search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விண்ணப்பம்
    X
    விண்ணப்பம்

    வட்டியில்லா கடன் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

    விருதுநகர் மாவட்டத்தில் வட்டியில்லா கடன் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொ டக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலும் விவசாமிகளுக்கு வட்டியில்லா பயிர்க்கடன், வட்டியில்லா கால்நடை பராமரிப்புடன், மாற்றுத் திறனாளிகளுக்கான  கடன் மற்றும் குறைந்த வட்டியில் உதவிக் கடன். பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் கடன் போன்ற அனைத்து விதமான கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. 

    அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் பயிர்க்கடன் உள்ளிட்ட அனைத்து வகையான கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

    விருதுநகர் மாவட்ட விவசாயிகள் தங்களின் ஆதார் நகல், ரேஷன்கார்டு நதல், நிலவுடமை தொடர்பான   கணினி சிட்டா, பயிர்சாகுபடி தொடர்பான அடங்கல் சான்று, பாஸ்போர்ட் அளவு போட்டோ  ஆகியவற்றுடன் தங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை தொடர்பு கொண்டு கடன் மனு சமர்ப்பித்து பயிர்க்கடன் மற்றும் இதர கடன்கள் பெற்று பயனடையலாம்.

    கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக இல்லாத விவசாயிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினர் படிவத்தை பெற்று உரிய பங்குத்தொகை மற்றும் நுழைவுக் கட்டணம் செலுத்தி, உறுப்பினராக சேர்ந்து, உரிய ஆவணங்களுடன், மனுவை சமர்ப்பித்து அனைத்து வகையான கடன்களையும் பெற்று பயனடையலாம்.

    சங்கத்தின் உறுப்பினர் மற்றும் உறுப்பினர் அல்லாத விவசாயிகள் தங்களுக்குத் தேவையான உரங்களை சில்லரை விற்பனை மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

    மேலும் ஏதேனும் விபரங்கள் தேவைப்படுவோர் துணைப்பதிவாளர், முதன்மை வருவாய் அலுவலரை 94899 27003, பொது மேலாளரை 94899 27001 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். 

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×