search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தனியார் மருத்துவமனை நர்ஸ் கடத்தல்?
    X

    தனியார் மருத்துவமனை நர்ஸ் கடத்தல்?

    • மாயமான தனியார் மருத்துவமனை நர்ஸ் கடத்தப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை
    • காதலன் கடத்தியிருக்க கூடும் என்று சந்தேகம்

    திருச்சி,

    திருச்சி காட்டூர் பாத்திமாபுரம் 4-வது தெரு பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் மஜீத்.இவரது மகள் ரம்ஜான் பேகம் (வயது 19). இவர் அரியமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் காலையில் வழக்கம் போல் மருத்துவமனைக்கு புறப்பட்டுச் சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதற்கிடையே மருத்துவமனை வட்டாரத்தில் விசாரித்த போது வேலைக்கு வரவில்லை என நிர்வாகத்தினர் கூறினர். இதைத்தொடர்ந்து அவரது உறவினர்கள் ரம்ஜான் பேகத்தை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை. பின்னர் அக்கம் பக்கத்தில் விசாரித்த போது, ரம்ஜான் பேகம் காதல் வலையில் விழுந்தது தெரிய வந்தது. அந்த அடிப்படையில்அவரை காட்டூர் அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த தினேஷ் என்ற வாலிபர் கடத்திச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அதன் பேரில் திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×