search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காரிமங்கலம் - பாலக்கோடு பகுதிகளில் வறட்சியால் மாங்காய் விளைச்சல் பாதிப்பு
    X

    காரிமங்கலம் - பாலக்கோடு பகுதிகளில் வறட்சியால் மாங்காய் விளைச்சல் பாதிப்பு

    காரிமங்கலம் பாலக்கோடு பகுதியில் பருவமழை குறைவால் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு மாங்காய் மகசூல் குறைவால், விவசாயிகளுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
    காரிமங்கலம்:

    பாலக்கோடு, காரிமங்கலம்,  அனுமந்தபுரம், கும்பாரஹள்ளி, மாரண்டஅள்ளி, பெல்ரம் பட்டி, ஜக்கசமுத்திரம், குண்டாங்காடு போன்ற பகுதியில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் மல்கோவா, பெங்களுரா, செந்துரா, நீலம், பங்கன்பள்ளி, சக்கரைகுட்டி, பீத்தர் என 20-க்கும் மேற்பட்ட ரகங்களில் மாங்காய் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றது. இங்கு உற்பத்தி செய்யப்படும் மாங்காய் உள்ளூர் தேவைபோக வெளிமாநிலங்கள் மற்றும் சிங்கப்பூர், மலேசியா, துபாய் போன்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றது.

    கடந்த ஏப்ரல் மாதத்தில் மாம்பழம் சீசன் தொடங்கிய நிலையில் இப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருவதால் மாசெடிகளை காப்பாற்ற ஒரு டிராக்டர் தண்ணீர் 900 ரூபாய் கொடுத்து வாங்கி ஊற்றியும் போதிய மகசூல் கிடைக்கவில்லை. மேலும் ஏக்கர் ஒன்றுக்கு கடந்த ஆண்டு 10 முதல் 15 டன் கிடைத்த மாங்காய் தற்போது 2 டன்னுக்கும் குறைவாகவே கிடைக்கும் என்பதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். எனவே, அரசு மாங்காய் விவசாயிகளுக்கு வறட்சி பாதித்த பகுதியாக அறிவித்து நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
    Next Story
    ×