search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மளிகை கடை குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குட்கா.
    X
    மளிகை கடை குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குட்கா.

    பூந்தமல்லி மளிகை கடையில் 500 கிலோ குட்கா பறிமுதல்- வியாபாரி கைது

    வானகரம்- பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள மளிகை கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 500 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.
    போரூர்:

    மதுரவாயல் சுற்று வட்டார பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக மதுரவாயல் போலீசாருக்கு புகார்கள் வந்தன.

    இந்த நிலையில் வானகரம்-பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு மளிகை கடையில் இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ் நேற்று இரவு போலீசாருடன் சென்று சோதனை நடத்தினார். அப்போது அங்கு குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து கடை உரிமையாளர் ஜேசுராஜ் (50) கைது செய்யப்பட்டார். குடோனில் பதுக்கி வைத்திருந்த 500 கிலோ குட்கா பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில் மதுரவாயல், கோயம்பேடு,வானகரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளுக்கு இங்கிருந்து குட்கா பொருட்கள் சப்ளை செய்யப்பட்டு வந்தது தெரிய வந்தது.

    யார்-யாருக்கு குட்கா அனுப்பப்பட்டது? குட்கா விற்பனை செய்யும் கடைகள் எவை என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.
    Next Story
    ×