என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "elevator"

    • அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு லிப்டில் 2 பெண்கள் வந்தனர்.
    • உரிய பராமரிப்பு இல்லாததால் லிப்டில் அடிக்கடி பழுதாகி நின்று விடுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

    திருவொற்றியூர்:

    சென்னை, மூலக்கொத்தளம் ராமதாஸ் நகரில் வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. சுமார் 1,440 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வீடுகள் ஒதுக்கப்பட்டு பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு லிப்ட் வசதியும் உள்ளது.

    இந்த நிலையில் நேற்று இரவு இந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு லிப்டில் 2 பெண்கள் வந்தனர். திடீரென அந்த லிப்ட் பழுதாகி நடுவழியில் நின்றது. இதனால்அதிர்ச்சி அடைந்த பெண்கள் பயத்தில் கூச்சலிட்டு அலறினர்.

    சத்தம் கேட்டு வந்த அப்பகுதி மக்கள் லிப்டின் கதவை நீண்ட நேரம் போராடி உடைத்தனர். பின்னர் லிப்டிடுக்குள் சிக்கி இருந்த 2 பெண்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர். உரிய பராமரிப்பு இல்லாததால் லிப்டில் அடிக்கடி பழுதாகி நின்று விடுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

    இதுகுறித்து குடியிருப்பில் வசிக்கும் மக்கள் கூறும்போது, ஒரு அவசரத்திற்கு கூட இந்த லிப்டை பயன்படுத்த முடியவில்லை. இதனை சரியாக பராமரிப்பது இல்லை. அடிக்கடி இது போன்று நாங்கள் லிப்டில் சிக்கிய கொள்கிறோம். லிப்டில் செல்லும் போதெல்லாம் அச்சத்தோடு செல்ல வேண்டி உள்ளது.

    இதற்கிடையே லிப்ட்டில் சிக்கி பெண்களை அப்பகுதி மக்கள் கதவை உடைத்து மீட்கும் காட்சிகள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    • ஹயாத் எனும் தனியார் ஓட்டலில் உள்ள லிப்ட் பழுதாகியுள்ளது.
    • பழுதை சரிசெய்யும் வகையில், பழுதான லிப்ட் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் விபத்து.

    சென்னை தேனாம்பேட்டை தனியார் நட்சத்திர ஓட்டலில் லிப்ட் பழுது பார்க்கும்போது ஊழியர் உயிழிந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஹயாத் எனும் தனியார் ஓட்டலில் உள்ள லிப்ட் பழுதாகியுள்ளது.

    பழுதை சரிசெய்யும் வகையில், பழுதான லிப்ட் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் பிற்பகலில் சரிசெய்யும் பணியின்போது விபத்து ஏற்பட்டுள்ளது.

    லிப்டை சரி செய்ய முயன்றபோது, லிப்ட் அறுந்து விழுந்ததில் தொழிலாளி ஒருவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து இதுகுறித்து ஆய்வு செய்த போலீசார், வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பிரியங்கா சோப்ரா கால் இடறி விழ முற்பட்டார்.
    • சம்பவத்தின் வீடியோ வைரலாகியுள்ளது.

    நடிகை பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் சமீபத்தில் போட்டோஷூட் ஒன்றில் கலந்துக் கொண்டார். அப்போது, லிஃப்டில் படம் படிக்கப்பட்டுள்ளது.

    பிறகு, பிரியங்கா சோப்ரா லிஃப்டில் இருந்து வெளியில் வரும்போது அவரது குதிகால் லிஃப்டில் சிக்கிக் கொண்டது.

    இதனால் பிரியங்கா சோப்ரா கால் இடறி விழ முற்பட்டார். இருப்பினும், அவர் தாமாக நிலைக்கு வந்தார் இதனால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    இந்த சம்பவத்தின் வீடியோ வைரலாகியுள்ளது. அதில், பிரியங்கா சோப்ராவின் கால் செருப்பு லிஃப்டில் சிக்கியது. பிறகு, அவர் செருப்பை லாவகமாக எடுத்து, தனது போட்டோஷூட்டை தொடரும் காட்சி பதிவாகியுள்ளது.

    ×