என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திண்டுக்கல் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்
திண்டுக்கல், மே.15-
திண்டுக்கல் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான குட்காவை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திண்டுக்கல் அருகில் உள்ள தாடிக்கொம்பு அருணா மீனாட்சிநகரில் உள்ள ஒரு வீட்டில் குட்கா, புகையிலைப்பொருட்கள் பதுக்கி வைத்து கடைகளுக்கு சப்ளை செய்யப்படுவதாக மாவட்ட உணவு பாதுகாப்புத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் நடராஜன் தலைமையில் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் சந்திரமோகன் மற்றும் தாடிக்கொம்பு போலீசார் அருணா மீனாட்சிநகரில் உள்ள சங்கர் என்பவரது வீட்டில் சோதனை நடத்தினர்.
இதில் ரூ.10லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் சங்கரின் உறவினரான தாடிக்கொம்பு வடக்குத்தெருவை சேர்ந்த மணிகண்டன்(வயது37) என்பவர் இப்பொருட்களை கொண்டு வந்து பதுக்கி வைத்து சுற்றுப்பகுதிகளில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து அதிகாரிகள் பதுக்கி வைத்திருந்த குட்கா பொருட்களை பறிமுதல் செய்து போலீசார் பாதுகாப்புடன் எடுத்துச்சென்றனர். இதுகுறித்து மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
* * * குட்கா பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்