என் மலர்
நீங்கள் தேடியது "கிசான் திட்டம்"
- பி.எம். கிசான் திட்டத்தின் 21வது தவணையாக ரூ.18,000 கோடி நிதியை பிரதமர் மோடி விடுவித்தார்.
- 2019ம் ஆண்டு முதல் 4 மாதத்திற்கு ஒருமுறை ரூ.2000 தரப்படுகிறது.
கோவை கொடிசியாவில் தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில் 3 நாள் இயற்கை வேளாண் மாநாடு இன்று தொடங்கியது. முதல் நாள் மாநாட்டில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்தார்.
முதலில் மாநாட்டு அரங்கில் விவசாயிகள் சார்பில் இயற்கை விவசாயம் சார்ந்த பொருட்கள் இடம் பெற்ற 17 கண்காட்சி அரங்குகளை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அங்கு வைக்கப்பட்டு இருந்த உற்பத்தி பொருட்களை பார்வையிட்டு, அதன் உற்பத்தி குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார்.
இதைதொடர்ந்து, கோவை விழாவில் நாடு முழுவதும் 9 கோடி விவசாயிகளுக்கு பிரதமரின் கிசான் திட்டத்தின் 21வது தவணை நிதியை விடுவித்தார்.
பி.எம். கிசான் திட்டத்தின் 21வது தவணையாக ரூ.18,000 கோடி நிதியை பிரதமர் மோடி விடுவித்தார். விவசாய நிலம் வைத்திருப்போருக்கு பிஎம் கிசான் திட்டத்தில் 2019ம் ஆண்டு முதல் 4 மாதத்திற்கு ஒருமுறை ரூ.2000 தரப்படுகிறது.
3 தவணைகளாக நிலம் வைத்திருக்கும் ஒவ்வொரு விவசாயி வங்கிக்கணக்கிலும் ஆண்டுக்கு ரூ.6000 வரவு வைக்கப்படுகிறது. மேலும், தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டில் விவசாயிகளுக்கு பிரதமர் மாடி விருதுகளை வழங்கி கவுரவித்தார்.
- விவசாயிகளின் ஆண்டு வருமானத்தை உயர்த்தும் வகையில் மத்திய அரசால் பி.எம் கிசான் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
- தங்களது ஆதார் அட்டை மற்றும் செல்போன் எண் விபரங்களை அருகில் உள்ள பொது சேவை மையத்தில் பி.எம் கிசான் இணையதளத்தில் இ.கே.ஒய்.சி-ல் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வட்டார விவசாயிகள் பிரதமரின் கவுரவ நிதி உதவி திட்டம் தொடந்து பெறுதல் தொடர்பாக வேளாண்-உழவர் நலத்துறையின் வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்தசாமி வெளியிட்டுள்ள செய்திக்–குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாட்டில் நலிவுற்ற நிலையில் இருக்கும் விவசாயிகளின் ஆண்டு வருமானத்தை உயர்த்தும் வகையில் மத்திய அரசால் பி.எம் கிசான் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பரமத்தி வட்டார விவசாயிகள், பிரதமரின் கவுரவ நிதி திட்டத்தின் கீழ் தொடர்ந்து பயன் பெற, தங்களது ஆதார் அட்டை மற்றும் செல்போன் எண் விபரங்களை அருகில் உள்ள பொது சேவை மையத்தில் பி.எம் கிசான் இணையதளத்தில் இ.கே.ஒய்.சி-ல் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
அப்போது, செல்வபோனுக்கு வரும் கடவு எண்ணைப் (பாஸ்வோ்டு) பயன்படுத்தி தங்கள் அடையாளத்தை பதிவு செய்து
கொண்டால், விவசாயிகளுக்கு இந்த திட்டம் மூலம் வழங்கப்படும் தவணை தொகை அவா்கள் வங்கிக் கணக்கில் தொடந்து வரவு வைக்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- பிரதமர் கிசான் திட்ட நிதி உதவிக்கு காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளது.
- விவசாயிகளும் உரிய ஆவணங்களை பதிவு செய்த பிறகு, அன்னாரின் வங்கி கணக்குகளில் தலா 6000 ரூபாய் வரவு வைக்கப்படும் என தெரிவித்தார்.
மதுரை
மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு சிறு-குறு விவசாயிகள் பலன் பெறும் வகையில் பிரதமர் கவுரவ ஊக்கத்தொகை (பிரதமர் கிஷான்) என்ற திட்டத்தை அறிவித்தது. இதன்படி 5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்து இருக்கும் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 3 தவணையாக 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் உள்ள 2.15 லட்சம் விவசாயிகள், இதற்காக விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் 1.26 லட்சம் பேருக்கு உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் விவசாயிகள் சிலர் போலி பட்டா-சிட்டா உள்ளிட்ட விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்து உதவித்தொகை பெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் அடிப்படையில் வருவாய்த்துறை மற்றும் வேளாண்மை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அப்போது 10 ஆயிரம் பேர் போலி ஆவணங்கள் வாயிலாக உதவித்தொகை பெறுவது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் 11 ஆயிரம் விவசாயிகளின் பெயர், பிரதமர் கிசான் பயனாளிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. மதுரை மாவட்டத்தில் பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு, நடப்பாண்டுக்கான 6000 ரூபாய் தரப்பட வேண்டும். ஆனால் அந்தத் தொகை இதுவரை விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவில்லை. எனவே மதுரை மாவட்டத்தில் 'பிரதமர் கிசான்' திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக வேளாண் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "மதுரை மாவட்டத்தில் பிரதமர் கிஷான் திட்டத்து க்காக விண்ணப்பித்து இருந்த பலர் ஆதார் மற்றும் வங்கி கணக்கு எண்ணை முறையாக இணையதளத்தில் பதிவு செய்யவில்லை. எனவே அவர்கள் மேற்கண்ட விவரங்களை பதிவு செய்யும் வகையில் காலக்கெடு நீட்டிக்கப்பட்டு உள்ளது. பிரதமர் கிஷான் திட்ட இணையதளத்தில் அனைத்து விவசாயிகளும் உரிய ஆவணங்களை பதிவு செய்த பிறகு, அன்னாரின் வங்கி கணக்குகளில் தலா 6000 ரூபாய் வரவு வைக்கப்படும் என தெரிவித்தார்.
- மதுரை மாவட்டத்தில் பிரதமர் கிசான் திட்ட நிதி உதவிக்கு காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
- விண்ணப்பித்து இருந்த பலர் ஆதார் மற்றும் வங்கி கணக்கு எண்ணை முறையாக இணையதளத்தில் பதிவு செய்யவில்லை.
மதுரை
மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு சிறு-குறு விவசாயிகள் பலன் பெறும் வகையில் பிரதமர் கவுரவ ஊக்கத்தொகை (பிரதமர் கிஷான்) என்ற திட்டத்தை அறிவித்தது. இதன்படி 5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்து இருக்கும் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 3 தவணையாக 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் உள்ள 2.15 லட்சம் விவசாயிகள், இதற்காக விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் 1.26 லட்சம் பேருக்கு உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் விவசாயிகள் சிலர் போலி பட்டா-சிட்டா உள்ளிட்ட விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்து உதவித்தொகை பெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் அடிப்படையில் வருவாய்த்துறை மற்றும் வேளாண்மை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அப்போது 10 ஆயிரம் பேர் போலி ஆவணங்கள் வாயிலாக உதவித்தொகை பெறுவது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து
மதுரை மாவட்டத்தில் 11 ஆயிரம் விவசாயிகளின் பெயர், பிரதமர் கிசான் பயனாளிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. மதுரை மாவட்டத்தில் பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு, நடப்பாண்டுக்கான 6000 ரூபாய் தரப்பட வேண்டும். ஆனால் அந்தத் தொகை இதுவரை விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவில்லை. எனவே மதுரை மாவட்டத்தில் 'பிரதமர் கிசான்' திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக வேளாண் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "மதுரை மாவட்டத்தில் பிரதமர் கிஷான் திட்டத்து க்காக விண்ணப்பித்து இருந்த பலர் ஆதார் மற்றும் வங்கி கணக்கு எண்ணை முறையாக இணையதளத்தில் பதிவு செய்யவில்லை. எனவே அவர்கள் மேற்கண்ட விவரங்களை பதிவு செய்யும் வகையில் காலக்கெடு நீட்டிக்கப்பட்டு உள்ளது. பிரதமர் கிஷான் திட்ட இணையதளத்தில் அனைத்து விவசாயிகளும் உரிய ஆவணங்களை பதிவு செய்த பிறகு, அன்னாரின் வங்கி கணக்குகளில் தலா 6000 ரூபாய் வரவு வைக்கப்படும் என தெரிவித்தார்.






