என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கிருஷ்ணகிரி கே.ஆர்.எஸ். அணையில் இருந்து நீர் திறப்பு 3571 கனஅடியாக குறைப்பு
- கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து இன்று காலை 8 மணிக்கு வினாடிக்கு 3,268 கனஅடி தண்ணீர் வந்தது.
- தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் சீறிப் பாய்ந்து அணை பூங்காவிற்கு செல்லும் தரைப்பாலம் மூழ்கியபடி செல்கிறது.
கிருஷ்ணகிரி:
கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்று நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழையால் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இந்த அணைக்கு இன்று காலை 8 மணி நிலவரப்படி 1410 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 44.28 அடி கொள்ளளவான அணையில் 44.28 அடி நீர் இருப்பு உள்ளது.
இதனால் அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து அப்படியே தண்ணீரை வெளியேற்றப் பட்டு வருகிறது. இந்த தண்ணீர் கால்வாய் வழியாக நேராக கிருஷ்ணகிரி கே.ஆர்.எஸ். அணைக்கு வருகிறது.
அதன்படி, கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து இன்று காலை 8 மணிக்கு வினாடிக்கு 3,268 கனஅடி தண்ணீர் வந்தது.
அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் நீர்மட்டம் 50.85 அடியாக உள்ளது.
அணையின் பாதுகாப்பு கருதி நேற்று மாலை 4500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை வினாடிக்கு 3,571 கனஅடி தண்ணீர் குறைத்து வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதனால் தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் சீறிப் பாய்ந்து அணை பூங்காவிற்கு செல்லும் தரைப்பாலம் மூழ்கியபடி செல்கிறது.
இதன் காரணமாக தரைப்பாலம் வழியாக பூங்காவிற்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தரைப்பாலத்தின் இருபகுதிகளிலும் போலீசார், தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.






