search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இளம்பெண்கள் உள்பட 4 பேர் மாயம்
    X

    இளம்பெண்கள் உள்பட 4 பேர் மாயம்

    • ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இளம்பெண்கள் உள்பட 4 பேர் மாயமாகினர்.
    • சப்- இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    விருதுநகர்,

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தனமாரி. இவரது மகள் அழகு பத்மா (வயது 27). இவருக்கு 2 வருடங்களுக்கு முன்பு கனகராஜ் என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு வயதில் கவி ஜெகத்ரா மகள் உள்ளார்.

    இந்த நிலையில் கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அழகு பத்மா தாய் வீட்டுக்கு வந்து விட்டார். சம்பவத்தன்று வெளியே சென்று வருவதாக கூறிச் சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் மம்சாபுரம் போலீஸ் நிலையத்தில் சந்தனமாரி புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அழகு பத்மாவை தேடி வருகின்றனர்.

    பட்டதாரி பெண்

    வத்திராயிருப்பு அருகே கூமாபட்டியை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகள் துர்கா தேவி (வயது 23). இவர் பட்டப்படிப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்தார். சம்பவத்தன்று அத்தை மகளுடன் வெளியே சென்று வருவதாக கூறிச் சென்றவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. கூமாபட்டி போலீஸ் நிலையத்தில் மகளை கண்டு பிடித்து தருமாறு பெரியசாமி புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராஜபாளையம் தாட்கோ காலனியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 33). கூலி வேலை செய்து வருகிறார். இவர் மனைவி மகாலட்சுமி மற்றும் 5 வயது மகள் குழலியுடன் திருச்செந்தூருக்கு பாதயாத்திரை சென்றுள்ளார். சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் ராஜபாளையத்திற்கு பேருந்தில் திரும்பி வந்துள்ளனர்.

    ராஜபாளையம் பழைய பேருந்து நிலையத்திற்கு வந்தபோது பாத்ரூம் சென்ற மகாலட்சுமி திரும்பி வரவில்லை. தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. இதையடுத்து ராஜபாளை யம் வடக்கு போலீஸ் நிலையத்தில் கார்த்திக் புகார் அளித்தார். சப்- இன்ஸ்பெக்டர் செல்வ குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் அம்மன் சன்னதி தெருவை சேர்ந்தவர் பாலமுருகன் (17). இவர் கடந்த 15-ம் தேதி சொக்கநாதன் புதூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று வருவதாக கூறி சென்றவர் மாயமானார். எங்கு சென்றார் என்று தெரியவில்லை.

    பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் இவரது தந்தை வேலு சேத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சப்- இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×