என் மலர்
உள்ளூர் செய்திகள்

களக்காடு அருகே சிறுமியை கடத்திய மெக்கானிக் கைது
- 15 வயது சிறுமி நாங்குநேரி அருகே உள்ள மில்லில் வேலை பார்த்து வந்தார்.
- சிறுமியின் பெற்றோர் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி நாங்குநேரி அருகே உள்ள மில்லில் வேலை பார்த்து வந்தார். இவரும், மறுகால்குறிச்சியை சேர்ந்த மாடசாமி என்பரது மகன் மெக்கானிக்கான செல்வம்(வயது 23) என்பவரும் கடந்த 2 மாதங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 25-ந்தேதி வழக்கம்போல் சிறுமி மில்லுக்கு வேலை செல்வதாக கூறிவிட்டு சென்றவர் அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். அப்போது சிறுமியை செல்வம் கடத்தி சென்றது தெரியவந்தது.
இதுபற்றி சிறுமியின் பெற்றோர் நாங்குநேரி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து போலீசார் கடத்தல் வழக்குப்பதிவு செய்து செல்வத்தை தேடி வந்த நிலையில் அவரை கைது செய்தனர். மேலும் கடத்தப்பட்ட சிறுமியையும் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.






