கொடி கட்டி பறக்கும் குட்கா விற்பனை, கடிவாளம் போடுமா? போலீஸ்

சில்லரை வியாபாரமாக உள்ளூரைச் சேர்ந்த சிலர் வாங்கி, மளிகைக்கடை, பெட்டிக்கடைகளுக்கு சப்ளை செய்கின்றனர்.போலீசாரால் கைது செய்யப்பட்டு, சிறை சென்று வந்தாலும் மீண்டும் அதே தொழிலை செய்கின்றனர்.
 கோப்புபடம்
 கோப்புபடம்
Published on

அவிநாசி,

அவிநாசி, பல்லடம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் அவ்வப்போது போலீசார் சோதனை நடத்தி, பான் பராக், குட்கா விற்பனை செய்வோரை கைது செய்து வருகின்றனர். சமீபத்தில் அவிநாசி பஸ் நிலையம் ,கருவலூர் உள்ளிட்ட இடங்களில் குட்கா விற்பனை செய்த வியாபாரிகளை கைது செய்தனர்.

போலீசார் கூறுகையில், வெளி மாநிலங்களில் இருந்து பான்பராக், குட்கா போன்ற பொருட்களை மொத்தமாக வாங்கி வரும் வியாபாரிகளிடம் இருந்து சில்லரை வியாபாரமாக உள்ளூரைச் சேர்ந்த சிலர் வாங்கி, மளிகைக்கடை, பெட்டிக்கடைகளுக்கு சப்ளை செய்கின்றனர்.கடைக்காரர்கள்ஒரு பாக்கெட் 10 முதல்15 ரூபாய் என்ற விலையில் வாங்கி வாடிக்கையாளர்களுக்கு ஏற்றவாறு ஒரு பாக்கெட் 50 முதல் 60 ரூபாய் வரை விற்கின்றனர்.

ஒரு பாக்கெட்டுக்கு 35 முதல் 40 ரூபாய்க்கு மேல் லாபம் வைத்து விற்பதன் மூலம் தினமும்சில ஆயிரம் ரூபாயை கண்ணில் பார்த்து விடுகின்றனர். இந்த வியாபாரத்தில் ருசி கண்ட பலரும் போலீசாரால் கைது செய்யப்பட்டு, சிறை சென்று வந்தாலும் மீண்டும் அதே தொழிலை செய்கின்றனர் என்றனர்.

நகர மற்றும் கிராமப்புறங்களில் பான் பராக், குட்கா விற்பனை செய்வோர் குறித்து விவரங்களை போலீசார் தெரிந்து வைத்திராமல் இல்லை. எங்கு எந்தெந்த வகையில் அவர்கள் இத்தகைய சட்ட விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர் என்பதை உள்ளூர் போலீசார் நன்கு அறிந்து வைத்துள்ளனர். எனவே ரோந்து போலீசார், தங்கள் எல்லைக்குள் இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோரை அடையாளம் கண்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க செய்வதற்கான உத்தரவை உயரதிகாரிகள் பிறப்பித்தால் குற்றம் வெகுவாக குறையும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com