search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gutkha seized"

    • லாரியை ஓட்டி வந்த வாகனத்தின் டிரைவர் போலீசாரை கண்டவுடன் லாரியை விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டார்.
    • வழக்கு பதிவு செய்த சூளகிரி போலீசார் தலைமறைவான லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    சூளகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் முதல் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் தனியார் ஓட்டல் அருகே சூளகிரி காவல் ஆய்வாளர் தேவி தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது லாரியை ஓட்டி வந்த வாகனத்தின் டிரைவர் போலீசாரை கண்டவுடன் லாரியை விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டார்.

    அந்த வாகனத்தை போலீசார் சோதனை செய்த போது, அதில் இரும்பு தகரம் மூலம் தடுப்பு ஏற்படுத்தி தனியறை அமைத்து மறைத்து வைத்திருந்த 150 மூட்டைகளில் சுமார் ரூ.15 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்டுள்ள குட்கா பொருட்கள் இருந்தது தெரிய வந்தது.

    அதனை கைப்பற்றிய போலீசார் ரூ.10 லட்சம் மதிப்புள்ள லாரியை பறிமுதல் செய்தனர்.

    இது குறித்து வழக்கு பதிவு செய்த சூளகிரி போலீசார் தலைமறைவான லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • கார்களில் தலா ஒரு டன் என மொத்தம் 3 டன் எடை மதிப்பில் ஹான்ஸ், குட்கா, போன்ற புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்தது.
    • சென்னைக்கு யாருக்கு கடத்தி சென்றார்கள் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா சுங்கச்சாவடியில் இன்று அதிகாலை வாலாஜா போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமன் ராஜா தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் மகாராஜன் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி செல்வதற்காக அதிவேகமாக வந்த 3 கார்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். கார்களில் தலா ஒரு டன் என மொத்தம் 3டன் எடை மதிப்பில் ஹான்ஸ், குட்கா, போன்ற புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்தது.

    இதை தொடர்ந்து போலீசார் கார்களுடன் குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    அதனை கடத்தி வந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பரத்குமார் (வயது22), கல்யாணராம் (26), சுரேஷ் (25), கணபத்ராம் (28) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட 3 கார்களின் மதிப்பு ரூ.15 லட்சம் எனவும், 3 டன் குட்கா பொருட்களின் மதிப்பு ரூ.6 லட்சம் என மொத்தம் ரூ.21 லட்சம் மதிப்பில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    சென்னைக்கு யாருக்கு கடத்தி சென்றார்கள் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர்.
    • கண்டெய்னர் லாரியை தடுத்து நிறுத்திய போலீசார் சோதனை செய்தபோது அதில் எந்த பொருட்களும் இல்லாமல் காலியாக இருந்தது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை உள்ளிட்ட போதை பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்கும் விதமாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின்பேரில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

    வீரவநல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு வெளி மாவட்டங்களில் இருந்து மூட்டை மூட்டையாக குட்கா உள்ளிட்ட பொருட்கள் கடத்தி கொண்டு வரப்பட்டு கடைகளுக்கு சப்ளை செய்யப்படுவதாக வீரவநல்லூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் நேற்று நள்ளிரவில் போலீசார் அப்பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வந்த கண்டெய்னர் லாரியை தடுத்து நிறுத்தினர். பின்னர் கண்டெய்னரை திறந்து சோதனை செய்தபோது அதில் எந்த பொருட்களும் இல்லாமல் காலியாக இருந்தது.

    பின்னர் அதனை ஓட்டி வந்த டிரைவரிடம் விசாரித்தபோது, கரூர் மாவட்டம் சமத்துவபுரத்தை சேர்ந்த சிவக்குமார்(வயது 46) என்பது தெரியவந்தது. ஆனாலும் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டதால், கண்டெய்னரை மீண்டும் திறந்து உள்ளே சென்று பார்த்தபோது அதில் கதவு போன்ற அமைப்பு இருந்தது.

    உடனே போலீசார் அதனை திறந்து பார்த்தபோது அதற்குள் ஒரு கண்டெய்னர் இருந்ததும், அதில் மூட்டை மூட்டையாக புகையிலை உள்ளிட்டவை பதுக்கி வைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் சிவக்குமாரை கைது செய்தனர். மேலும் லாரி, 600 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சிவக்குமாரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புகையிலை பொருட்களை எங்கிருந்து ஏற்றி வந்தார்? இங்கு யாருக்கு சப்ளை செய்வதற்காக கொண்டு வந்தார்? இதில் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது? என்பது குறித்து போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கைப்பற்றப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களின் மதிப்பு ரூ.50 லட்சம் ஆகும். கைதான 5பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
    • கைதான இம்ரான்கான் நண்பர் மூலம் பெங்களூரில் இருந்து குட்கா மற்றும் புகையிலை பொருட்களை மொத்தமாக வாங்கி ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் விற்பனை செய்ததும் தெரிய வந்தது.

    தேவகோட்டை:

    சிவகங்கை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்கும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்.

    இந்த நிலையில் துணைக் கண்காணிப்பாளர் கணேஷ்குமார் உத்தரவின் பேரில் தேவகோட்டை உட்கோட்டத்தில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தேவகோட்டை நகரில் காவல்துறை ஆய்வாளர் சரவணன் தலைமையில் போலீசார் பெட்டிக்கடை முதல் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் வரை அனைத்து கடைகளிலும் சோதனை நடத்தி தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பவர்களை கைது செய்து வருகிறார். இவர்களுக்கு மொத்த விற்பனை செய்யும் வியாபாரிகளை சில நாட்களாக போலீசார் விசாரணை நடத்தினர்.

    தேவகோட்டை நகரில் பெட்டிக்கடையில் சில்லறை விற்பனை செய்து வந்த ரகுநாதபுரம் மேற்கு தெருவைச் சேர்ந்த ராமு மகன் முருகன் (36), கல்லூரி நகர் இடையன்வயல் பகுதியை சேர்ந்த நெல்லியப்பன் மகன் செந்தில் (47) இருவரையும் பிடித்து இன்ஸ்பெக்டர் சரவணன் விசாரணை நடத்தினார். அப்போது தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை மொத்த விற்பனை செய்தவர்கள் பற்றிய விபரம் தெரிய வந்தது.

    இதையடுத்து ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் பரகத்தெருவை சேர்ந்த அன்வர் மகன் செய்யது இம்ரான் கான் (29), பெத்த தேவன்கோட்டை கருப்பையா மகன் வாசு (50), மேட்டு கற்களத்தூர் பாலுசாமி மகன் கார்த்தியராசு ஆகியோரை மடக்கி பிடித்தனர்.

    மேலும் இவர்கள் குடோனில் பதுக்கி வைத்திருந்த 400 கிலோ குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களையும், ஆட்டோ மற்றும் 2 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

    கைப்பற்றப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களின் மதிப்பு ரூ.50 லட்சம் ஆகும். கைதான 5பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    கைதான இம்ரான்கான் நண்பர் மூலம் பெங்களூரில் இருந்து குட்கா மற்றும் புகையிலை பொருட்களை மொத்தமாக வாங்கி ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் விற்பனை செய்ததும் தெரிய வந்தது.

    • மின்னல் வேகத்தில் வந்த காரை நிறுத்தி சோதனையிட்டதில் 270 கிலோ குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
    • கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வடமாமந்தூர் தெற்குத் தெருவைச் சேர்ந்த சிவக்குமார் என்பவரை கைது செய்தனர்.

    திண்டுக்கல்:

    ஓசூரில் இருந்து மதுரைக்கு காரில் குட்கா பொருட்கள் கடத்தப்படுவதாக மாவட்ட எஸ்.பி. தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து கொடைரோடு டோல்கேட் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் ஷேக் தாவூது தலைமையிலான தனிப்படை போலீசார் இன்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது மின்னல் வேகத்தில் வந்த காரை நிறுத்தி சோதனையிட்டதில் 270 கிலோ குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை கொண்டு வந்த கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வடமாமந்தூர் தெற்குத் தெருவைச் சேர்ந்த சிவக்குமார் (29) என்பவரை கைது செய்தனர்.

    குட்கா பொருட்கள் மற்றும் காரையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கார் உரிமையாளரான ஓசூரைச் சேர்ந்த சகாதேவன் குட்கா உரிமையாளரான ஓசூரைச் சேர்ந்த ஹரீஸ் பாபு ஆகியோர் மீதும் அம்மையநாயக்கனூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    இந்த குட்கா பொருட்களை மதுரைக்கு எங்கு விற்பனை செய்ய கொண்டு சென்றனர் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    திண்டுக்கல் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான குட்காவை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    திண்டுக்கல், மே.15-

    திண்டுக்கல் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான குட்காவை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    திண்டுக்கல் அருகில் உள்ள தாடிக்கொம்பு அருணா மீனாட்சிநகரில் உள்ள ஒரு வீட்டில் குட்கா, புகையிலைப்பொருட்கள் பதுக்கி வைத்து கடைகளுக்கு சப்ளை செய்யப்படுவதாக மாவட்ட உணவு பாதுகாப்புத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் நடராஜன் தலைமையில் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் சந்திரமோகன் மற்றும் தாடிக்கொம்பு போலீசார் அருணா மீனாட்சிநகரில் உள்ள சங்கர் என்பவரது வீட்டில் சோதனை நடத்தினர்.

    இதில் ரூ.10லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் சங்கரின் உறவினரான தாடிக்கொம்பு வடக்குத்தெருவை சேர்ந்த மணிகண்டன்(வயது37) என்பவர் இப்பொருட்களை கொண்டு வந்து பதுக்கி வைத்து சுற்றுப்பகுதிகளில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.

    இதனையடுத்து அதிகாரிகள் பதுக்கி வைத்திருந்த குட்கா பொருட்களை பறிமுதல் செய்து போலீசார் பாதுகாப்புடன் எடுத்துச்சென்றனர். இதுகுறித்து மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    * * * குட்கா பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள்.

    விருத்தாசலம் அருகே வாகன சோதனையில் ஆட்டோவில் கடத்தப்பட்ட 12 மூட்டை குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. #Gutkhaseized #LSPolls

    விருத்தாசலம்:

    விருத்தாசலம் அடுத்த எடக்குப்பம் பகுதியில் தேர்தல் நிலையான கண்காணிப்புக்குழு அதிகாரி லெனின் தலைமையினான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அப்பகுதி வழியாக வந்த ஒரு ஆட்டோவை சோதனை செய்தபோது அதில் 12 மூட்டைகள் தடை செய்யப்பட்ட குட்கா கடத்தி வந்தது தெரியவந்தது. அப்போது ஆட்டோவில் வந்த 2 பேர் அங்கிருந்து தப்பி ஓடினர். உடன் லெனின் தலைமையிலான அதிகாரிகள் அந்த ஆட்டோவை குட்கா மூட்டைகளுடன் பறிமுதல் செய்து விருத்தாசலம் தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். தாசில்தார் கவியரசு அதிகாரி லெனினிடம் காவல் நிலையத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டார்.

    உடன் விருத்தாசலம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால் விருத்தாசலம் போலீசார் பறிமுதல் செய்த இடம் விருத்தாசலம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட எல்லைப் பகுதிக்கு அப்பாற்பட்ட இடம் எனக் கூறினார்கள். இதனால் நிலையான கண்காணிப்புக்குழு ஆலடி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் வாகனத்தை ஓட்டி வந்த டிரைவர் விளாங்காட்டூர் தாமோதரனை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் தப்பி ஓடிய 2 பேரை வலை வீசி தேடி வருகின்றனர். #Gutkhaseized #LSPolls

    கரூர் பகுதியில் தடைசெய்யப்பட்ட குட்கா, பான்பராக் மூட்டை, மூட்டையாக பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Gutkhaseized
    கரூர்:

    நாமக்கல் மாவட்டம் கீரம்பூர் சோதனை சாவடியில் பரமத்தி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக ஒரு வேன் வந்தது.

    அதனை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான்பராக் பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த டிரைவரை பிடித்து விசாரணை நடத்தியதில் பெங்களூருவில் இருந்து கரூர் மாவட்டத்திற்கு விற்பனைக்கு கடத்தி வரப்பட்டதும், கரூர் ராயனூர் பகுதியில் உள்ள குடோன்களில் குட்கா பொருட்கள் அதிக அளவில் பதுக்கி வைத்திருப்பதும் தெரியவந்தது.

    உடனே நாமக்கல் போலீசார் கரூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் உத்தரவின்படி தான்தோன்றிமலை போலீசார் ராயனூர் பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

    பின்னர் அங்கு வெவ்வேறு இடங்களில் உள்ள குடோன்களில் 216 நைலான் சாக்கு மூட்டைகள், 202 அட்டை பெட்டியில் பதுக்கி வைத்திருந்த குட்கா, பான் பராக் மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். அவற்றின் மொத்த எடை 5½ டன் ஆகும். சந்தை மதிப்பு பல லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

    இந்த கடத்தலில் கரூர் சின்ன ஆண்டாங்கோவில் ஏ.கே.சி. காலனி பகுதியை சேர்ந்த தங்கராஜ், கரூர் ராயனூர் கே.கே.நகர் பகுதியை சேர்ந்த செல்வராஜ்(வயது 47) ஆகியோருக்கு தொடர்பு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    இந்த வழக்கில் மேலும் யாருக்காவது தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். கரூர் பகுதியில் தடைசெய்யப்பட்ட குட்கா, பான்பராக் மூட்டை, மூட்டையாக பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  #Gutkhaseized

    வானகரம்- பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள மளிகை கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 500 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.
    போரூர்:

    மதுரவாயல் சுற்று வட்டார பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக மதுரவாயல் போலீசாருக்கு புகார்கள் வந்தன.

    இந்த நிலையில் வானகரம்-பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு மளிகை கடையில் இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ் நேற்று இரவு போலீசாருடன் சென்று சோதனை நடத்தினார். அப்போது அங்கு குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து கடை உரிமையாளர் ஜேசுராஜ் (50) கைது செய்யப்பட்டார். குடோனில் பதுக்கி வைத்திருந்த 500 கிலோ குட்கா பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில் மதுரவாயல், கோயம்பேடு,வானகரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளுக்கு இங்கிருந்து குட்கா பொருட்கள் சப்ளை செய்யப்பட்டு வந்தது தெரிய வந்தது.

    யார்-யாருக்கு குட்கா அனுப்பப்பட்டது? குட்கா விற்பனை செய்யும் கடைகள் எவை என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.
    பூந்தமல்லியில் பெங்களூர் நெடுஞ்சாலையில் உள்ள குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 10 டன் அளவிலான குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
    பூந்தமல்லி:

    சென்னை தனிப்படை போலீசார் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களான குட்கா பதுக்கி வைத்துள்ள இடங்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    கடந்த மாதம் அடையாறை சேர்ந்த புருஷோத்தமன் என்பவரை குட்கா பதுக்கி வைத்ததாக போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் பல்வேறு தகவல்கள் போலீசாருக்கு கிடைத்தன. அதனை தொடர்ந்து பல இடங்களில் சோதனை நடந்து வருகிறது.

    பூந்தமல்லியில் பெங்களூர் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு குடோனில் குட்கா புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்ததாக தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து அடையார் துணை கமி‌ஷனர் சகாயி காங் உத்தரவின் பேரில் 5 பேர் அடங்கிய தனிப்படையினர் இன்று காலை அங்கு சோதனையில் ஈடுபட்டனர்.

    அங்கு மூட்டை மூட்டையாக பான்மசாலா, ஹான்ஸ் போன்ற புகையிலை பொருட்கள் இருந்தன. தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி விற்பனை செய்வதற்காக வைத்திருந்தனர். சுமார் 10 டன் அளவிலான புகையிலை பொருட்கள் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அவற்றின் மதிப்பு ரூ.80 லட்சம்.

    குட்கா பதுக்கி இருந்த குடோன்கள் உரிமையாளர் செந்தில் தப்பி ஓடி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள். அவரது சகோதரர் முத்துலிங்கம் உள்ளிட்ட 5 பேர் போலீசாரிடம் சிக்கியுள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. குடோன் உரிமையாளர் செந்திலிடம் இருந்து ஏற்கனவே குட்கா பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    கோவை அருகே 2350 கிலோ குட்கா பதுக்கிய குடோன் உரிமையாளரை கைது செய்த போலீசார் தலைமறைவான வியாபாரிகளை தேடி வருகின்றனர். #Gutkha #GutkhaSeized
    கோவை:

    கோவை கண்ணம்பாளையத்தில் இயங்கி வந்த குட்கா குடோனில் கடந்த ஏப்ரல் மாதம் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

    அங்கிருந்து ரூ.80 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. அதன் பின்னர் போலீசாரும், உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களும் மாவட்டம் முழுவரும் சோதனை நடத்தி குடோன்கள் மற்றும் மளிகை கடைகளில் இருந்து குட்காவை பறிமுதல் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் அன்னூரை அடுத்த மசகவுண்டன் செட்டிப்பாளையத்தில் ஒரு குடோனில் அதிக அளவில் குட்கா பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது குடோன் பூட்டப்பட்டு இருந்தது. உடனே பூட்டை உடைத்து உள்ளே சென்று போலீசார் சோதனை நடத்தினர்.

    அங்கு மளிகை பொருட்களுக்கு இடையே ஏராளமான மூட்டைகளில் குட்கா பாக்கெட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. அங்கிருந்து மொத்தம் 2,350 கிலோ எடை கொண்ட குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு சுமார் ரூ.14 லட்சம் ஆகும்.

    போலீசார் நடத்திய விசாரணையில் இந்த குடோன் அன்னூரை சேர்ந்த சாந்த குமார்(வயது 38) என்பவருக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது. கோவை கணபதியை சேர்ந்த பட்டு ராஜன், சரவணம்பட்டி விநாயகபுரத்தை சேர்ந்த தங்கசிங் ஆகியோர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இந்த குடோனை வாடகைக்கு எடுத்து குட்கா மூட்டைகளை பதுக்கி வைத்தது தெரிய வந்தது.

    இதைத் தொடர்ந்து பட்டு ராஜன், தங்கசிங், சாந்த குமார் ஆகிய 3 பேர் மீதும் புகையிலை பொருட்கள் தடை சட்டம் 2003 மற்றும் கூட்டுசதி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதுதொடர்பாக குடோன் உரிமையாளர் சாந்தகுமாரை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது மளிகை கடை நடத்தி வரும் பட்டு ராஜன், தங்கசிங் ஆகியோர் மளிகை கடை வைத்திருப்பதற்காக குடோனை வாடகைக்கு கேட்டதாகவும், அதன் பேரில் ரூ.1500 மாத வாடகைக்கு குடோனை கொடுத்ததாகவும், குட்கா பதுக்கி வைத்தது பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்றும் கூறினார்.

    தொடர்ந்து சாந்த குமாரிடம் விசாரணை நடத்தி வரும் போலீசார் பட்டு ராஜன், தனசிங் ஆகியோரை தேடி வருகின்றனர். குட்கா விற்பனைக்கு பயன்படுத்திய 1 சொகுசு கார், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    பட்டுராஜா, தனசிங் ஆகியோர் பிடிபட்டால் தான் எங்கிருந்து குட்காவை வாங்கி வந்தார்கள்? யார்- யாருக்கெல்லாம் விற்பனை செய்தார்கள்? அவர்களின் பின்புலத்தில் உள்ளவர்கள் யார்-யார்? என்பது தெரிய வரும். தலைமறைவான இருவரையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் இருவரையும் செய்ய கைது செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர்.  #Gutkha #GutkhaSeized



    திருவள்ளூர் போலீஸ் நிலையம் அருகே வீட்டில் பதுக்கி வைத்த 500 கிலோ குட்கா பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர்.#GutkhaScam #GutkhaCBIProbe

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் டவுன் போலீஸ் நிலையம் அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் போன்ற போதைப் பொருட்கள் பதுக்கிவைத்து விற்பனை செய்வதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னிக்கு தகவல் கிடைத்தது.

    அவரது உத்தரவுப்படி சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையில் தனிப்படை போலீசார் காந்தி தெருவில் உள்ள ஒரு வீட்டில் சோதனை செய்தனர்.

    அப்போது வீட்டில் 500 கிலோ குட்கா, புகையிலை பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக அங்கிருந்த ராஜஸ்தான் மாநில வாலிபர் விக்ரம் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    அவருக்கு குட்கா கிடைத்தது எப்படி? அவருடன் தொடர்புடையவர்கள் யார்? வேறு எங்கேனும் குட்காவை பதுக்கி வைத்திருக்கிறார்களா? என்பது குறித்து தனிப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×