை 10 மணிக்கு தனது உரையைத் தொடங்கிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மதியம் 12.39 மணிக்கு தனது உரையை நிறைவு செய்தார். இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக பட்ஜெட் உரையை வாசித்த அவர், பட்ஜெட்டுக்கு சட்டப்பேரவையின் ஒப்புதலைப் பெற்றுத் தரும்படி சபாநாயகரிடம் கேட்டுக்கொண்டு அமர்ந்தார்.



    இதையடுத்து இன்றைய சட்டசபை கூட்டம் நிறைவடைந்ததாக சபாநாயகர் தனபால் அறிவித்தார். இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு திங்கட்கிழமை காலை 10 மணிக்கு மீண்டும் சட்டசபை கூடும் என்றும் அவர் அறிவித்தார்.

    இதையடுத்து சபாநாயகர் தனபால் அறையில், அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், சட்டசபை கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது, பட்ஜெட் மீதான விவாதம் உள்ளிட்ட பிற அலுவல்கள் பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது, பட்ஜெட் கூட்டத் தொடரை 11ம் தேதி முதல் 14-ம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டது.

    11-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும். இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவார்கள். இந்த விவாதம் முடிந்ததும், 14-ந் தேதி விவாதங்களின்போது எழுப்பப்பட்ட கேள்விக்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முழுமையாக பதில் அளித்துப் பேச இருக்கிறார். அத்துடன் சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் நிறைவடையும். #TamilNaduBudget #TNBudget2019 #Budget2019 #OPS
    தமிழக சட்டசபையில் இன்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி முடிந்ததும், சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது. #TamilNaduBudget #TNBudget2019 #Budget2019 #OPS
    சென்னை:

    தமிழக சட்டசபை இன்று காலை 10 மணிக்கு கூடியது. அப்போது துணை முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 2019-20ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். பட்ஜெட் உரையில், பல்வேறு புதிய திட்டங்கள் மற்றும் துறைவாரியான நிதி ஒதுக்கீடுகளும், புதிய அறிவிப்புகளும் இடம்பெற்றன.



    காலை 10 மணிக்கு தனது உரையைத் தொடங்கிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மதியம் 12.39 மணிக்கு தனது உரையை நிறைவு செய்தார். இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக பட்ஜெட் உரையை வாசித்த அவர், பட்ஜெட்டுக்கு சட்டப்பேரவையின் ஒப்புதலைப் பெற்றுத் தரும்படி சபாநாயகரிடம் கேட்டுக்கொண்டு அமர்ந்தார்.

    இதையடுத்து இன்றைய சட்டசபை கூட்டம் நிறைவடைந்ததாக சபாநாயகர் தனபால் அறிவித்தார். இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு திங்கட்கிழமை காலை 10 மணிக்கு மீண்டும் சட்டசபை கூடும் என்றும் அவர் அறிவித்தார். #TamilNaduBudget #TNBudget2019 #Budget2019 #OPS
    தமிழகத்தில் அனைத்து துறை அரசு ஊழியர் ஊதியத்துக்காக ரூ.2,63,828.49 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #TamilNaduBudget #TNBudget2019 #Budget2019 #OPS
    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட 2019-20ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் உள்ள அம்சங்கள் வருமாறு:-

    * பழங்கள் மற்றும் காய்கறி சாகுபடியை ஊக்குவிக்க ரூ.50 கோடி ஒதுக்கீடு
    * நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.13,605 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
    * தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்துக்கு ரூ.172 கோடி ஒதுக்கீடு
    * கிராமப்புற இளைஞர்கள் வேலை வாய்ப்புக்காக ரூ.230.89 கோடி ஒதுக்கீடு
    * ஒருங்கிணைந்த சாலை கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களுக்கு ரூ.4570 கோடி ஒதுக்கீடு

    * சென்னையில் விரிவான திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை ரூ.1546 கோடி செலவில் மேற்கொள்ள நிர்வாக அனுமதி
    * சிவகங்கை கோட்டத்தில் 622 கிமீ சாலை பணிகளுக்கு ரூ.715 கோடி ஒதுக்கீடு
    * தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டத்துக்கு ரூ.459 கோடி ஒதுக்கீடு
    * சென்னை- கன்னியாகுமரி தொழில் வழித்தட திட்டத்தின் கீழ் 654 கிலோ மீட்டர் சாலைப்பணிகள் நடந்துள்ளது
    * சிறு துறைமுகங்கள் துறைக்காக 13,605 கோடி ரூபாய் ஒதுக்கீடு



    * தனியார் பள்ளிகளுடன் ஒப்பிடுகையில் அரசு பள்ளி மாணவர்கள் வேகமாக முன்னேறி வருகின்றனர்
    * மத்திய அரசிடமிருந்து உதவி மானியமாக ரூ.25,602.74 கோடி கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது
    * 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ.5000 தொடர்ந்து வழங்கப்படும்
    * அனைத்து துறை அரசு ஊழியர் ஊதியத்துக்காக ரூ.2,63,828.49 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. #TamilNaduBudget #TNBudget2019 #Budget2019 #OPS
    மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலத்தை தலைமையிடமாகக் கொண்டு, திருமங்கலம், கள்ளிக்குடி, திருப்பரங்குன்றம் மூன்று வட்டங்களை உள்ளடக்கிய புதிய வருவாய்க்கோட்டம் உருவாக்கப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #TamilNaduBudget #TNBudget2019 #Budget2019 #OPS
    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் உள்ள அம்சங்கள் வருமாறு:-

    மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அருகிலேயே அரசு சேவைகளை வழங்க இந்த அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 2011-ம் ஆண்டு முதல், 79 புதிய வருவாய் வட்டங்களும், 10 புதிய வருவாய்க் கோட்டங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. 2018-2019ஆம் ஆண்டில் மட்டும், எட்டு வருவாய் வட்டங்களை இந்த அரசு உருவாக்கியுள்ளது.

    விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து பிரித்து, கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும்.

    மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலத்தை தலைமையிடமாகக் கொண்டு, திருமங்கலம், கள்ளிக்குடி மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று வட்டங்களை உள்ளடக்கிய புதிய வருவாய்க்கோட்டம் ஒன்று 2019-2020ஆம் ஆண்டில் உருவாக்கப்படும்.

    இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. #TamilNaduBudget #TNBudget2019 #Budget2019 #OPS
    2019-20ம் நிதியாண்டில் தமிழக அரசின் மொத்த கடன் ரூ. 3.97 லட்சம் கோடியாக இருக்கும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #TamilNaduBudget #TNBudget2019 #Budget2019 #OPS
    சென்னை:

    தமிழக சட்டசபையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் உள்ள அம்சங்கள் வருமாறு:-

    அத்திக்கடவு -அவினாசி திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதற்காக ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    அரசு-தனியார் பங்களிப்புடன் பொறியியல் பட்டதாரிகளுக்கு உயர்நிலை தொழில்நுட்ப திறன் பயிற்சி வழங்கப்படும். சுற்றுலா தலங்களில் தனியாருடன் இணைந்து கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில் தமிழக திறன் மேம்பாட்டு கழகத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    உணவு மானியத்திற்காக ரூ.6 ஆயிரம் கோடி ரூபாயும், பொது விநியோக திட்டத்தை கூட்டுறவு சங்கங்கள் செயல்படுத்த 333.81 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    திருமுடிவாக்கம், ஆலத்தூர் தொழிற்பேட்டைகள் விரிவாக்கப்படும்.  2019-20 நிதியாண்டில் அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகள் கட்டமைப்பு மேம்பாட்டிற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்துக்கு மாநில அரசின் பங்காக 250 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    அனைத்து கிராமங்களிலும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.1200 கோடி, தூய்மை இந்தியா திட்டத்திற்காக ரூ.400 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
     
    ரூ.116 கோடி செலவில் நீரோடி, மார்த்தாண்டத்துறை ஆகிய இடங்களில் கடலரிப்பு தடுப்பான்கள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    நகர்ப்புற ஏழைகளுக்கு வாடகை வீட்டு வசதியினை ஏற்படுத்தும் வீட்டு வசதி திட்டத்திற்கு ரூ.5000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஊரக வளர்ச்சித்துறைக்கு ஒட்டுமொத்தமாக ரூ.18,273 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறைக்கு ரூ.6,265.52 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சமூக நலத்துறைக்கு ரூ.5,305 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை மாதவரம்- சோழிங்கநல்லூர் இடையே மெட்ரோ ரெயில் திட்டப்பணிகள் விரைவில் தொடங்கப்படும். உயர்கல்வித்துறைக்கு ரூ.4,584.21 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு ரூ.5,911 கோடி, ஆதிதிராவிடர் நலத்துறைக்கு ரூ.482 கோடி, குடியிருப்புகள் மேம்படுத்த ரூ.100 கோடி, பழங்கள் மற்றும் காய்கறி சாகுபடியை ஊக்குவிக்க ரூ.50 கோடி, மெட்ரோ ரெயில் திட்டத்திற்கான பங்கு மூலதனம் மற்றும் கடனாக மொத்தம் ரூ.2,681 கோடி, குறைந்தபட்ச தேவைகள் திட்டத்துக்காக 364 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.



    மத்திய அரசு புதிதாக அறிவித்துள்ள ஓய்வூதியத் திட்டத்தின் பயனை அமைப்புசாரா தொழிலாளர்கள் பெறும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்கும். கழிவில் இருந்து மின்சாரம் தயாரிப்பதற்காக 5 ஆயிரத்து 269 கோடி திட்ட மதிப்பீடு பரிசீலனையில் உள்ளது

    2019-20ம் நிதியாண்டில் தமிழக அரசின் மொத்த கடன் ரூ. 3.97 லட்சம் கோடியாக இருக்கும். கடந்த ஆண்டு தமிழகத்தின் கடன் ரூ.3.55 லட்சம் கோடியாக இருந்தது.

    பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 5.85 லட்சம் குடும்பங்களுக்கு வீடுகள் கட்ட அனுமதி அளிக்கப்படும்.  சென்னை கோயம்பேட்டில் 296.50 கோடியில் கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. நடுத்தர குடும்பங்களுக்கு வரும் ஆண்டில் 1.97 லட்சம் குடியிருப்புகளை கட்ட அனுமதி அளிக்கப்படும்.

    இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. #TamilNaduBudget #TNBudget2019 #Budget2019 #OPS
    தமிழகத்தில் வறுமை ஒழிப்பு திட்டத்திற்கு பட்ஜெட்டில் ரூ.1,031 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. #TamilNaduBudget #TNBudget2019 #Budget2019 #OPS
    சென்னை:

    தமிழக சட்டசபையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் உள்ள அம்சங்கள் வருமாறு:-

    மீன்பிடி குழுக்களுக்கு நவீன தொலைத்தொடர்ப்பு கருவிகள் வழங்கப்படும். 80 ஆழ்கடல் மீன்பிடி குழுக்களுக்கு 240 நேவிக் தகவல் பெறும் கருவிகள், 160 ஐசாட்-2 தொலைபேசிகள் வழங்கப்படும்.  இயற்கை வேளாண்மையை மேம்படுத்த மாவட்டந்தோறும் மையங்கள் அமைக்கப்படும்.

    பள்ளி செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை 33,519 ஆக குறைந்துள்ளது. சத்துணவு திட்டத்திற்கான காய்கறி, தாளிதப் பொருட்களுக்கான விலை சந்தை நிலவரத்திற்கு ஏற்ப உயர்த்தி வழங்கப்படும்.

    சிறப்பு திட்டத்தின் மூலம் ஆதி திராவிடர் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பால்வளத்துறைக்கு ரூ.258.45 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் ஆற்றங்கரையோரம் வசிக்கும் ஏழைகளுக்கு 38,000 குடியிருப்புகள் கட்டப்படும்.

    ஒட்டுமொத்தமாக விவசாயத் துறைக்கு ரூ.10 ஆயிரம் கோடிக்கு மேல் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிறுவனங்களின் மறுகட்டமைப்பு தொடர்பான சொத்து பரிமாற்றங்களுக்கான பதிவுக்கட்டணம் அதிகபட்சமாக ரூ.3000 என நிர்ணயிக்கப்படும்.

    வரிகள் மூலம் தமிழக அரசுக்கு ரூ.1,37,964 கோடி வருவாய் கிடைக்கும். வறுமை ஒழிப்பு திட்டத்திற்கு ரூ.1,031 கோடி, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டிற்கு ரூ.6,265 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எரிசக்தி துறைக்கு ரூ.18,560.77 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.



    மெட்ரோ ரெயில் திட்டத்தை மீனம்பாக்கம் முதல் கிளாம்பாக்கம் வரை நீட்டிப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

    பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள ஏரிகளை தூர்வார ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு, நவீன பாசன வேளாண்மைத் திட்டத்திற்கு ரூ.235.05 கோடி நிதி ஒதுக்கீடு, அணைகள் புனரமைப்புக்காக ரூ.43 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #TamilNaduBudget #TNBudget2019 #Budget2019 #OPS
    தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.28,757.62 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #TamilNaduBudget #TNBudget2019 #Budget2019 #OPS
    சென்னை:

    தமிழக சட்டசபையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த 8-வது பட்ஜெட் இதுவாகும். பட்ஜெட்டை தாக்கல் செய்து அவர் பேசியதாவது:-

    2018-19-ம் ஆண்டில் உற்பத்தி மதிப்பின் வளர்ச்சி விகிதம் 8.16 சதவீதமாக உயர்ந்துள்ளது.  வரும் நிதியாண்டில் 1,986 கிமீ நீளமுள்ள சாலைகளில் ரூ.1142 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும். உற்பத்தி சேவை துறைகளில் கூடுதல் முதலீடுகளை ஈர்க்க அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.

    பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.28,757.62 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2698 டாஸ்மாக் கடைகள் இதுவரை மூடப்பட்டுள்ளன. வேளாண் இயந்திரமயமாக்கலுக்காக ரூ.172 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் விரிவான திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை ரூ.1546 கோடி செலவில் மேற்கொள்ள நிர்வாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.



    கொடுங்கையூர்-பெருங்குடி குப்பை கிடங்கில் மின்சாரம் தயாரிக்கும் அலகினை தனியார் பங்களிப்புடன் ரூ.5259 கோடியில் செயல்படுத்த பரிசீலனை செய்யப்படுகிறது.

    அரவக்குறிச்சி உள்ளிட்ட இடங்களில் கூட்டு குடிநீர் திட்டங்களை மேற்கொள்ள ரூ.1558.87 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  2030ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீட்டு வசதி கிடைக்கும். நகர்ப்புற வீட்டுவசதி மற்றும் குடியிருப்பு கொள்கை விரைவில் வெளியிடப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார். #TamilNaduBudget #TNBudget2019 #Budget2019 #OPS
    தமிழக அரசு இன்று தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் காவல்துறைக்கு மட்டும் ரூ.8084.80 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. #TamilNaduBudget #TNBudget2019 #Budget2019 #OPS
    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் உள்ள அம்சங்கள் வருமாறு:-

    * காவல்துறையை நவீனமயமாக்கும் திட்டத்திற்கு ரூ.111.57 கோடி ஒதுக்கீடு

    * வரும் நிதி ஆண்டில் காவல்துறைக்கு மட்டும் ரூ.8084.80 கோடி ஒதுக்கீடு

    * தோட்டக்கலைத்துறை மேம்பாட்டிற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு

    * தோட்டக்கலை மற்றும் வேளாண் கல்லூரிகளில் மேம்பாட்டிற்கு ரூ.79.73 கோடி ஒதுக்கீடு

    * தனிநபர்களின் ஆண்டு வருமானம் தமிழகத்தில் ரூ.1,42,267 ரூபாயாக உயர்ந்துள்ளது



    * மேலும் 2 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் நுண்ணீர் பாசன திட்டம் செயல்படுத்தப்படும்- இதற்காக ரூ.1361 கோடி ஒதுக்கீடு

    * வரும் நிதியாண்டில் 20 ஆயிரம் பசுமை வீடுகள் கட்டித்தரப்படும்

    * சூரிய சக்தியால் இயங்கும் 2000 பம்பு செட்டுகள் மூலம் நீர்மேலாண்மை மேம்படும்

    * வரும் நிதியாண்டில் சுகாதாரத்துறைக்கு ரூ.12,563 கோடி ஒதுக்கீடு

    * 2018-19-ம் ஆண்டில் உற்பத்தி மதிப்பின் வளர்ச்சி விகிதம் 8.16 சதவீதமாக உயர்வு

    * வரும் நிதியாண்டில் 1,986 கிமீ நீளமுள்ள சாலைகளில் ரூ.1142 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. #TamilNaduBudget #TNBudget2019 #Budget2019 #OPS
    ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் பெயரில் புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. #TamilNaduBudget #TNBudget2019 #Budget2019 #OPS
    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த பட்ஜெட்டில் உள்ள அம்சங்கள் வருமாறு:-

    சமூக பாதுகாப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்காக ரூ.3,985 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.  ஆயுள் காப்பீடு திட்டத்தின் மூலம் இயற்கை மரணத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும். வறுமைக் கோட்டிற்கு கீழ் வரும் குடும்பத்திற்கு விரிவான விபத்து- ஆயுள் காப்பீடு திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது. விபத்து மூலம் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு ரூ.4 லட்சம் நிவாரணத் தொகையும், நிரந்தர ஊனத்திற்கு ரூ.1 லட்சம் நிவாரணத் தொகையும் வழங்கப்படும்.



    விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிறுபான்மையினர் நலத்துறைக்கு பட்ஜெட்டில் ரூ.14.99 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை, கோவை, மதுரையில் முதற்கட்டமாக 500 மின்சார பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்கு ரூ.1,031.53 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் பெயரில் புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்படும்.

    சத்துணவு திட்டத்திற்கு ரூ.1772.12 கோடி, ஊரக வளர்ச்சித்துறைக்கு ரூ.18,273 கோடி, புதிய விரிவான காப்பீடு திட்டத்திற்கு ரூ.250 கோடி, நகராட்சிகளில் குடிநீர் வசதிக்காக ரூ.18,700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    திருமங்கலத்தை தலைமையிடமாகக் கொண்டு கள்ளிக்குடி, திருப்பரங்குன்றம் ஆகிய வட்டங்களை உள்ளடக்கிய புதிய வருவாய் கோட்டம் உருவாக்கப்படும். ரூ.2000 கோடியில் சென்னையில் மல்டி லெவல் பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்படும். மாற்றுத் திறனாளிகளுக்கு வரும் நிதியாண்டில் 3000 ஸ்கூட்டர்கள் வழங்கப்படும்.

    இவ்வாறு பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #TamilNaduBudget #TNBudget2019 #Budget2019 #OPS
    2019-20ம் நிதியாண்டில் தமிழக அரசின் நிதி பற்றாக்குறை ரூ.44,176 கோடியாக இருக்கும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #TamilNaduBudget #TNBudget2019 #Budget2019 #OPS
    சென்னை:

    தமிழகத்தில் 2019-2020-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை (நிதிநிலை அறிக்கை) தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டசபை இன்று கூடியது. காலை 10 மணிக்கு நிதித்துறை அமைச்சரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-



    2019-20ம் நிதியாண்டில் தமிழக அரசின் வரி வருவாய் ரூ.1,97,721 கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் நிதி பற்றாக்குறை ரூ.44,176 கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

    உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அரசு தீவிர முனைப்பு காட்டி வருகிறது. நிரந்தர வெள்ளத்தடுப்பு பணிகளுக்கு ரூ.284 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு மாற்று வீடுகள் கட்டித் தரப்படும். இதற்காக பட்ஜெட்டில் ரூ.1700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.  #TamilNaduBudget #TNBudget2019 #Budget2019 #OPS
    மத்திய அரசு தாக்கல் செய்துள்ள இடைக்கால பட்ஜெட் குழப்பம் நிறைந்தது என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். #Budget2019 #MakkalNeedhiMaiam #KamalHaasan
    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் இன்று டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-

    மத்திய அரசு அறிவித்திருக்கும் இந்த இடைக்கால பட்ஜெட்டை முதல்முறை படிக்கும்போது மத்திய தர மக்களுக்கும் விவசாயிகளுக்கும் கவர்ச்சிகரமாக இருப்பதுபோல தோன்றினாலும், அவர்களுக்கு கிடைப்பதாக கூறப்பட்டிருக்கும் மானியங்கள் மிகவும் குறைவானதே. பொருளாதார நிபுணர்கள் இந்த பட்ஜெட்டில் இருக்கும் குளறுபடிகளையும் ஓட்டைகளையும் மிக எளிதாக கண்டு பிடித்து விடுவார்கள்.


    தேர்தலின் போது மக்கள் தங்களுக்கு வாக்களிக்க சட்டப்பூர்வமாக பணம் கொடுப்பது போன்று தான் சாதாரண வாக்காளன் இந்த நிதி அறிக்கை குறித்து கருத்துத் தெரிவிக்கிறான். வேலைவாய்ப்பு அற்றவர்களுக்கு இவர்கள் அளித்திருக்கும் சலுகை ஆட்சியில் இருப்பவர்களுக்கு வேண்டுமானால் சாதகமாக இருக்கும்.

    ஆனால் மக்கள் ஆளுங்கட்சிக்கு வாக்களிக்காமல் பிற கட்சிகளுக்கு வாக்களித்து விட்டார்கள் என்றால் அடுத்து வரும் புதிய அரசு இவர்கள் தாக்கல் செய்திருக்கும் குழப்பம் வாய்ந்த இந்த பட்ஜெட்டினை ஏன் தொடர்வார்கள்? அரசு தங்களுக்காக தாங்களாகவே தாக்கல் செய்துகொண்ட ஒரு பட்ஜெட்.

    மிக முக்கியமாக இந்த மத்திய நிதியறிக்கை தமிழ்நாட்டின் எந்த முக்கிய பிரச்சனைகளை குறித்தும் எவ்வித அக்கறையினையும் காட்டவிரும்பவில்லை என்பது தான் உண்மை.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Budget2019 #MakkalNeedhiMaiam #KamalHaasan
    காப்பீடு திட்டங்களால் நாடு முழுவதும் 21 கோடி ஏழை மக்கள் பயன் அடைந்துள்ளதாக பட்ஜெட் கூட்டத்தொடரில் ஜனாதிபதி ராம்கோவிந்த் தெரிவித்தார். #BudgetSession #Budget2019 #PresidentRamNathKovind
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளதால் பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னதாக நடத்தி முடிக்க மத்திய அரசு முடிவு செய்தது.

    அதன்படி இன்று (வியாழக்கிழமை) பாராளுமன்றம் கூடியது. நாளை பாராளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை நிதி மந்திரி (பொறுப்பு) பியூஸ்கோயல் தாக்கல் செய்ய உள்ளார்.

    இந்த நிலையில் இன்று பாராளுமன்ற மக்களவை, மாநிலங்களவை கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். அவரது உரையில் இடம்பெற்று இருந்த முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு நமது நாடு உறுதியற்ற காலத்தை நோக்கி சென்று கொண்டு இருந்தது. தேர்தலுக்கு பிறகு அனைத்து பிரச்சனைகளும் சமாளிக்கப்பட்டு புதிய இந்தியா உருவாக்கப்பட்டு உள்ளது.

    தற்போது நாம் மகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு பிறந்த தினத்தை கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம். எனவே 2019-ம் ஆண்டு நமக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டாகும்.

    மகாத்மா காந்தி கண்ட கனவை நனவாக்கும் வகையில் நமது நாட்டில் உள்கட்டமைப்பு வசதிகளும், வளர்ச்சி திட்டங்களும் செய்யப்பட்டு வருகின்றன. டாக்டர் அம்பேத்கார் வகுத்து கொடுத்த சட்ட திட்டத்தின்படி சமூக மற்றும் பொருளாதார நீதியை ஏற்படுத்த வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

    அனைத்து துறைகளிலும் சம வளர்ச்சிக்கு திட்டமிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சுகாதார திட்டங்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நகரமாக இருந்தாலும் சரி, கிராமமாக இருந்தாலும் சரி அனைத்து இடங்களிலும் சுகாதார உள்கட்டமைப்புகளை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    ஏழை-எளிய மக்கள் பலன் பெறும் வகையில் பிரதமரின் புதிய ஆயுள் காப்பீட்டு திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதுபோல ஏழைகள் உரிய மருத்துவ வசதி பெற மருத்துவ காப்பீடு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    இத்தகைய காப்பீடு திட்டங்களால் நாடு முழுவதும் 21 கோடி ஏழை மக்கள் பயன் அடைந்துள்ளனர்.

    பிரதமரின் சவுபாக்கியா திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் 2 கோடி வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் 9 கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன.

    2014-ம் ஆண்டு இந்தியாவில் கழிவறை வசதியுடன் சுமார் 40 சதவீதம் வீடுகள் தான் இருந்தன. தற்போது தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் 98 சதவீதம் பேர் கழிவறை பெற்றுள்ளனர்.

    ஏழைகளுக்கு அதிக பணம் கொடுத்து மருந்துகள் வாங்கும் சக்தி இல்லை என்பதால் இந்தியா முழுவதும் 600 மாவட்டங்களில் குறைந்த விலை மருந்து கடைகள் 700-க்கு மேல் திறக்கப்பட்டுள்ளன. இந்த கடைகளில் 4 ஆயிரத்து 900 மருந்து வகைகள் மிக குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன.

    ஏழை பெண்கள் நலனுக்காக மானிய விலையில் கியாஸ் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின்கீழ் 6 கோடிக்கு மேற்பட்ட பெண்கள் பலன் அடைந்து உள்ளனர். இதன் மூலம் ஏழைகள் விறகு அடுப்பு புகை தாக்குதலில் இருந்து பாதுகாக்கப்பட்டு உள்ளனர்.

    13 கோடி பேருக்கு மானியம் விலையில் சமையல் கியாஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் பலன் பெற வேண்டும் என்ற திட்டத்தின் அடிப்படையில் பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. ஏழைகளுக்காக இந்த அரசு தொடர்ந்து செயல்படும். ஊழலற்ற இந்தியாவை உருவாக்குவதே இந்த அரசின் நோக்கம் ஆகும்.

    முத்தலாக் பிரச்சனை காரணமாக முஸ்லிம் பெண்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அந்த பாதிப்பில் இருந்து அவர்களை காப்பாற்றுவதற்காக முத்தலாக் தடை சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது முஸ்லிம் பெண்கள் அச்சமின்றி வாழும் நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.

    கடந்த 4½ ஆண்டுகளில் விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. அனைத்து கிராமங்களும் மின் வசதி பெற வேண்டும் என்ற இலக்குடன் மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஊரக வளர்ச்சி திட்டத்தின்கீழ் 1 கோடி வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன.

    ஏழை எளியவர்களுக்காக முத்ரா கடன் பெறும் வசதி திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த கடன் திட்டத்தின் மூலம் 15 கோடி பேர் பலன் பெற்றனர். அவர்களில் 73 சதவீதம் பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    வருமான வரி தாக்கல் செய்யும் நடைமுறைகளில் கொண்டு வரப்பட்டுள்ள திருத்தம் காரணமாக வரி செலுத்துவோரின் எண்ணிக்கை இரட்டிப்பு ஆகி உள்ளது. முன்பு 3.8 கோடி பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்தனர். தற்போது 6.8 கோடி பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர்.

    ஊழல் ஒழிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கருப்பு பணத்தை கண்டுபிடிக்க சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கருப்பு பணத்தை தடுக்க சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளது.

    இதற்கு முன்பு பணக்காரர்கள் பல்வேறு வெளிநாடுகளில் தங்களது பணத்தை சட்ட விரோதமாக கொண்டு சென்று பதுக்கி வைத்திருந்தனர். அதை தடுக்கும் விதத்தில் அந்த நாடுகளுடன் புதிய ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன.



    ரூ. 1000, ரூ.500 நோட்டுகளை செல்லாது என்று அறிவித்ததன் மூலம் கருப்பு பணத்தின் வேர் வெட்டப்பட்டுள்ளது. பினாமி முறையில் சொத்து சேர்ப்பதற்கு தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    கருப்பு பணத்தை ஒழிக்க எடுக்கப்பட்ட தொடர் நடவடிக்கைகள் காரணமாக ரியல் எஸ்டேட் துறை சீரடைந்துள்ளது. வீடுகள் மற்றும் சொத்துக்களின் விலை குறைந்துள்ளன.

    சரக்கு மற்றும் சேவை வரியால் நீண்ட காலத்துக்கு நன்மை கிடைக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கும், உள்கட்டமைப்பு பணிகளுக்கும் ஜி.எஸ்.டி. வரி மிகவும் கை கொடுக்கும்.

    எல்லையில் தீவிரவாதத்தை கட்டுப்படுத்தும் வகையில் சர்ஜிகல் தாக்குதல் நடத்தப்பட்டது. பாதுகாப்பு வி‌ஷயத்தில் இந்த புதிய கொள்கை தொடர்ந்து கடைபிடிக்கப்படும்.

    இந்திய விமான படையில் விரைவில் அதிநவீன ரபேல் போர் விமானம் சேர்க்கப்படும். இது நமது விமானப் படையின் பலத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமையும்.

    காஷ்மீர் மாநிலத்தின் வளர்ச்சிக்காக தனி கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அங்கு வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள 80 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன.

    ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் கடந்த 4 மாதங்களில் 10 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர். தேசிய சுகாதார காப்பீடு திட்டம் முழுமையாக அமலுக்கு வந்தால் 50 கோடி பேருக்கு மேல் பலன் அடைவார்கள்.

    சுகாதாரத்துக்காக நாட்டின் நான்கு புறமும் அதிநவீன எய்ம்ஸ் மருத்துவமனைகள் தொடங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் மதுரையிலும், காஷ்மீரில் குல்காம் நகரிலும் எய்ம்ஸ் மருத்துவமனைகள் விரைவில் திறக்கப்பட உள்ளன.

    சாலை மேம்பாட்டு திட்டங்களுக்கு மறைந்த பிரதமர் வாஜ்பாய் முக்கியத்துவம் அளித்தார். அவரது வழியில் தற்போது சாலைகள் இணைப்பு மேம்பாடு திட்டத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

    இளைஞர்களின் திறமையை மேம்படுத்த “ஸ்டாண்டு ஆப்” திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

    கல்வி வளர்ச்சிக்காக பல புதிய திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. விரைவில் நாடு முழுவதும் 7 ஐ.ஐ.டி., 7 ஐ.ஐ.எம். கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட உள்ளன. மாணவர்கள் தொழில்நுட்பங்களின் புதிய கண்டுபிடிப்புகளுக்கு மத்திய அரசு உதவி செய்யும்.

    நாடு முழுவதும் கேந்திர வித்யா பள்ளிகள் அதிகளவில் திறக்கப்படும். முதல் கட்டமாக 103 கேந்திர வித்யா பள்ளிகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    விவசாயிகளுக்கு பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. விவசாயத்துக்காக புதிய உபகரணங்கள் வாங்க வழிவகை செய்யப்பட்டுள்ளன. இதற்காக கொள்கை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு ரூ.7 லட்சம் கடன் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் விவசாயிகளின் வருவாய் 1½ மடங்கு அதிகரித்துள்ளது.

    வெளிநாடுகளில் இருந்து வந்து குடியேறியவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும். விளையாட்டு வீரர்களுக்கு தக்க உதவிகள் செய்வதால் தற்போது சர்வதேச போட்டிகளில் பதக்கம் பெறும் வீரர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    பொருளாதாரத்தில் நலிந்த பொது பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு கொடுப்பதால் மேலும் பல ஏழைகள் சம அளவில் முன்னேற்றம் பெறுவார்கள்.

    மகளிருக்கு பேறுகால விடுப்பு 12 வாரத்தில் இருந்து 26 வாரமாக உயர்த்தப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.75 ஆயிரம் கோடி வரை கடன் வழங்கப்பட்டுள்ளது.

    நாட்டின் வடகிழக்கு மாநிலங்களுக்கு பல்வேறு புதிய திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதனால் இந்தியா முழுவதும் ஒருங்கிணைந்த வளர்ச்சி வளர்ந்து உள்ளது.

    இதன் மூலம் உலக அளவில் மிகப்பெரிய சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளது. உலக நாடுகள் இந்தியாவை மரியாதையாக நடத்தும் அளவுக்கு முன்னேற்றம் கிடைத்துள்ளது.

    இவ்வாறு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். #BudgetSession #Budget2019 #PresidentRamNathKovind
    ×