என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
உடுமலையில் பொரியல் தட்டை சாகுபடி அதிகரிப்பு - சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்த விவசாயிகள் வலியுறுத்தல்
மடத்துக்குளம்:
காய்கறி சாகுபடியில் தட்டை பயர், பீன்ஸ் வரிசையில் பொரியல் தட்டையும் ஒன்றாகும். கேரளா மாநிலத்தில் அவியல், பொரியல், கூட்டு என உணவில் அதிக அளவு பயன்படுத்தப்படுவதால், அம்மாநிலத்திற்கு அதிக அளவு விற்பனைக்கு செல்கிறது.
உடுமலை பகுதியில் காய்கறி சாகுபடியில் ஈடுபட்டு வந்த விவசாயிகள், நீர்ப்பற்றாக்குறை, பராமரிப்பு செலவு ஆகிய காரணங்களினால் 60 நாட்களில் பயனுக்கு வரும் பொரியல் தட்டை சாகுபடியிலும் தற்போது ஆர்வம் காட்டி வருகின்றனர்.
குடிமங்கலம் வட்டாரம் உடுமலை, மடத்துக்குளம் வட்டாரங்களில் தற்போது அதிக அளவு உற்பத்தி செய்யப்படுகிறது. இப்பகுதிகளில் விளையும் பொரியல் தட்டை கேரளா மாநிலம், மூணாறு, மறையூர் மற்றும் பாலக்காடு பகுதிகளுக்கு விற்பனைக்கு செல்கிறது. கேரள மாநில வியாபாரிகள் வயல்களுக்கு நேரடியாக வந்து விளையும் பொரியல் தட்டை அனைத்தையும் கொள்முதல் செய்து வருகின்றனர்.
உடுமலை பகுதியில் அறுவடை செய்யப்படும் பொரியல் தட்டைக்கு கூடுதல் விலை கிடைத்து வந்தது. தற்போது வரத்து அதிகரிப்பு காரணமாக நிலையில்லாத விலை நிலவுகிறது.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
பொரியல் தட்டை அனைத்து வகை நிலங்களிலும், அனைத்து பருவத்திலும் சாகுபடி செய்யலாம். குளிர் சீதோஷ்ண நிலை உள்ள உடுமலை சுற்றுப்பகுதிகளில் நல்ல மகசூல் கிடைக்கிறது. விதைப்பு செய்த 50 வது நாள் முதல் காய்கள் தினமும் பறிக்கலாம்.
தினமும் ஏக்கருக்கு 100 முதல் 150 கிலோ வரை கிடைக்கிறது. ஏக்கருக்கு 15 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. 10 டன் வரை மகசூல் கிடைக்கிறது.கடந்த வாரம் கிலோ 30 ரூபாய் வரை சந்தை நிலவரம் இருந்தது. தற்போது 20 ரூபாயாக குறைந்துள்ளது. கேரளா மாநில வியாபாரிகள் மட்டுமே கொள்முதல் செய்வதால், நிலையில்லாத விலை கிடைக்கிறது.
விவசாயிகளிடம், குறைந்த விலைக்கு கொள்முதல் செய்கின்றனர். எனவே, கேரளா மாநிலத்திற்கு அதிக அளவு விற்பனைக்கு செல்லும் நிலையில் வேளாண் மற்றும் வணிகத்துறை சார்பில் சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தி உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்