search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆறுகளில் மண்டிக்கிடக்கும் ஆகாயத்தாமரை.
    X
    ஆறுகளில் மண்டிக்கிடக்கும் ஆகாயத்தாமரை.

    ஆறுகளில் மண்டிக்கிடக்கும் ஆகாயத்தாமரை

    வேதாரண்யம் பகுதி ஆறுகளில் மண்டிக்கிடக்கும் ஆகாயத்தாமரையை அகற்ற விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா தாணிக்கோட்டகம், வாய்மேடு, மருதூர்,  ஆயக்காரன்புலம், பன்னாள், கருப்பம்புலம், கோவில்தாவு வரை சுமார் 25 கிலோமீட்டர் தூரம் வரை இப்பகுதியில் மிகப்பெரிய பாசன மற்றும் வடிகால் ஆறாக உள்ளது.

    இதில் தாணிக்கோட்டகத்தில் இருந்து வாய்மேடு வரை முள்ளியாற்று பாசனமாகவும் , தகட்டூரி–லிருந்து  ஆதனூர் வரை மிகப் பெரிய ஆறாக மானங்கொண்டானாறு ஓடுகிறது. இந்த ஆறுகளில் வாய்மேடு, மருதூர்,
    ஆயக்காரன்புலம் நீங்க பெற்றவர்களில் ஆகிய பகுதிகளில் அதிக அளவில் ஆகாய தாமரை மண்டிக்கிடக்கிறது. 

    மருதூர் கடைத்தெருவில் இருந்து  தகட்டூர் ஆதியங்காடு  வரை உள்ள செல்லக்கோன் வாய்க்காலில் சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் ஆற்றில்  ஆகாயத்தாமரை மிகுந்து காணப்படுகிறது .ஆகாயத்தாமரை ஆற்றுக்குள் மிகநெருக்கமாக மண்டிக்கிடப்பதால் ஆடு மாடுகள் கூட இறங்கி தண்ணீர் குடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

    இந்த ஆகாயத்–தாமரையால் தண்ணீர் வற்றிய தோடு துர்நாற்றமும் வீசுகிறது.  எனவே ஆறுகளில் மண்டிக்கிடக்கும் இந்த ஆகாய தாமரை–களை அகற்ற வேண்டும்.

    மேலும் மேட்டூரில் தண்ணீர் திறந்த நிலையில் கடைமடை பகுதியான வேதாரண்யம் பகுதிக்கு தண்ணீர் வர குறைந்த–பட்சம் 10 நாட்கள் ஆகும் அதற்குள் இந்த ஆறுகளில் மண்டிக்கிடக்கும் ஆகாயத் தாமரைகளைஅகற்ற வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×