search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sudden magic"

      சேலம்:

      அசாம் மாநிலம் காம்ரூப் மாவட்டம், போகா அருகே நகோபரா கிராமத்தை சேர்ந்த ராஜாக் ரப்பா என்பவர் மகன் ப்ரோஹலாத் ரப்பா (வயது 35). இவர் கடந்த மே மாதம் 25-ந் தேதி, தனது உறவினரான அக்ஷய் ரப்பா என்பவருடன், குவாத்தி ரெயில் நிலையத்தில் இருந்து கேரளா மாநிலம் கொல்லம் வரை செல்லும் விவேக் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்தார்.

      இந்த ரெயில் கடந்த மே மாதம் 30-ந் தேதி சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்திற்கு வந்தபோது, தண்ணீர் குடிப்பதற்காக 4-ம் எண் நடைமேடையில் இறங்கினார். அவர் திரும்பி வருவதற்குள் ரெயில் புறப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.

      இதன் பின்னர் ப்ரோஹலாத் ரப்பாவை காணவில்லை. அவரை எங்கு தேடியும் கிடைக்காத நிலையில், ப்ரோஹலாத் ரப்பாவின் அக்கா வினிதா ரப்பா (37), சேலம் ரெயில்வே போலீசில் இது தொடர்பாக புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

      • கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வரும் 20 வயது கல்லூரி மாணவி சம்பவத்தன்று வழக்கம் போல் கல்லூரிக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார்.
      • அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர்கள் கல்லூரி மாணவியை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

      கடலூர்:

      கடலூர் பாதிரிக்குப்பத்தை சேர்ந்த தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வரும் 20 வயது கல்லூரி மாணவி சம்பவத்தன்று வழக்கம் போல் கல்லூரிக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் கல்லூரிக்கு சென்ற மாணவி மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர்கள் கல்லூரி மாணவியை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர்.

      • போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்
      • மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்

      அரக்கோணம்:

      காஞ்சீபுரத்தை அடுத்த வளத்தூர் பகுதியை சேர்ந்தவர் அப்துல் காதர் ஷேக் மொய்தீன் (வயது 68). இவரது மகன் அபிசூர் ரஹ்மான் (37), மகள் ஷகிரா பானு (35) ஆகியோர் கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து அரக்கோணத்திற்கு மங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வருவதற்காகடிக்கெட் முன்பதிவு செய்திருந்தனர்.

      இதில் அப்துல் காதர் ஷேக் மொய்தீன் மற்றும் அவரது மனை விக்கு டிக்கெட் உறுதியானது, மனநலம் குன்றிய மகன் அபிசூர் ரஹ்மான் மற்றும் மகள் ஷகிராபானுவை அதே ரெயிலில் பொது பெட்டியில் அமர வைத்துவிட்டு, அப்துல் காதர். அவரது மனைவி முன்பதிவு பெட்டியில் வந்ததாக கூறப்படுகிறது.

      ரெயில் நேற்று முன்தினம் அதிகாலை அரக்கோணம் ரெயில் நிலையத்தை வந்தடைந்த போது ரெயிலில் இருந்து இறங்கிய தம்பதியினர் தங்களது மகன் மற்றும் மகள் இருந்து பெட்டியில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

      இது குறித்து அரக்கோணம் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன மனநலம் பாதிக்கப்பட்ட அபிசூர் ரஹ்மான், ஷகிரா பானு ஆகியோரை போலீசார் மீட்டு அவர் களை அப்துல் காதர் ஷேக் மொய்தீனிடம் ஒப்படைத்தனர்.

      இவரது வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை

      கடலூர்:

      கடலூர் மாவட்டம் பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக ராஜேஸ்வரி பணியாற்றி வருகிறார். இவரது தந்தை ராஜாமணி (வயது 65 ). இவர்நேற்று காலை அய்யனார் கோவில்தெருவில் உள்ள அவரது வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லைஅதிர்ச்சி அடைந்த உறவினர்கள் ராஜாமணியை பல்வேறு இடங்களில் ேதடினர்.

      எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.இதுகுறித்து பண்ருட்டி போலீசில் ராஜேஸ்வரி புகார்கொடுத்தார். பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்கு பதிந்து ராஜாமணி எங்கு சென்றார். என்ன ஆனார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

      • ராமநாதபுரத்தில் 3 இளம்பெண்கள் திடீரென மாயமானார்கள்.
      • ராமநாதபுரம் பஜார், மண்டபம் போலீசார் வழக்கு பதிவு செய்து இளம் பெண்களை தேடி வருகின்றனர்.

      ராமநாதபுரம்

      ராமநாதபுரம் காட்டுப் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் தவமணி. ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அலுவலராக பணிபுரிந்து வருகிறார். தவமணியின் கணவர் இறந்து சுமார் 15 வருடங்கள் ஆகிறது. இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்தமகளுக்கு திருமணமாகி அவரது கணவருடன் வாழ்ந்து வருகிறார். இளைய மகள் ஜான்சிராணி(வயது20). கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு உடலில் தீக்காயம் ஏற்பட்டு அதனால் அவர் வெளியில் செல்லாமல் வீட்டிலே தாயாருடன் இருந்து வந்துள்ளார்.

      இந்த நிலையில் நேற்று தவமணி வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு மாலை வீட்டிற்கு வந்த போது மகள் ஜான்சி ராணி மாயமாகி இருந்தார்.

      பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. தவமணி ராமநாதபுரம் பஜார் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.

      ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி. பட்டினத்தை சேர்ந்தவர் பஹ்ருதீன். மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மகள் இர்பானா (வயது20). சம்பவத்தன்று பஹ்ருதீன் மற்றும் அவரது மனைவியும் மருத்துவ சிகிச்சைக்கு திருச்சி சென்றனர். அப்போது இர்பானா மளிகை கடையை திறக்க செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றார். ஆனால் வெகுநேரம் ஆகியும் கடையை திறக்காமல் மாயமானார். எங்கும் தேடியும் கிடைக்காததால் எஸ்.பி.பட்டினம் போலீஸ் நிலையத்தில் பஹ்ருதீன் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.

      மண்டபம் அருகே வேதாளை கிராமத்தைச் சேர்ந்தவர் மக்மூது. இவரது மகள் ஆயிஷத்துத்துல்பியா (வயது 20). இவர் நேற்று காலை திடீரென மாய மானார். மக்மூது அளித்த புகாரின் படி மண்டபம் போலீசார் வழக்கு பதிவு செய்து இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.

      • உறவினர்கள், நண்பர்களின் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை
      • போலீசார் விசாரணை

      ஜோலார்பேட்டை:

      நாட்டறம்பள்ளி அடுத்த சாமகவுண்டனூர் போயர் பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி சைத்ரா (வயது23) இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண் பிள்ளைகள் உள்ளனர்.

      இந்நிலையில் கடந்த 3-ந் தேதி வீட்டில் இருந்த சவித்ரா திடீரென காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த கணவர் தனது மனைவியை உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.

      இது சம்பந்தமாக கணவர் சங்கர் தனது மனைவி சைத்ரா காணவில்லை என நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

      புகாரின் பேரில் நாட்டறம்பள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன சைத்ராவை தேடி வருகின்றனர்.

      • கடந்த சில ஆண்டுக்கு முன்பு காயத்திரி தனது கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக தனது தாய் கலையரசி வீட்டில் வசித்து வந்தார்.
      • காயத்திரி 2 மகள்களுடன் வீட்டைவிட்டு வெளியே சென்றார்.

      கடலூர்:

      கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள அங்கு செட்டிபாளையத்தை சேர்ந்தவர் காயத்திரி (வயது 28). இவரது கணவர் ராஜா. இவர்களுக்கு கோபியா, தேஜஸ்ஸ்ரீ ஆகிய மகள்கள் உள்ளனர்.

      கடந்த சில ஆண்டுக்கு முன்பு காயத்திரி தனது கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக தனது தாய் கலையரசி வீட்டில் வசித்து வந்தார். பின்னர் மகள்களையும் அங்குசெட்டிபாளையத்தில் உள்ள பள்ளியில் படிக்க வைத்தார்.நேற்று காயத்திரி 2 மகள்களுடன் வீட்டைவிட்டு வெளியே சென்றார். அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த கலையரசி தனது மகள், பேத்திகளை பல்வேறு இடங்களில் தேடினார். எங்கு தேடியும் கிடைக்கவில்ல

      இதுகுறித்து கலையரசி புதுப்பேட்டை போலீசில் புகார் செய்தார்.அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலான போலீசார் வழக்குபதிந்து காயத்திரி என்ன ஆனார், எங்கு சென்றார், கடத்தப்பட்டாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

      ×