search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இளம்பெண்கள் மாயம்
    X

    இளம்பெண்கள் மாயம்

    • கல்லூரி மாணவிகள் உள்பட 3 இளம்பெண்கள் மாயமாகி விட்டனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் அருகே உள்ள அரசப்பட்டியை சேர்ந்தவர் காளியப்பன். இவரது 17 வயது மகள் விருதுநகரில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதுகுறித்து நத்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் காளியப்பன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருத்தங்கல் எஸ்.என்.புரம் ரோடு பகுதியை சேர்ந்தவர் கலையரசி. இவர் கணவரை பிரிந்து மகள் சுவேதா என்ற சுந்தரேஸ்வரியுடன்(20) வசித்து வருகிறார். சுந்தரேஸ்வரி சிவகாசி அரசு கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை.

    எங்கு சென்றார் என தெரியவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் மகளை கண்டுபிடித்து தருமாறு திருத்தங்கல் போலீஸ் நிலையத்தில் கலையரசி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காரியாபட்டி அருகே உள்ள நாசர் புளியங்கு ளத்தை சேர்ந்தவர் வீர பாண்டி. இவரது மகள் பேச்சி(21). என்ஜினீயரிங் படித்துவிட்டு வீட்டில் இருந்தார். இந்த நிலையில் ஆதித்தநேந்தலில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். அங்கிருந்தவர் திடீரென மாயமானார். எங்கு சென்றார் என தெரியவில்லை.

    இதுகுறித்து நரிக்குடி போலீஸ் நிலையத்தில் வீரபாண்டி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×