search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tirumangalam"

    • திருமணமான ஒரே வாரத்தில் மகாலட்சுமி புது கணவருடன் வாழாமல் தனது பெற்றோர் வீட்டிற்கே வந்து விட்டார்.
    • தனி அறையில் இருந்த மகாலட்சுமியை அக்காள் என்றும் பாராமல் அவரையும் அரிவாளால் வெட்டி சாய்த்தார்.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கூடக்கோவில் போலீஸ் சரகம் கொம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் நந்தி பெருமாள் மகன் சதீஷ்குமார் (வயது 28). இவர் கம்பி கட்டும் சென்ட்ரிங் வேலை பார்த்து வந்துள்ளார்.

    இந்நிலையில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த அழகுமலை-சின்ன பிடாரி தம்பதியின் மகள் மகாலட்சுமி (வயது 24) என்பவரை காதலித்து வந்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மகாலட்சுமியின் பெற்றோர் வேறு ஒருவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொடுத்தனர். ஆனாலும் மகாலட்சுமி தனது கணவருடன் குடும்பம் நடத்த மனமின்றி விரக்தியில் இருந்து வந்தார்.

    இதையடுத்து திருமணமான ஒரே வாரத்தில் மகாலட்சுமி புது கணவருடன் வாழாமல் தனது பெற்றோர் வீட்டிற்கே வந்து விட்டார். அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு அறிவுரைகள் கூறியும் மகாலட்சுமி கண்டுகொள்ளவில்லை. மாறாக வீட்டிலேயே முடங்கி கிடந்தார்.

    இந்த விஷயம் அறிந்த முன்னாள் காதலன் சதீஷ் குமார் மீண்டும் மகாலட்சுமியிடம் காதலை தொடர்ந்தார். பெற்றோர் வெளியில் சென்றிருந்த சமயங்களில் மகாலட்சுமி அடிக்கடி சதீஷ்குமாரிடம் போனில் தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருந்தார்.

    இந்த விபரம் தெரிந்த மகாலட்சுமியின் தம்பி பிரவீன்குமார் கடுமையான ஆத்திரம் அடைந்தார். மேலும் சதீஷ்குமாரையும், மகாலட்சுமியும் கண்டித்துள்ளார். ஆனாலும் சதீஷ்குமார் அத்துமீறி மகாலட்சுமியுடன் செல்போனில் தொடர்ந்து பேசி வந்துள்ளார். எனவே இந்த பிரச்சினைக்கு முடிவு கட்ட எண்ணிய பிரவீன் குமார், சதீஷ்குமாரை தீர்த்துக்கட்டவும் திட்டம் தீட்டினார்.

    இந்நிலையில் நேற்று இரவு வேலை முடித்து கொம்பாடியில் உள்ள தன்னுடைய வீட்டிற்கு சதீஷ்குமார் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த பிரவீன்குமார், அக்காவின் முன்னாள் காதலன் சதீஷ்குமாரின் கண்ணில் மிளகாய் பொடியை தூவினார். இதனை சற்றும் எதிர்பாராத சதீஷ்குமார் அங்கிருந்து தப்பி ஓடினார்.

    ஆனால் அவரை விடாமல் துரத்திச் சென்ற பிரவீன்குமார், சதீஷ்குமாரை அங்கிருந்த நாடக மேடை அருகே சுற்றி வளைத்து மடக்கினார். பின்னர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சதீஷ்குமாரை சரமாரியாக வெட்டியதுடன், அவரது தலையை தனியாக துண்டித்து நாடக மேடையின் நடுவில் வைத்தார்.

    இருந்தபோதிலும் ஆத்திரம் தீராத பிரவீன்குமார், அதே கொலை வெறியுடன் தனது வீட்டிற்கு சென்றார். அங்கு தனி அறையில் இருந்த மகாலட்சுமியை அக்காள் என்றும் பாராமல் அவரையும் அரிவாளால் வெட்டி சாய்த்தார். அந்த சமயம் வெளியில் சென்றிருந்த பிரவீன்குமாரின் தாய் சின்ன பிடாரி வீட்டிற்குள் வந்தார்.

    ரத்தம் சொட்ட சொட்ட அரிவாளுடன் நின்றி மகனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் ஓடிச்சென்று தடுக்க முயன்றார். ஆனாலும் வெறி அடங்காத பிரவீன் குமார் தாயின் கையையும் வெட்டி துண்டாக்கினார். இதற்கிடையே அரிவாள் வெட்டில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய மகாலட்சுமி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

    இதுதொடர்பாக சதீஷ் குமாரின் தம்பி முத்துக் குமார் கொடுத்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு கூடக்கோவில் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் கொலையுண்டு கிடந்த சதீஷ்குமார், மகாலட்சுமி ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் கை துண்டான சின்ன பிடாரியை சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இரண்டு கொலைகளை செய்துவிட்டு தலைமறைவான பிரவீன்குமாரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். இச்சம்பவம் திருமங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    • திருமங்கலம் நகர்மன்ற கூட்டத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க ஆலோசனை நடந்தது.
    • முதல்-அமைச்சருக்கும் நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    திருமங்கலம்

    திருமங்கலம் நகராட்சி கூட்டம் தலைவர் ரம்யா முத்துக்குமார் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஆதவன் அதியமான் முன்னிலை வகித்தார். ஆணையாளர் டெரன்ஸ்லியோன் வரவேற்றார். இந்த கூட்டத்தில் திருமங்கலம் நகராட்சியின் அடிப்படை தேவைகளான சாலைகள் அமைப்பது, குடிநீர் வசதிகள் செய்து கொடுப்பது, பாதாள சாக்கடை பிரச்சனைக்கு தீர்வு காண்பது, கழிவு நீர் கால்வாய்கள் தூர்வாருவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து நகர்மன்ற உறுப்பினர்கள் விவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கு பதிலளித்த நகர் மன்ற தலைவர் ரம்யா முத்துக்குமார், துணைத்தலைவர் ஆதவன் அதியமான் ஆகியோர் நகர் மன்ற உறுப்பினர்கள் கோரிக்கைகள் அனைத்தும் உடனடியாக பரிசீலனை செய்யப்பட்டு நிறைவேற்றி தரப்படும் என உறுதி அளித்தனர்.

    கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கிடும் வகையில் திருமங்கலம் நகரின் பல்வேறு இடங்களில் ஆழ்துளை கிணறுகளை அமைத்து சின்டெக்ஸ் குடிநீர் தொட்டிகள் அமைத்திடவும், கழிவுநீரை அகற்றிட ரூ.64 லட்சம் செலவில் அதிநவீன வாகனம் வாங்கிட நிதி ஒதுக்கீடு செய்து தந்த தமிழ்நாடு அரசுக்கும், முதல்-அமைச்சருக்கும் நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

    • மதுரை-திருமங்கலம் இடையே அதிவேக ரெயில் சோதனை ஓட்டம் நடந்தது.
    • பொதுமக்கள் ெரயில் பாதையை கடக்கவோ அல்லது நெருங்கவோ முயற்சிக்க வேண்டாம் என மதுரை ரெயில்வே கோட்டம் கேட்டுக்கொண்டுள்ளது.

    மதுரை

    தென் தமிழகத்தின் முக்கிய நகரமான மது ரைக்கும் கன்னி யாகு மரிக்கும் இடையே இரட்டை அகல ரெயில் பாதை பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மதுரை- திருமங்கலம் இடையே உள்ள 17 கிலோமீட்டர் தொலைவுக்கு 2-வது அகல ரெயில் பாதை அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த பணிகள் தற்போது முடிவடைந்துள்ளன. மதுரை-திருமங்கலம் இடையே புதிதாக அமைக்கப்பட்டுள்ள அகல ரெயில்பாதையின் உறுதித் தன்மையை ஆய்வுசெய்ய நாளை(3-ந்தேதி) அதிவேக ரெயில் சோதனை ஓட்டம் நடத்துவது என்று அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    இதற்காக தென்னக ரெயில்வே கட்டுமான பிரிவு தலைமை செயல் அதிகாரி வி.கே.குப்தா தலைமையிலான குழுவினர் மதுரை வருகின்றனர். நாளை மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை மதுரை- திருமங்கலம் இடையே அதிவேக ரெயில் சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. இதனை அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர்.

    சோதனை ஓட்டம் நடைபெறும் நேரத்தில் தண்டவாளத்தை ஒட்டி குடியிருக்கும் பொதுமக்கள் ெரயில் பாதையை கடக்கவோ அல்லது நெருங்கவோ முயற்சிக்க வேண்டாம் என மதுரை ரெயில்வே கோட்டம் கேட்டுக்கொண்டுள்ளது.

    தண்டவாளத்தில் கல்லை வைத்து ரெயிலை கவிழ்க்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் பின்னணி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பேரையூர்:

    தூத்துக்குடியில் இருந்து நேற்று இரவு முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னைக்கு புறப்பட்டது. இரவு 11.30 மணி அளவில் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சிவரக்கோட்டை பகுதியை ரெயில் கடந்தது.

    அப்போது ரெயில் என்ஜின் பெரிய கல் மீது மோதுவது போன்ற பலத்த சத்தம் கேட்டது. இருப்பினும் என்ஜின் டிரைவர் ரெயிலை நிறுத்தவில்லை.

    இதுதொடர்பாக என்ஜின் டிரைவர் திருமங்கலம் ரெயில் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். உடனே ரெயில்வே போலீசாரும், அதிகாரிகளும் விரைந்து சென்று சிவரக்கோட்டை தண்டவாள பகுதியில் ஆய்வு செய்தனர்.

    அப்போது அங்கு பெட்ரோல் பங்க் பின்புறம் உள்ள ரெயில் தண்டவாளத்தில் கற்கள் சுக்குநூறாக சிதறி கிடந்தது. விசாரணையில் மர்ம நபர்கள் வேலிக்கு போடும் 4 அடி நீளமுள்ள கல்லை தண்டவாளத்தின் நடுவே வைத்து விட்டு சென்றது தெரியவந்தது.

    ரெயிலை கவிழ்ப்பதற்காக மர்ம நபர்கள் இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லை வைத்து சதி செயலுக்கு முயன்றது யார்? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றது.

    சில வாரங்களுக்கு முன்பு திருமங்கலம் ரெயில் நிலையத்தில் ஒரே தண்டவாளத்தில் 2 ரெயில்கள் எதிர் எதிரே வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    அப்போது திருமங்கலம் ரெயில் நிலையத்தில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில் தற்போது திருமங்கலம் அருகே உள்ள சிவரக்கோட்டையில் கல்லை வைத்து ரெயிலை கவிழ்க்க முயன்ற சம்பவம் அரங்கேறி உள்ளது.

    திருமங்கலம் பகுதியில் வருகிற 21-ந்தேதி மின் சப்ளை நிறுத்தப்படுகிறது.

    பேரையூர்:

    தே.கல்லுப்பட்டி துணை மின் நிலையத்தில் வருகிற 21-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.

    எனவே அந்த நேரத்தில் தே.கல்லுப்பட்டி, குன்னத்தூர், காடனேரி, எம்.சுப்புலாபுரம், வில்லூர், கள்ளிக்குடி, புளியம்பட்டி, புளியங்குளம், வையூர், சென்னம்பட்டி, ஆவல்சூரம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

    மேற்கண்ட தகவலை திருமங்கலம் மின் வினியோக செயற் பொறியாளர் மனோகரன் தெரிவித்துள்ளார்.

    திருமங்கலம் அருகே விபத்தில் கட்டிட தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பேரையூர்:

    திருமங்கலம் அருகே உள்ள நடுவக்கோட்டையைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 40). கட்டிட தொழிலாளியான இவர் வெளியே புறப்பட்டார். திருமங்கலத்தில் உள்ள ராஜாஜி சிலை வளைவில் சென்றபோது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மணிகண்டன் ஓட்டி வந்த ஸ்கூட்டி மீது பயங்கரமாக மோதியது.

    இதில் மணிகண்டன், மோட்டார் சைக்கிளில் வந்த மதுரையைச் சேர்ந்த ஷியாம்சுந்தர் (29) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    உயிருக்கு போராடிய அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி மணிகண்டன் பரிதாபமாக இறந்தார். ஷியாம்சுந்தர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    திருமங்கலம் அருகே உள்ள செங்குளத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் நேற்று அதே பகுதியில் உள்ள 4 வழிச்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதி விட்டு சென்றது. படுகாயம் அடைந்த பாலகிருஷ்ணன் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த விபத்து நடந்த சில மணி நேரத்தில் அதே பகுதியில் மற்றொரு விபத்தும் நடந்தது.

    திருமங்கலம் ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்த ராணுவ வீரர் ஜோதிகண்ணன் (38) என்பவர் மோட்டார் சைக்கிளில் சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் படுகாயம் அடைந்த ஜோதிகண்ணன் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த 3 விபத்து தொடர்பாக திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம் அருகே பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    பேரையூர்:

    மதுரை மாவட்டத்தில் சர்வ சாதாரணமாக கஞ்சா விற்பனை நடந்து வருகிறது. இளைஞர்கள், மாணவர்களை குறிவைத்து சமூக விரோதிகள் கஞ்சா வியாபாரம் செய்து வருகிறார்கள். இதனால் இளைய சமுதாயத்தினர் போதைக்கு அடிமையாகி வாழ்வை தொலைத்து வருகின்றனர்.

    கஞ்சா விற்பனையை தடுக்க மாநகர, மாவட்ட போலீசார் தீவிரம் காட்டியதாக தெரியவில்லை. திருமங்கலம் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமப்புற பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து திருமங்கலம் நகர் போலீசார் தீவிர ரோந்து சுற்றி வந்தனர். அப்போது மேலஉரப்பனூர் பகுதியில் உள்ள பள்ளியின் முன்பு கஞ்சா விற்று கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த மலைச் சாமி (வயது45) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த 150 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    விசாரணையில் கல்லூரி, பள்ளி மாணவர்களிடம் அவர் கஞ்சா விற்றது தெரியவந்தது.

    மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலத்தை தலைமையிடமாகக் கொண்டு, திருமங்கலம், கள்ளிக்குடி, திருப்பரங்குன்றம் மூன்று வட்டங்களை உள்ளடக்கிய புதிய வருவாய்க்கோட்டம் உருவாக்கப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #TamilNaduBudget #TNBudget2019 #Budget2019 #OPS
    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் உள்ள அம்சங்கள் வருமாறு:-

    மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அருகிலேயே அரசு சேவைகளை வழங்க இந்த அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 2011-ம் ஆண்டு முதல், 79 புதிய வருவாய் வட்டங்களும், 10 புதிய வருவாய்க் கோட்டங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. 2018-2019ஆம் ஆண்டில் மட்டும், எட்டு வருவாய் வட்டங்களை இந்த அரசு உருவாக்கியுள்ளது.

    விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து பிரித்து, கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும்.

    மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலத்தை தலைமையிடமாகக் கொண்டு, திருமங்கலம், கள்ளிக்குடி மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று வட்டங்களை உள்ளடக்கிய புதிய வருவாய்க்கோட்டம் ஒன்று 2019-2020ஆம் ஆண்டில் உருவாக்கப்படும்.

    இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. #TamilNaduBudget #TNBudget2019 #Budget2019 #OPS
    ×