என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "private hotel"
- பெண்களுக்கு இலவச மதுபானம் என்று விளம்பரப்படுத்தப்பட்டு இருந்தது.
- அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
திருப்பூர் :
திருப்பூர் மங்கலம் ரோடு பாரப்பாளையத்தில் உள்ள தனியார் ஓட்டலில் பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் பங்கேற்கும் பெண்களுக்கு இலவச மதுபானம் என்று விளம்பரப்படுத்தப்பட்டு இருந்தது. இதற்கு அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்த நிலையில் ஓட்டல் நிர்வாகம் அந்த நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டதாக அறிவித்ததுடன், விளம்பரம் செய்ததற்கு மன்னிப்பும் கோரியது. முன்னதாக மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனருக்கு புகார் மனு அனுப்பினார்.
அதில், தனியார் ஓட்டல் சார்பில் கலாசார சீர்கேடு ஏற்படுத்தும் வகையில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இதுமிகவும் கண்டிக்கத்தக்கது. தமிழக அரசுக்கும், மாநகராட்சிக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது. கலாசார சீரழிவு ஏற்படுத்தும் நிகழ்ச்சியை அனுமதிக்கக்கூடாது. தவறான செய்திகளை சமூகவலைதளங்களில் பரப்புவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியிருந்தார்.
தனியார் ஓட்டலில் நீச்சல் குளத்தில் மூழ்கி கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவை சுந்தராபுரம் சி.டி.ஓ.காலனியை சேர்ந்தவர் நாகேந்திர பிரசாத். இவருடைய மகன் சாய் கிருஷ் ணன் (வயது 20). இவர் பொள்ளாச்சி சாலையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
இந்தநிலையில் இவர் நீச்சல் பழகுவதற்காக கோவை உக்கடம் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஓட்ட லுக்கு நேற்று முன்தினம் மதியம் 12.30 மணியளவில் வந்தார். அவர் அந்த ஓட்டலில் உள்ள நீச்சல் குளத்தில் நீச்சல் அடித்துக்கொண்டு இருந்தார்.
அப்போது அவர் திடீரென்று தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பயிற்சியாளர்கள் அவரது உடலை மீட்டு வெளியே கொண்டு வந்த னர். இது குறித்து உக்கடம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
நீச்சல் பழக வந்த சாய் கிருஷ்ணனுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்