search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "gutkha"

    • உலக சாதனைக்காக நடத்தப்பட்ட விழாவில் 2,222 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது.
    • திருமணம் முடிந்ததும் மணமக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பினர்.

    ராஜஸ்தான் மாநிலத்தின் பராம் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கும் விழா கடந்த 26-ந்தேதி நடந்தது.

    உலக சாதனைக்காக நடத்தப்பட்ட இந்த விழாவில் 2,222 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. திருமணம் முடிந்ததும் மணமக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பினர். அப்போது ஒரு மணப்பெண் தனது கணவர் பையில் மறைத்து வைத்திருந்த குட்காவை எடுத்து வாயில் போட்டுக்கொண்டார். யாரும் பார்க்கவில்லை என அந்த மணப்பெண் நினைத்துள்ளார்.

    ஆனால் விழாவை பதிவு செய்த கேமிராவில் இந்த காட்சி பதிவானது. மணக்கோலத்தில் புதுப்பெண் குட்கா போடும் காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    • போலீசார் புகையிலை பொருட்களை பஸ்சில் கடத்தி சென்ற மோகன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
    • பயணி போல் நடித்து குட்கா பொருட்களை கடத்தி சென்ற விவகாரம் பயணிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

    தருமபுரி:

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து கோவைக்கு நேற்று தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் விரைவு பஸ் ஒன்று புறப்பட்டது. அந்த பஸ் தருமபுரி மாவட்டம் தொப்பூர் அருகே வந்தபோது பாளையம் புதூரில் தருமபுரி போக்குவரத்து துறை டிக்கெட் பரிசோதகர் சண்முகம் என்பவர் திடீரென்று வண்டியில் ஏறி பயணிகளிடம் டிக்கெட் கேட்டு சோதனையில் ஈடுபட்டார்.

    அப்போது வண்டியில் திடீரென்று புகையிலை வாசனை வந்தது. உடனே பஸ்சில் இருந்த பயணிகளின் பைகளை அவர் சோதனையிட்டார். அதில் ஒரு பையில் சுமார் 20 கிலோ தடைசெய்யப்பட்ட ஹான்ஸ், பான்மசாலா போன்ற அரசு தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பதும், அந்த பையை கோவை செல்லப்பகவுண்டன் புதூரைச் சேர்ந்த மோகன் (வயது32) என்பவர் பெங்களூருவில்இருந்து கொண்டு வந்ததும் தெரியவந்தது. உடனே அவரை கையும்களவுமாக சண்முகம் பிடித்து தொப்பூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

    போலீசார் புகையிலை பொருட்களை பஸ்சில் கடத்தி சென்ற மோகன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரிடமிருந்து 20 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். பயணி போல் நடித்து குட்கா பொருட்களை கடத்தி சென்ற விவகாரம் பயணிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

    • வழக்குகளை கடந்த மாதம் விசாரித்த நீதிமன்றம், உணவு பாதுகாப்பு சட்டத்தில் குட்கா வரவில்லை.
    • அவசர நிலை கருதி புகையிலை பொருட்களை அதிகபட்சமாக ஓராண்டு வரைதான் தற்காலிகமாக தடை செய்ய ஆணையருக்கு அதிகாரம் உள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு உணவுப் பாதுகாப்பு துறை ஆணையர் கடந்த 2018-ம் ஆண்டு தடை விதித்து உத்தரவிட்டார்.

    இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தனியார் புகையிலை நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தன. இந்த நிலையில் ஆணையரின் உத்தரவை மீறியதாக சில நிறுவனங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்ற நடவடிக்கைகளும் தொடரப்பட்டன. இதற்கு எதிராக ஐகோர்ட்டில் வேறு சில வழக்குகளும் தொடரப்பட்டிருந்தது.

    இந்த வழக்குகளை கடந்த மாதம் விசாரித்த நீதிமன்றம், உணவு பாதுகாப்பு சட்டத்தில் குட்கா வரவில்லை. அவசர நிலை கருதி இது போன்ற புகையிலை பொருட்களை அதிகபட்சமாக ஓராண்டு வரைதான் தற்காலிகமாக தடை செய்ய ஆணையருக்கு அதிகாரம் உள்ளது. இதனால் புகையிலை பொருட்களுக்கு விதித்த தடை ரத்து செய்யப்படுவதாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருந்தது.

    இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் வழக்கறிஞர் ஜோசப் அரிஸ்டாட்டில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • புதுக்கோட்டை பஜார் பகுதியில்போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
    • காரில் ரூ. 1½ லட்சம் மதிப்புள்ள குட்கா எடுத்து செல்லப்பட்டது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி புதுக்கோட்டை பஜார் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் மாடசாமி தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    குட்கா பறிமுதல்

    அப்போது அவ்வழியாக வந்த காரை மறித்து சோதனையிட்டனர். அதில் ரூ. 1½ லட்சம் மதிப்புள்ள குட்கா எடுத்து செல்லப்பட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அதனை பறிமுதல் செய்த போலீசார் காரை ஓட்டிவந்த தூத்துக்குடி மாவட்டம் குலையன்கரிசல் நடுத்தெருவை சேர்ந்த ரமேஷ் (32) என்பவரிடம் விசாரணை நடத்தினர்.

    வாலிபர் கைது

    அதில் பெங்களூருவில் இருந்து குட்கா வாங்கி வந்து தூத்துக்குடியில் விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாணை நடத்தி வருகின்றனர்.

    • சில்லரை வியாபாரமாக உள்ளூரைச் சேர்ந்த சிலர் வாங்கி, மளிகைக்கடை, பெட்டிக்கடைகளுக்கு சப்ளை செய்கின்றனர்.
    • போலீசாரால் கைது செய்யப்பட்டு, சிறை சென்று வந்தாலும் மீண்டும் அதே தொழிலை செய்கின்றனர்.

    அவிநாசி,

    அவிநாசி, பல்லடம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் அவ்வப்போது போலீசார் சோதனை நடத்தி, பான் பராக், குட்கா விற்பனை செய்வோரை கைது செய்து வருகின்றனர். சமீபத்தில் அவிநாசி பஸ் நிலையம் ,கருவலூர் உள்ளிட்ட இடங்களில் குட்கா விற்பனை செய்த வியாபாரிகளை கைது செய்தனர்.

    போலீசார் கூறுகையில், வெளி மாநிலங்களில் இருந்து பான்பராக், குட்கா போன்ற பொருட்களை மொத்தமாக வாங்கி வரும் வியாபாரிகளிடம் இருந்து சில்லரை வியாபாரமாக உள்ளூரைச் சேர்ந்த சிலர் வாங்கி, மளிகைக்கடை, பெட்டிக்கடைகளுக்கு சப்ளை செய்கின்றனர்.கடைக்காரர்கள்ஒரு பாக்கெட் 10 முதல்15 ரூபாய் என்ற விலையில் வாங்கி வாடிக்கையாளர்களுக்கு ஏற்றவாறு ஒரு பாக்கெட் 50 முதல் 60 ரூபாய் வரை விற்கின்றனர்.

    ஒரு பாக்கெட்டுக்கு 35 முதல் 40 ரூபாய்க்கு மேல் லாபம் வைத்து விற்பதன் மூலம் தினமும்சில ஆயிரம் ரூபாயை கண்ணில் பார்த்து விடுகின்றனர். இந்த வியாபாரத்தில் ருசி கண்ட பலரும் போலீசாரால் கைது செய்யப்பட்டு, சிறை சென்று வந்தாலும் மீண்டும் அதே தொழிலை செய்கின்றனர் என்றனர்.

    நகர மற்றும் கிராமப்புறங்களில் பான் பராக், குட்கா விற்பனை செய்வோர் குறித்து விவரங்களை போலீசார் தெரிந்து வைத்திராமல் இல்லை. எங்கு எந்தெந்த வகையில் அவர்கள் இத்தகைய சட்ட விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர் என்பதை உள்ளூர் போலீசார் நன்கு அறிந்து வைத்துள்ளனர். எனவே ரோந்து போலீசார், தங்கள் எல்லைக்குள் இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோரை அடையாளம் கண்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க செய்வதற்கான உத்தரவை உயரதிகாரிகள் பிறப்பித்தால் குற்றம் வெகுவாக குறையும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    விருத்தாசலம் அருகே வாகன சோதனையில் ஆட்டோவில் கடத்தப்பட்ட 12 மூட்டை குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. #Gutkhaseized #LSPolls

    விருத்தாசலம்:

    விருத்தாசலம் அடுத்த எடக்குப்பம் பகுதியில் தேர்தல் நிலையான கண்காணிப்புக்குழு அதிகாரி லெனின் தலைமையினான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அப்பகுதி வழியாக வந்த ஒரு ஆட்டோவை சோதனை செய்தபோது அதில் 12 மூட்டைகள் தடை செய்யப்பட்ட குட்கா கடத்தி வந்தது தெரியவந்தது. அப்போது ஆட்டோவில் வந்த 2 பேர் அங்கிருந்து தப்பி ஓடினர். உடன் லெனின் தலைமையிலான அதிகாரிகள் அந்த ஆட்டோவை குட்கா மூட்டைகளுடன் பறிமுதல் செய்து விருத்தாசலம் தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். தாசில்தார் கவியரசு அதிகாரி லெனினிடம் காவல் நிலையத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டார்.

    உடன் விருத்தாசலம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால் விருத்தாசலம் போலீசார் பறிமுதல் செய்த இடம் விருத்தாசலம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட எல்லைப் பகுதிக்கு அப்பாற்பட்ட இடம் எனக் கூறினார்கள். இதனால் நிலையான கண்காணிப்புக்குழு ஆலடி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் வாகனத்தை ஓட்டி வந்த டிரைவர் விளாங்காட்டூர் தாமோதரனை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் தப்பி ஓடிய 2 பேரை வலை வீசி தேடி வருகின்றனர். #Gutkhaseized #LSPolls

    குட்கா ஊழல் வழக்கில் முன்னாள் கமி‌ஷனர் ஜார்ஜ் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப சிபிஐ முடிவு செய்துள்ளது. #gutkha #cbi

    சென்னை:

    தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்வதற்கு அதிகாரிகளுக்கு ரூ.40 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்ட விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.

    செங்குன்றம் குட்கா குடோனில் கடந்த 2016-ம் ஆண்டு வருமானவரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட டைரியில் குட்கா ஊழல் குறித்து பல்வேறு தகவல்கள் இடம்பெற்றிருந்தன.

    ஒவ்வொரு மாதமும் குட்கா விற்பனைக்காக யார்-யாருக்கு எவ்வளவு லஞ்சம் கொடுக்கப்பட்டது என்பது பற்றி டைரியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    போலீஸ் டி.ஜி.பி. ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ் மற்றும் 30 அதிகாரிகளின் பெயர் இடம் பெற்றிருந்தது.

    இந்த விவகாரம் குறித்து முதலில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர். ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் வழக்கு விசாரணை சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. அமைச்சர் விஜயபாஸ்கர் மீதும் குட்கா விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

    இதனைத் தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் ரமணா மற்றும் விஜயபாஸ்கரின் உதவியாளர்கள் உள்ளிட்டோரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் குட்கா வழக்கில் சி.பி.ஐ. அதிகாரிகள் தங்களது விசாரணையை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளனர். குட்கா குடோன் செயல்படுவது பற்றி 2016-ம் ஆண்டு சென்னை கமி‌ஷனர் அலுவலகத்தில் செயல்படும் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கே முதலில் தகவல் தெரிந்தது. இதனைத் தொடர்ந்து அப்போது துணை கமி‌ஷனராக இருந்த ஜெயக்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் அதிரடி விசாரணை நடத்தினர். குட்கா விசாரணையை செங்குன்றம் போலீசார் மேற்கொண்டனர். இதன் தொடர்ச்சியாகவே குட்கா விற்பனைக்கு லஞ்சம் கைமாறப்பட்டதாக குற்றச்சாட்டு கூறப்பட்டது.

    குட்கா குடோனில் முதலில் சோதனை மேற்கொண்டவர் என்கிற அடிப்படையில் தற்போது விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வரும் ஜெயக்குமாரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் ஏற்கனவே விசாரணை நடத்தி பல்வேறு தகவல்களை திரட்டினர்.

    குட்கா குடோனில் சோதனை மேற்கொண்ட போது யார்-யாரை உடன் அழைத்து சென்றீர்கள்? அங்கு என்ன நடந்தது? என்பது பற்றிய தகவல்களை சி.பி.ஐ. அதிகாரிகள் திரட்டி வைத்துள்ளனர்.

    இந்த நிலையில் சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த 3 நாட்களாக போலீஸ் அதிகாரிகளிடம் மீண்டும் விசாரணை நடத்தியதாக தகவல் வெளியானது. இருப்பினும் யார்-யாரிடம் விசாரணை நடத்தப்பட்டது என்பது பற்றிய தகவல்கள் வெளியாகாமலேயே இருந்தது. அதுபற்றி இப்போது பரபரப்பான புதிய தகவல்கள் கிடைத்துள்ளன.

    விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையிலேயே கடந்த 3 நாட்களாக சி.பி.ஐ., போலீஸ் அதிகாரிகளை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளது.

     


    துணை கமி‌ஷனர் ஜெயக்குமாரின் கீழ் அப்போது இன்ஸ்பெக்டர்களாக பணியாற்றிய 5 பேரிடம் விசாரிக்க போலீசார் திட்டமிட்டனர். அவர்களில் ஒருவர் சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்கோளாறு காரணமாக இறந்து விட்டார்.

    இதையடுத்து மற்ற 4 பேரிடமும் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி அவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இந்த 4 இன்ஸ்பெக்டர்களில் 2 பேர் உதவி கமி‌ஷனர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். மீதமுள்ள இருவரும் இன்ஸ்பெக்டராக பணியில் உள்ளனர். அனைவரும் சென்னையில்தான் பணியாற்றி வருகிறார்கள்.

    2 உதவி கமி‌ஷனர்களில் ஒருவரிடம் கடந்த 26-ந் தேதி விசாரணை நடத்தப்பட்டுள்ளது. நேற்று 2 இன்ஸ்பெக்டர்களும் விசாரணைக்காக ஆஜரானார்கள். அவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் குட்கா குடோன் சோதனையின் போது நடைபெற்றது என்ன என்பது பற்றியும் பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தினார்கள்.

    இன்று 3-வது நாளாக சி.பி.ஐ. விசாரணை தொடர்கிறது. இன்றைய விசாரணைக்கு சென்னையில் பணியாற்றி வரும் இன்னொரு உதவி கமி‌ஷனர் ஆஜரானார். அவருடன் டிரைவர் ஒருவரும் ஆஜராகியுள்ளார். இவர்களிடமும் குட்கா விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

    இதன் பிறகு இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மற்ற போலீஸ் அதிகாரிகளிடமும் சி.பி.ஐ. விசாரணை நடை பெறுகிறது.

    குட்கா விவகாரம் தொடர்பாக கடந்த செப்டம்பர் 5-ந்தேதி அன்று டி.ஜி.பி. ராஜேந்திரன், முன்னாள் கமி‌ஷனர் ஜார்ஜ் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளின் வீடுகள் உள்ளிட்ட 35 இடங்களில் சி.பி.ஐ. அதிரடி சோதனை நடத்தியது.

    இதன் அடிப்படையில் குட்கா வழக்கில் தொடர்புடைய அனைவரிடமும் மீண்டும் விசாரணை நடத்தப்பட உள்ளது. இதற்காக டி.ஜி.பி. ராஜேந்திரன், முன்னாள் கமி‌ஷனர் ஜார்ஜ் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பப்பட உள்ளது.

    குட்கா வழக்கில் குடோன் அதிபர் மாதவராவ் மற்றும் அதிகாரிகள் உள்பட 6 பேர் மட்டுமே இதுவரை கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #gutkha #cbi

    குட்கா வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையில் தமிழக அமைச்சர், போலீஸ் அதிகாரிகள் பெயர் இடம்பெறாதது ஏன்? என்று மு.க.ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார். #DMK #MKStalin #Gutkha
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    நள்ளிரவில் சி.பி.ஐ இயக்குநர் விநோதமான சூழ்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் மாற்றப்பட்ட வழக்கு விசாரணை முடியும் வரை, சி.பி.ஐ பொறுப்பு இயக்குநர் எந்த முக்கியமான நடவடிக்கைகளையும் எடுக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், குட்கா வழக்கில் ஒரு முதற்கட்ட குற்றப்பத்திரிக்கையை அவசர அவசரமாகத் தாக்கல் செய்திருப்பதாக வெளிவந்துள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது.

    மத்திய அரசுக்கு 250 கோடி ரூபாய்க்கு மேல் வரி இழப்பு ஏற்படுத்தி, 40 கோடி ரூபாய்க்கு மேல் மாமூல் பெற்றதற்கான “குட்கா டைரி” கைப்பற்றப்பட்ட வழக்கில், 40 இடங்களுக்கும் மேல் சி.பி.ஐ அதிரடியாக சோதனை நடத்தியது.


    அ.தி.மு.க. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழக சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி. டி.கே ராஜேந்திரன் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் வீடுகளிலும் இந்த சோதனை நடத்தப்பட்டது. அப்படியொரு மிக முக்கியத்துவம் வாய்ந்த வழக்கில், தாக்கல் செய்யப்பட்டுள்ள முதற்கட்ட குற்றப்பத்திரிக்கையில் கீழ்மட்ட அதிகாரிகளும், குட்கா கம்பெனியைச் சேர்ந்தவர்களும் மட்டுமே இடம்பெற்றிருந்தாலும், இந்த ஊழலின் “பிதாமகன்களாக” திகழ்ந்து, ஊரை ஏமாற்றி உலாவரும் உயர் பதவியில் இருப்பவர்கள் யாருடைய பெயரும் இடம்பெறவில்லை என்பது, விசாரணை திணறித் திசை மாறுகிறதோ என்ற நியாயமான சந்தேகத்தை அனைவருடைய மனதிலும் ஏற்படுத்தியிருக்கிறது.

    குறிப்பாக குட்கா வழக்கை கவனித்து வந்த சி.பி.ஐ. உயரதிகாரி மாற்றப்பட்டுள்ள நிலையில், மின்னல் வேகத்தில் இப்படியொரு முதற்கட்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருப்பதன் அடிப்படை நோக்கம் அழுத்தமா அல்லது அரசியலா அல்லது மேலிடத்துக் கட்டளையா என்பதெல்லாம் கேள்விக்குறியாகியிருக்கிறது.

    குட்கா டைரியில் இடம் பெற்றுள்ள உயர் போலீஸ் அதிகாரிகளையும், அமைச்சரையும் விலக்கி விடுவிக்க இவ்வளவு அவசரமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என்ற சந்தேகமும் எழுகிறது.

    ஆகவே, குட்கா மாமூல் வழக்கு விசாரணை நியாயமான முறையில் சட்ட ரீதியாக நடைபெற வேண்டும் என்றும், டைரியில் இடம் பெற்றுள்ளவர்கள் எவ்வளவு பெரிய உயர் பதவியில் இருந்தாலும் அவர்கள் மீது தயவு தாட்சண்யமில்லாமல் பாரபட்சமற்ற நடவடிக்கை எடுத்து சட்டத்தின் முன்பு நிறுத்தி, சி.பி.ஐ. என்ற மிக உயர்ந்த அமைப்பின் நம்பகத்தன்மையைப் பாதுகாத்திட வேண்டும் என்றும் சி.பி.ஐ. பொறுப்பு இயக்குநரைக் கேட்டுக் கொள்கிறேன்.

    மக்களுக்கு சுகாதாரக் கேடுகளையும், உயிருக்கு பேராபத்தையும் ஏற்படுத்தும் குட்கா விற்பனை “மாமூல்” விவகாரத்தில், உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் சி.பி.ஐ. விசாரணை நடைபெறுவதால், டி.ஜி.பி. உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோரை சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப வைக்கும் எண்ணத்தில் சி.பி.ஐ. விசாரணை திசை மாறி விடாமல், பிழையான பாதையில் சென்றுவிடாமல் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை எள்ளளவும் பிசகாமல் சி.பி.ஐ. மதிக்க வேண்டும்.

    அதற்கு மாறாக உள்நோக்கத்தோடும் பெயரளவுக்கும் நடைபெற்றால் நியாயமான, சுதந்திரமான, எந்தவித அரசியல் அழுத்தத்திற்கும் ஆட்படாத விசாரணை கோரி தி.மு.க.வின் சார்பில் மீண்டும் உச்சநீதிமன்றத்தை அணுகிட நேரிடும் என்றும் உறுதிபடத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #DMK #MKStalin #Gutkha
    ஆந்திராவில் இருந்து ஊத்துக்கோட்டை வழியாக மோட்டார் சைக்கிளில் தடை செய்யப்பட்ட குட்கா கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து புழல் ஜெயிலில் அடைத்தனர்.

    ஊத்துக்கோட்டை:

    ஆந்திராவில் இருந்து ஊத்துக்கோட்டை வழியாக சிலர் தடைசெய்யப்பட்ட குட்கா பெருட்களை கடத்து வதாக துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசனுக்கு தகவல் கிடைத்தது.

    அவரது உத்தரவின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் நித்தியானந்தம் நகர எல்லையில் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது மோட்டார் சைக்கிளில் வடநாட்டு வாலிபர் ஒருவர் வேகமாக வந்தார். அவரை நிறுத்தி சீட்டின் பின்புறம் இருந்த மூட்டையில் சோதனை செய்தபோது ரூ. 25 ஆயிரம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா இருந்தது. மோட்டார் சைக்கிளுடன் குட்காவை பறிமுதல் செய்தனர்.

    மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த வாலிபர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சர்தாராம் (வயது 22) என்று தெரியவந்தது.

    ஊத்துக்கோட்டை நேரு பஜாரில் கடை ஒன்றை வாடகைக்கு எடுத்து ஆந்திராவிருந்து கடத்தி வரப்படும் குட்கா பொருட்களை சேமித்து வைத்து சென்னை கொண்டு சென்று விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. அவரை கைது செய்து ஊத்துக்கோட்டை கோர்டில் ஆஜர்படுத்தி புழல் ஜெயிலில் அடைத்தனர்.

    பொது மேடைகளில் அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் பேசும்போது அரசியல் நாகரிகத்துடன் பேச வேண்டும். தரக்குறைவாக பேசக்கூடாது என்று ஜிராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். #gramakrishnan #tnministers

    நாகர்கோவில்:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் நாகர்கோவிலில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    மார்த்தாண்டத்தை அடுத்த திக்குறிச்சி ஆலம்பாறையில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகளின் வீடுகள் மீது நள்ளிரவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் போலீசாரும், கம்யூனிஸ்டு நிர்வாகிகளை அவதூறாக பேசியும், தாக்கவும் செய்துள்ளனர். அவர்கள் மீது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் மாநில போலீஸ் டி.ஜி.பி. ஆகியோர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி கழுவன்திட்டையில் வருகிற 29-ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

    தமிழக அரசு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு பள்ளிக்கூடங்களை மூடும் நடவடிக்கையில் இறங்கி உள்ளது. அரசு பள்ளிக்கூடங்களை மூடக்கூடாது. தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். ஸ்டெர்லைட் ஆலை மாநில மாசு கட்டுப்பாட்டு வாரிய உத்தரவின் பேரில் மூடப்பட்டு உள்ளது. தற்போது அங்கு நீதிபதிகள் குழு ஆய்வு நடந்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கூடாது. மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் எந்த திட்டத்தையும் அரசு அனுமதிக்கக் கூடாது.

    குட்கா ஊழல் விவகாரத்தில் சி.பி.ஐ. சோதனை நடந்துள்ளது. அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ஆனால் யார் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மத்திய அரசு மாநில அரசை சி.பி.ஐ. மூலம் மிரட்டி வருகிறது.


    ஜி.எஸ்.டி. மூலம் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு தொழிற்சாலைகள் மூடப்பட்டு உள்ளது. 5 லட்சம் தொழிலாளர்கள் பாதிப்படைந்துள்ளனர். பொது மேடைகளில் அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் பேசும்போது அரசியல் நாகரிகத்துடன் பேச வேண்டும். தரக்குறைவாக பேசக்கூடாது.

    மாநில அரசின் மின்சார தேவைக்கும் உற்பத்திக்கும் நிறைய இடைவெளி உள்ளது. இதனால் மின்வெட்டு அதிகரித்துள்ளது. இதை போர்க்கால அடிப்படையில் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மத்திய அரசின் நலத்திட்ட உதவிகள் பெற ஆதார் அவசியம் என்பதை ஏற்க முடியாது.

    ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளை கோர்ட்டு விடுவித்துள்ளது. ஆனால் மத்திய அரசின் பிரதிநிதியாக இருக்கும் கவர்னர் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வில்லை. நீர் நிலைகள் அனைவருக்கும் பொதுவானது. மதத்திற்கு அப்பாற்பட்டது. ஆனால் தாமிரபரணி நதியில் புஷ்கர விழா நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.நெல்லை மற்றும் குமரியில் மதசார்புடன் நடத்த இருக்கும் புஷ்கர விழாவை அனுமதிக்க கூடாது.

    அவதூறாக பேசினார் என்று கருணாஸ் எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் இதே விவகாரத்தில் புகார் கூறப்பட்ட எச்.ராஜா, எஸ்.வி.சேகர் ஆகியோர் போலீஸ் பாதுகாப்புடன் சுற்றி வருகிறார்கள். அவர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த அரசு மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா அரசுக்கு எடுபிடி அரசாக இருக்கிறது.

    தமிழகத்தில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு சம்பவங்கள் அதிகரித்து உள்ளது. அவற்றை கட்டுப்படுத்த மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. மாறாக மக்கள் உரிமைக்காக போராடுவோர் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது.

    விவசாய நிலங்களை அழித்து 8 வழிச்சாலை திட்டம் வேண்டாம் என்று போராடிய எங்கள் மீது வழக்கு பதிவு செய்து உள்ளனர். தமிழிசையை அவதூறாக பேசி விட்டார் என்று மாணவி சோபியா மீது வழக்கு போட்டனர். தமிழக அரசு இப்படித்தான் செயல்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #gramakrishnan #tnministers

    ஆற்காட்டில் குட்கா விற்ற 3 வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர்.#Gutkha #Gutkhaseized

    ஆற்காடு:

    ஆற்காடு பஜாரில் உள்ள கடைகளில், தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை மற்றும் போதை பொருட்கள் விற்கப்படுவதாக ஆற்காடு டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சிதம்பரம் மற்றும் போலீசார் நேற்றிரவு பஜாரில் உள்ள கடைகளில் தீவிர சோதனை நடத்தினர்.

    மொத்த வியாபாரம் செய்து வரும் 3 மளிகை கடைகளில் இருந்து ரூ.70 ஆயிரம் மதிப்பிலான குட்கா, பான்மசாலா உள்ளிட்ட பலவகை போதை பாக்குகள் பார்சல், பார்சல்களாக சிக்கியது.

    அவற்றை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக கடை உரிமையாளர்களான ஆற்காடு எம்பெருமான் தெருவை சேர்ந்த தங்கபாண்டி (64), ராணிப்பேட்டை புளியங்கண்ணு பகுதியை சேர்ந்த செல்வக்குமார் (33) மற்றும் அவருடைய தம்பி ஜெயக்குமார் (31) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். #Gutkha #Gutkhaseized

    புழல் சிறையில் கைதிகள் சொகுசாக வசித்த விவகாரத்தின் தொடர்ச்சியாக மதுரை மத்திய சிறையில் உதவி ஆணையர் தலைமையில் 150 போலீசார் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். #MaduraiCentralPrison

    மதுரை:

    மத்திய சிறையில் இன்று போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

    தமிழகம் முழுவதும் உள்ள மத்திய சிறைகளில் முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் எழுந்தன. கைதிகளிடம் பணத்தை வாங்கிக்கொண்டு அவர்களுக்கு தேவையான வசதிகளை சிறைக்குள்ளேயே அதிகாரிகள் ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.

    சென்னை புழல் சிறையில் சொகுசு மெத்தை, பீடி, சிகரெட், செல்போன் போன்றவை கைதிகளுக்கு தாராளமாக கிடைத்துள்ளன. இதனை சில கைதிகள் செல்போனில் படம் பிடித்து வெளிச்சத்துக்கு கொண்டு வந்தனர்.

    இதனைத் தொடர்ந்து கடந்த 13-ந் தேதி புழல் சிறையில், சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. அசுதோஷ் சுக்லா தலைமையில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இதில் சிறைக்குள் முறைகேடுகள் நடந்தருப்பது தெரியவந்தது. அங்கிருந்து தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதனைத் தொடர்ந்து கோவை, சேலம், கடலூர், திருச்சி, பாளையங்கோட்டை மத்திய சிறைகளிலும் போலீசார் அடுத்தடுத்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    இந்த சோதனையின் போது சிறைக்குள் தடை செய்யப்பட்ட பீடி, சிகரெட், குட்கா உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இந்த நிலையில் மதுரை மத்திய சிறையில் இன்று அதிரடி சோதனை நடத்தப்பட்டது. சிறைத்துறை டி.ஜ.ஜி. பழனி தலைமையில் திலகர் திடல் போலீஸ் உதவி கமி‌ஷனர் வெற்றிச் செல்வம் கரிமேடு இன்ஸ்பெக்டர் மன்னவன் மற்றும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் காலை 6.30 மணிக்கு மத்திய சிறைக்கு வந்தனர்.

    மத்திய சிறையின் ஒவ்வொரு பிளாக்குகளிலும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் மோப்ப நாய் பிரிவும் ஈடுபடுத்தப்பட்டது. வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சோதனையில் பங்கேற்றனர்.

    தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள், பயங்கரவாதிகள் அறை போன்றவற்றில் அங்குலம், அங்குலமாக சோதனை நடத்தப்பட்டது.

    இந்த சோதனையின் போது, சிறையில் இருந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், குட்கா, பீடி, சிகரெட் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன.

    காலை 8.30 மணி வரை சுமார் 2 மணி நேரம் இந்த சோதனை நடைபெற்றது. சோதனையின்போது மத்திய சிறை கண்காணிப்பாளர் ஊர்மிளா, ஜெயில் அதிகாரி ஜெயராமன் ஆகியோர் உடனிருந்தனர். #MaduraiCentralPrison

    ×