சாலை தடுப்புச் சுவரில் தனியார் பேருந்து மோதி விபத்து

82 பேருடன் வந்த தனியார் பேருந்து திருமங்கலம் நகர் பகுதியில் ஆனந்தா தியேட்டர் நிறுத்தத்தில் நின்றது.அனைவரும் திருமங்கலம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமக்கப்பட்டு உள்ளனர்.
சாலை தடுப்புச் சுவரில் தனியார் பேருந்து மோதி விபத்து
Published on

திருமங்கலம்:

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இருந்து இன்று அதிகாலை 4.30 மணிக்கு தனியார் பேருந்து ஒன்று 82 பயணிகளுடன் மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தது. பேருந்தை டிரைவர் வைரமுத்து என்பவர் ஓட்டி வந்தார்.

சங்கரன்கோவில், சிவகிரி, ராஜபாளையம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து 82 பேருடன் வந்த தனியார் பேருந்து காலை ஆறு மணிக்கு திருமங்கலம் நகர் பகுதியில் ஆனந்தா தியேட்டர் நிறுத்தத்தில் நின்றது.

அங்கு பயணிகளை இறக்கிவிட்டு மீண்டும் பேருந்து நிலையம் நோக்கி புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. இதில் பாரத ஸ்டேட் வங்கி அருகே எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து சாலை நடுவே இருந்த தடுப்பில் மோதி சுவர் மீது ஏறி நின்றது.

திடீரென ஏற்பட்ட இந்த விபத்தில் பேருந்தில் வந்த பயணிகள் ஒவ்வொருவரும் முன் இருக்கை கம்பியில் மோதியதில் பெண்கள் 8 பேர் உட்பட 12 பேர் காயம டைந்தனர்.

அவர்கள் அனைவரும் திருமங்கலம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமக்கப்பட்டு உள்ளனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com