search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரம்
    X

    விநாயகர் சிலைகளுக்கு வர்ணம் பூசும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்.

    விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரம்

    • உற்பத்தி செலவு அதிகமாவதால் 3 அடி சிலை ரூ. 6 ஆயிரத்திற்கு விற்பனை ஆகிறது.
    • சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் மரவள்ளிக்கிழங்கு, காகிதம் கொண்டு தயார் செய்யப்படுகிறது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த தேத்தாகுடி தெற்கு, குரவப்பு லம், தாணிக்கோட்டகம், செம்போடை, பிராந்தி யங்கரை, தலைஞாயிறு உள்ளிட்ட பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 3 அடியிலிருந்து 20 அடி வரை விநாயகர் சிலைகள் தயார் செய்யும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இப்பகுதியில் தயார் செய்யப்படும் விநாயகர் சிலைகள் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் மரவள்ளிக்கிழங்கு, காகிதம் கொண்டு தயார் செய்யப்பட்டு அந்தந்த ஊர்களுக்கு அனுப்பப்படும்.

    அவ்வாறு தயார் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு தற்போது வாட்டர் கலர்கள் கொண்டு வர்ணம் பூசும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இந்த ஆண்டு உற்பத்தி செலவு அதிகமாகதால் 3 அடி சிலை ரூ. 6 ஆயிரத்திற்கும், 10 அடி சிலை ரூ. 20 ஆயிரத்திற்கும் விற்பனையாகிறது.

    இதுகுறித்து சிலை தயாரிப்பாளர்கள் கூறுகையில்:-

    இந்த ஆண்டு அதிகளவில் விநாயகர் சிலைகளுக்கு முன்பதிவு செய்திருப்பதால் தொழிலாளருக்கு வேலை வாய்ப்பும், கூடுதலான வருமானம் கிடைத்துள்ளது என்றனர்.

    Next Story
    ×