என் மலர்tooltip icon

    இந்தியா

    டெல்லி செங்கோட்டை கார் வெடிப்பு சம்பவம்- புதிய சிசிடிவி காட்சி வெளியீடு
    X

    டெல்லி செங்கோட்டை கார் வெடிப்பு சம்பவம்- புதிய சிசிடிவி காட்சி வெளியீடு

    • ஜம்மு காஷ்மீர் புல்வாமா பகுதியை சேர்ந்த மருத்துவர் முகமது உமர் என கண்டறியப்பட்டது.
    • காலை வரை 6 மருத்துவர்கள் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

    டெல்லி செங்கோட்டை அருகே காரில் வெடிபொருள் நிரப்பி வெடிக்க செய்த சம்பவத்தில் 13 பேர் பலியானார்கள்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து காரை ஓட்டி வந்தது ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமாவை சேர்ந்த டாக்டர் உமர் முகமது என்று போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். இது தற்கொலை தாக்குதலாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    இந்த நிலையில் டெல்லி செங்கோட்டை எதிரே போக்குவரத்து சிக்னலில் நின்ற கார் வெடித்து சிதறிய சி.சி.டி.வி. காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.

    சிக்னல் அருகே கார் வந்து நிற்பது, பின்னர் வெடித்து சிதறுவது போன்ற காட்சிகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. கார் வெடித்து சிதறும் போது கடுமையான தீப்பிழம்பு காணப்படுகிறது.

    நேற்று முன்தினம் மாலை 6.50 மணிக்கு செங்கோட்டை மெட்ரோ ரெயில் நிலையம் அருகே இந்த சம்பவம் நடந்து உள்ளது. கார் வெடித்து சிதறிய போது சிக்னலில் ஏராளமான வாகனங்கள் நின்று கொண்டிருந்தன. இதனால் 13 பேர் பலியாகி உள்ளனர்.

    Next Story
    ×