search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kidnap"

    • பள்ளி மாணவர்களை மீட்கும் முயற்சியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர்.
    • மாணவர்களை திருப்பி அனுப்புவதற்கு கடத்தல்காரர்கள் பெரிய தொகையை கேட்டதாக உறவினர்கள் கூறினர்.

    வடமேற்கு மற்றும் வட-மத்திய நைஜீரியாவில் மக்களை குறிவைப்பது, கிராமங்களை கொள்ளையடிப்பது மற்றும் பணத்திற்காக வெகுஜன மக்கள் கடத்தல்களை மேற்கொள்வது வழக்கம்.

    இந்நிலையில், நைஜீரியாவின் வடமேற்கு பகுதியில் இந்த மாத தொடக்கத்தில் நடந்த கடத்தலில் துப்பாக்கி ஏந்தியவர்களால் கடத்தப்பட்ட 250க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

    கடந்த மார்ச் 7ம் தேதி அன்று கடுனா மாநிலத்தின் குரிகாவில் நடந்த கடத்தல் சம்பவம், கடந்த ஆண்டுகளில் நடந்த மிகப்பெரிய தாக்குதல்களில் ஒன்றாகும். பள்ளி மாணவர்களை மீட்கும் முயற்சியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர். கடத்தப்பட்ட மாணவர்கள் அடர்ந்த காட்டுப்பகுதியில் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியானது.

    இதுகுறித்து கடுனா மாநில ஆளுநர் உபா சானி வெளியிட்டுள்ள அறிக்கையில்"கடத்தப்பட்ட குரிகா பள்ளி குழந்தைகள் காயமின்றி விடுவிக்கப்படுகிறார்கள். கரிஜா நகரில் இருந்து கடத்தப்பட்ட 250 மாணவர்கள் விடுவிக்கப்பட்டதாகவும், மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் இன்றி விடுதலை செய்வதற்காக நடவடிக்கை மேற்கொண்ட நைஜீரிய அதிபருக்கு நன்றி" கூறினார்.

    மேலும், மாணவர்களை திருப்பி அனுப்புவதற்கு கடத்தல்காரர்கள் பெரிய தொகையை கேட்டதாக உறவினர்கள் கூறினர். ஆனால் ஜனாதிபதி டினுபு பணம் செலுத்த வேண்டாம் என்று பாதுகாப்பு படையினருக்கு உத்தரவிட்டதாக கூறினார்.

    • தனிப்படை போலீசார் சரவண வேலனை கடத்தி சென்ற மர்மநபர்கள் யார், எதற்காக கடத்தினார்கள் என்று விசாரணை நடத்தினர்.
    • கைதான சரவணபாண்டியனின் சொந்த ஊர் மதுரை திருப்பரங்குன்றம். கோவை தெலுங்குபாளையத்தில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் மெட்டராத்தி பகுதியை சேர்ந்தவர் சின்னச்சாமி (வயது 44). திருமணமாகாத இவருக்கு அவரது உறவினர்கள் பெண் பார்த்து வந்தனர். இந்தநிலையில் சின்னச்சாமிக்கும், பல்லடத்தை சேர்ந்த சரவண வேலன்(37) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அப்போது சரவண வேலன், நான் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறேன். எனக்கு சொந்தக்கார பெண்கள் நிறைய பேர் உள்ளனர்.

    எனவே அவர்களில் யாரையாவது பார்த்து உங்களுக்கு திருமணம் செய்து வைக்கிறேன் என தெரிவித்துள்ளார். இதை நம்பிய சின்னச்சாமி, சரவண வேலனுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்துள்ளார்.

    நேற்று முன்தினம் சின்னச்சாமியை தொடர்பு கொண்ட சரவணவேலன் என்னிடம் திருமணத்திற்கான பெண்களின் புகைப்படங்கள் உள்ளது. அதனை நீங்கள் பார்த்து தேர்வு செய்து கொள்ளுங்கள். பிடித்தால் உடனே திருமணத்தை நடத்தி விடலாம் என தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து சின்னச்சாமி அவரது சொந்த ஊரான குடிமங்கலத்திற்கு வருமாறு சரவண வேலனை அழைக்கவே, அவர் அங்கு சென்றுள்ளார். அவருக்காக சின்னச்சாமி குடிமங்கலத்தில் உள்ள விடுதியில் அறையும் எடுத்து கொடுத்தார்.

    அங்கு வைத்து இருவரும் பெண்ணின் புகைப்படங்களை பார்த்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை விடுதி அறையில் தங்கியுள்ளனர்.

    பின்னர் நேற்று காலை சின்னச்சாமி பணத்தம்பட்டியில் உள்ள அவரது தோட்டத்திற்கு சரவண வேலனை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றுள்ளார்.

    சிறிது தூரம் செல்லும் போது திடீரென அங்கு காரில் வந்த 3பேர் கும்பல், மோட்டார் சைக்கிளை மறித்ததுடன் சரவண வேலனை அலாக்காக தூக்கி காரில் போட்டு கடத்தி சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த சின்னச்சாமி, காரை பின்தொடர்ந்து துரத்தியுள்ளார். அப்போது 3பேரும் மோட்டார் சைக்கிளை இடித்து தள்ளி விட்டு காரில் தப்பிச்சென்றனர்.

    உடனே இது குறித்து சின்னச்சாமி குடிமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். திருப்பூர் மாவட்ட எஸ்.பி., அபிஷேக் குப்தா (பொறுப்பு) உத்தரவின் பேரில் உடுமலை டி.எஸ்.பி., சுகுமாறன் மேற்பார்வையில், குடிமங்கலம் இன்ஸ்பெக்டர் ரோஸ்லின், சப்-இன்ஸ்பெக்டர் பஞ்சலிங்கம் மற்றும் போலீஸ்காரர்கள் முத்துமாணிக்கம், லிங்கேஸ்வரன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படை போலீசார் சரவண வேலனை கடத்தி சென்ற மர்மநபர்கள் யார், எதற்காக கடத்தினார்கள் என்று விசாரணை நடத்தினர்.

    காரின் நம்பரை வைத்து விசாரணை நடத்தும் போது 3பேரும் கோவை தெலுங்கு பாளையத்தை சேர்ந்த சரவண பாண்டியன் (வயது 28), முத்துசெல்வம் (27), ரித்திக் (20) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து 3பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் சரவண வேலனை கடத்தி சென்று கொலை செய்திருப்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்திய போது சரவண வேலன் கொலைக்கான காரணம் குறித்து பரபரப்பு தகவல் கிடைத்தது.

    கைதான சரவணபாண்டியனின் சொந்த ஊர் மதுரை திருப்பரங்குன்றம். கோவை தெலுங்குபாளையத்தில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.

    இந்தநிலையில் சரவணபாண்டியனுக்கும், சரவண வேலனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அப்போது சரவணவேலன் தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் என்றும், எனக்கு கேரளா செல்ல வாடகைக்கு கார் வேண்டும் என்று கேட்டுள்ளார். உடனே சரவண பாண்டியன் கார் ஒன்றை வாடகைக்கு கொடுத்துள்ளார். அதனை வாங்கி சென்ற சரவண வேலன், செல்லாத ரூ.2ஆயிரம் நோட்டுக்களை மாற்றுவதற்காக கேரளா சென்றுள்ளார். அப்போது முறைகேடுகளில் ஈடுபட்டதாக கேரள போலீசார் சரவண வேலனை கைது செய்ததுடன், காரையும் பறிமுதல் செய்தனர். அதன்பிறகே சரவண வேலன் போலீஸ் இன்ஸ்பெக்டர் என ஏமாற்றி காரை வாடகைக்கு எடுத்து சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து சரவண பாண்டியன் ரூ.3 லட்சம் வரை பணம் செலுத்தி கேரளாவில் இருந்து காரை மீட்டு வந்துள்ளார். இந்த நிலையில் சிறையில் இருந்து வெளியே வந்த சரவண வேலனிடம் பணத்தை திருப்பி தருமாறு சரவண பாண்டியன் கேட்டு வந்துள்ளார். ஆனால் அவர் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். நேற்று குடிமங்கலத்தில் இருப்பதை அறிந்த சரவண பாண்டியன் தன்னிடம் டிரைவர்களாக பணியாற்றும் முத்து செல்வம் , ரித்திக் ஆகியோரை அழைத்து கொண்டு குடிமங்கலம் சென்றதுடன் அங்கு வைத்து சரவணவேலனை காரில் கடத்தி கோவைக்கு சென்றுள்ளார். அப்போது சரவணவேலன் சத்தம் போடவே அவரது வாயை பொத்தியுள்ளனர். இதில் அவர் மூச்சுதிணறி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இதனால் என்னசெய்வதென்று தெரியாமல் திகைத்த 3பேரும், கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றுள்ளனர். அங்கு சரவண வேலன் மூச்சுத்திணறி இறந்துள்ளதாக டாக்டர்களிடம் தெரிவித்துள்ளனர். ஆனால் போலீசார் விசாரணையில் 3பேரும் சிக்கிக்கொண்டனர்.

    கொலை செய்யப்பட்ட சரவண வேலன் இது போல் பலரிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் என ஏமாற்றி பணம் பறித்துள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாக சரவணவேலனை அவரது மனைவி பிரிந்து சென்றதுடன் வேறு திருமணம் செய்துள்ளார். சின்னச்சாமியிடம் திருமணத்திற்கு பெண் பார்த்து தருவதாக கூறி ரூ.1.50 வரை பணம் பறித்துள்ளார். போலீஸ் இன்ஸ்பெக்டர் என ஏமாற்றி பணம் பறித்த நபர் காரில் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மாலினியும், கண்ணனும் ஒரே நூற்பாலையில் வேலை பார்த்தனர்.
    • புதுப்பெண்ணை காரில் கடத்தி சென்றதாக கண்ணன் போலீசில் புகார் செய்தார்.

    நெல்லை:

    நாங்குநேரி அருகே உள்ள சென்னிமலை கிராமத்தை சேர்ந்தவர் சுடலைக்கண்ணு. இவரது மகன் கண்ணன் (வயது 21). களக்காட்டை அடுத்த திருக்குறுங்குடி அருகே உள்ள மலையடி புதூர் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மகள் மாலினி (20). இவரும், கண்ணனும் ஒரே நூற்பாலையில் வேலை பார்த்தனர்.

    காதல் திருமணம்

    அப்போது இருவரும் காதலிக்க தொடங்கிய நிலையில் பெற்றோர் எதிர்ப்பையும் ஏறி கடந்த 3-ந் தேதி வேளாங்கண்ணியில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.

    இந்நிலையில் மாலினியின் தாயார் செல்வராணி நேற்று முன் தினம் அவர்கள் 2 பேரையும் சமாதானம் செய்து நெல்லைக்கு அழைத்து வந்தபோது 2 காரில் வந்த கும்பல் அந்த புதுப் பெண்ணை காரில் கடத்தி சென்றதாக கண்ணன் முன்னீர்பள்ளம் போலீசில் புகார் செய்தார்.

    2 பேரிடம் விசாரணை

    அதன் பேரில் போலீசார் கடத்தல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இது தொடர்பாக போலீசார் தரப்பில் கூறும் போது, மாலினியை கடத்தி சென்று விட்டதாக கண்ணன் அளித்த புகாரில் விசாரணை நடத்தினோம். அப்போது மாலினியை அவரது உறவினர்கள் காரில் அழைத்துச் சென்றது தெரிய வந்தது.

    இது தொடர்பாக அவரது உறவினர்கள் 2 பேரை பிடித்து விசாரித்து வருகிறோம். ஆனால் தற்போது மாலினி தன்னை யாரும் கடத்த வில்லை என்றும், தனக்கு திருமணமாகவில்லை என்றும் முரண்பாடான கருத்துக்களை கூறி வருகிறார்.

    இதனால் வழக்கில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர்.

    • மணப்பாறையில் சிறுமியை கடத்த முயன்ற மர்ம நபரால் பரபரப்பு ஏற்பட்டது
    • முகமூடி அணிந்திருந்த மர்ம நபர் திடீரென சிறுமியை பிடித்து கடத்த முயன்றதாக கூறப்படுகிறது

    மணப்பாறை,

    மணப்பாறை பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமி ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறாள். இவள் நேற்று வீட்டின் அருகே இருந்தபோது அங்கு வந்த முகமூடி அணிந்திருந்த மர்ம நபர் திடீரென சிறுமியை பிடித்து கடத்த முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அந்த சிறுமி கூச்சலிடவே குடும்பத்தினர் மற்றும் அக்கம், பக்கத்தினர் திரண்டனர். இதையடுத்து மர்ம நபர் சிறுமியை விட்டு விட்டு தான் வந்த மொபட்டில் தப்பிச்சென்றார். இது பற்றி தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் சம்பவத்தில் ஈடுபட்ட நபர் யார்? சிறுமியை எதற்காக கடத்த முயன்றார்? என்பது குறித்தும், அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் ஏதேனும் காட்சிகள் பதிவாகி உள்ளதா? என்பதை பார்வையிட்டும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முனியப்பன் தனது கூட்டாளிகளுடன் ஆயுதங்களுடன் வீடு புகுந்து இளம்பெண்ணை கடத்த முயற்சி செய்தனர்.
    • தப்பியோடிய முக்கிய குற்றவாளியான முனியப்பனை வலை வீசி தேடி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அருகே திருக்கனூரை அடுத்துள்ள லிங்காரெட்டி பாளையத்தைச் சேர்ந்த ஒரு வாலிபருக்கும், தமிழக பகுதியான கரசானூர் கிராமத்தை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் ஒரு மாதத்துக்கு முன் திருமணம் நடந்தது. அவர்கள் லிங்கா ரெட்டிபாளையத்தில் வசித்து வருகின்றனர்.

    இந்நிலையில் அந்த இளம்பெண்ணை, புதுச்சேரி லாஸ்பேட்டையை சேர்ந்த முனியப்பன் என்ற தினேஷ் என்பவர் ஒருதலையாய் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

    திருமணத்திற்கு பிறகும் அந்த இளம்பெண்ணை தன்னுடன் வந்து விடுமாறு முனியப்பன் தொந்தரவு செய்து வந்துள்ளார். ஆனால் அதற்கு அந்த இளம்பெண் மறுப்பு தெரிவித்து தனது கணவருடன் தான் வாழ்வேன் என உறுதிபட கூறியதாக தெரிகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த முனியப்பன் தனது நண்பர்களான லாஸ்பேட்டையை சேர்ந்த இளஞ்செழியன், அதே பகுதியை சேர்ந்த இளவரசன், ராகுல், அசோக், அய்யப்பன் ஆகியோரை சேர்த்துக்கொண்டு ஆயுதங்களுடன் நேற்று இரவு 7 மணி அளவில் லிங்கா ரெட்டிபாளையம் வந்தார்.

    பின்னர் முனியப்பன் தனது கூட்டாளிகளுடன் ஆயுதங்களுடன் வீடு புகுந்து அந்த இளம்பெண்ணை கடத்த முயற்சி செய்தனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதை அறிந்த அவர்கள் அங்கிருந்து காரில் தப்பி சென்றனர்.

    இதுகுறித்து பொதுமக்கள் காட்டேரிக்குப்பம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

    இதற்கிடையே அந்த இந்த கார் காட்டேரிக்குப்பம் வழியாக சென்ற போது போலீசாரும், பொதுமக்களுடன் இணைந்து காரை வழிமறித்தனர். அப்போது முனியப்பன் தப்பியோடி விட்டார்.

    மேலும் காரில் இருந்து இளஞ்செழியன் உள்பட 5 பேரை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கார், 4 அரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தப்பியோடிய முக்கிய குற்றவாளியான முனியப்பனை வலை வீசி தேடி வருகின்றனர்.

    ஆயுதங்களுடன் வீடு புகுந்து புதுப்பெண்ணை கடத்த முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சீனிவாசன், தனது நண்பர்கள் உதவியுடன் கதிரவனை கடத்த திட்டமிட்டுள்ளார்.
    • அனுப்பர்பாளையம் போலீசார் அவினாசிக்கு விரைந்து சென்று கதிரவனை மீட்டு, அவரை கடத்திய 3 பேரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் காளம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கதிரவன் (வயது 41). பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். மேலும் இவர், சீனிவாசன் என்பவரிடம் மொத்தமாக அரிசி கொள்முதல் செய்து வியாபாரமும் செய்து வருகிறார்.

    இந்நிலையில் அரிசி வியாபாரம் செய்த வகையில் பணம் ரூ.17 லட்சத்தை கதிரவன் பல நாட்களாக சீனிவாசனுக்கு கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து சீனிவாசன், தனது நண்பர்கள் உதவியுடன் கதிரவனை கடத்த திட்டமிட்டுள்ளார்.

    அதன்படி கடந்த 4-ந்தேதி இரவு கதிரவன், திருப்பூர் அவினாசி ரோடு காந்திநகர் அருகே உள்ள ஈ.பி.காலனி விநாயகர் கோவில்பக்கம் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது காரில் காத்திருந்த கடத்தல் கும்பல் கதிரவனை மடக்கி பிடித்து காரில் ஏற்றி கடத்தி சென்றதாக தெரிகிறது. அப்போது காரில் செல்லும் போது சத்தமிட்டால் உன்னை கொலை செய்து விடுவோம் என்று கதிரவனை மிரட்டி உள்ளனர். பின்னர் அவர்கள் கதிரவனை உடுமலை செல்லும் வழியில் ஜல்லிப்பட்டி என்ற ஊரில் ஒரு வீட்டில் அடைத்து வைத்தனர்.

    இந்நிலையில் கடத்தல் கும்பலிடம், கதிரவன் எனக்கு அவினாசியை சேர்ந்த ஒருவர் பணம் தருவதாக கூறி உள்ளார். அவரிடம் சென்றால் பணம் வாங்கி கொள்ளலாம் என்று கூறி உள்ளார். இதனை அப்படியே நம்பிய கடத்தல் கும்பல், கதிரவனை அவினாசிக்கு அழைத்து செல்ல முடிவு செய்து, அதன்படி அவினாசி வந்தனர். அங்கு ஒரு டீக்கடையில் அமர்ந்து இருக்கும்போது ஒரு போலீஸ்காரர் டீக்கடைக்கு வந்துள்ளார். உடனே கதிரவன், அவரிடம் தன்னை ஒரு கடத்தல் கும்பல் கடத்தி வந்ததாகவும், தன்னை அவர்களிடம் இருந்து காப்பாற்றுமாறும் கேட்டுள்ளார்.

    இதையடுத்து அந்த போலீஸ்காரர் அந்த கும்பலை சேர்ந்த 3 பேரையும் அங்கேயே மடக்கி பிடித்தார். தொடர்ந்து அவினாசி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சம்பவம் நடந்தது காந்திநகர் என்பதால் அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

    அதன்படி அனுப்பர்பாளையம் போலீசார் அவினாசிக்கு விரைந்து சென்று கதிரவனை மீட்டு, அவரை கடத்திய 3 பேரிடமும் விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர்கள் திருப்பூரை சேர்ந்த கோபிநாத் ( 41) , பிரவீன் ( 26), சதீஸ் ( 24) என தெரியவந்தது. இதையடுத்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். மேலும் சீனிவாசன் உள்ளிட்ட கடத்தல் கும்பலை, போலீசார் தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வாலிபர் சிறுமியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அவரை கடத்தி சென்றார்.
    • சிறுமியின் தாய் தனது மகளை கண்டுபிடித்து தரும்படி மேட்டுப்பாளையம் போலீசில் புகார் அளித்தார்.

    கோவை,

    அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் 45 வயது பெண். இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அவரது 14 வயது மகளுடன் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்துக்கு வந்தார்.

    பின்னர் அவர் குரும்பனூரில் தங்கி இருந்து பாக்கு உறிக்கும் வேலை செய்து வந்தார்.

    இந்தநிலையில் 14 வயது சிறுமிக்கு அதே பகுதியை சேர்ந்த 20 வயது வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    இந்த பழக்கம் நாளடை வில் காதலாக மாறியது.சம்பவத்தன்று சிறுமி அந்த பகுதியில் உள்ள மளிகை கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக சென்றார்.

    அப்போது அங்கு வந்த வாலிபர் சிறுமியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அவரை கடத்தி சென்றார். நீண்ட நேரம் ஆகியும் கடைக்கு சென்ற மகள் திரும்பி வராததால் அவரை அவரது தாய் அக்கம் பக்கத்தில் தேடினார். ஆனால் சிறுமியை கண்டு பிடிக்க முடியவில்லை.

    இது குறித்து சிறுமியின் தாய் தனது மகளை கண்டுபிடித்து தரும்படி மேட்டுப்பாளையம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது 14 வயது சிறுமியை வாலிபர் கடத்தி சென்றது தெரிய வந்தது. தற்போது போலீசார் சிறுமியை கடத்தி சென்ற வாலிபரை தேடி வருகின்றனர்.

    • கல்லூரி மாணவியை வாலிபர் கடத்தி சென்றதாக பெற்றோர் போலீசாரிடம் புகார்
    • 17 வயது கல்லூரி மாணவியை வாலிபரிடம் இருந்து மீட்ட போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் கேட் பகுதியை சேர்ந்தவர் நல்லுசாமி. இவரது மகன் விக்னேஷ் (வயது 27). இவர் விஜயகோபாலபுரத்தில் உள்ள ஒரு தனியார் டயர் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் இவர், 17 வயதுடைய கல்லூரி மாணவியை காதலித்து வந்ததாகவும், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆசை வார்த்தை கூறி அந்த மாணவியை கடத்தி சென்றதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக அந்த மாணவியின் தாய் பாடாலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேசையும், மாணவியையும் மீட்டு அழைத்து வந்தனர். பின்னர் விக்னேசை போலீசார் கைது செய்து, பெரம்பலூர் கிளை சிறையில் அடைத்தனர். மாணவி காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

    • முசிறியில் வட்டி பணம் கேட்டு டிரைவரை கடத்தி இரண்டு தினங்களாக சித்திரவதை செய்யப்பட்டு உள்ளது
    • போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டதை அறிந்ததும் சகோதரர்கள் தலை மறைவு

    முசிறி,

    திருச்சி மாவட்டம் முசிறி சுண்ணாம்புக்கார தெருவில் வசிக்கும் ராஜசேகர் மகன் கண்ணன்(வயது 36). ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவர் கள்ளத்தெருவில் வசிக்கும் நாராயணன் மகன்கள் ராஜபாண்டி (44), ஸ்ரீராம் (35) ஆகியோரிடம் வட்டிக்கு ரூ.30 ஆயிரம் பணம் வாங்கி உள்ளார். அதற்கான வட்டி தொகை என தொடர்ந்து கட்டி வந்த நபர் தற்போது மூன்று மாதமாக வட்டி பணம் செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் கண்ணன் மீது உள்ள ஒரு வழக்கு சம்பந்தமாக முசிறி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜராகி வெளியில் வரும் பொழுது ஸ்ரீராம் என்பவர் கண்ணனை அழைத்து சென்று தனது வீட்டில் அடைத்து வைத்து, ராஜபாண்டியுடன் சேர்ந்து அடித்து துன்புறுத்தி சித்திரவதை செய்து வந்துள்ளனர். மேலும் ராஜபாண்டி அவரது நண்பர்களை ஆந்திராவில் உள்ள சட்டக் கல்லூரியில் அட்மிஷன் காக செல்லும்போது கண்ணனையும் காரில் அழைத்துச் சென்று துன்புறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளார். கண்ணன் மனைவி தங்கவல்லி மற்றும் இவர்களது குழந்தை லிகிஸ்(8), தர்ஷன்(7) ஆகிய மூவரையும் ஸ்ரீராம் வீட்டிற்குள் அடைத்து பூட்டி சென்றுள்ளார். குழந்தைகள் கூச்சல் இட்டு கத்திய பொழுது அருகில் குடியிருந்தவர்கள் வீட்டின் பூட்டை உடைத்து வெளியே அழைத்து வந்துள்ளனர். இதுகுறித்து தங்கவள்ளி முசிறி காவல் நிலையத்தில் சென்று புகார் அளித்தார். தங்கள் மீது புகார் செய்யப்பட்டதை அறிந்து கண்ணனை, ராஜபாண்டியும், ஸ்ரீராமும் விடுவித்துள்ளனர். உடல்நிலை பாதிக்கப்பட்ட கண்ணன், முசிறி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித் து கொடுக்கப்பட்ட புகாரின் பேரில், காவல் உதவி ஆய்வாளர் கார்த்திக், ஆள்கடத்தல், அடித்து துன்புறுத்துதல் போன்ற பிரிவின் கீழ் வழக்குகள் பதிவு செய்து, தலைமறைவாக இருக்கும் ராஜபாண்டி, ஸ்ரீராம் ஆகிய இருவரையும்தேடி வருகிறார். 

    • மணப்பாறை அருகே ஆடு மேய்க்க சென்ற இளம் பெண் கடத்தப்பட்டார்
    • வழக்கு பதிந்து போலீசார் தேடி வருகின்றனர்

    திருச்சி,

    திருச்சி மருங்காபுரி மாளிகப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் செல்லையா. இவரது மகள் சிவரஞ்சனி (வயது 21).பள்ளிப்படிப்பை முடி த்துள்ள இவர் பெற்றோ ருக்கு உறுதுணையாக இரு ந்து வந்தார். நேற்று வழக்க ம்போல் வீட்டின் அருகாமை யில் ஆடு மேய்க்க சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.இதனால் அதிர்ச்சடைந்த அவரது தாயார் சரோஜா வளநாடு போலீசில் புகார் செய்தார். அப்போது சிவர ஞ்சனிக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து வந் தது தெரிய வந்தது.இதற்கிடையே அதே பகுதியைச் சேர்ந்த மணி வேல் என்பவரை அவர் காதலித்து வந்ததாக தெரிகிறது. இதனால் அந்த வாலிபர் சிவரஞ்சினியை கடத்திச் சென்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.அந்த அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஸ்ரீனிவாசன் உறவினர்கள் ரூ.10 லட்சம் தருவதாக கடத்தல் கும்பலிடம் தெரிவித்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து கடத்தல் கும்பலை தேடி வந்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன். ரியல் எஸ்டேட் அதிபர். இவரது மனைவி லட்சுமி.

    உள்ளூரில் உள்ள ரவுடிகள் ஸ்ரீனிவாசனிடம் அடிக்கடி லட்சக்கணக்கில் பணத்தைக் கேட்டு மிரட்டி வந்தனர்.

    இதனால் விரத்தி அடைந்த ஸ்ரீனிவாசன் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அன்னவரம் போலீஸ் நிலையம் பகுதியில் தனியாக வீடு வாங்கி குடியேறினார். இருப்பினும் ரவுடிகள் அடிக்கடி வந்து பணத்தைக் கேட்டு தொல்லை கொடுத்தனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் ஸ்ரீனிவாசன் வீட்டிற்குள் 5 பேர் கொண்ட கும்பல் புகுந்தனர். ஸ்ரீனிவாசன் மற்றும் அவரது மனைவியை காரில் கடத்திச் சென்றனர். மறைவான இடத்தில் அடைத்து வைத்தனர்.

    பின்னர் ஸ்ரீனிவாசன் உறவினர்களுக்கு போன் செய்த கடத்தல் கும்பல் ரூ.60 லட்சம் பணத்தை கொடுத்தால் கணவன், மனைவி இருவரையும் விடுவிப்போம், போலீசுக்கு சென்றால் அவர்களை கொலை செய்து விடுவதாகவும் போனில் தெரிவித்தனர்.

    ஸ்ரீனிவாசன் உறவினர்கள் ரூ.10 லட்சம் தருவதாக கடத்தல் கும்பலிடம் தெரிவித்தனர். ஆனால் கடத்தல் கும்பல் ரூ.60 லட்சம் கொடுத்தால் மட்டுமே இருவரையும் விடுவிக்க முடியும் என தெரிவித்தனர்.

    இதை அடுத்து ஸ்ரீனிவாசன் உறவினர்கள் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து கடத்தல் கும்பலை தேடி வந்தனர்.

    மேலும் கடத்தல்காரர்கள் ஸ்ரீனிவாசனின் உறவினர்களிடம் பேசிய செல்போன் எண்ணை ஆய்வு செய்தபோது கடத்தல் கும்பல் உள்ளூரிலேயே இருப்பது தெரிய வந்தது.

    நேற்று மாலை அன்னவரம் கட்டிப்புடி சந்திப்பில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது காரில் வந்த கடத்தல் கும்பல் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து தம்பதி மீட்கப்பட்டனர்.

    விஜயவாடாவை சேர்ந்த 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 15 வயது சிறுமி நாங்குநேரி அருகே உள்ள மில்லில் வேலை பார்த்து வந்தார்.
    • சிறுமியின் பெற்றோர் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி நாங்குநேரி அருகே உள்ள மில்லில் வேலை பார்த்து வந்தார். இவரும், மறுகால்குறிச்சியை சேர்ந்த மாடசாமி என்பரது மகன் மெக்கானிக்கான செல்வம்(வயது 23) என்பவரும் கடந்த 2 மாதங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த 25-ந்தேதி வழக்கம்போல் சிறுமி மில்லுக்கு வேலை செல்வதாக கூறிவிட்டு சென்றவர் அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். அப்போது சிறுமியை செல்வம் கடத்தி சென்றது தெரியவந்தது.

    இதுபற்றி சிறுமியின் பெற்றோர் நாங்குநேரி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து போலீசார் கடத்தல் வழக்குப்பதிவு செய்து செல்வத்தை தேடி வந்த நிலையில் அவரை கைது செய்தனர். மேலும் கடத்தப்பட்ட சிறுமியையும் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

    ×