search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "swimming pool"

    • நீச்சல் குளத்திற்குள் ஒன்றரை அடி நீளம் உள்ள முதலைகுட்டி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தாம்பரம்:

    தாம்பரம் அடுத்த நெடுங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி தங்கவேல். தொழில் அதிபரான இவர் மறைந்த பழம் பெரும் நடிகர் பாலையாவின் பேரன் ஆவார்.

    பா.ஜனதா கட்சியில் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட ஓ.பி.சி. அணி மாவட்ட தலைவராகவும் உள்ளார். இவர் மனைவி மற்றும் 2½ வயது மகனுடன் பங்களா வீட்டில் வசித்து வருகிறார். இவரது வீட்டில் நீச்சல் குளம் உள்ளது.

    கடந்த சில நாட்களாக தாம்பரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீச்சல் குளத்தில் தண்ணீர் அசுத்தம் ஆனது.

    இதையடுத்து பாலாஜி தங்கவேல் இன்று காலை நீச்சல் குளத்தில் இருந்த தண்ணீரை வெளியேற்றி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். அப்போது நீச்சல் குளத்திற்குள் ஒன்றரை அடி நீளம் உள்ள முதலைகுட்டி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பின்பு அந்த முதலை குட்டியை லாவகமாக பிடித்து பிளாஸ்டிக் கூடையில் அடைத்து வைத்தார். இதுபற்றி வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பூங்கா ஊழியர்கள் விரைந்து வந்து அந்த முதலைகுட்டியை மீட்டு பூங்காவிற்கு எடுத்துச் சென்றனர்.

    வண்டலூர் பூங்காவில் உள்ள முதலை குட்டிகளை உணவுக்காக பறவைகள் தூக்கி செல்லும் போது கீழே விழுவது வழக்கம். இதேபோல் சதானந்தபுரம், ஆலப்பாக்கம், நெடுங்குன்றம் பகுதியில் உள்ள நீர் நிலைகளில் இதற்கு முன்பும் தவறி விழுந்த முதலைகள் சிக்கி உள்ளது.

    சாலையில் முதலை நடந்து சென்ற சம்பவமும் நடந்து உள்ளது. பறவைகள் தூக்கி சென்ற போது இந்த முதலை குட்டியும் நீச்சல் குளத்தில் விழுந்து இருக்கலாம் என்று தெரிகிறது.

    • மதுரை மாநகராட்சி நீச்சல் குளத்தில் சிறுவர்கள்-வாலிபர்கள் திரண்டனர்.
    • நீண்ட வரிசையில் வயது வித்தியாச மின்றி அனைவரும் காத்திருந்தனர்.

    மதுரை

    மதுரை தல்லாகுளத்தில் மாநகராட்சியின் நீச்சல் குளம் உள்ளது. பராமரிப்பு பணி காரணமாக கடந்த சில ஆண்டுகளாக இந்த நீச்சல்குளம் செயல்படாமல் இருந்தது. இந்நிலையில் புனரமைப்பு பணிகள் முடிந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த நீச்சல்குளம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.

    புதுபொலிவுடன் காணப்படும் இந்த நீச்சல்குளத்தில் ஏராளமானோர் ஆர்வமுடன் வந்து குளித்து சென்றனர். இங்கு குளிப்பதற்கு சிறுவர்களுக்கு 20 ரூபாயும், பெரியவர்களுக்கு 40 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அந்த கட்டணத்தை செலுத்தி தினமும் ஏராளமானோர் குளித்து வந்தனர்.

    இந்நிலையில் மதுரையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. பகல் நேரம் மட்டுமின்றி இரவிலும் கடும் வெப்பம் நிலவி வருகிறது. வெயில் அதிகரித்துள்ள நிலையில் வெப்பத்தை தணிக்க சிறுவர்கள், வாலிபர்கள் நீர்நிலைகளுக்கு சென்று நீண்ட நேரம் நீராடி மகிழ்கின்றனர்.

    அதிலும் மதுரை தல்லாகுளத்தில் உள்ள மாநகராட்சி நீச்சல் குளத்திற்கு வருகின்றனர். விடுமுறை தினமான இன்று இன்று ஏராளமான சிறுவர்கள், வாலிபர்கள் திரண்டனர். இதனால் அங்கு கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது. ஒரே நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் குவிந்ததால் நுழைவு கட்டண சீட்டு பெறுவதற்காக நீண்ட வரிசையில் வயது வித்தியாச மின்றி அனைவரும் காத்திருந்தனர்.

    வாலிபர்களும், சிறுவர்க ளும் நீச்சல் குளத்தில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

    • சாத்தான்குளம் அருகே நீச்சல் குளத்தில் மூழ்கி வாலிபர் ஒருவர் பலியானார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    சாத்தான்குளம்:

    மணப்பாடு மீனவர் காலனியை சேர்ந்த ஜெரி. இவரது மகன் ஜெட்டா (வயது 17) இவர் 12-ம் வகுப்பு படித்து முடித்துள்ளார். தந்தை ஜெரி வெளிநாட்டில் வேளை செய்து வருகிறார்.

    ஜெட்டா நேற்று தனது நண்பர்களுடன் நீச்சல் குளத்தில் குளிப்பதற்காக இடைச்சிவிளை அருகே உள்ள தனியார் கல்லூரி நீச்சல் குளத்திற்கு குளிக்கச் சென்றார்.

    நீச்சல் குளத்தில் ஜெட்டா குளிக்கும் பொழுது திடீரென மூழ்கி மூச்சுத்திணறி பலியானார். இதுதொடர்பாக தட்டார்மடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை மருதமலை அடிவாரத்தில் நீச்சல் குளத்தில் மூழ்கி மாணவர் - காவலாளி பலியானார்கள்.

    வடவள்ளி:

    கோவை மருதமலை அடிவாரத்தில் தனியார் லாட்ஜ் உள்ளது. இங்கு 3 நீச்சல் குளம் இருக்கிறது. இந்த குளத்தில் குளிக்க ஒரு மணி நேரத்திற்கு ரூ. 150 கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இன்று காலை 10.30 மணிக்கு வடவள்ளி இந்திரா நகரை சேர்ந்த கோவை பூமார்க்கெட்டில் வேலை பார்த்து வரும் பெரியசாமி மகன் அன்புச்செல்வன் (17), அவரது நண்பர்கள் சுதிஷ், ஆதித்யா, அஸ்வின், கவின் பரிதி ஆகியோர் நீச்சல் குளத்திற்கு குளிக்க சென்றனர்.

    அவர்கள் 7 அடி ஆழமுள்ள குளத்தில் குளித்து கொண்டு இருந்தனர். அப்போது மாணவர் அன்புச் செல்வன் தண்ணீரில் மூழ்கினார். இதனை பார்த்த அவரது நண்பர்கள் சத்தம் போட்டனர்.

    இதனை கேட்டதும் நீச்சல் குளத்தில் காவலாளியாக வேலை பார்த்து வரும் குரும்ப பாளையத்தை சேர்ந்த தேவராஜ் ஓடி வந்து மாணவர் அன்பு செல்வனை காப்பாற்ற முயன்றார். ஆனால் முடியவில்லை.

    இருவரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். இதனை பார்த்த மற்ற மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் கதறி துடித்தனர். இது குறித்து வடவள்ளி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு விரைந்து வந்து தண்ணீரில் மூழ்கி பலியான மாணவர் அன்புசெல்வன், காவலாளி தேவராஜ் ஆகியோர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பலியான அன்பு செல்வன் வடவள்ளியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 பரீட்சை எழுதி உள்ளார். அவரது நண்பர்களும் பிளஸ்-1 எழுதி உள்ளனர்.

    இந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    கிண்டியில் உள்ள நீச்சல் குளத்தில் பயிற்சியின்போது பிளஸ்-1 மாணவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பரிதாபமாக இறந்தார்.
    ஆலந்தூர்:

    சென்னையை அடுத்த சிட்லப்பாக்கம் சாந்தி அவென்யூ பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர். இவருடைய மகன் சாய்ஸ்ரீவத்சன் (வயது 15). இவர், தாம்பரத்தில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

    சாய்ஸ்ரீவத்சன், மாவட்ட அளவிலான நீச்சல் போட்டியில் தங்க பதக்கம் பெற்று உள்ளார். தற்போது மாநில அளவிலான நீச்சல் போட்டியில் பங்கேற்பதற்காக கடந்த சில தினங்களாக கிண்டி வேளச்சேரி சாலையில் உள்ள அரசு நீச்சல் குளத்தில் பயிற்சி எடுத்து வந்தார்.

    நேற்று காலை தந்தை ஸ்ரீதருடன் சாய்ஸ்ரீவத்சன், கிண்டியில் உள்ள நீச்சல் குளத்துக்கு வந்தார். சாய்ஸ்ரீவத்சன் தனியாகவும், அவரது தந்தை ஸ்ரீதர் தனியாகவும் நீச்சல் குளத்தில் பயிற்சி எடுத்துக்கொண்டு இருந்தனர்.

    அப்போது திடீரென சாய்ஸ்ரீவத்சனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் நீச்சல் குளத்தில் இருந்து கரையேறி வந்த அவர், மயங்கி விழுந்தார். அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவருடைய தந்தை ஸ்ரீதர் மற்றும் அங்கு நீச்சல் பயிற்சிக்கு வந்தவர்கள் சாய்ஸ்ரீவத்சனை மீட்டு கிண்டியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், வரும் வழியிலேயே சாய்ஸ்ரீவத்சன் பரிதாபமாக இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி கிண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 
    வேளச்சேரி நீச்சல் குளத்தில் மாணவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆலந்தூர்:

    நங்கநல்லூரை சேர்ந்தவர் சாய் ஸ்ரீ வத்சன். தாம்பரத்தில் உள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.

    வேளச்சேரியில் உள்ள நீச்சல் குளத்தில் ஸ்ரீ வத்சன் நீச்சல் பயிற்சி பெற்று வந்தார். தந்தையுடன் சென்று அவர் பயிற்சி பெறுவது வழக்கம். இன்று காலையிலும் வழக்கம் போல பயிற்சிக்கு சென்றார்.

    நீச்சல் அடித்துக் கொண்டு இருந்த போது, சாய் ஸ்ரீ வத்சன் முதுகு வலிப்பதாக கூறி உள்ளார். இதையடுத்து அவரை கரையேறுமாறு தந்தை கூறினார். குளத்தில் இருந்து வெளியே வந்த போது ஸ்ரீவத்சனுக்கு மயக்கம் ஏற்பட்டது.

    உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அவரை அழைத்துச் சென்றனர். அங்கு ஸ்ரீவத்சனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுபற்றி கிண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பயிற்சியின் போது உயிரிழந்த ஸ்ரீவத்சன் காஞ்சீபுரம் மாவட்ட அளவில் நீச்சல் பயிற்சியில் 2-ம் இடம் பிடித்து சாம்பியன் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    சிங்கப்பூரில் நீச்சல் குளத்தில் குளித்துக் கொண்டிருந்த 4 பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட இந்திய டாக்டரை 2 வாரம் ஜெயிலில் அடைக்க மாவட்ட நீதிபதி உத்தரவிட்டார்.
    சிங்கப்பூர்:

    இந்தியாவை சேர்ந்த டாக்டர் ஜெகதீப் சிங் அரோரா (வயது 46). இவர் தனது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக, தன் மனைவி மற்றும் 11 வயதான மகளுடன் சிங்கப்பூருக்கு சென்றார். பிரபல சுற்றுலா தலம் ஒன்றில் உள்ள ஓட்டலில் குடும்பத்துடன் தங்கினார்.

    அங்குள்ள நீச்சல் குளத்தில் குளித்துக் கொண்டிருந்த 4 பெண்களிடம் அவர் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதுதொடர்பான புகாரின்பேரில், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவரை 2 வாரம் ஜெயிலில் அடைக்க சிங்கப்பூர் மாவட்ட நீதிபதி நா பெங் ஹாங் உத்தரவிட்டார்.

    குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அரோராவுக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை அல்லது அபராதம் அல்லது கசையடி அல்லது எல்லாம் சேர்த்து தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது. தான் பெரிய தவறு செய்து விட்டதாக கோர்ட்டில் அரோரா தெரிவித்தார்.

    தனியார் ஓட்டலில் நீச்சல் குளத்தில் மூழ்கி கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.
    கோவை:

    தனியார் ஓட்டலில் நீச்சல் குளத்தில் மூழ்கி கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

    கோவை சுந்தராபுரம் சி.டி.ஓ.காலனியை சேர்ந்தவர் நாகேந்திர பிரசாத். இவருடைய மகன் சாய் கிருஷ் ணன் (வயது 20). இவர் பொள்ளாச்சி சாலையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்தநிலையில் இவர் நீச்சல் பழகுவதற்காக கோவை உக்கடம் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஓட்ட லுக்கு நேற்று முன்தினம் மதியம் 12.30 மணியளவில் வந்தார். அவர் அந்த ஓட்டலில் உள்ள நீச்சல் குளத்தில் நீச்சல் அடித்துக்கொண்டு இருந்தார்.

    அப்போது அவர் திடீரென்று தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பயிற்சியாளர்கள் அவரது உடலை மீட்டு வெளியே கொண்டு வந்த னர். இது குறித்து உக்கடம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    நீச்சல் பழக வந்த சாய் கிருஷ்ணனுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
    ×