search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pm kisan scheme"

    • விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாகவும், பிரதமர் நரேந்திரமோடி கடந்த 2018-ம் ஆண்டு பிரதம மந்திரி கிசான் சம்மான் யோஜனா திட்டத்தை கொண்டு வந்தார்.
    • இந்த திட்டத்தின் கீழ் விவசாயி களுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை 2 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கப்படுகிறது.

    சேலம்:

    ஏழை, எளிய விவசாயிகள் தங்களது விவசாயத்தை சிரமின்றி மேற்கொள்ளும் வகையிலும், விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாகவும், பிரதமர் நரேந்திரமோடி கடந்த 2018-ம் ஆண்டு பிரதம மந்திரி கிசான் சம்மான் யோஜனா திட்டத்தை கொண்டு வந்தார்.

    வருடந்தோறும் ரூ.6 ஆயிரம்

    இந்த திட்டத்தின் கீழ் விவசாயி களுக்கு 4 மாதங்க ளுக்கு ஒரு முறை 2 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கப்படுகிறது. அதாவது ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் மத்திய அரசு வழங்குகிறது. இந்த தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருவதால், பணம் முழுவதும் விவசாயி களுக்கு அப்படியே கிடைக்கிறது. வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுவதால் யாருக்கும் லஞ்சம் கொடுக்க வேண்டியதில்லை. இதனால் இந்த திட்டம் விவசாயிகள், பொதுமக்கள் மத்தியல் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    கடந்த பிப்ரவரி மாதம் 27-ந்தேதி 13-வது தொகை பிரதமர் நரேந்திரமோடி, விவசாயிகளுக்கு வழங்கினார். இந்த நிலையில் வருகிற ஜூலை மாதத்தில் 14-வது தவணை நிதியை விவசாயிகள் பெற உள்ளனர்.

    இது குறித்து சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:-

    இத்திட்டத்தின் கீழ் நிலம் வைத்திருக்கும் விவசாய குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் மூன்று தவணையாக வழங்கப் படுவது அவர்களுக்கு சமூகப் பொருளாதார பாதுகாப்பை அளிக்கிறது.

    இதுவரை 11 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு 2.42 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பெருந்தொற்றின் போது அமலில் இருந்த ஊரடங்கு காலத்தில் இருந்து ரூ.1.86 லட்சம் கோடி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏராளமான விவசாயிகள் மற்றும் வேளாண் துறையினர் பயனடைந்துள்ளனர். இதில் 3 கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் ரூ.57,628 கோடி பெற்றுள்ளனர்

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    சேலம் இத்திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் மட்டும் சுமார் 3 லட்சம் விவசாயிகள் பயன்பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பிரதமர் கிசான் திட்ட நிதி உதவிக்கு காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளது.
    • விவசாயிகளும் உரிய ஆவணங்களை பதிவு செய்த பிறகு, அன்னாரின் வங்கி கணக்குகளில் தலா 6000 ரூபாய் வரவு வைக்கப்படும் என தெரிவித்தார்.

    மதுரை

    மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு சிறு-குறு விவசாயிகள் பலன் பெறும் வகையில் பிரதமர் கவுரவ ஊக்கத்தொகை (பிரதமர் கிஷான்) என்ற திட்டத்தை அறிவித்தது. இதன்படி 5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்து இருக்கும் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 3 தவணையாக 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் உள்ள 2.15 லட்சம் விவசாயிகள், இதற்காக விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் 1.26 லட்சம் பேருக்கு உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் விவசாயிகள் சிலர் போலி பட்டா-சிட்டா உள்ளிட்ட விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்து உதவித்தொகை பெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் அடிப்படையில் வருவாய்த்துறை மற்றும் வேளாண்மை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அப்போது 10 ஆயிரம் பேர் போலி ஆவணங்கள் வாயிலாக உதவித்தொகை பெறுவது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் 11 ஆயிரம் விவசாயிகளின் பெயர், பிரதமர் கிசான் பயனாளிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. மதுரை மாவட்டத்தில் பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு, நடப்பாண்டுக்கான 6000 ரூபாய் தரப்பட வேண்டும். ஆனால் அந்தத் தொகை இதுவரை விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவில்லை. எனவே மதுரை மாவட்டத்தில் 'பிரதமர் கிசான்' திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இது தொடர்பாக வேளாண் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "மதுரை மாவட்டத்தில் பிரதமர் கிஷான் திட்டத்து க்காக விண்ணப்பித்து இருந்த பலர் ஆதார் மற்றும் வங்கி கணக்கு எண்ணை முறையாக இணையதளத்தில் பதிவு செய்யவில்லை. எனவே அவர்கள் மேற்கண்ட விவரங்களை பதிவு செய்யும் வகையில் காலக்கெடு நீட்டிக்கப்பட்டு உள்ளது. பிரதமர் கிஷான் திட்ட இணையதளத்தில் அனைத்து விவசாயிகளும் உரிய ஆவணங்களை பதிவு செய்த பிறகு, அன்னாரின் வங்கி கணக்குகளில் தலா 6000 ரூபாய் வரவு வைக்கப்படும் என தெரிவித்தார்.

    • நான்கு மாதத்திற்கு ஒருமுறை தலா ரூ.2,000/- வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
    • ஆதார் எண்ணை பதிவு செய்தால் மட்டுமே 12வது தவணைத் தொகை கிடைக்கும்.

    தமிழ்நாட்டில் பிரதம மந்திரி கிஸான் சம்மான் நிதி திட்டமானது மத்திய அரசின் 100% பங்களிப்புடன் பிப்ரவரி 2019-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தின் மூலம் நான்கு மாதத்திற்கு ஒருமுறை தலா ரூ.2,000/- வீதம் ஆண்டிற்கு ரூபாய் 6,000/- மூன்று தவணைகளில், சொந்தமாக விவசாய நிலம் வைத்துள்ள விவசாயக் குடும்பங்களுக்கு உதவித் தொகையாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடிப் பணப்பரிமாற்றம் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.

    இதுவரை, 38.24 இலட்சம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 11 தவணைகளாக நேரடி மானியமாக வரவு வைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது மத்திய அரசு 12-வது தவணைத் தொகை விடுவிப்பதில் சில புதிய வழிமுறைகளை விதித்துள்ளது.

    அதன்படி ஆகஸ்ட் மாதம் முதல் விடுவிக்கப்படும் அனைத்து தவணைத் தொகைகளும் பயனாளியின் ஆதார் எண் அடிப்படையில் மட்டுமே நிதி விடுவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

    எனவே, அனைத்து பி.எம்.கிசான் திட்டப் பயனாளிகள் அனைவரும் www.pmkisan.gov.in என்ற இணையதளத்தில் தங்கள் ஆதார் எண்ணை உள்ளீடு செய்து, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள கைபேசிக்கு வரும் ஒ.டி.பி. பெற்று அதைப் பதிவு செய்து ஆதார் எண்ணை உறுதி செய்து கொள்ளலாம் அல்லது அருகிலுள்ள பொது சேவை மையங்களில் தங்கள் விரல் ரேகையைப் பதிவு செய்தும் பி.எம்.கிசான் வலைதளத்தில் ஆதார் எண்ணை உறுதி செய்து கொள்ளலாம்.

    அடுத்த 12 வது தவணைத் தொகையானது பி.எம்.கிசான் வலைதளத்தில் ஆதார் எண்ணை உறுதி செய்த பயனாளிகளுக்கு மட்டுமே விடுவிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    எனவே, இதுவரை பி.எம்.கிசான் வலைதளத்தில் ஆதார் எண்ணை உறுதி செய்யாத பயனாளிகள் அனைவரும் கட்டாயமாக ஆதார் எண்ணை பி.எம்.கிசான் வலைதளத்தில் புதுப்பித்து தொடர்ந்து பயனடையுமாறு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக தெரிவித்துக் கொள்ளப்படுவதாக மாநில வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2000 வீதம் ஆண்டுக்கு ரூ.6000 ஊக்க தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.
    • பி.எம். கிசான் இணையத்தில் இ.கே.ஒய்.சி. மூலம் தங்களது ஆதார் விபரங்களை சரிபார்ப்பு செய்வது அவசியமாகும்.

    தென்திருப்பேரை:

    பி. எம். கிசான் திட்டத்தில் ஊக்கத் தொகையாக ஆண்டுக்கு ரூ.6ஆயிரம் பெறும் விவசாயிகள் தங்களுடைய ஆதார் விபரங்களை இணையத்தில் சரி பார்த்திட ஆழ்வார் திருநகரி வட்டார வேளாண் உதவி இயக்குனர் அல்லிராணி கேட்டுள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    பி.எம். கிசான் திட்டத்தின் கீழ் நிலமுள்ள விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2000 வீதம் ஆண்டுக்கு ரூ.6000 ஊக்க தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை பி.எம். கிசான் திட்டத்தில் சேர்ந்த தேதியை பொறுத்து 11 தவணை வரை தொகைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    விவசாயிகள் தொடர்ந்து தவணைத் தொகை பெறுவதற்கு தங்கள் ஆதார் விபரங்களை பி.எம். கிசான் இணையத்தில் இ.கே.ஒய்.சி. மூலம் தங்களது ஆதார் விபரங்களை சரிபார்ப்பு செய்வது அவசியமாகும். தாங்கள் அருகாமையில் உள்ள பொது இ- சேவை மையங்களில் அல்லது அஞ்சல் அலுவலகத்தை அணுகி சரி பார்த்துக் கொள்ளலாம்.

    மேலும் தங்களது ஆதார் எண்ணுடன் கைபேசி எண்ணை இணைத்துள்ள விவசாயிகள் பி. எம். கிசான் திட்ட வலைதளத்தில் தங்களது ஆதார் எண் விபரங்களை உள்ளீடு செய்து ஓ.டி.பி. எண் மூலம் சரிபார்ப்பு செய்து கொண்டு விவசாயிகள் உடனடியாக தவணைகள் பெறுவதை உறுதி செய்யவும். இவ்வாறு அவர் கூறினார்.

    • பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதியுதவி திட்டத்தில் பயனாளர் குறியீட்டுடன் அவர்களுக்கு சொந்தமான நில ஆவணங்களை இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
    • இந்த இணைப்பு மற்றும் பதிவு செய்யும் பணி களை ஜூலை 31-ந்தேதி க்குள் முடித்திருக்க வேண்டு ம் எனவும் தெரிவித்தனர்.

    திண்டுக்கல்:

    பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதியுதவி திட்டத்தில் இடம்பெற்றுள்ள 1.28 லட்சம் விவசாயிகளின் பயனாளர் குறியீட்டுடன் அவர்களுக்கு சொந்தமான நில ஆவணங்களை இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படுகிறது. இத்தொகை தலா ரூ. 2 ஆயிரம் வீதம் 3 தவணை களில் விவசாயிகளின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது. இதில் தகுதியில்லா பயனாளிகள் பலர் நிதி உதவி பெறுவதாக, மத்திய அரசு சுட்டிக்காட்டி யதை அடுத்து கடந்த சில மாதங்களாக ஆய்வு ப்பணிகள் நடைபெற்று வந்தன.

    அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரே குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள 9,438 பேர் கிசான் சம்மான் திட்டத்தின் கீழ் நிதி உதவி பெற்று வருவது குறித்து விசாரிக்கப்பட்டு வந்தது. அதில் தகுதியற்றதாகக் கண்டறியப்பட்ட சுமார் 5,400 விவசாயிகள் பயனாளிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர்.

    இந்நிலையில் எதிர்கால த்தில் இதுபோல் தகுதி யில்லாத பயனாளிகள் இடம் பெறுவதை தடுக்கும் வகையில் பிரதம மந்திரி கிசான் சம்மான் திட்டத்து க்கான விவசாயிகளின் பயனாளர் குறியீட்டுடன் (ஐ.டி.) அவர்களுக்கு சொந்தமான நில ஆவண ங்களை இணைப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 1.28 லட்சம் விவசாயிகளின் நில ஆவணங்கள், பிரதம மந்திரி கிசான் பயனாளர் குறியீட்டுடன் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    மாவட்டத்தில் தற்போது வரை 62 ஆயிரம் விவசாயிகளின் விபரங்கள் பயனாளர் குறியீட்டுடன் இணைக்கப்பட்டு ள்ளது.

    இது தொடர்பாக வேளாண்மைத்துறை அதிகாரிகள் கூறியதாவது,

    பிரதம மந்திரி கிசான் திட்டப்பயனாளிகள் தங்களின் பயனாளர் குறியீட்டுடன் நில ஆவண ங்களை இணைத்து பதிவு செய்திருந்தால் மட்டுமே இனி நிதி உதவித்தொகை வழங்கப்படும். அதேபோல் முதல்முறையாக பயனாளி களின் உயர்வாழ் சான்றி தழை சமர்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு ள்ளது.

    ஆதாருடன் இணைக்கப்பட்ட பயனாளி களின் செல்போனுக்கு கிடைக்கும் ஒருமுறை பயன்படுத்தப்படும் கடவு ச்சொல்லை பயன்படுத்தியும், பொது இ-சேவை மைய ங்களில் கைரேகை பதிவு செய்தும் பயனாளர் பட்டி யலில் தொடர்ந்து நீடிக்க லாம். இந்த இணைப்பு மற்றும் பதிவு செய்யும் பணி களை ஜூலை 31-ந்தேதி க்குள் முடித்திருக்க வேண்டு ம் எனவும் தெரிவித்தனர்.

    • புதிதாக விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
    • பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்தசாமி தெரிவித்துள்ளார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி வட்டாரத்தில் பாரத பிரதமரின் விவசாயிகளுக்கான கௌரவ நிதி உதவி திட்டத்தில் (பி.எம்.கிசான்) தொடர்ந்து பணம் பெற புதிதாக விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

    அதன்படி திட்டத்தில் உள்ள அனைத்து பயனாளிகளும் அவர்களுக்குரிய நிலத்தின் சிட்டா, ஆதார் கார்டு, ரேசன் கார்டு, வங்கி கணக்கு புத்தகம் , போட்டோ இவைகள் அடங்கிய விண்ணப்பத்தினை அந்தந்த பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்களிடம் கையொப்பம் பெற்று தங்களது பகுதி உதவி வேளாண்மை அலு வலர்களிடம் வழங்கும்படி பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்தசாமி தெரிவித்துள்ளார். 

    ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் பிரதமர் மோடியின் திட்டத்தை அனைத்து விவசாயிகளுக்கும் விரிவுப்படுத்த மத்திய மந்திரிசபை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
    புதுடெல்லி:

    பிரதமர் மோடி தலைமையிலான கடந்த ஆட்சிக்காலத்தில் பாராளுமன்றத்தில் இறுதியாக தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் நாடுமுழுவதும் 5 ஏக்கர் நிலத்தை கொண்ட விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் அளிக்கக்கூடிய திட்டத்தை அரசு அறிவித்தது. இதன் மூலம் 12 கோடி சிறு,குறு விவசாயிகள் பலன் அடைவார்கள் என்று அறிவிக்கப்பட்டு 75 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டிருந்தது.

    மூன்று தவணைகளாக வழங்கப்படும் 2 ஆயிரம் ரூபாய் என்ற முதல் தவணையை 3.11 கோடி சிறு, குறு விவசாயிகள் பெற்று பலனடைந்துள்ளனர்.  2.75 விவசாயிகள் இரண்டாவது தவணையையும் பெற்றுள்ளனர்.

    இதற்கிடையில், இந்த உதவித்தொகையை அனைத்து விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதையடுத்து, இந்த கோரிக்கையை மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றுவோம் என்று பாராளுமன்ற தேர்தலின்போது பாஜக வாக்குறுதி அளித்தது.

    இந்நிலையில், ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் பிரதமர் மோடியின் திட்டத்தை அனைத்து விவசாயிகளுக்கும் விரிவுப்படுத்த மத்திய மந்திரிசபை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் இன்று மாலை டெல்லியில் நடைபெற்ற புதிய அரசின் முதல் மந்திரிசபை கூட்டத்துக்கு பின்னர் இதற்கான அறிவிப்பு வெளியானது.
    ×