search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "young girls"

    • கல்லூரி மாணவிகள் உள்பட 3 இளம்பெண்கள் மாயமாகி விட்டனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் அருகே உள்ள அரசப்பட்டியை சேர்ந்தவர் காளியப்பன். இவரது 17 வயது மகள் விருதுநகரில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதுகுறித்து நத்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் காளியப்பன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருத்தங்கல் எஸ்.என்.புரம் ரோடு பகுதியை சேர்ந்தவர் கலையரசி. இவர் கணவரை பிரிந்து மகள் சுவேதா என்ற சுந்தரேஸ்வரியுடன்(20) வசித்து வருகிறார். சுந்தரேஸ்வரி சிவகாசி அரசு கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை.

    எங்கு சென்றார் என தெரியவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் மகளை கண்டுபிடித்து தருமாறு திருத்தங்கல் போலீஸ் நிலையத்தில் கலையரசி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காரியாபட்டி அருகே உள்ள நாசர் புளியங்கு ளத்தை சேர்ந்தவர் வீர பாண்டி. இவரது மகள் பேச்சி(21). என்ஜினீயரிங் படித்துவிட்டு வீட்டில் இருந்தார். இந்த நிலையில் ஆதித்தநேந்தலில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். அங்கிருந்தவர் திடீரென மாயமானார். எங்கு சென்றார் என தெரியவில்லை.

    இதுகுறித்து நரிக்குடி போலீஸ் நிலையத்தில் வீரபாண்டி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இளம்பெண்கள் உள்பட 4 பேர் மாயமானார்கள்.
    • பல இடங்களில் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    மதுரை

    மதுரை வெளிச்சநத்தம் வி.மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது பெண் புதூர் பகுதியில் உள்ள ஒரு மையத்தில் டைப்ரைட்டிங் பயின்று வருகிறார்.

    சம்ப வத்தன்று டைப்ரைட்டிங் மையத்திற்கு செல்வதாக கூறிச் சென்றவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டு பிடிக்க முடிய வில்லை.

    இது குறித்த புகாரின் பேரில் சத்திரப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்

    வாடிப்பட்டி அருகே உள்ள பெரிய ஊர்சேரியை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி பூமா (30). சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்றவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்க ளில் தேடி பார்த்தும் கண்டு பிடிக்க முடியவில்லை.

    இதுகுறித்து அலங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் ராஜா புகார் செய்தார்.அலங்காநல்லூர் அருகே உள்ள மேலப்பனங்காடி வாகைகுளத்தை சேர்ந்தவர் ஆனந்தகுமார். சம்பவத்தன்று வேலைக்கு சென்றவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதைத்தொடர்ந்து ஆனந்த குமாரின் மனைவி ரதி அலங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.மதுரை குலமங்கலம் யோகநரசிம்மன் நகரை சேர்ந்தவர் சரவணகுமார். இவரது மகள் கீர்த்திகா (19). சம்பவத்தன்று வெளியே சென்று வருவதாக கூறிச் சென்ற இவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதைத்தொடர்ந்து சரவண குமார் மகளை கண்டுபிடித்து தருமாறு அலங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமானவர்களை தேடி வருகின்றனர்.

    • ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இளம்பெண்கள் உள்பட 4 பேர் மாயமாகினர்.
    • சப்- இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    விருதுநகர்,

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தனமாரி. இவரது மகள் அழகு பத்மா (வயது 27). இவருக்கு 2 வருடங்களுக்கு முன்பு கனகராஜ் என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு வயதில் கவி ஜெகத்ரா மகள் உள்ளார்.

    இந்த நிலையில் கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அழகு பத்மா தாய் வீட்டுக்கு வந்து விட்டார். சம்பவத்தன்று வெளியே சென்று வருவதாக கூறிச் சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் மம்சாபுரம் போலீஸ் நிலையத்தில் சந்தனமாரி புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அழகு பத்மாவை தேடி வருகின்றனர்.

    பட்டதாரி பெண்

    வத்திராயிருப்பு அருகே கூமாபட்டியை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகள் துர்கா தேவி (வயது 23). இவர் பட்டப்படிப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்தார். சம்பவத்தன்று அத்தை மகளுடன் வெளியே சென்று வருவதாக கூறிச் சென்றவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. கூமாபட்டி போலீஸ் நிலையத்தில் மகளை கண்டு பிடித்து தருமாறு பெரியசாமி புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராஜபாளையம் தாட்கோ காலனியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 33). கூலி வேலை செய்து வருகிறார். இவர் மனைவி மகாலட்சுமி மற்றும் 5 வயது மகள் குழலியுடன் திருச்செந்தூருக்கு பாதயாத்திரை சென்றுள்ளார். சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் ராஜபாளையத்திற்கு பேருந்தில் திரும்பி வந்துள்ளனர்.

    ராஜபாளையம் பழைய பேருந்து நிலையத்திற்கு வந்தபோது பாத்ரூம் சென்ற மகாலட்சுமி திரும்பி வரவில்லை. தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. இதையடுத்து ராஜபாளை யம் வடக்கு போலீஸ் நிலையத்தில் கார்த்திக் புகார் அளித்தார். சப்- இன்ஸ்பெக்டர் செல்வ குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் அம்மன் சன்னதி தெருவை சேர்ந்தவர் பாலமுருகன் (17). இவர் கடந்த 15-ம் தேதி சொக்கநாதன் புதூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று வருவதாக கூறி சென்றவர் மாயமானார். எங்கு சென்றார் என்று தெரியவில்லை.

    பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் இவரது தந்தை வேலு சேத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சப்- இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • ராமநாதபுரத்தில் 3 இளம்பெண்கள் திடீரென மாயமானார்கள்.
    • ராமநாதபுரம் பஜார், மண்டபம் போலீசார் வழக்கு பதிவு செய்து இளம் பெண்களை தேடி வருகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் காட்டுப் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் தவமணி. ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அலுவலராக பணிபுரிந்து வருகிறார். தவமணியின் கணவர் இறந்து சுமார் 15 வருடங்கள் ஆகிறது. இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்தமகளுக்கு திருமணமாகி அவரது கணவருடன் வாழ்ந்து வருகிறார். இளைய மகள் ஜான்சிராணி(வயது20). கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு உடலில் தீக்காயம் ஏற்பட்டு அதனால் அவர் வெளியில் செல்லாமல் வீட்டிலே தாயாருடன் இருந்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் நேற்று தவமணி வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு மாலை வீட்டிற்கு வந்த போது மகள் ஜான்சி ராணி மாயமாகி இருந்தார்.

    பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. தவமணி ராமநாதபுரம் பஜார் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.

    ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி. பட்டினத்தை சேர்ந்தவர் பஹ்ருதீன். மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மகள் இர்பானா (வயது20). சம்பவத்தன்று பஹ்ருதீன் மற்றும் அவரது மனைவியும் மருத்துவ சிகிச்சைக்கு திருச்சி சென்றனர். அப்போது இர்பானா மளிகை கடையை திறக்க செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றார். ஆனால் வெகுநேரம் ஆகியும் கடையை திறக்காமல் மாயமானார். எங்கும் தேடியும் கிடைக்காததால் எஸ்.பி.பட்டினம் போலீஸ் நிலையத்தில் பஹ்ருதீன் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.

    மண்டபம் அருகே வேதாளை கிராமத்தைச் சேர்ந்தவர் மக்மூது. இவரது மகள் ஆயிஷத்துத்துல்பியா (வயது 20). இவர் நேற்று காலை திடீரென மாய மானார். மக்மூது அளித்த புகாரின் படி மண்டபம் போலீசார் வழக்கு பதிவு செய்து இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.

    • கவர்ச்சிகரமாகவோ ஆபாசமாகவோ இளம் பெண்கள் வீடியோக்களை பதிவு செய்யக் கூடாது
    • நாம் விளையாட்டுக்காக எடுக்கும் வீடியோக்கள் கடைசியில் வினையில் போய் முடிந்து விடும்.

    உள்ளங்கையில் தவழும் செல்போனில் தற்போது உலகத்தையே காண முடிகிறது. செல்போன் மூலமாக விரும்பும் அனைத்தையும் நாம் இருக்கும் இடத்துக்கே கொண்டுவர முடிகிறது. மின்சார கட்டணத்தில் தொடங்கி சினிமா டிக்கெட் எடுப்பது வரை அனைத்தையும் செல்போன்கள் மூலமே பூர்த்தி செய்து கொள்ள முடிகிறது.

    இப்படி செல்போன்கள் நமது அன்றாட பயன்பாட்டு பொருட்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி பல ஆண்டுகள் ஆகி விட்டன. ஒரு இடத்துக்கு தேடிச் சென்றுதான் ஒரு வேலையை செய்து முடிக்க முடியும் என்கிற நிலையும் மாறி விட்டது.

    செல்போன்கள் இன்றைய அவசர உலகில் நாம் வேகமாக ஓடுவதற்கு உற்ற துணைவனாகவே மாறி உள்ளது என்றால் அது மிகையாகாது. இப்படி செல்போன்களின் பயன்பாட்டை சொல்லிக் கொண்டே செல்லலாம். அந்த வகையில் இன்று கிராமத்தில் தொடங்கி நகர்ப்புறங்கள் வரையில் செல்போன்கள் இல்லாதவர்களே இல்லை என்கிற நிலை ஏற்பட்டு விட்டது.

    நல்ல விஷயங்களுக்காக மட்டுமே பயன்பட வேண்டிய செல்போன் தற்போது நமக்கே வேட்டு வைப்பதாக மாறி இருக்கிறது. செல்போன்களில் தங்களை அழகழகாய் படம் பிடித்து ரசிக்கும் இன்றைய இளம் பெண்கள் பலர், அதன் பின்னால் ஒளிந்து கிடக்கும் பேராபத்தை எப்போதுமே உணர்வதில்லை. குறிப்பாக இன்றைய இளம்பெண்கள் மத்தியில் செல்போன் மோகம் என்பது எல்லை மீறும் அளவுக்கு சென்று விட்டது என்று எச்சரிக்கிறார்கள் சைபர் கிரைம் போலீசார்.

    விளையாட்டாக எடுத்துவிட்டு அதனை பார்த்து ரசித்த பின்னர் அழித்து விட்டால் எதுவும் தெரியாது என்று நினைத்துக் கொண்டு இன்றைய இளம் பெண்கள் பலர் தங்களை எப்படியெல்லாம் படம் பிடிக்க கூடாதோ அப்படி எல்லாம் படம் பிடித்தும் வீடியோக்களை பதிவு செய்தும் ரசித்து வருகிறார்கள். குறிப்பாக சினிமா கவர்ச்சி நடிகைகளை மிஞ்சும் வகையில் தங்களை விதவிதமாக வீடியோவில் பதிவு செய்து வருகிறார்கள்.

    அந்த வகையில் இணைய தளங்களின் பக்கம் நாம் சாதாரணமாக உலாவினாலே போதும், விதவிதமான வீடியோக்கள் வந்து விழுகின்றன. நாம் தேடிச் செல்லாமலேயே இணைய தளங்கள் மூலம் ஏராளமான ஆபாச வீடியோக்களை பார்க்க முடிகிறது. குறிப்பாக கணவன்- மனைவி இருவரின் அந்தரங்க விஷயங்களை ஊரே பார்க்கும் வகையிலான வீடியோக்களும் கண்ணை கூச செய்யும் வகையில் குவிந்து கிடக்கின்றன. இது போன்ற வீடியோக்கள் சமீப காலமாகவே சமூக வலைத் தளங்களை அதிகமாக ஆக்கிரமித்து வருகின்றன.


    இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் செல்போன்களில் யூடியூப் வீடியோக்களை பார்ப்பதை பொழுது போக்காகவே கொண்டு உள்ளனர். இது போன்ற நேரங்களில் நல்ல விஷயங்களை தேடி இளைஞர்கள் பார்த்தாலும் ஏதோ ஒரு வகையில் அவர்களை சுண்டி இழுக்கும் கவர்ச்சிகரமான வீடியோக்களையும் காண நேரிடுகிறது.

    இப்படி இளைய சமூகம் கெட்டுப் போவதற்கு ஆபாச இணையதளங்கள் பெருமளவில் பெருகி கிடக்கின்றன. இது தொடர்பாக கடந்த 2014-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு ஆபாச இணைய தளங்களை மத்திய-மாநில அரசுகள் முடக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது.

    இதன் தொடர்ச்சியாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த 2015-ம் ஆண்டு 800 ஆபாச இணைய தளங்களும் கடந்த ஆண்டு 60 இணைய தளங்களும் முடக்கப்பட்டு இருக்கின்றன. இந்த எண்ணிக்கை என்பது பெருங்கடலில் ஒரு குடம் தண்ணீரை அள்ளியது போன்று தான் என்கிறார்கள் இணையதளவாசிகள். அந்த அளவுக்கு உலகம் முழுவ திலும் இருந்து இயக்கப்படும் ஆபாச இணையதளங்களில் கோடிக்கணக்கான வீடியோக்கள் குவிந்து கிடக்கின்றன.

    இது போன்ற இணைய தளங்களை முடக்கி வைப்பது என்பது நாடு முழுவதுமே சைபர் கிரைம் காவலர்களுக்கு பெரும் சவாலாகவே உள்ளது. ஒரு இணையதளத்தை முடக்கினால் புதிதாக நூறு இணைய தளங்கள் புற்றீசல்கள் போல முளைக்கின்றன. இதனால் இது போன்ற இணையதளங்களை இனி முற்றிலுமாக முடக்க முடியுமா? என்பது பெரிய கேள்வியாகவே எழுந்துள்ளது. ஆபாச வீடியோக்களை பொருத்த வரையில் ஒரு காலத்தில் அது மிகவும் ரகசியமான தாகவே இருந்து வந்தது.

    கேசட் மற்றும் சிடி வடிவில் இருந்து வந்த இந்த வீடியோக்கள் தற்போது நாம் பயன்படுத்தும் செல்போன்களில் நம் கண் முன்னே விரிந்து கிடக்கிறது. எனவே இன்றைய இளம் தலைமுறை மிகவும் உஷாராக இருக்க வேண்டும் என்றும் சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கிறார்கள். குறிப்பாக நாம் விளையாட்டுக்காக எடுக்கும் வீடியோக்கள் கடைசியில் வினையில் போய் முடிந்து விடும். எனவே எக்காரணம் கொண்டும் கவர்ச்சிகரமாகவோ ஆபாசமாகவோ இளம் பெண்கள் வீடியோக்களை பதிவு செய்யக் கூடாது என்பது போலீசாரின் தொடர் அறிவுரை யாகவே இருந்து வருகிறது.

    ஆனாலும் இன்றைய இளம் பெண்கள் அதனை பெரிதாக கண்டு கொள்வதில்லை. இணைய தளங்களில் உலா வரும் ஆபாச செல்பி வீடியோக்களே இதற்கு மிகப்பெரிய உதாரணமாக உள்ளன. தொழில் ரீதியாக தயாரிக்கப்படும் ஆபாச வீடியோக்களுடன் குடும்ப பெண்கள் இருக்கும் ஆபாச வீடியோக்களும் போட்டி போட்டுக் கொண்டு இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இந்த வீடியோக்களை பார்க்கும்போது இப்படியும் வீடியோக்கள் எடுக்க முடியுமா? என்று சைபர் கிரைம் போலீசார் வேதனையோடு பல்வேறு தகவல் களை தெரிவித்து உள்ளனர்.

    இது தொடர்பாக சைபர் கிரைம் உயர் அதிகாரி ஒரு வரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:- 


    இன்றைய காலகட்டங்களில் சமூக வலைத்தளங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. யூடியூப் சேனல்களும் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன இது போன்ற யூடியூப் சேனல்கள் வழியாகவே இளம் பெண்கள் தங்களை சினிமா ஹீரோ யினாக கருதிக் கொண்டு பல வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். அதே நேரத்தில் தாங்கள் மட்டுமே பார்த்து ரசிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் பல பெண்கள் எடுத்த அருவருக்கத்தக்க வீடியோக்களும் சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்து உள்ளன.

    இந்த வீடியோக்கள் எப்படி பரவுகிறது என்று பார்த்தால் அவர்களே அதற்கு காரணமாக இருந்திருப்பார்கள். ஆபாச வீடி யோக்கள் பதிவு செய்யப் பட்ட செல்போன்கள் பழுதாகும் நேரங்களில் அவைகளை எல்லாம் டெலிட் செய்து விட்டு பழுது நீக்குவதற்காக கடை களில் கொடுத்திருப்பார்கள்.. இதுபோன்ற நேரங்களில் பல கடைக்காரர்கள் ரெக்கவரி சாப்ட்வேர் போட்டு அதில் உள்ள ரகசியங்களை தெரிந்து கொள்வதிலேயே அதிக ஆர்வமாக இருப்பார்கள்.

    அப்படி ரெக்கவரி சாப்ட்வேர் மூலம் வெளியாகும் ஆபாச வீடியோக்களே இன்று அதிகமாக சமூக வலைத் தளங்களை ஆக்கிரமித்து உள்ளன. எனவே செல்போன் பழுதானால் அதனை தூக்கி வீசி எறிந்து விட்டு வேறு செல்போன்களை மாற்றி விடுவது நல்லது. இல்லையென்றால் அருவருக்கத்தக்க வகையிலான வீடியோக்களை செல்போன்களில் பதிவு செய்யாமல் இருப்பது நல்லது. இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

    உங்களது இளம் வயது மகன் அல்லது மகள் கைகளில் இருக்கும் செல்போன்கள் எப்போது வேண்டுமானாலும் ஆபத்தில் முடியலாம். உஷாராக இருங்கள்.

    • கல்லிடைக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேசிய ஊட்டச்சத்து மாத விழாவை முன்னிட்டு வளர் இளம் பெண்களுக்கான பயிற்சி நடைபெற்றது.
    • வளர் இளம்பெண்களான மாணவிகளுக்கு வரகு பாயாசம், சாமை புட்டு, கடலை மிட்டாய், எள்ளு மிட்டாய், பொரி மிட்டாய், சோள பணியாரம் போன்ற சத்தான உணவுகள் வழங்கப்பட்டது.

    கல்லிடைக்குறிச்சி:

    கல்லிடைக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேசிய ஊட்டச்சத்து மாத விழாவை முன்னிட்டு வளர் இளம் பெண்களுக்கான பயிற்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் இவாஞ்சலின் பால்ராஜ் தலைமை தாங்கினார். குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ஜாஸ்மின், யோகா மாஸ்டர் மாரியப்பன், கவுன்சிலர் பிரமாட்சி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தமிழாசிரியர் ஐசக் வெற்றி செல்வன் வரவேற்புரை ஆற்றினார். அம்பை தீயணைப்புப் படை நிலைய அலுவலர் பலவேசம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவிகளுக்கு ஆரோக்கியம், ஊட்டச்சத்து, உணவின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார்.

    நிகழ்ச்சியில் திட்ட அலுவலர்கள் காந்திமதி, ஜெஸி, சரஸ்வதி மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் வளர் இளம்பெண்களான மாணவிகளுக்கு வரகு பாயாசம், சாமை புட்டு, கடலை மிட்டாய், எள்ளு மிட்டாய், பொரி மிட்டாய், சோள பணியாரம் போன்ற சத்தான உணவுகள் வழங்கப்பட்டது.

    பொள்ளாச்சி சம்பவம் போல் பெரம்பலூரிலும் இளம்பெண்களை கொடுமைப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக ஆளுங்கட்சி பிரமுகர் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. #girlmolestation

    பெரம்பலூர்:

    பொள்ளாச்சியில் இளம்பெண்களை கொடுமைப்படுத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில், பெரம்பலூரிலும் இளம்பெண்களை கொடுமைப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக ஆளுங்கட்சி பிரமுகர் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இது தொடர்பாக பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி. திஷா மித்தலிடம் வக்கீல் அருள் என்பவர் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

    சமூக வலைதளங்களில் நண்பர்கள் போல் பழகி பொள்ளாச்சியில் பல பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளானது போல் பெரம்பலூரிலும் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது இணைய தளங்கள் மூலம் வந்த தகவலின் அடிப்படையில் தெரிய வருகிறது.

    மேலும் இந்த தகவலில் ஆளும் கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர், தன்னை நிருபர் என்று கூறிக்கொள்ளும் நபர்கள் ஆகியோர் குழுவாக இச்செயலில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது. அவர்களால் பல குடும்ப பெண்கள், கல்லூரி மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    ஆசை வார்த்தை கூறி அழைத்துச்சென்று இளம்பெண்களை தங்களின் காம இச்சைக்கு இணங்க வைப்பதோடு, அதனை வீடியோவாகவும் பதிவு செய்து, பாதிக்கப்பட்டவர்களிடம் அதனை வைத்து மிரட்டி பணம் பறிப்பது, மீண்டும் மீண்டும் பாலியல் இச்சைக்கு பணிய வைப்பது, தங்களிடம் அடி பணிய மறுக்கும் பெண்களின் வீடியோவை வெளியிடுவோம் என்றும், அதனை பார்க்கும் அவர்களது குடும்பத்தினர் அவமானத்தில் தற்கொலை செய்வார்கள் என பெண்களை மிரட்டி கொடுமைப்படுத்தி உள்ளனர்.

    தற்போது வரை சுமார் 20-க்கும் மேற்பட்ட பெண்கள் அந்த கும்பலிடம் சிக்கி வெளியே சொல்ல முடியாமல் தவித்து வருவதும் தெரிய வருகிறது. இந்த சம்பவங்கள் பெரம்பலூரில் உள்ள நட்சத்திர விடுதியில் வைத்து நடைபெறுவதாக தெரிய வருகிறது. இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.

    இது போன்ற சம்பவங்கள் மேலும் நடக்காமலும், பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல் மற்றும் கொலை மிரட்டல் போன்ற செயல்களில் ஈடுபட்ட நபர்கள் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பெண்களின் பாதுகாப்பு கருதி மாவட்ட எஸ்.பி. தாமாக முன்வந்து நடவடிக்கை எடுப்பதோடு, இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

    இது தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட எஸ்.பி. திஷாமித்தல், ஏ.டி. எஸ்.பி. ரெங்கராஜன் தலைமையில் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். தனிப்படையினர் வீடியோ காட்சி பதிவுகளை வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #girlmolestation

    திண்டுக்கல் அருகே பிளஸ்-2 மாணவிகள் உள்பட 4 இளம்பெண்கள் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    வடமதுரை:

    திண்டுக்கல் அருகே உள்ள சிலுவத்தூர் ஆலம்பட்டியைச் சேர்ந்த ஆறுமுகம் மகள் கரந்தி (வயது 16). செங்குறிச்சியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இவரை திருமணம் செய்யும் நோக்கத்தில் மாமரத்துப் பட்டியைச் சேர்ந்த ராமன் (22) தனது மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்றார். இது குறித்து அவரது தாய் மீனாட்சி வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    திண்டுக்கல் அருகே உள்ள சுக்காம்பட்டி பூசாரி பட்டியைச் சேர்ந்தவர் தீபா (18). பிளஸ்-2 மாணவி இவரை திருமணம் செய்யும் நோக்கத்தில் அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (20) என்பவர் கடத்திச் சென்றுள்ளார்.

    அய்யலூர் அருகே உள்ள சம்பக்காட்டு பள்ளம் பகுதியைச் சேர்ந்த பழனி மகள் மஞ்சுளா (21). இவரை செங்குறிச்சி மாமரத்துப் பட்டியைச் சேர்ந்த சவுந்தரம் (24) என்பவர் கடத்திச் சென்றார்.

    அய்யலூர் அருகே உள்ள பூசாரிபட்டியைச் சேர்ந்தவர் தேக்கமலை (20). இவர் ஆட்டோ டிரைவராக உள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த பழனியாண்டி மகள் காயத்திரி (19) என்பவரை கடத்திச் சென்றார். இது குறித்து அவர்களது பெற்றோர்கள் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் வடமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வடமதுரை மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள காதல் ஜோடிகள் மாயமாவதும் வெளியூரில் திருமணம் செய்து கொண்டு பின்னர் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. தற்போது முகூர்த்த நாள் இன்று வருவதை மனதில் வைத்து நேற்றே 4 பெண்கள் கடத்தப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இவர்கள் திருமணம் செய்து கொண்டு போலீசில் விரைவில் தஞ்சமடைவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஒரே நாளில் மாணவிகள் உள்பட 4 இளம்பெண்கள் கடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews
    ×